Relevance of Swami Vivekananda today



 As we are celebrating the 150th birth anniversary of the great monk, the question arises:  What is the relevance of Swami Vivekananda  today?  India has travelled a long way since the nineteenth century. What we see today is totally different from what was there during those times. India has changed politically, economically and socially over these years. There have been changes at the religious and spiritual levels. Lots of changes have been happening across the world.

A new global order is emerging now. The richer west that Swamiji witnessed 120 years back is fast losing its lustre during the recent periods. Both the western economic ideologies stand discredited.  Their social theories, management approaches and even their life styles are being seriously questioned.  They are no longer the providers of ideas and approaches to the rest of the world.

India is fast emerging as a dominant force in the global economy. International predictions repeatedly point out India reaching higher positions in the international economic arena in future. The way that India has been marching over the years, when the rich countries are beset with difficulties, is forcing them to look at India.     Reputed academic institutions have started turning towards India to learn from her functioning models. India’s stock as a nation has been rising globally, in spite of problems at the domestic level.   So in the changed circumstances, what is the need for the teachings of Swami Vivekananda?

Swamiji’s times (1863-1902) were very difficult for the country. Under the British rule, India was in her worst phase in economic history. Famines had become frequent.  Criminal assaults on the functioning systems and economic drains soon after commencement of Crown administration had already made India poor. The economy was in a very bad shape and the native systems were under destruction. Majority of the people were living without hope.  It was   during those difficult times that Swamiji foresaw a great future for India.

Swamiji was not an ordinary monk. He was a true seer and one of the most inspiring personalities of our times. He was different in many ways. The mission of his life was not his personal salvation; but the betterment of the lives of all. Serving others, and the less privileged in particular, was more important to him. He did not confine himself to religion and spirituality, though the core of his message revolved around them. He discussed passionately about the need for economic development, improvement of the lives of the weaker sections, industrialization, social equality, women education and youth power. In all these matters he was ahead of his times. He was a patriotic monk for whom the nation was more important than anything else.  He wanted India to regain her lost glory and emerge as the Jagat Guru.

India today has tremendous opportunities before her. As a nation, we have enormous strengths. We have strong fundamentals. India is blessed with plenty of resources. Not many countries in the world could boast of vast lands, huge rivers, varieties of flora and fauna and plenty of sunlight.  We have the demographic dividend, with one sixth of the humanity as our population. Besides, we have the largest number of youth in the world today. Our people are one of the most hardworking, enterprising, simple living, family oriented and peace loving citizens in the world.

Close knit families are our critical assets. They are the reason for bringing up responsible citizens, maintaining peace in the society, saving enormous amounts of money for the nation and creating new ventures.  Relationship based and integrated societies are the products of our system. We have huge social capital that helps us to maintain harmony and support economic growth. Indian families and communities possess the capacity to function on their own, without depending on the state. The story of independent India reveals that much of her progress has been mostly on her own, many times in spite of the government. 

Indian culture is unique. It is inclusive and nurtures diversity. It treats every being, every object, as divine. Its world view is comprehensive.  The age old culture of our nation remains as the bedrock of our lives and continues to guide our destiny, without many of us being aware of it. In an age filled with confusions and conflicts around the world, the time tested Indian culture remains the beacon light.

 But unfortunately there are forces that hinder the nation’s march towards realizing her full potential. Much of the educated sections are unaware of the real situation. The education system introduced by the British continues to influence our thinking, even after more than sixty five years of independence.  There is very little understanding about our history and the contemporary functioning. As a result we continue to ignore our strengths, and look elsewhere for solutions to every one of our problems. We fail to understand that we have had a glorious past that could provide us a few useful tips. India remained a global power economically, culturally and intellectually continuously for several centuries. On the one side she was very prosperous and highly productive, yet on the other side she was deeply spiritual. No other nation has such a record in the history of mankind.

We also fail to observe the contemporary functioning systems. The economic progress, social cohesiveness and family atmosphere that we see here are something special to us. Much of the world is finding it difficult to keep their families intact and societies harmonious. The native systems are helping our nation to move forward, even when the intellectual and ruling classes continue to fail us. But we refuse to see the realities that exist in front of us. It is precisely this attitude that is hindering the progress of our nation.

So what we need is a true understanding of our nation. We need to understand her from true perspectives. Educated sections of our country are the most crucial group of people, as it is they who represent India and interpret her functioning to others. The performing sections, which constitute the majority in the country, remain silent as they do not have a voice in the public discourse. Hence the educated sections have a critical role to play. 

The present time is very important. While the west is losing its way, India is emerging big on her own. And it is here that we need to learn from Swami Vivekananda, his life, his messages and his teachings. They are more relevant now, than at any other time in contemporary history. We need to know about our backgrounds, our fundamentals   and our weaknesses. There is no better person for this than Swami Vivekananda. He inspired the freedom movement more than anyone else. Mahatma Gandhi, Subash Chandra Bose, Rabindranath Tagore and several thousands of people were influenced by him. Their love for our motherland increased manifold after studying him. He was largely responsible for creating the patriotic fervor that motivated many people to fight for the country.

Swamiji was a multi-faceted personality. He singlehandedly demonstrated to the world the need for recognizing the diverse religious beliefs   for the progress of mankind and changed the whole course of the dialogue towards India at the international level. He was a great leader and an organization builder. The institutions founded by him are the standing testimonies. His priority was to improve the living conditions of the ordinary masses, the underprivileged and the weaker sections of the society. 

He was an icon for the people around the country and a true representative of the great Indian tradition.  He continues to remain so, particularly to the youth, even after 120 years. More than anyone else in the contemporary history of India, every Indian identifies himself/herself with Swamiji and his teachings. This is irrespective of age, position and background. His is the most respected public face in India today. He inspires each one through his words, deeds and personality.   There have been thousands of service organizations/ institutions promoted in different corners of the country during the past one hundred years, inspired by him. Many of them are promoted by the ordinary people and they are all silently engaged in different service activities, and many millions have benefited out of them.

Swamiji continues to remain the master motivator for the largest number of people in our country. It is especially in this connection, that we need to study him deeply during his 150th birth anniversary. We have to discuss his ideas, thoughts and mission. His life, speeches and writings teach us many valuable lessons.  Each of us must make the maximum contribution to make India the most powerful nation on earth. We have to dedicate ourselves for this, as there are negative forces operating everywhere.  We need to put all our energies together for this purpose. And Swami Vivekananda is the best role model for all of us in this noble mission.

( Yuva Bharati, Vol 40 No.8, Vivekananda Kendra, Chennai)

இந்தியப் பொருளாதாரமும் தொழிலாளர்களின் சிரமங்களும்



இந்தியப் பொருளாதாரம் தனித்தன்மை வாய்ந்தது. உலக அளவில் பல வலிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதிக அளவிலான சேமிப்புகள், கடுமையான உழைப்பினை மேற்கொள்ளத் தயங்காத  மக்கள், உறவுகளுடன் நெருங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள், பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எதிர் நீச்சல் போட்டு தொழில்களில் ஈடுபடும் தொழில் முனைவோர் என வெவ்வேறு அம்சங்கள் பொருளாதாரத்துக்குச் சாதகமாக உள்ளன.

எனவே உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவான விசயங்களே நமது நாட்டுக்கு அதிகமாக உள்ளன. பெரிய பணக்கார நாடுகளை விடவும்  நமக்கு  வலிமைகள் நிறைந்துள்ளன. வரவுக்கு அதிகமான செலவுகள், கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கம், நுகர்வுக் கலாசாரம், குறைவான சேமிப்புகள், தனி நபர் வாழ்க்கை முறை எனப் பலவும் அவர்களை சீரழித்து வருகின்றன. 

மேலும் கடந்த சில வருடங்களாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அணுகு முறைகள் பெருமளவு தோல்வியைத் தழுவிக் கொண்டு வருகின்றன.  அவர்களின் சந்தைப் பொருளாதார தத்துவங்கள் மக்களின் பிரச்சினைகளை அதிகப்படுத்தி விட்டன. நிதிச் சந்தையை மையப்படுத்தி  அமைந்துள்ள அவர்களின் செயல்பாடுகள் மக்களை மேலும் சிரமத்தில் தள்ளி விட்டுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, அதிக கடன் சுமைகள், பெருகி வரும் வருமான வித்தியாசங்கள் என்பனவெல்லாம் நடைமுறை ஆகி விட்டன. எனவே அங்கு பல நாடுகளில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதிக்கு வந்து போராடுவது அண்மைக் காலங்களில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் சுதந்திரத்துக்கு அப்புறம் துரதிர்ஷ்ட வசமாக மேற்கத்திய சித்தாந்தங்களை மையமாக வைத்தே கொள்கைகள் தீட்டப்பட்டு வருகின்றன. 1980கள் வரை சோசலிச சித்தாந்தமே நமது ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தது. பின்னர் அது அப்போதைய சோவியத் ரஷ்யாவிலேயே தோல்வியைத் தழுவிய போது இங்கும் கை விடப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக சந்தைப் பொருளாதாரம் சார்ந்த உலக மயமாக்கல் சித்தாந்தம்  மைய இடத்தில் உட்கார வைக்கப்பட்டது. எனவே தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய அணுகுமுறைகளை ஒட்டியே நமது நாட்டின்   கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

ஆகையால்  நமது வலிமைகளையும் தேவைகளையும் மையப்படுத்தி தேச நோக்கில் கொள்கைகளைத் தீட்டுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் முழுமையாக ஏற்படவில்லை. எனவே அதன் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம். நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. வருடா வருடம் ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். பல இடங்களில் வாழ்வாதரங்களைத் தேடி கிராமங்களை விட்டு மக்கள் அதிக அளவில் வெளியேறி வருகின்றனர். கைத்தொழில்கள், குறு மற்றும் சிறு தொழில்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துக் கொண்டுள்ளன. அதே சமயம் இன்னொரு பக்கம்  குறிப்பிட்ட சில பிரிவினர்களின் கைகளில் சுலபமாகப்  பணம் பெருகுவதும், நுகர்வுக் கலாசாரம் உள்ளிட்ட மேற்கத்திய தாக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தைக் கவனமாகப் பார்க்கும் போது கடந்த அறுபதாண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஒரு விசயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. அது என்னவெனில், இங்கு ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் அனைத்துமே கொள்கை வகுப்பவர்களின் குழப்பங்களை எல்லாம் மீறி மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகும். அதற்கு அடிப்படையாக நமது வாழ்க்கை முறையும் இந்த தேசத்தின் கலாசாரமும் ஆதார சக்திகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் அரசுகளின் கொள்கைகளும் அணுகுமுறைகளும் பொருத்தமாக இல்லாததால், நாட்டுக்குப் போதுமான பலன்கள் இல்லாதது மட்டுமின்றி வளர்ச்சியின் போக்கும் சரியானதாக இல்லை.

எனவே கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்து வந்த போதும், வளர்ச்சி என்பது பரவலாக இல்லாமலும் ஒரு தலைப்பட்சமாகவுமே அமைந்துள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட டெண்டுல்கர் குழு 2009 ஆம் வருடத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்  எனக் கணக்கிட்டு சொல்லியுள்ளது. 2009-10ஆம் வருடத்தில் நாட்டில் நிலவிய வேலை வாய்ப்பு நிலைமை சம்பந்தமான தேசிய உத்தேச மாதிரி கணக்கெடுப்பின் 66ஆவது சுற்று  மொத்த வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் 2009-10ல் முடிவுற்ற  ஐந்து வருட காலத்தில் அதற்கு முந்தைய ஐந்து வருடத்தை விட வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத்  தெரிவிக்கிறது.

வேலை உருவாக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக அமைய வேண்டும். அதுவும் நம்மைப் போன்ற மக்கள் தொகையை அதிகமாகப் பெற்றுள்ள நாட்டுக்கு அது மிகவும் அவசியம். அதிக மக்கள் தொகை என்பது நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்கான ஒரு நல்ல மூலதனமாகத் தற்போது கருதப்படுகிறது. ஏனெனில் உலகின் பல நாடுகளில் குடும்ப கலாசாரத்தைத் தொலைத்து விட்டதால் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து வருகிறது. அதனால் அங்கெல்லாம் வேலை செய்வதற்குத் தேவையானவர்களை விட இள வயதினர் எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். எனவே அந்த நாடுகளில் பலவிதமான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு எதிர்காலம் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் நமது நாடு உலகிலேயே அதிக அளவு இளைஞர்களை  பெற்றுள்ளது. எனவே அவர்களின் திறமைகளை முழுமையாகப்  பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவது கொள்கை  வகுப்பவர்களின் தலையாய கடமையாகும். ஆனால் அண்மைக் காலமாக வேலைகளை உருவாக்குவதற்கான  செயல் திட்டங்கள் குறைந்து வருகின்றன. வேலைகளை அதிக அளவில் உருவாக்கும் தன்மையுள்ள விவசாயம், கிராமப் பொருளாதாரம், குறு மற்றும் சிறு தொழில்கள் நசிந்து வருகின்றன. அதற்கான சரியான கொள்கைகள் வகுக்கப்படுவது இல்லை.

மேலும் அமைப்பு சார்ந்த துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 1990 களிலிருந்து பொதுத் துறை நிறுவனங்களில் வேலைகள் குறைந்து விட்டன. 1991 முதல் 2008 வரையிலுமான  இடைப்பட்ட பதினேழு வருடங்களில்  அமைப்பு சார்ந்த துறைகள் மொத்தமாக எட்டு இலட்சம் புதிய வேலைகளையே உருவாக்கியுள்ளன என்னும் புள்ளி விபரத்தை மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  எனவே கடந்த இருபது வருட கால நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த வேலை வாய்ப்பைக் குறைத்து ஏற்பட்ட வளர்ச்சியாகவே உள்ளது.

ஆகையால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் பொருத்தமான வேலைகள் இல்லாமல் தவிக்கின்றன. நிரந்த வேலைகளை இழந்த பல பேர் தினக் கூலிகளாக மாறும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.  அதே சமயம் சொந்தக் காலில் நின்று வாழ்க்கை நடத்தி வந்த சிறு விவசாயிகள் மற்றும் சிறிய தொழில்களை நடத்தி வந்தவர்கள் பலர் வேலை தேடிச் செல்லும் அவலம் அதிகரித்துக் கொண்டுள்ளது. எனவே மக்கள் செய்வதறியாது தவிக்கின்ற சூழ்நிலை அதிகரித்து வருகின்றது.

ஆகையால் நமது நாட்டைப் பொறுத்த வரையில் அஸ்திவாரங்கள் வலுவாக இருந்தும் ஒட்டு மொத்த வளர்ச்சி அனைவருக்கும் ஏற்படாத வகையிலும் வேலை வாய்ப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படாமலும் உள்ளது. அதற்கு அடிப்படையான காரணம் அரசுகளின் தவறான அணுகு முறைகளும் திட்டங்களும் ஆகும். எனவே அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் காக்க முடியாத கொள்கைகள் தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கான திசையில் அரசுகள் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அப்போது தான் நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்குமான முன்னேற்றம் ஏற்பட்டு வளர்ச்சி முழுமையானதாக அமையும்.

(பி.எம்.எஸ்.செய்தி, சென்னை, மார்ச் 2013)


பாலியல் வன்முறைகள்: சில சிந்தனைகள்



 தலை நகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி ஆறு பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதன் பின் சில நாட்கள் கழித்து மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி மரணமடைந்த துயரமான சம்பவம் நாடு முழுவதும் ஒரு பெரிய அதிர்வலையை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக டெல்லி மட்டுமன்றி நாட்டின் பல நகரங்களிலும் எதிர்ப்புப் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன. பின்னர் பாலியல் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து ஆலோசனைகளைக் கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற  நீதியரசர் வர்மா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை  அமைத்தது. விரைவிலேயே குழுவின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மத்திய அரசிடமும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதையொட்டி அரசு ஒரு அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அது பற்றி விவதாங்கள் மேற்கொள்ளப் பட்டு முக்கிய  முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. 

இதையொட்டி அதிகமாக விவாதிக்கப்படாத சில முக்கியமான கருத்துகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன. மேற்கண்ட விசயத்தை முதல் முறையாக சமூகமே முன்னெடுத்துச் செயல்பட்டது பாராட்டப்பட வேண்டியதாகும். மக்கள் பொதுவாகவே தங்களுடைய வாழ்க்கை, வேலைகள், பொறுப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் வழக்கம். பொதுவாக பெரும்பாலானவர்கள் வேலையை விட்டு வந்து வீதிகளில் இறங்கிப் போராடுவது இல்லை. அதுவும் டெல்லி போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் பெரு நகரங்களில் சுத்தமாக இல்லை. அண்மைக் காலங்களில் முதல் முறையாக சென்ற வருடம் தான் அன்னா ஹசாரே தலைமையில் லோக் பால் மசோதா வேண்டி அமைதி வழிப் போராட்டம் நடந்த போது மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.

அது டெல்லியில் மட்டுமன்றி நாட்டின் பிற நகரங்களிலும் பரவியது. அவரது உண்ணாவிரதத்தின் போது மக்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் ஆதரவளித்து வந்தது அப்போதே ஒரு வித மக்களின் எழுச்சியாகத் தெரிந்தது. ஆனால் லோக்பால் சம்பந்தமான போராட்டங்களுக்கு தலைமை இருந்தது. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அவர்களுக்குத் துணை புரிய வெளியில் தெரிந்த பொது வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்த முகங்கள் இருந்தன. அதற்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் ஏற்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் தாமாகவே தோன்றின. அவற்றுக்குப் பின்னால் பிரபலமான முகங்கள் இல்லை. அவற்றை நடத்துவதற்குப் பெரிய அமைப்புகள் எதுவும் இல்லை.  ஆயினும் போராட்டம் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்றது. அதில் குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள். அதுவும் எதிர்ப்பைக் காட்டுவதற்காக சம்பிரதாயத்துக்கு ஒரு நாள் மட்டும் நடத்தப்படாமல்,  உண்மையில் மன வேதனையுடன் மக்களின் ஒன்று பட்ட வேகத்தால் போராட்டம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டது. அதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொண்டு சில அவசியமான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதன் விளைவாக முக்கியமான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பாலியல் வன்முறை குறித்து அதிகார மட்டங்களில் நிலவிய  அக்கறையற்ற தன்மை மாறி வருகிறது.

ஆனால் அதே சமயம் இன்னமும் தொடர்ந்து கற்பழிப்புகள் உள்ளிட்ட பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. மக்களின் போராட்டம் மற்றும் அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பின்னரும் அவை வெகுவாகக் குறைந்ததாகத் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமைகள் திடீரென அதிகரித்து விடவில்லை என்றும் ஊடகங்களின் செயல்பாடுகளால் அது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் சிலர் வாதிடுகின்றனர். அது உண்மையாகவும் இருக்கக் கூடும். உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்க,  ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகமாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2010 ஆம் வருடத்துக்கான ஆய்வுகள், சுவீடனில் ஒரு இலட்சத்துக்கு 63.5 பேரும், அமெரிக்காவில் 27.3 பேரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறுகிறது. அதே சமயம் இந்தியாவில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 1.8 பேர் எனத் தெரிவிக்கிறது.

இதை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் குற்றங்களை எந்த விதத்திலும் நியாயப் படுத்துவதற்காக அல்ல. பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும் நமது கலாசாரத்தில் ஒரு சிறு குற்றமும் கூட நடக்காமல் இருக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பமும் ஆகும். பெண்களுக்கு எதிரான ஒரு சிறு தாக்குதல் கூட அந்த  சமூகத்தின் சீரழிவினையே காட்டுகிறது.

ஆனால் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது படிப்பு, சம உரிமை, தனி நபர் சுதந்திரம் ஆகியன அதிகமாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில் தவறுகள் குறைவாக இல்லை என்பதும், மாறாக மிக அதிகமாக உள்ளது என்பதுவும் ஆகும். ஆனால் நமது தேசத்தில் அவை குறைவாக இருப்பதற்குக் காரணம் காரணம்  நம்முடைய குடும்ப, சமூக அமைப்பு முறைகள் மற்றும் நமது கலாசார பாரம்பரியம் ஆகும்.  நமது சிந்தனை முறைகள் பெண்களை தெய்வமாகவும் தாய்மையின் வடிவமாகவும் மதிக்கும் தன்மையுடையவை. அதனால் தான் பெண்களை மிக உயர்வாக மதிக்கக்  கூடிய தன்மை இன்னமும் நாடு முழுவதும் பரவலாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அதே சமயம் இந்த மாதிரி விசயங்களில் நாம் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து திருப்தியடைந்து விடுவது மிகவும் தவறானதாகும். ஏனெனில் நமக்கென்று ஒரு பெரிய பொறுப்புள்ளது. நாம் நல்ல பின் பலத்தைப் பெற்றுள்ளோம். இங்கு ஒவ்வொரு பெண்ணுக்கு ஏற்படும் தாக்குதலும் நமது தனித் தன்மைக்கும் வாழ்க்கை முறைக்கும்  விடப்படும் சவாலாகும். எனவே இனி மேலும் பாலியல் வன்முறைகளைப் பார்த்து இன்னொரு துரதிர்ஷ்டமான  நிகழ்ச்சி எனக் கருதக் கூடாது. அவற்றைத் தடுப்பதற்கு என்ன முயற்சிகளையெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் கட்டாயமாக உடனே செய்ய வேண்டும். இல்லையெனில் நாம் பெரிய பாரம்பரியத்தைப் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.. நம்மில் ஒரு பாதியாக உள்ள பெண்களுக்கு அடிப்படையான பாதுகாப்பைக் கூடத் தர முடியவில்லை என்றால், நாம் எந்த விதமான சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம் ?  

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இது குறித்துப் பல போராட்டங்கள் மற்றும் விவாதாங்கள் நடந்து முடியும் சூழ்நிலையில் அதே டெல்லியில் பிப்ரவரி முதல் வாரத்தில் உள்ளே இருப்பவர்கள் தெரியாத மாதிரி உள்ள கண்ணாடிகளைக் கொண்ட வாகனம் ஒன்று வேகமாகச் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுகிறது. உள்ளே ஒரு பெண் நான்கு ஆண்கள்.  நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி பின்னர் நகரை விட்டு வெளியில் கடத்திக் கொண்டு போகும் போது வாகனத்தை நிறுத்தாமல் போன போதுதான் அந்த நிகழ்வு தெரிய வருகிறது. எந்த தலைநகரில் கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களாகவும் விவாதாங்களாகவும் நடந்து அதன் விளைவாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அங்கேயே இன்னமும் அதே விதமான  கொடுமை நிகழ்ந்துள்ளது.

பள்ளி மாணவியர், சிறுமியர் என வயது வித்தியாசமின்றி பாலியல் கொடுமை நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கின்றன. அதிலும் படித்தவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோர்  இந்த மாதிரி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்னும் போது  நமது கல்வி முறை பற்றியே வருத்தம் ஏற்படுகின்றது. மேலும் அதிகார மட்டத்தின் உயரத்தில் இருப்பவர்கள் பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவதும் பின்னர் அவை பெரிதாகும் போது அவற்றில் இருந்து தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக்க முயல்வதுமாகத் தெரிகின்றது. எனவே எந்த விதமான பேர்வழிகள் அதிகார மையங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளார்கள் என்பது குறித்தும் ஐயங்கள் எழுகின்றன.

பாலியல் வன்முறைகள் குறித்து பாராளுமன்றம் முழுமையாக விவாதித்து  தேவையான சட்டங்களை இயற்ற வேண்டுமென பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றின் மூலம் தவறு செய்யும் ஒவ்வொருவரும் தப்பிக்க முடியாமல் தக்க தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலை உருவாக  வேண்டும். அதனால் அந்த தவறுகளைச் செய்வதற்கு சம்பந்தப் பட்டவர்கள் அச்சப்பட வேண்டும். எனவே இது.உடனடியாகச் செய்யப்பட வேண்டிய அவசியமான முயற்சியாகும்.

ஆனால் பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் நாம் இது குறித்துப் பல கோணங்களிலும் முழுமையாக அணுகுவது நல்லது. ஏனெனில் இது நமது இன்றைய சமூகத்தின் முன் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை. சட்டங்கள் என்பவை தண்டனைகளை வைத்து குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகும். குற்றங்களைக் குறைக்க இன்னொரு முக்கியமான வழி அந்தக் குற்றங்களே நடைபெறாமல் இருக்கச் செய்வது பற்றியது. எனவே அந்தக் குற்றங்கள் நடை பெறுவதற்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்வதும் மிக முக்கியமானதாகும். இன்று நம்முடைய பொது விவாதங்கள் அனைத்தும் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் பற்றியே உள்ளன.

எனவே நாம் அவற்றைத் தவிர பிற வழிகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.  அந்த வகையில் பலராலும் முக்கியமாகக் கருதப்படுவது  இன்று நமது குழந்தைகளுக்கு உயர் நெறிகள், ஒழுக்கம் மற்றும் மதிப்பீடுகள் குறித்து எந்த வித போதனைகளும் இல்லை என்பது பற்றிய கவலையாகும். இவை பற்றி நமது நாடு சுதந்திரம் பெற்ற பின் மத்திய மத்திய அரசால் அமைக்கப் பட்ட உயர் மட்டக் குழுக்கள் கவலை தெரிவித்து, நமது விழுமியங்கள், உயர் நெறிகள் மற்றும் கலாசாரம் குறித்த போதனைகள் கல்விக்கூடங்களில் கொண்டு வரப்பட வேண்டும் எனப் பலமுறை  வலியுறுத்தியுள்ளன. உச்ச நீதி மன்றமும் இது குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

ஆயினும் இந்த விசயம் குறித்துத் தேவையான  நடவடிக்கைகள்  எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விசயமாகும். நம்மிடத்தில் மதிப்பிட முடியாத பெரிய சொத்துக்கள் இருக்கின்றன.. இங்கிருப்பது போல பண்பட்ட இலக்கியங்கள் வேறெங்கும் இல்லை. நாடு முழுவதும் பல மொழிகளிலும்  நீதி நூல்கள் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு பகவத் கீதை பல மேல் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படுகிறது. இராமாயணமும் மகாபாராதமும் உலகம் முழுதும் அறியப்பட்ட அற நெறி இலக்கியங்கள். ஆத்திச் சூடியும் கொன்றை வேந்தனும் அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய உயர் தரமான வழிகாட்டிகள். ஆனால் நாம் அவற்றையெல்லாம் போதிக்கத் தயங்குகிறோம். உயர் தரமான வாழ்க்கைக் கல்வியைப் போதிக்கக் கூடிய தமிழ் இலக்கியங்கள் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை.

ஆட்சியாளர்களின் போலிச் சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகள் அற நெறிக் கல்வியைக்  கொடுக்கத் தவறுகின்றன. அதனால் நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த வாழ்க்கைச் சூத்திரங்கள் நமது குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. ஒரு மனிதனின் விழுமியங்கள் சிறு வயது முதற் கொண்டு விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் அவன் வளரும் போது நல்லவனாக தன்னைச் செதுக்கிக் கொள்ள முடியும். இந்திய பாரம்பரியத்துக்கான சர்வதேச அமைப்பு பத்து வருடங்களுக்கு முன்னதாக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களிடையே ஒரு ஆய்வை நடத்தியது. அது வழக்கமாக மாணவர்களுக்குத் தேவையானவை பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றவர்களும் கருத்துச் சொல்வதாக இல்லாமல் மாணவர்களே தங்களின் உள்ளக் கிடக்கைகளைப் பற்றிச் சொல்வதாக அமைந்தது. அதில் முக்கியமான அம்சம் நாடு முழுவமுதுள்ள மாணவர்களில் மிகப் பெரும்பாலனவர்கள் கலாசாரக் கல்வி தங்களுக்கு அவசியம் ஒருமித்த குரலில் கூறியிருந்ததுதானாகும்.

எனவே மாணவர்களே வேண்டுமென்று கேட்கக் கூடிய அத்தியாவசியமான ஒன்றை நாம் கொடுக்கத் தவறி வருகிறோம். மகாத்மா காந்தி, தாகூர் உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள்  வலியுறுத்திக் கூறிய இந்த விசயத்தை நம்மால் மேலெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆகையால் இந்தச் சமயத்தில் கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சமூக வல்லுநர்கள் எனப் பலரும் இது குறித்துப் பேச வேண்டும். அதன் மூலம் கல்விக் கூடங்களில் ஒழுக்க நெறிகள், விழுமியங்கள் மற்றும் கலாசாரம் குறித்த அறிவு போதிக்கப்பட வேண்டும். அதற்காக அரசுகள் கட்டாயப் படுத்தப்பட வேண்டும்.  கல்வி என்பது நமது குழந்தைகளைப் பணம் சம்பாதிக்க உதவும் கருவிகளாக மட்டுமே மாற்றி வரும் நிலைமை மாற வேண்டும்.

மாறி வரும் உலக மயமாக்கல் சுழ்நிலையால் பொது மதிப்பீடுகளும் விழுமியங்களும் சமூக அளவில் குறையத் துவங்கியுள்ளன. அதனால் பொருளாதாரமே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டு மற்றவையனைத்தும் பின்னுக்குத் தள்ளப் படுகின்றன.  நுகர்வு கலாசாரம், பணமே முக்கியமெனக் கருதும் போக்கு, சுலபமாகச் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம், அடுத்தவர்களைப் பற்றி அக்கறையில்லாத தன்மை ஆகியவை அதிகரித்து வருகின்றன. எனவே விழுமியங்களைத் தாங்கிப் பிடிக்க உதவும் சமூகக் கட்டமைப்புகளின் தாக்கம் தளர்ந்து கொண்டுள்ளது. ஊடகங்கள், கல்வி முறைகள் எனப் பலவும் நவீனம் என்ற பெயரில் தனி நபர் சித்தாந்தம், குடும்ப மற்றும் சமூக அமைப்புகளின் சீரழிவுகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. எனவே மேற்கண்ட விசயங்கள் குறித்தும் நாம் விரிவாக சிந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

ஆகையால் சட்டங்கள்  மூலமாக பாலியல் வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும் அதே சமயத்தில், எந்த விதத் தவறுகளும் உருவாகமால் தடுப்பதற்குத் தேவையான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் எல்லாப் பொறுப்புகளையும் அரசாங்கத்திடம் மட்டுமே விட்டு விடாமல், படித்தவர்களும் சமூகமும் சில அத்தியாவசியமான விசயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகின் மற்ற எந்த நாட்டையும் விட இந்த விசயத்தில் நமக்குப் பெரிய பொறுப்புள்ளது. சர்வதேச அரங்கில் மிக முக்கியமான நாடாக இந்தியா மேலெழுந்து வரும் இந்த காலகட்டத்தில் அடிப்படையான மாற்றங்கள் குறித்து சிந்தித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நமது கடமையாகும். அதற்காக இந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

( ஓம் சக்தி, மார்ச் 2013)