Showing posts with label தினமலர்- உரத்த சிந்தனை. Show all posts
Showing posts with label தினமலர்- உரத்த சிந்தனை. Show all posts

இந்தியப் பொருளாதாரம் குறித்து தினமலரில் கட்டுரை

இந்தியப் பொருளாதாரம் குறித்து தினமலரில் இன்று வெளியான கட்டுரை, ஜூலை 6, 2014

படிப்பதற்கு:

http://www.dinamalar.com/news_detail.asp?id=1014660

12-12-2010 உரத்த சிந்தனை-வாசகர் கருத்து

*வெனிசுலா நாட்டில் இருந்து வெங்கடேஷ் ஏன் இந்திய பொருட்கள் உலக சந்தையில் சீனா போல அதிகம் இல்லை என்று கேட்டுள்ளார். சீனாவும் இந்தியாவும் வேகமாக வளருகின்றன என்றாலும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. சீனா உற்பத்தி துறையில் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியா சேவைத்துறையில் முன்னணியில் உள்ளது. கணினி மென்பொருள், வாடிக்கையளர் அழைப்பு சேவை, ஆடை அணிகலன் உணவு பொருள் உற்பத்தியில் நமது பங்களிப்பு உலகில் பெருமளவு உள்ளது....
--:சுவாமிநாதன் ,யுனைடெட் கிங்டம்

*நம் நாட்டில் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. நான் இதை மறுக்கிறேன் , அதற்கான காரணம் கீழ்கண்ட கேள்விகள் நாட்டில் கரூப்பு பணம் மிகையாக உள்ளது , இது நல்ல பொருளாதாரத்துக்கு அறிகுறியா ? லஞ்சமாக சேர்த்த பணம் வெளி நாடுகளில் இருந்து உள் நாட்டுக்கு எளிதான முறையில் கொண்டு வரும் வகையில் சட்டங்கள் மாற்றபடுகின்றன IPL cricket ஊழல் என்னவாயிற்று ? இப்போது எல்லோரும் அதை மறந்து விட்டனரா ? வெளிநாட்டு பணம் உள் நாட்டில் முதலீடு செய்யும் வகையில் real estate துறை முறைபடுதபடாமல் உள்ளது ...இதனால் கருப்பு பணம் முதலீடு செய்யும் வங்கிகளாக நிலங்களும் வீடுகளும் மாறி விட்டன ..இவற்றின் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி பெருமளவு குறைந்துவிட்டது....இப்போது மக்கள் கடன் வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளபடிருக்கிரர்கள்..இன்னும் இரண்டு வருடத்துக்குள் நம் நாடு மேற்கத்திய நாடுகளை போல் நிலைக்கு தள்ளபடுவதற்கான எல்லா அறிகுரிகளும் தெரிகின்றன... நாங்கள் குடும்பங்கள் பற்றி கூறியுள்ள கருத்துகள் உண்மை ...அனால் காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன்.....damage has been done..everybody i talk to now a days is heavily invested in gold or real estate..the ponzi scheme is leading to people leaving normal work life and becoming real estate agents... that's a sign of eleventh hour in drama thats about to end..ராஜா - கோவை
*Dear Venkat, I do have the same concern like you. The reason behind this is China's Economic Policies, for example Economies of Scale (Mass Production) and their Polical Policies. These two are two (strong) extremes in China. Here, India has too much of Democratic and Economic Policies are not sound enough like China. China has vision to keep their product everywhere in the world and wish to dominate the world. India does not have this intention. Almost everyone knows that China does not produce 'good quality' products, but people have 'no choice'. We have to buy. One more reason, Brand name. India is still not 'recognised' as a 'good brand' in the Global Market though we produce quality than China. Because we do not have popularity like China. Our Economist & PM says that we don't want to be no.1 and we will try our best to be 'self-sufficient'. Just being sef-sufficient will not encourage Export. Other reasons, bureacratic policies in India. Setting up a company is not a easy job in India. We have to cut off this Red Tapism. When I was in Singapore, I tried to avoid buying China made Fan. So I bought fans (Usha Brand) from India. That fan also made in China. I was shocked. We need to produce as much as possible. We need to update our Economic, Foreign policies to compete with Global market. I am sure that China and India will dominate the world in this century. USA, UK, France will be out of scene in this century....Balaji - tashkent

*70% of the indian produce is consumed in india itself.where as 70% of china's produce gets exported.that is why we dont see much of "made in india" any where. a very good article..prasanna - சிகாகோ,

*It is true that we not able to see any "india made" in any part of the world as like china. Some time i can see only in the indian food varities at the market. I travelled a lot and i am presently in venezuela, working along with europeans and americans. They usually ask me why this situation, as both india and china are big markets, but not able to see "india made". Why? Did any body have an answer? Venkat...Venkat - carupano,வெனிசு

**மேற்கூறிய அனைத்து தகவல்களும் நிதர்சனமான உண்மை...., உதாரணம் எங்க தாத்தா பாட்டி.. குடும்பத்தையும், தங்கள் உறவினர்களையும், அதன் மூலம் தங்கள் கிராமத்தையும் நன்றாக பராமரித்து வந்தனர்...., அவ்வாறு தற்போது இருக்கும் அரசியல்வாதிகள் யாரும் பிபற்றுவதில்லை..., அதற்க்கு நேர் மாறாக தங்கள் பையில் எவ்வளவு தேறும் என்றே உள்ளனர்...., முன்னோர்கள் சொல்லிய நல்ல வழிப்பாதையை பின்பற்றினால் நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக உயர்வடையும்......கணேஷ் - மாலத்தீவுகள்
*இது ஒரு நல்ல கட்டுரை. தெளிவாக எழுதப்பட்டுள்ளது ..நமது மக்கள் தொகைக்கு சேமிப்பே சரியானது ..அமெரிக்காவை போல் வாழ நினைத்தால் நமக்கு பிரச்சினை தான்--தாஸ் - லாஸ்ஏஞ்செலஸ்
-
*மிகவும் சிறந்த கட்டுரை.ரா. வே - திருப்பூர்....

Nobel Prize winner does not mean he has understood everything. Indians are very good at patting themselves at every opportunity. When somebody in the world takes our methods to task we become angry.Our economy is very weak in foundation. Technically we are at the lowest level. I have not seen any "india made" item in any US store but see 90% of the items in stores being made by China. Professors are good for lecturing only, since they have become so for non-performance. We should not live in dreams. If Kanakasabapathy can bag a Nobel Prize, then let him talk. Ravindran-கரண்ட்ப்ரைரிt

உலகிற்கு வழிகாட்டுவோம்


கடந்த முப்பது வருடத்திய பெரும்பாலான மேற்கத்திய கோட்பாடுகள், மிகவும் உபயோகமில்லாதவையாகவோ அல்லது பெரும் தீங்கு விளைவிப்பனவாகவோ அமைந்து விட்டன!' - இதைச் சொல்லியுள்ளது யார் தெரியுமா? பொருளாதாரத் துறையில், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிரபலமான பேராசிரியருமான பால் கிரக்மேன்.
நவீன பொருளாதாரத்தில், உலக அளவில் நிபுணத்துவம் பெற்றுள்ள அவரே இப்படிச் சொல்லியுள்ளார் என்றால், அதற்குக் காரணம் இருக்க வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், உலகப் பொருளாதார அரங்கில், ஐரோப்பிய நாடுகள் முக்கியத்துவம் பெற்றன. அதன் தொடர்ச்சியாக, அவர்களது வழிமுறைகளும், கோட்பாடுகளுமே சரியானவை என, உலகம் முழுவதும் போதிக்கப்பட்டன. காலனி ஆதிக்கமும், ஆங்கிலேயக் கல்வி முறையும், அவர்களின் வேலையை எளிதாக்கின. பின், இருபதாம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் செல்வாக்கு குறைந்து, அமெரிக்கா உலகின் முக்கியமான பொருளாதார சக்தியாக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் பெறத் துவங்கின. உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் மூலமாகவும், ஆலோசனைகள் என்ற பெயரிலும், அவர்களது சிந்தனைகள் மற்றும் வழிமுறைகள், பிற நாடுகளில் புகுத்தப்பட்டன.

கடந்த 1980ம் ஆண்டு இறுதியில், சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட நிகழ்வுகளால், அந்நாடு சிதறுண்டு போன பின், சந்தைப் பொருளாதார முறைதான் உலகுக்கு ஒரே வழியென, அந்தச் சிந்தனை சார்ந்த மேற்கத்திய நிபுணர்கள் மார்தட்டிக் கொண்டனர். அவர்களது பல்கலைக்கழகங்கள், சந்தைப் பொருளாதாரம் குறித்த பல புதிய கோட்பாடுகளை உருவாக்கின. அவைகளில் பலவற்றுக்கு நோபல் பரிசுகளும், உலகளவில் அங்கீகாரங்களும், பாடப்புத்தகங்களில் முக்கிய இடங்களும் கிடைத்தன. உலக நாடுகள் எதுவாயினும் அவற்றின் முன்னேற்றத்துக்கு, மேற்கத்திய சந்தை பொருளாதாரக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பது ஒன்றுதான் வழியென உறுதியாகச் சொல்லப்பட்டது. எனவே, உலகிலுள்ள பிற நாடுகள், தங்களின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மேற்கத்திய கோட்பாடுகளையொட்டி மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டன.

மேற்கத்திய கோட்பாடுகளை அதிகமாகக் கடைப்பிடித்ததன் விளைவாக, உலகின் பல நாடுகள், கடந்த காலங்களிலேயே பெரும் சிரமங்களைச் சந்திக்க வேண்டி வந்தது. உதாரணமாக, 1997 - 98ல் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 2002ல், அர்ஜென்டினாவில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டன. இவ்வாறு உலகின் வெவ்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டுக் கொண்டு வந்த போதும், தங்களது கோட்பாடுகளே சரியென, மேற்கத்திய நாடுகள் மக்களை நம்பவைத்து வந்தன. ஆனால், 2008ம் ஆண்டிற்குப் பின் பகுதிகளில் அமெரிக்காவில் தொடங்கிய நிதி நெருக்கடி, வெகு சீக்கிரமே உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறியது. அது மேற்கத்திய நாடுகளை அதிகமாகப் பாதித்தது. அதன் விளைவாக, உலகளவில் மிகப் பெரிதாக விளங்கி வந்த பல நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த கம்பெனிகள், மிகுந்த பாதிப்புக்குள்ளாயின.

பெரிய பெரிய கம்பெனிகள் திவாலாவதைத் தடுக்கவும், வேலை இழந்தவர்களுக்கு உதவிகள் செய்யவும், அரசாங்கங்கள் அதிகளவு தொகையை செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயின. ஆயிரக்கணக்கான மக்கள், வேலைகளைப் பறிகொடுத்து, வீடுகளை இழந்து பரிதவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தங்களின் பொருளாதாரக் கோட்பாடுகளும், அணுகுமுறைகளும் மட்டுமே சரியானவை எனவும், அவற்றின் மூலமே உலகில் முன்னேற்றம் ஏற்பட முடியுமெனவும் உறுதியாகச் சொல்லி வந்த பல மேற்கத்திய நாடுகளுக்கு, இந்தப் பொருளாதார நெருக்கடி ஒரு பேரிடியாக அமைந்து விட்டது. உலகின் பிற பகுதிகளில், தங்கள் கொள்கைகள் தோல்வியைத் தழுவிய போது, பலவித காரணங்களைக் கூறி வந்த அவர்கள், தங்கள் மண்ணிலேயே சிக்கல்களைச் சந்தித்து வரும்போது, சரியான பதிலைக் கூற முடியாமல் வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின் ஏற்பட்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள், அவர்களது பொருளாதார சிந்தனைகள் குறித்த பல உண்மைகளை உலகிற்கு உணர்த்தியுள்ளன. ஆலன் கிரீன்ஸ்பேன் என்பவர், அமெரிக்க மத்திய வங்கியின் கவர்னராக பதினாறு வருடங்களுக்கு மேல் இருந்து ஓய்வு பெற்றவர். உலகின் பெரிய பொருளாதார நிர்வாகிகளில் ஒருவராக கருதப்பட்டு, அந்நாட்டின் உயர்ந்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றவர். அவருடைய பதவிக் காலத்தில் தான், வங்கிகளின் வட்டி விகிதங்கள் மிகவும் குறைக்கப்பட்டன. "நாட்டு மக்கள் சேமிக்க வேண்டிய அவசியமேயில்லை' என, அவர் பல ஆண்டுகளாக சொல்லி வந்தார். அதனால், அங்கு ஏற்பட்ட நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு, அவரது அணுகுமுறைகளும் ஒரு முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. எனவே, நெருக்கடி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட செனட் கமிட்டி முன்னால் அழைக்கப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர், பொருளாதார சிந்தனை குறித்த தனது கருத்துக்களில் தவறுகள் ஏற்பட்டு விட்டன எனவும், சந்தைப் பொருளாதார முறைகளில் குறைபாடுகள் உள்ளன எனவும், முதன்முறையாக தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது. நடுத்தர மற்றும் சிறு வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருகின்றன. 2010ம் வருடத்தில் மட்டும், இதுவரை சராசரியாக ஒரு மாதத்திற்கு பத்துக்கும் மேல் என்ற அளவில் திவாலாகி உள்ளன. நிறுவனங்கள் மூடப்படுவதும் அதிக எண்ணிக்கையில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களில், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், கடன் நெருக்கடியை சந்தித்தன. தற்போது, அயர்லாந்து நாட்டுக்கு பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்தும், பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்வதாகத் தெரியவில்லை. நவீன பொருளாதார முறை, மக்களை, தங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்யும் தனி நபர்களாக பாவிக்கிறது. இயற்கையான உறவுகளுக்கும், சமூகங்களுக்கும் அதில் முக்கியத்துவம் இல்லை. அவர்களது கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளெல்லாமே, தனி நபர் சித்தாந்தத்தை மையப்படுத்தியே அமைந்துள்ளன. அதன் விளைவாக, குடும்பங்களும், சமூகங்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. நுகர்வு கலாசாரம் பெருகி, சேமிப்புகள் குறைந்தன. சந்தைப் பொருளாதாரம் ஆசைகளையும், தேவைகளையும் மிகைப்படுத்தியது. அதனால், கடன் வாங்கி செலவு செய்யுமாறு மக்கள் தூண்டப்பட்டனர். அதிகப்படியான மக்கள் சேமிப்பின்றி கடன் வாங்கியதால், உள்நாட்டு சேமிப்பு மிகவும் கீழே சென்றது. ஆனால், செலவுகள் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றன. எனவே, நிதி நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் உருவாயின.

பால் சாமுவேல்சன் என்பவர், புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார பேராசிரியராக விளங்கியவர்; நோபல் பரிசு பெற்றவர். அவரது பொருளாதார புத்தகம், பல லட்சம் பிரதிகள் விற்கப்பட்டு, உலக அளவில் சாதனை படைத்தது. நிதிக் கோட்பாடுகளில், "டெரிவேட்டிவ்'களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர். அவர் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். தன் மறைவுக்கு முன்பு, 2008ல், அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியைப் பார்த்து, தன் பங்களிப்புகள் மூலம், தானும் ஒரு விதத்தில் நெருக்கடிக்கு பொறுப்பாகி விட்டதாக கூறினார். எனவே, மேற்கத்திய பொருளாதார நெருக்கடி, அவர்களது நவீன கோட்பாடுகளின் தோல்வியையே காட்டுகிறது. நெருக்கடி முடிந்து இரண்டு வருடம் கழிந்த பின்னரும், நிலையைச் சரி செய்து, உறுதியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க இயலாத அவர்களின் நிலைமை, மேற்கண்ட தோல்வியை உறுதி செய்கிறது.

உலக அளவில், அதிக எண்ணிக்கையில் நோபல் பரிசு பெற்ற நிபுணர்களைப் பெற்றிருந்தும், அமெரிக்கா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வலுவிழந்து, நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கே வழி தெரியாமல் சிரமப்படுவதற்கு அடிப்படைக் காரணம், அவர்களது சித்தாந்தங்களின் வறட்சியே. இந்த சமயத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நமது பொருளாதாரத்தின் அடிப்படை தன்மையை பற்றியது. எவ்வளவோ சிரமங்களுக்கு இடையிலும் நமது பொருளாதாரம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது. அதன் மூலம் உலக அளவில் ஒரு பொருளாதார சக்தியாகவும் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் நமது கலாசாரமும், அது சார்ந்த தன்மைகளும் தான். நமது கலாசாரம், பண்பாடு மட்டுமல்ல, நமது பொருளாதார கொள்கைகளும் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டி தான். email: pkspathi@gmail.com

ப.கனகசபாபதி, பேராசிரியர்

சுதேசிக் கல்வியே சுயகல்வி-தினமலர் உரத்த சிந்தனை

l

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் (அனுமதி மற்றும் நடைமுறை ஒழுங்குபடுத்தும்) சட்ட வரைவை லோக்சபாவில் அறிமுகப்படுத்துவதற்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வரைவு அனேகமாக இந்த ஆண்டிலேயே, சட்டமாக இயற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களுக்கு, இந்தியாவில் நிறுவனங்களை அமைக்கவும், பட்டங்களை அளிக்கவும் இந்த வரைவு அனுமதிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாகவே, பல முனைகளிலிருந்து வந்த எதிர்ப்புகளால், இது கிடப்பில் போடப்பட்டிருந்தது.பின், அரசு செயலர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில பிரிவுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இப்போது கூட, முக்கிய எதிர்கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும், இந்த வரைவை சட்டமாக்கக் கூடாது என, எதிர்ப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆளுங்கட்சியிலேயே கூட, இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டால், நமது மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கென நிறைய பல்கலைக்கழகங்கள் இருக்கும் எனவும், அதனால் இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு, போட்டி அதிகரிக்கும் எனவும், அதன் மூலம் கல்வியின் தரம் உயரும் எனவும், கல்வி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் பல்கலைக்கழகங்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வளர்ந்த நாடுகளைப் போல, நம் நாட்டிலும் அதிகம் பேர் படிக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது.

கல்வித்துறை என்பது, நாட்டிலுள்ள மற்ற பல துறைகளைப் போன்றதல்ல. அது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் நிர்ணயித்து, நாட்டின் முன்னேற்றத்தில் முதன்மையான பங்கு வகிக்கும் அடிப்படையான துறை. ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தங்களது குழந்தைகள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்க, துணைபுரியும் கல்வியை கொடுத்து அவர்களின் வாழ்வையும், வளத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே, அரசும், அதைச்சார்ந்த சமூகமும், கல்வி குறித்த கொள்கைகளில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என்றவுடனே, நமது மனதில் தோன்றும் முக்கியமான நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகள் உள்ளிட்டவைதான். அந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரங்களின் தன்மை, அங்குள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி பார்த்தாலே, அவர்களின் உயர்கல்வி பற்றிய நிலைமையை நம்மால் அறிய முடியும்.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உயர்கல்விக்கு பிரபலமான நாடுகளில், தனிநபர் சுதந்திரம் மேலோங்கி குடும்பங்களும், சமூகங்களும் வெகுவாக சிதைந்துவருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நாற்பது சதவீதம் குழந்தைகள், திருமணமாகாத உறவுகளின் மூலம் பிறந்துள்ளன.

உலகின் பல பெரிய தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ள அந்த நாடுகளில், அதிக கல்வி கற்றவர்கள் உயர் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் தவறான வழிமுறைகள் மூலம் தங்களது சுயலாபத்துக்காக அரசையும், மக்களையும் ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. அதனால், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கல்வி மற்றும் போதனை முறைகள் கூட முழுமையானதாக இல்லையென, அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். 'அண்மைக்காலமாக உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, கடந்த நாற்பது வருடங்களாகத் தாங்கள் போதித்து வந்த தவறான கோட்பாடுகளே காரணம்' என, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற, நிபுணர்கள் தற் போது வெளிப்படையாக ஒத்துக் கொள்கின்றனர்.மேற்கு நாடுகளின் வரலாற்றை பார்த்தோமானால், அவர் களது சமூக மற்றும் பொரு ளாதாரம் குறித்த பல கோட்பாடுகளும், அவர்களது நாடுகளிலேயே தொடர்ந்து தோற்றுப்போய் வருவது தெரியவரும்.

தற்போதைய நெருக்கடியால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம், அவர்கள் இப்போது வழி தெரியாமல் திகைத்துக் கொண்டுள்ளனர்.அதே சமயம் இந்தியா, பலவிதமான சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு இடையிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதனால், உலகிலேயே அதிகமான வேகத்துடன் வளரக்கூடிய இரண்டாவது நாடாக உருவாகியுள்ளது. பலவிதமான குறைபாடுகள் இருந்தபோதும், இந்தியாவின் பொருளாதார, குடும்பம் மற்றும் சமூக முறைகளை உலகின் பிற நாடுகள் முன்மாதிரியாக பார்க்கின்றன.அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்கள், உலகின் எந்த நாட்டோடும் போட்டிபோட்டு வெற்றி பெருமளவு திறமையுள்ளவர்களை உருவாக்கி வருகின்றன.

தேவையான வசதிகளை அரசால் ஏற்படுத்திக் கொள்ள இயலாதெனில், அதை நம் நாட்டிலுள்ள தனியார் துறையிடமே கொடுத்து அவற்றை சரியான முறையில் கண்காணிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை பொருத்தவரையில், அவர்கள் இங்கு லாப நோக்கோடுதான் வருவர். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின், அமெரிக்காவில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான நிதி உதவிகளை பல மாநிலங்கள் வெகுவாகக் குறைத்து வருகின்றன.சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் அவர்களது சில கல்வி நிறுவனங்கள் தங்களைத் தொழிலில் தக்கவைத்துக் கொள்ள, வேறு நாடுகளை நோக்க ஆரம்பித்துள்ளன.அதிலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட, வேகமாக வளரும் நாட்டில் வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த சமயத்தில் அவர்கள் இங்கு வர முயற்சிப்பது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே .கல்வித் துறையில் நமது நாடு ஆரம்ப காலத்தொட்டு உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு நடத்திய கணக்கெடுப்புகள் உலகிலேயே அதிக அளவு கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது எனத் தெரிவிக்கிறது. அதற்குப் பின்னர்தான் கல்வித்துறையின் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கல்வியானது கற்கும் ஒவ்வொருவரின் வாழ்வையும், நாட்டின் வளத்தையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.

தற்போதைய பாடத்திட்டங்களை பெரும்பாலும், மேல்நாட்டு வாழ்க்கை முறை மற்றும் கோட்பாடுகளை சார்ந்தவையாகவே உள்ளன. இதைக் களைய பாடத் திட்டங்களிலும், செயல்பாடு முறைகளிலும், உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தேவையான முதலீடுகளை செய்வதற்கு நம் நாட்டில் தனியார் துறை தயாராக உள்ளது. எனவே, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள உரிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். தனிமனித வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைகளிலும் பெருமளவு தோல்வியை தழுவி வரும் மேல் நாட்டினரிடமிருந்து எந்த விதமான உயர்கல்வியை நாம் எதிர்பார்க்க முடியும்? மற்ற பிற நாடுகளை விடவும் வலுவான ஆதாரங்களைப் பெற்றுள்ள நம்மால் ஏன் தேவையான மாற்றங்களை செய்ய முடியாது?

- பேராசிரியர் ப.கனகசபாபதி - இயக்குனர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம்

வாசகர் கருத்து
அற்புதம் !!!!!!!!!!!!!!!!!
by S Dhasarathan,chennai,India 26-04-2010 20:32:16 IST
அன்னியர்களின் பார்வை நம் நாட்டிற்கு வந்து குவியும் அன்னியச்செலவானியின் மீது பட்டு விட்டது! எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை இந்திய மண்ணில் கால் பதிக்க விடக்கூடாது.பிரபலமான பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.ஏற்கனவே கல்வி என்பது சாமானியர்களுக்கு கனவாக மாறி வரும் இந்த வேளையில் புதிய வரவு நடுத்தர மக்களை நிலை குழையச்செய்து அவர்களை ஆண்டியாக்கி அலைய வைத்து விடும்.தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தியைப் பெருக்கித் தரும் நிறுவனங்களுக்கு அனுமதி தரலாம்.இதன் மூலம் படித்து விட்டு வீட்டுக்கு இரண்டு பொறியாளர்கள் வேலை வாய்ப்புக்காக தவம் கிடக்கும் அவலநிலை மாறிவிடும்
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates 25-04-2010 23:32:06 IST
தனிமனித வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைகளிலும் பெருமளவு தோல்வியை தழுவி வரும் மேல் நாட்டினரிடமிருந்து எந்த விதமான உயர்கல்வியை நாம் எதிர்பார்க்க முடியும்? மற்ற பிற நாடுகளை விடவும் வலுவான ஆதாரங்களைப் பெற்றுள்ள நம்மால் ஏன் தேவையான மாற்றங்களை செய்ய முடியாது?ஒரு பானை சோறுக்கு இது போதும்--மிக நன்று--
by S.R. SEKHAR,coimbatore,India 25-04-2010 19:12:44 IST
நாம் நமது அடையாளங்களையும், புராதன வாழ்வியல் நெறிகளையும் அன்னியருக்கு தேவையான கல்விமுறையால் இழந்துவிட்டு நிற்கிறோம். புதிய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதால் அப்படியுள்ள புராதன அறிவையும், நமது நிலா அமைப்பு சார் வாழ்வியலையும் தொலைத்து விடுவோம் என்ற நிலையை வரவேற்பதுபோல் உள்ளது.
by M Siva,KUWAIT,India 25-04-2010 17:07:38 IST
நம் நாட்டு கல்வியே மேல், அயல் நாட்டு கல்வி வெறும் படிப்பை மட்டுமே அளிக்கும், ஆனால் நம் நாட்டு கல்வியோ படிப்புடன் ஒழுக்கத்தையும், குடும்ப உறுதியையும் அதன் மென்மையும் நிலைநாட்டும்.
by கணேஷ் ,Maldives,Maldives 25-04-2010 16:30:05 IST
This article proves that the foreign institutes are always money minded and that too they only come to India to survive in this recession period. So, you never get good education and this would not give us benefit. Please don''t allow foreign institutions.
by R செந்தில்குமார்,zurich,Switzerland 25-04-2010 15:23:11 IST
Prof.KanagaSababathy is right in his opinion that permitting foriegn universities to have their campuses in India alone could not deliver the desired results promised by the HRD ministry. In fact, we in India do have a lot of fascination for foreign university degrees because of lack of adequate information about such universities and also a lot of myths about UK, US degrees.Education as such is culture specific in particular and nation-specific in general and so should be rooted to a nation''s legacy and future development; it is in a broader sense empowering the citizens with the objective of building the society and the nation.In this sense I wish to state that foriegn universities can only cater to our elite population''s fancy to have a foreign degree without contributing anything towards bettering the intellectual growth of our younger generation and thereby our nation in a holistic manner.Our HRD minister Kapil Sibel is right when he opines that we need more and more universities and colleges prportionate to our population. To fulfill this requirement and also to prevent a large number of students traveling abroad for education, the ministry has decided to permit foriegn iniversities. But all these attempts seem to undermine certain factors relating to the nature of Indian education providers and that of those abroad. In my experience as a university teacher abroad, brushing shoulders with other nationals and teachers mostly trained in UK, US and Australia, I can declare with conviction that Indians are second to none in professional skills, brilliance, education or work culture. What ails the Indian educational sector is lack of infrastructural facilities to carry out focussed research on specialised areas due to lack of funds. As such we end up as jack of all trades and master of none whereas our foriegn counterparts excell in their specialised areas. Hence, instead of permitting foriegn universities our government should encourage the private players along with the government to establish more universities with a very strong apolitical constitutionally constituted regulatory body to enforce stipulations and with emphasis on infrastructral facitities for research. Individualizing our syllabus content and keeping the student-teacher ratio to an efficient level and keeping our objective on empowering our people and therby building India will elevate our universities on a par or even superior to the universities abroad.
by Dr swami D. Francis,Libya,India 25-04-2010 14:13:42 IST
Now it is very clear why they want to close the Deemed Universities. Do you know in one of the government colleges there are two different classes - one for capitation students and another one for government quota students? Instead of allowing foreign universities in our soil - help the present Universities both government and private - give them advice - follow up - do something to improve the quality constructively. Othewise the foreign universities will function here only to widen the gap between an ordinary Indian and mega rich indian - and will make some people''s pockets fat by draining our pockets.
by N R,Sana'a,Yemen 25-04-2010 13:25:30 IST
நல்ல கருத்து மேலும் உண்மை யான கருத்து! எங்கு தான் பிரச்சனை! இந்திய அரசு இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்! we have tremendous private university people, but why dont to create new more IITS, NITs, IISC''c to stat up on US people sudents are willing to do their PHD in IISCs and IITs. By keep in mind that Govt of India Can have very good policy with all the Hingher Education to be with them only and Separate special wing to be incorp[orated in this scenes. Its may provide, JOBS to Some educated one, People, Culture, Educations and upligt ment of people can have in thier own regions.
by n வெங்கட்குமார்,trichy,India 25-04-2010 12:13:38 IST
மிகவும் சிந்திக்ககூடிய கட்டுரை. உயர் கல்விகளில் மட்டும் தான் அரசு நிறுவனம் தரமான கல்வியை கொடுக்கிறது உதாரணம் அண்ணா பல்கலைகழகம் மண்டல பொறியியல் கல்லூரி .பனிரெண்டாம் வகுப்பு வரை பெரும்பாலும் தனியார் பள்ளிகளே தரமான கல்வியை கொடுக்கிறது.குறிப்பாக மாணவர்களின் disclipne ,punctuality போன்ற நற்குணங்கள் தனியார் பள்ளிகளில் மட்டுமே உள்ளது .எப்படி இருந்தாலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்ககூடாது .இந்தியாவின் கலாச்சாரம் ,பண்பாடு ,கல்விதரம் ,பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பார்த்து பொறாமைகொண்டு எந்தெந்த வழிகளில் இந்தியாவின் பெயரை கெடுக்கவேண்டுமோ அந்தந்த வழிகளில் வளர்ந்தநாட்டினர் முயற்சி செய்கிறார்கள் அதற்கு நாம் துணை போக கூடாது .சேதுராமன் நன்னிலம்
by p சேதுராமன் நன்னிலம் ,Dubai,UnitedArabEmirates 25-04-2010 11:29:49 IST
தயவுசெய்து இந்த கட்டுரையின் நகலை மத்திய அரசுக்கு அனுப்பவும். நன்றி.
by சாமிமுத்து சிவகுமார் ,singaporeanthivayal,India 25-04-2010 10:55:48 IST
நம்மால் ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். கையேந்தி நின்றதெல்லாம் போதும். இனியாவது சுயமாக முடியு எடுப்போம்.
by g அழகுநம்பி,qatar,India 25-04-2010 08:44:11 IST
QUALITY EDUCATION CAN BE ONLY GIVEN BY THE GOVT. BEEING A NON PROFITAL ORGANISATION GOVT ALONE GIVE A GOOD EDUCATION TO ITS PEOPLE. THE BEST INSTITUTES OF INDIA LIKE ANNA UNIVERSITY, JIPMER, REC ARE GOOD EXAMPLES OF GOVT INSTITUES. PRIVATE ORGANISATIONS ARE PROFITE MINDED AND THEY NEVER BOTHER ABOUT QUALITY. TO GET 100% RESULTS WE KNOW HOW PRIVATE MATRIC AND HS SCHOOLS ABUSE STUDENTS. HOW CAN WE EXPECT QUALITY FROM PRIVATE MEDICAL COLLEGES WHO BRIBED DESAI AROUND Rs 30 CRORES TO HAVE AUTHORISATION SO STOP FURTHER PRIVATE AND FORGIEN EDUCATIONAL INSTITUATIONS..
by Paris EJILAN,-,France 25-04-2010 04:30:30 IST
சிறந்த கட்டுரை அளித்த தினமலருக்கு மிக்க நன்றி
by k சுப்புராஜ்,Sharjah,India 25-04-2010 01:19:08 IST
.


நிமிர்ந்து பறக்கும் இந்தியக் கொடி


அமெரிக்காவில் நிதி நெருக்கடி பெரிதாக உருவெடுத்து ஒரு வருட காலம் முடிந்து விட்டது. ஆரம்பத்தில் பிரபலமான முதலீட்டு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பெரிய காப்பீடு மற்றும் வங்கி நிறுவனங்கள் மீள முடியாத சிக்கல்களில் இருப்பதாக அறிவித்தன. நிதி சார்ந்த துறைகளைத் தொடர்ந்து, உற்பத்தி உள்ளிட்ட பிற துறைகளையும் அந்த நெருக்கடி பாதித்தது. வேகமாகப் பரவிய நெருக்கடி ஐரோப்பிய நாடுகளைத் தாக்கி, பின், உலகின் பல பாகங்களுக்கும் சென்றது. அதனால், அமெரிக்க நிதி நெருக்கடி உலகின் பொருளாதார நெருக்கடியாக மாறியது.நிறுவனங்களை அழிவிலிருந்து தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கவும் அமெரிக்க அரசு பெரும் தொகைகளை ஒதுக்கியது. சிக்கலில் இருந்த பெரிய கம்பெனிகளில் அரசே பங்குகளை வாங்கி, அவற்றைத் தத்தெடுத்துக் கொண்டது. பாதிப்புக்குள்ளான நாடுகள் பலவற்றிலும், அவர்களுக்குப் பொருத்தமான வகைகளில் திட்டங்கள் தீட்டப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆயினும், நெருக்கடியின் தாக்கம் மேற்கத்திய நாடுகளை வெகுவாகப் பாதித்துள்ளன. அதனால், வளர்ச்சி விகிதங்கள் மிகவும் குறைந்தும், எதிர்மறையாகவும் உள்ளன. காலாண்டு வளர்ச்சி விகிதங்களை கணக்கிட்டுப் பார்த்தால், நெருக்கடிக்குப் பிந்தைய கடந்த ஒரு வருட காலத்தில், பெரும்பாலான நாடுகளில் குறைந்தது ஒரு காலாண்டிலாவது பூஜ்யத்துக்கும் கீழே வளர்ச்சி சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.



வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு, அந்த நாடுகளை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது. வேலை இழப்புகளும், நிறுவனங்கள் மூடப்படுதலும் இன்னமும் குறைந்தபாடில்லை. அமெரிக்க நாட்டில் வேலையில்லாதோர் சதவீதம் 10ஐ நெருங்கியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரையிலும் 90க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. அதனால், மக்களின் வாழ்க்கை இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது.அதே சமயம், இந்த நாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்த விவரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள், சில உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன. முக்கியமாக பொருளாதார நெருக்கடி அவர்களையும் பாதித்திருந்தாலும், அதனால் அவர்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளவில்லை. சிக்கனமான நடைமுறைகளும், குடும்ப அமைப்பு முறையும், திட்டமிட்ட வாழ்க்கையும் அவர்களை ஆபத்திலிருந்து காத்துள்ளன. அங்கு தொழில் செய்யும் சில இந்தியர்கள் தற்போது, தங்களது தொழில்களை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த பல வருடங்களாகவே அதிக அளவில் பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். நெருக்கடிக்கும் பின்னரும் அது குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது.



கடந்த 2008 - 09ல் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இங்கு அனுப்பப்பட்ட தொகை, 46 பில்லியன் டாலருக்கு மேல் உள்ளது. (இந்திய நாணய மதிப்பில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) இது, அதற்கு முந்தைய ஆண்டில் அனுப்பப்பட்ட தொகையை விட, 15 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம். அதனால், வெளிநாட்டு வாழ் மக்கள் தமது தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில் இந்தியர்கள் அனுப்புவது தான் உலகிலேயே அதிகமான தொகை.மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு சிக்கல்களில் உழலும் போது, அங்கு வாழ்வதற்காகச் சென்ற இந்தியர்கள் பெரிய பிரச்னைகளின்றி தொடர்ந்து முன்னேறுவதற்கான காரணம் என்ன? நிதி நெருக்கடிக்குப் பின், கடந்த ஒரு வருட காலத்தில் முக்கியமான நாடுகள் பலவற்றில் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாகவும், பூஜ்யத்துக்கு கீழேயும் சென்று விட்டபோது, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு காலாண்டிலும் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவீதமும் அதற்கு மேலும் இருக்கக் காரணம் என்ன?




இதற்கான விடை தற்கால பொருளாதாரக் கோட்பாடுகளில் இல்லை. மாறாக, அது மக்களின் வாழ்க்கை முறைகளில் தான் உள்ளது. நவீன பொருளாதார கோட்பாடுகள் கடந்த 250 வருட காலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவானவை. அவை அவர்களது குறுகிய கால அனுபவங்களையும், தனிநபர் வாழ்க்கை முறைகளையும், எண்ணங்களையும் ஒட்டி ஏற்படுத்தப்பட்டவை.காலனி ஆதிக்க காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வந்த இயற்கையான வழிமுறைகளை ஐரோப்பியர்கள் அழித்தனர். பின்னர், அவர்களது முறைகளை காலனி நாட்டு மக்கள் மேல் திணித்து, அவையே உயர்ந்தது என்ற எண்ணத்தையும் பரப்பினர். ஐரோப்பிய முறைகளே எல்லாவிதத்திலும் மேலானவை என்றும், அவையே உலக முழுமைக்கும் சரியானதாக இருக்கும் என்றும் கருத்துக்களை உருவாக்கினர். உலகின் பெரும்பகுதி, அப்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அது பெருமளவு சாத்தியமானது.பின்னர், ஐரோப்பிய பொருளாதாரம் சரிந்து அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதாரமாக உருவெடுத்த போது, அமெரிக்க கருத்துக்களே உயர்வானவை என்ற கருத்து ஏற்படுத்தப்பட்டது. அதனால், கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக அமெரிக்க கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.ஆனால், சென்ற வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அந்த எண்ணங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்து விட்டது.




ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சு ஆகியவையே கூட அமெரிக்க முறைகள், தங்களது நாடுகளுக்குப் பொருத்தமாக அமையாது எனச் சொல்கின்றன. அமெரிக்க கோட்பாடுகள், உலகின் பல பகுதிகளிலும் கடந்த சில வருடங்களாகவே பெருமளவு தோல்வியைத் தழுவி வருகின்றன.அதேசமயம் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் செயல்பாடுகளும், வேகமான வளர்ச்சியும் உலகைத் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. இனி, உலகப் பொருளாதாரம் மீண்டெழுவதே கூட இவ்விரு நாடுகளின் தலைமையில் தான் நடக்கும் என, சர்வதேச நிபுணர்கள் கணித்து சொல்கின்றனர்.வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், கடந்த இரண்டாயிர வருட காலத்தில், உலகின் முதல் நிலை பொருளாதாரமாக இந்தியா விளங்கி வந்ததை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பின்னர், ஆங்கிலேயர்களின் சுரண்டல்களாலும், சுயநலக் கொள்கைகளாலுமே இந்தியாவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்படியானால், நாட்டின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலையில் வைத்திருக்கக் கூடிய அணுகுமுறைகள் நம்மிடம் பல நூற்றாண்டு காலமாகவே இருந்து வந்துள்ளது புலனாகிறது.



சுதந்திரம் வாங்கும் போது, இந்தியா ஒரு ஏழை நாடாக, கல்வியறிவு குறைந்த, தொழில் வளமில்லாத நாடாகவே இருந்தது. அதனால், உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை இல்லை. ஆனால், ஒரு 60 வருட காலத்தில் எத்தனையோ சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கிடையிலும், உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாக உருவாகி உள்ளது.மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளைக் கூட எதிர்கொண்டு, முன்னேறும் அளவுக்கு வலுவான தன்மையை கொண்டுள்ளது. அதனால் பொருளாதாரம், வளர்ச்சி என்பது பற்றியெல்லாம் தங்களுக்குத் தான் முழுவதும் தெரியும் என்று இதுவரை மார்தட்டிக் கொண்டிருந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், இந்தியாவின் பொருளாதார நிலைமை நன்றாக உள்ளது என இப்போது சான்றிதழ்களை கொடுக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்?அது, நமது மக்களின் வாழ்க்கை முறைகளில் பின்னிப் பிணைந்து அவர்களை வழி நடத்துகிறது. ஆம்... அது தான் இந்திய கலாசாரம். கடின உழைப்பு, எளிய வாழக்கை, அதிக சேமிப்பு, குடும்பமும், சமூகமும் சார்ந்த வாழ்வியல் முறைகள், பாசம், அர்ப்பணிப்பு, தொழில் முனையும் தன்மை இவையெல்லாம் அதன் வெளிப்பாடுகள்.



அன்னிய சக்திகள் நம்மை சிதைத்த போதும், அரசுகளும், கொள்கைகளும் மாறி மாறிப் போகும் போதும், இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்து அதை வழிநடத்தி செல்வது நமது நாட்டின் அடிப்படையான கலாசாரமே.சமூக நல விரும்பிகள், அறிஞர் கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தி யாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தமது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. ஞாயிறு தோறும் வெளிவரும்.

- ப.கனகசபாபதி -கட்டுரையாளர், மேலாண்மை பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

DINAMALAR 13.12.2009

வாசகர் கருத்து

இந்திய தேசத்தைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும் கட்டுரையாசிரியர் புதிய கண்ணோட்டத்தையும், நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளார். இது போன்ற கட்டுரைகளை தினமலர் தொடர்ந்து வெளியிட வேண்டும்.
by V.S. Bharathanban,kovai,India 12/14/2009 6:42:46 PM IST

வணக்கம் மேலும் நன்றி ஐயா இந்த கருதுத்களுக்கு
by கணேஷ் ,maldives,Maldives 12/13/2009 3:18:34 PM IST

முற்றிலும் உண்மை. ஒன்று அதிகமான மனித ஆற்றல், இரண்டு கூட்டு குடும்பமுறை, மூன்று எதிலும் சிக்கனம் பார்த்து செயல்படும் குணம், நான்கு எல்லாவிதமான வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ளது, அரசு என்ற இயந்திரம் சரியானவர்களின் கையில் இருந்தால் உலகமே மூக்கில் கைவைத்து இந்தியாவை பார்த்து வியக்க வைக்கலாம். சுயநல அரசியல் வாதிகள் உள்ளவரை அது நடக்காது. ஆதங்கத்துடன் அப்துல் ரஹ்மான், சவுதி அரேபியா
by G. அப்துல் ரஹ்மான் ,Alkhobar, Saudi Arabia ,Saudi Arabia 12/13/2009 12:01:08 PM IST