Professor with interests in the functioning Indian models - Economy,Society, Business and Management.
NEED FOR INDIAN MANAGEMENT MODELS
Introduction
சுதேசிக் கல்வியே சுயகல்வி-தினமலர் உரத்த சிந்தனை

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் (அனுமதி மற்றும் நடைமுறை ஒழுங்குபடுத்தும்) சட்ட வரைவை லோக்சபாவில் அறிமுகப்படுத்துவதற்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வரைவு அனேகமாக இந்த ஆண்டிலேயே, சட்டமாக இயற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களுக்கு, இந்தியாவில் நிறுவனங்களை அமைக்கவும், பட்டங்களை அளிக்கவும் இந்த வரைவு அனுமதிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாகவே, பல முனைகளிலிருந்து வந்த எதிர்ப்புகளால், இது கிடப்பில் போடப்பட்டிருந்தது.பின், அரசு செயலர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில பிரிவுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இப்போது கூட, முக்கிய எதிர்கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும், இந்த வரைவை சட்டமாக்கக் கூடாது என, எதிர்ப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆளுங்கட்சியிலேயே கூட, இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டால், நமது மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கென நிறைய பல்கலைக்கழகங்கள் இருக்கும் எனவும், அதனால் இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு, போட்டி அதிகரிக்கும் எனவும், அதன் மூலம் கல்வியின் தரம் உயரும் எனவும், கல்வி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் பல்கலைக்கழகங்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வளர்ந்த நாடுகளைப் போல, நம் நாட்டிலும் அதிகம் பேர் படிக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
கல்வித்துறை என்பது, நாட்டிலுள்ள மற்ற பல துறைகளைப் போன்றதல்ல. அது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் நிர்ணயித்து, நாட்டின் முன்னேற்றத்தில் முதன்மையான பங்கு வகிக்கும் அடிப்படையான துறை. ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தங்களது குழந்தைகள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்க, துணைபுரியும் கல்வியை கொடுத்து அவர்களின் வாழ்வையும், வளத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே, அரசும், அதைச்சார்ந்த சமூகமும், கல்வி குறித்த கொள்கைகளில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என்றவுடனே, நமது மனதில் தோன்றும் முக்கியமான நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகள் உள்ளிட்டவைதான். அந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரங்களின் தன்மை, அங்குள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி பார்த்தாலே, அவர்களின் உயர்கல்வி பற்றிய நிலைமையை நம்மால் அறிய முடியும்.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உயர்கல்விக்கு பிரபலமான நாடுகளில், தனிநபர் சுதந்திரம் மேலோங்கி குடும்பங்களும், சமூகங்களும் வெகுவாக சிதைந்துவருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நாற்பது சதவீதம் குழந்தைகள், திருமணமாகாத உறவுகளின் மூலம் பிறந்துள்ளன.
உலகின் பல பெரிய தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ள அந்த நாடுகளில், அதிக கல்வி கற்றவர்கள் உயர் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் தவறான வழிமுறைகள் மூலம் தங்களது சுயலாபத்துக்காக அரசையும், மக்களையும் ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. அதனால், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கல்வி மற்றும் போதனை முறைகள் கூட முழுமையானதாக இல்லையென, அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். 'அண்மைக்காலமாக உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, கடந்த நாற்பது வருடங்களாகத் தாங்கள் போதித்து வந்த தவறான கோட்பாடுகளே காரணம்' என, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற, நிபுணர்கள் தற் போது வெளிப்படையாக ஒத்துக் கொள்கின்றனர்.மேற்கு நாடுகளின் வரலாற்றை பார்த்தோமானால், அவர் களது சமூக மற்றும் பொரு ளாதாரம் குறித்த பல கோட்பாடுகளும், அவர்களது நாடுகளிலேயே தொடர்ந்து தோற்றுப்போய் வருவது தெரியவரும்.
தற்போதைய நெருக்கடியால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம், அவர்கள் இப்போது வழி தெரியாமல் திகைத்துக் கொண்டுள்ளனர்.அதே சமயம் இந்தியா, பலவிதமான சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு இடையிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதனால், உலகிலேயே அதிகமான வேகத்துடன் வளரக்கூடிய இரண்டாவது நாடாக உருவாகியுள்ளது. பலவிதமான குறைபாடுகள் இருந்தபோதும், இந்தியாவின் பொருளாதார, குடும்பம் மற்றும் சமூக முறைகளை உலகின் பிற நாடுகள் முன்மாதிரியாக பார்க்கின்றன.அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்கள், உலகின் எந்த நாட்டோடும் போட்டிபோட்டு வெற்றி பெருமளவு திறமையுள்ளவர்களை உருவாக்கி வருகின்றன.
தேவையான வசதிகளை அரசால் ஏற்படுத்திக் கொள்ள இயலாதெனில், அதை நம் நாட்டிலுள்ள தனியார் துறையிடமே கொடுத்து அவற்றை சரியான முறையில் கண்காணிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை பொருத்தவரையில், அவர்கள் இங்கு லாப நோக்கோடுதான் வருவர். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின், அமெரிக்காவில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான நிதி உதவிகளை பல மாநிலங்கள் வெகுவாகக் குறைத்து வருகின்றன.சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில் அவர்களது சில கல்வி நிறுவனங்கள் தங்களைத் தொழிலில் தக்கவைத்துக் கொள்ள, வேறு நாடுகளை நோக்க ஆரம்பித்துள்ளன.அதிலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட, வேகமாக வளரும் நாட்டில் வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த சமயத்தில் அவர்கள் இங்கு வர முயற்சிப்பது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே .கல்வித் துறையில் நமது நாடு ஆரம்ப காலத்தொட்டு உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு நடத்திய கணக்கெடுப்புகள் உலகிலேயே அதிக அளவு கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது எனத் தெரிவிக்கிறது. அதற்குப் பின்னர்தான் கல்வித்துறையின் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கல்வியானது கற்கும் ஒவ்வொருவரின் வாழ்வையும், நாட்டின் வளத்தையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.
தற்போதைய பாடத்திட்டங்களை பெரும்பாலும், மேல்நாட்டு வாழ்க்கை முறை மற்றும் கோட்பாடுகளை சார்ந்தவையாகவே உள்ளன. இதைக் களைய பாடத் திட்டங்களிலும், செயல்பாடு முறைகளிலும், உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தேவையான முதலீடுகளை செய்வதற்கு நம் நாட்டில் தனியார் துறை தயாராக உள்ளது. எனவே, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள உரிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். தனிமனித வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைகளிலும் பெருமளவு தோல்வியை தழுவி வரும் மேல் நாட்டினரிடமிருந்து எந்த விதமான உயர்கல்வியை நாம் எதிர்பார்க்க முடியும்? மற்ற பிற நாடுகளை விடவும் வலுவான ஆதாரங்களைப் பெற்றுள்ள நம்மால் ஏன் தேவையான மாற்றங்களை செய்ய முடியாது?
- பேராசிரியர் ப.கனகசபாபதி - இயக்குனர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம்
வாசகர் கருத்து |
![]() ![]() |
by S Dhasarathan,chennai,India 26-04-2010 20:32:16 IST |
![]() ![]() |
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates 25-04-2010 23:32:06 IST |
![]() ![]() |
by S.R. SEKHAR,coimbatore,India 25-04-2010 19:12:44 IST |
![]() ![]() |
by M Siva,KUWAIT,India 25-04-2010 17:07:38 IST |
![]() ![]() |
by கணேஷ் ,Maldives,Maldives 25-04-2010 16:30:05 IST |
![]() ![]() |
by R செந்தில்குமார்,zurich,Switzerland 25-04-2010 15:23:11 IST |
![]() ![]() |
by Dr swami D. Francis,Libya,India 25-04-2010 14:13:42 IST |
![]() ![]() |
by N R,Sana'a,Yemen 25-04-2010 13:25:30 IST |
![]() ![]() |
by n வெங்கட்குமார்,trichy,India 25-04-2010 12:13:38 IST |
![]() ![]() |
by p சேதுராமன் நன்னிலம் ,Dubai,UnitedArabEmirates 25-04-2010 11:29:49 IST |
![]() ![]() |
by சாமிமுத்து சிவகுமார் ,singaporeanthivayal,India 25-04-2010 10:55:48 IST |
![]() ![]() |
by g அழகுநம்பி,qatar,India 25-04-2010 08:44:11 IST |
![]() ![]() |
by Paris EJILAN,-,France 25-04-2010 04:30:30 IST |
![]() ![]() |
by k சுப்புராஜ்,Sharjah,India 25-04-2010 01:19:08 IST |
பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்-வாசிப்பனுபவம்:அறிவன்
பெரும்பாலும் மேற்குலக நாடுகள் அல்லது ஆசியாவில் மேற்குலக நாடுகளின் பாவனையில் இருக்கும் நாடுகள்;எடுத்துக்காட்டினால் ஆஸ்திரேலியா அல்லது சிங்கப்பூர்.இவை தவிரமத்திய கிழக்கு நாடுகளின் தேர்வில் துபை அல்லது அமீரக நாடுகள் வர வாய்ப்பிருக்கிறது.
இவற்றை விட்டால் மேற்குலக,ஐரோப்பிய,அமெரிக்க,பிரிட்டிஷ் நாடுகள் தான் நாம் பெரும்பாலும் செல்ல,தங்க,வாழ விரும்பும் நாடுகளாக இருக்கின்றன.இவையே உலகின் முதல் நிலைநாடுகள்.
மற்ற நாடுகள் வளரும் நாடுகள் என்றும் தேர்ட் வோர்ல்ட் என்றும் அழைக்கப்படுகின்றன.சிங்கையின் சீனியர் லீ எழுதிய புத்தகமான சிங்கையின் வளர்ச்சியை விவரிக்கும் இரண்டு புத்தகங்களில் இரண்டாவது புத்தகத்தின் தலைப்பே From Third World to First World என்பதுதான்.
என்ன காரணம்?
மேற்குறிப்பிட்ட நாடுகளில் நிலவும் கட்டமைப்பு வசதிகள் முதல் காரணம்.வீட்டிலிந்து,தண்ணீர்,மின்சாரம்,போக்குவரவு போன்ற எந்த தேவைகளுக்கும் சாமானிய மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக வேண்டிய நிலவரம் இந்த நாடுகளில் இல்லை.காசைக் கொடுத்தால் எல்லாம் சட்டென கிடைக்கும்;அதுவும் பொருளுக்கு அல்லது சேவைக்கு வேண்டிய அளவில்
கொடுத்தால் போதும்;இடைத்தரகாகவோ கையூட்டாகவோ பெரும்பணம் செலவு செய்ய வேண்டியது இல்லை.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அரசால் நிகழ்த்தப்படும்,அல்லது சமூகத்தால் நிகழ்த்தப்படும் அழுத்தங்கள் இல்லை.
இரண்டாவது காரணம் சாதாரண மனிதனின் சம்பாத்தியத்திற்கும் அவனது தினப்பாட்டின் செலவுகளுக்குமான விகிதாசர வேறுபாடு.அதாவது அமெரிக்காவில 5000 டாலர் சம்பாதித்தால் எளிதாக 2500 டாலர் செலவுக்குள் ஒரு மாத செலவுகளை சமாளிக்க முடியும்.சிங்கையிலும் இதே நிலைதான்(சமீப நாட்களான வீட்டு விலை,மட்டும் வாடகை நிலவரம்
தவிர்த்து!).இந்தியாவில் இருந்து பெருமளவில் வரும் தொழில் நுட்ப பணியாளர்கள் இந்த அளவில் சம்பாதிக்கிறார்கள்.
ஆனால் இதே நிலை இந்தியாவில் பணியாற்றும் ஒருவருக்கான குடும்ப செலவுகள் சம்பாத்தியத்தில் 50 சதவீதத்திற்கள் அடங்குமா என்பது கேள்விக்குறி.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் தன்னுடைய சம்பாத்தியத்தில் எளிதாக 50 அல்லது 40 சதம் சேமிக்க முடியும் என்பது இந்த நாடுகளில் சாத்தியம்;இந்தியாவில் இது சாத்தியம் இல்லை.அதிகப்படியான சமூக வாழ்வின் பத்திரம் மற்றும் ஒழுங்கு ஆகிய காரணங்கள்.
இவை பற்றிய காரணங்களே பெருமளவு வெளிநாட்டுக்கு செல்லும் நுட்பத் தொழிலாளர்கள் அந்தந்த நாடுகளிலேயே தன் வாழ்க்கையைத் தொடர்வதின் காரணம்.
அடுத்த முக்கியமான காரணம் நாணயப்பரிவர்த்தனையின் இந்தியாவில் கிடைக்கும் அதிக சேமிப்புத்திறன்.அதாவது மேற்கண்ட நாடுகளில் சம்பாதித்து இந்தியாவில் சேமித்தால் இந்திய ரூபாயின் மதிப்பில் குறுகிய காலத்தில் சேமிக்க முடிந்த அதிகப் பணம்.
இக்காரணங்களால் இன்றைய இந்தியாவில் வாழ ஒரளவு படித்த,வாழ்வை அனுபவிக்க விரும்பும் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதில்லை;மாறாக வெளிநாட்டு வாழ்வை விரும்புகிறோம்.
ஆனால் சென்ற ஆண்டில் நடந்த பொருளாதார,நிதிப் புயலில் முதலில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் மேற்குறிப்பிட்ட நாடுகளே முதலாவதாக இருந்தன.சொர்க்கம் போன்ற வாழ்வு என்று நினைத்த நாடுகளில் வாழும் நிலையைத் தேரந்தெடுத்த சில இந்தியர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் நிலை வரை சென்ற நிகழ்வுகள் நடந்தன.
முதல்நிலை அதாவது ஃபர்ஸ்ட் வேர்ல்ட் நாடுகள் என்றழைக்கப்பட்ட நாடுகளே நிதிச் சந்தை வீழ்ச்சியில் அதிகம் சிதைவுற்றன !
ஆசியாவின் 'வளரும் நாடுகளான'' இந்தியாவும் சீனமும் இந்த சுழிக்காற்றில் அதிகம் பாதிக்கப்படவில்லை.அங்கெல்லாம் சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் புரட்டிப்போடும் மாற்றங்கள் நிகழவில்லை;கண்ட சிறிய பின்னடவையும் மீறி முன்னேற்றம் காணத் துவங்கிய நாடுகளிலும் இந்த இரண்டு நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.பிரிட்டன்.ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் இன்னும் அடிவயிற்றில் நெருப்புடன் இருக்கின்றன.
இடைப்பட்ட சிங்கை மற்றும் ஆஸ்த்ரேலிய நாடுகளில் நடுவாந்திரமாக இருக்கின்றன,மதில் மேல் பூனை போல.
அதிலும் சிங்கையின் கதை முற்றிலும் மாறுபட்டது.லீ க்வான் யூ என்ற
அதி புத்தி சாலியான ஆட்சியாளரின் தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் ஆலோசனையின் படியே பெரும்பாலும் சிங்கையின் பொருளகாதார,சமூகக் கொள்கைகள் கட்டமைக்கப்படுகின்றன;இவை ஒரு தனிப் பதிவில் விவாதிக்க வேண்டிய விவரங்கள்.
ஆக நிதிச்சந்தையில் அடித்த புயலில் அதிகம் ஆட்டம் கண்ட நாடுகள் முதல் நிலை நாடுகளே,மூன்றாம் நிலை நாடுகள் அல்ல.
என்ன காரணம்?
நமக்கெல்லாம் வரலாற்று நினைவு மிகவும் சமீப காலத்தியது.இந்திய வரலாறை எடுத்துக் கொண்டாலும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடு என்றும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்றும் பெரும்பாலும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகள் மேற்குலக நாடுகளாக இருப்பதுமாக ஒரு பரவலான எண்ணம் இருக்கிறது.
ஆனால் இந்தியா இப்படி மூன்றாம் உலக நாடாகவே இருந்ததா?
பாரதப் பொருளாதாரம்;அன்றும்,இன்றும் என்ற தலைப்பில் கிழக்கு வெளியீட்டில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது.அதன் உள்ளடக்கம் ஒரு தெளிவான பார்வையை முன் வைக்கிறது.இந்த புத்தகம் தரும் செய்தியைப் பற்றி நான் முன்பே அறிந்திருக்கிறேன் எனினும் ஒரு புத்தகவடிவில் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய இப்படி வரு பார்வையே எதிர்கொண்டது இப்போதுதான்.
ஆசிரியருக்கும்,அவரின் ஒரு உரையைக் கேட்டு அதனால் மிகவும் கவரப்பட்டு அதை ஒரு புத்தகவடிவில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பத்ரிக்கும் பாராட்டுக்கள்.
இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய சுமார் 2000 ஆண்டுப் பார்வையை முன்வைக்கிறது புத்தகம்.

17 ம் நூற்றாண்டு வரை உலகப் பொருளாதாரத்தின் சுமார் 65 சதவிகிதப் பங்கை சீனமும் இந்தியாவும் வைத்திருந்திருக்கின்றன.இந்தியாவின் பங்கு சுமார் 30
சதவிகிதம்.இந்தியா.பழங்கால தமிழகத்தின் வரலாறுகளில்,சோழர்கள் ஆட்சியில் பல வரலாற்றுக் குறிப்புகளில் இந்தியா உலக நாடுகள் பலவற்றுடனும் செய்த வணிகம் பற்றியும் இந்தியாவில் குவிந்திருந்த செல்வ நிலை பற்றியும் பல குறிப்புகள் கிடைக்கின்றன;அவற்றை இப்புத்தகம் குறிப்பிட வில்லையெனினும் முகலாய அரசர்களை முதன் முதலில் சந்திக்க வந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதர்கள் அரண்மனையில் எங்கும் புழங்கிய தங்கப் பாத்திரங்களைப் பார்த்து மூச்சடைத்து நின்ற செய்தியும்,இந்தியாவை முழுமையாக காலணியாதிக்கதில் கொண்டு வர வேண்டும் என்று அவர்களுக்கு உதயமான உத்தியும் மறைக்கப்பட்ட வரலாற்றின் பகுதிகள்.
சுமார் 300 ஆண்டுகளாக பிரிட்டிஷ் சுரண்டிய இந்தியாவின் செல்வமே பிரிட்டன் முதல் உலகத்திற்கு முன்னேறிய செய்தியின் சுருக்கம்.இந்தியா என்னும் தங்கச் சுரங்கம் கையில் அகப்படும் வரை அமெரிக்காவுடன் ஆண்டு வரிக்காக போரிட்டுக்கொண்டு ரௌடித்தனம் செய்து கொண்டிருந்த நாடு பிரிட்டன்.இந்தியா பிரிட்டனின் நேரடி ஆதிக்கத்தில்,அதாவது விக்டோரியா மகாராணியின் ஆதிக்கத்திற்கு கிழக்கிந்தியக் கம்பெனியிலிருந்து மாறிய போது இங்கிலாந்து அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அளித்த பெரும்தொகையும் திரும்பவும் இங்கிலாந்து அரசால் இந்தியாவிலிருந்தே சுரண்டப்பட்டது,வரி விதிப்பின் மூலம்!இது போக வைசிராய்கள் போனபோதும் வந்த போதும் கப்பல் கப்பலாக இந்தியாவின் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன.ஒரு கப்பலில் எவ்வளவு செல்வம் தங்கம்,வைரம்,கனிமப் பொருள்களாக ஏற்றப்பட முடியும்? 300 ஆண்டுகளில் எவ்வளவு செல்வம் சுரண்டப்படலாம்?
இவ்வளவு சுரண்டலுக்குப் பின்னும் சுமார் 60 ஆண்டுகளுக்குள்,எதிர்காலத்தின் வல்லரசாக மாறக் கூடிய சாத்தியம் இருக்கக் கூடும் நாடாக இந்தியா வலிமை பெற்றதற்குக் காரணம் என்ன?பலர் 90 களுக்குப் பிறகான புதிய பொருளாதாரக் கொள்கை காரணம் என்று எண்ணலாம்,அது ஒரு காரணியாக இருந்தாலும் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் நீண்ட கால நோக்கில் அதிகமாக இருக்க முடியும் என்ற ஒரு பார்வையையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
அந்தக் காரணம் என்ன என்பதைப் பற்றிய என் சிந்தனையின் அனுமாணங்களையே புத்தகமும் சுட்டியது எனக்கான இனிய ஆச்சரியம்.இங்கு விளக்கி விடலாம் என்றாலும் புத்தகத்தைப் படிக்கும் சுவை மாறாமல் இருக்க வேண்டும் என்பதால்,புத்தகத்தைப் பரந்துரைக்கிறேன்.
எனக்குத் தோன்றிய சில குறைகள்:
1.புத்தகத்தில் கூறியது கூறல் அதிகமாக இருப்பது போல இருக்கிறது.
2.செய்திகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் வடிவம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது;புத்தகத்தை ஒரு மூச்சில் படிக்கும் போது கருத்தாக்கம் அங்கங்கு அலைவது போல ஒரு தோற்றம் தருகிறது.அதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
3.சான்றுகளைக் குறிப்பிடும் போது அடிக்குறிப்புகளை அந்தந்தப் பக்கத்தில் அளித்திருந்தால் நம்பகத் தன்மை இன்னும் அதிகரித்திருக்கலாம்.
ஆனாலும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்!
பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்
ப.கனகசபாபதி
கிழக்கு வெளியீடு.
விலை:ரூ.125
பொருளாதார நெருக்கடிக்குப் பின் சேமிப்பை நாடும் அமெரிக்கர்கள்
அந்த நெருக்கடி. அப்போதே ஐரோப்பாவிலும் பரவி உலகின் பல பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் நிதி நெருக்கடியாக தோன்றிய ஒரு நிகழ்வு குறுகிய காலத்திலேயே உலகின் பொருளாதார நெருக்கடியாக மாறி உலக நாடுகளை, குறிப்பாக மேற்கத்திய பொருளாதாரங்களை, சில மாதங்கள் நிலை குலைய செய்து விட்டது. தொடர்ந்து அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாயினர்.
உதாரணமாக அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பத்து சதவீதத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட நிறுவனங்களையும், மக்களையும் சிக்கல்களிலிருந்து காப்பாற்ற அரசுகள் பல லட்சம் டாலர்களை உதவித் தொகைகளாக அளித்து வருகின்றன. ஆயினும் சென்ற 2009 ஆம் வருடம் முழுவதுமே பெரிய அளவில் முன்னேற்றமில்லை. சென்ற வருடம் மட்டும் அமெரிக்காவில் 120 ௦க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. இந்த வருடமும் இதுவரை அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ஆலன் க்ரீன்ஸ்பேன் என்பவர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து ஓய்வு பெற்றவர். அண்மைக்காலம் வரையில் அவர் அமெரிக்கர்களுக்கு எதிர்காலம் இருப்பதால் சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதே சமயம் இந்தியா, சீனா போன்ற தேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிர் காலம் குறித்த அச்சமிருப்பதால் அவர்களுக்கு சேமிப்பு அவசியமாகிறது என்றும் கருத்து தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டுக்கான நோபெல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார பேராசிரியர் கிரக்மேன் என்பவர் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கு நாடுகள் உருவாக்கித் தந்த பொருளாதார கோட்பாடுகள் தவறாகிப் போய்விட்டன என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சேமிப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு அந்நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் 15 சதவீதம் வரை மக்கள் சேமிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தக் கட்டுரை அங்கு ஏற்பட்டு வரும் மன மாற்றங்களை எடுத்து வைக்கின்றது.
"பாரத பொருளாதாரம் அன்றும் இன்றும்'
இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்ல மறந்தே போய்விட்டது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் பேரா. கனகசபாபதி (அப்போது பி.எஸ்.ஜி நிர்வாகவியல் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்தார்; இப்போது கோவையில் உள்ள தமிழக நகரவியல் கல்வியகத்தின் இயக்குனராக இருக்கிறார்) ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் குருமூர்த்தி, பண்டைய பாரதப் பொருளாதாரம் என்பது கேபிடலிசமும் கிடையாது; கம்யூனிசமும் கிடையாது என்ற பொருளில் பேசினார். கனகசபாபதியுடன் பேசும்போது அவர் பண்டைய இந்தியப் பொருளாதார முறைமைகள் பற்றி எழுதிய ஒரு புத்தகம் நிர்வாகவியல் கல்லூரிகளில் பாடப்புத்தகமாக இருக்கிறது என்ற தகவலைச் சொன்னார்.
அகடெமிக் ஆக இல்லாமல் பொதுமக்கள் படிக்கக்கூடிய வகையில் இதனை எளிதாக எழுதித்தர முடியுமா என்று அவரைக் கேட்டிருந்தேன். அடுத்த பல மாதங்கள் கழித்து அவர் ஒரு மேனுஸ்கிரிப்டை தைத்த நோட்டுப்புத்தகங்களில் எழுதி அனுப்பிவைத்தார். அதில் பல மாறுதல்களைச் செய்து அவருக்கு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பிவைத்தேன். மீண்டும் சில மாறுதல்கள். இறுதியாக புத்தக வடிவம் பெற்ற அது மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்தியர்கள் பொதுவாக வரலாற்று ஆவணங்களை எழுதிவைப்பதில்லை. முகலாயர்கள் காலத்துக்குப் பிறகுதான் அழுத்தமான ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இப்போதுதான் ஆங்கிலேயர் காலம் தொடர்பான ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் (The Men Who Ruled India, P. Mason). நன்கு எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், ஆங்கிலேயர்கள் ஏதோ பராபகாரிகள் என்றும், முகலாயர்கள் மற்றும் பிற முட்டாள் ராஜாக்களின் கையில் மாட்டித் தவிக்கும் இந்தியர்களைக் காக்க வந்த புண்ணியவான்கள் என்றுமே சித்திரிக்கப்படுகிறார்கள். அந்தச் சித்திரமும் அவசியம்தான். ஆனால் மறுபக்கம், இந்தியா என்ற ஒரு ‘நிலப்பரப்பு’ (ராஜ்ஜியம், தேசம் என்ற வரம்புகளுக்குள் அடைபடாத ஒரு பகுதி இது) உலகின் முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்தவந்த ஒரு பகுதி, திடீரென எப்படி பிச்சைக்கார நாடாக ஆனது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
அந்தக் கேள்விக்கு ஒருவிதத்தில் பதில் சொல்கிறார் பேரா. கனகசபாபதி. அத்துடன் இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் என்ன என்பதைப் பற்றியும் அலசுகிறார்.
இந்துத்துவம், காலனியம், பின்காலனியம், கம்யூனிசம் போன்ற பல இசங்களின் பின்னணியில் இந்த நூலாசிரியர் சொல்வதை பலரும் ஆழ்ந்து விமர்சிக்கலாம். இதுவரையில் வலுவான விமர்சனங்கள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. கனகசபாபதி தினமலர் பத்திரிகையில் இதே தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியுள்ளார். அதற்கும் அதிகமான எதிர்வினைகள் வந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே புத்தகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதால் இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இது நிர்வாகவியல் மாணவர்களுக்காக மட்டுமல்ல, பொதுவான வாசகர்களுக்குமான புத்தகம். எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தகமும்கூட.
இதனைத் தொடர்ந்து, பேரா. கனகசபாபதி அடுத்து சில நூல்கள் எழுதுவதில் இறங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பாடப்புத்தகங்கள் எழுதுவதைவிட பொதுமக்களைச் சென்றடையும் தமிழ் நூல்களளை எழுதுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்கிறார் இவர். இதேபோல பிற அகடெமிக் பேராசிரியர்களும் வெகுஜன நூல்களை தமிழில் எழுத ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
[பின்குறிப்பு: இன்று ஒரு நாள் (ஞாயிறு) மட்டுமே, சென்னை புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகம் 100 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. அது ஒன்றே போதும், இதன் விற்பனை வேகத்தைச் சொல்ல!] -பத்ரி சேஷாத்ரி
புத்தகத்தை வாங்க
.
Posted by Badri at 23:06
Labels: புத்தகம்
3 comments:
M Ramachandran said...
Happy to note that this book sold more nos
and feel it will take swadeshi thoughts to the readers
Thanks to both Badri and Kanagasabapathy ji
Mon Jan 04, 07:27:00 AM IST
K Sriram said...
I think, it will be much sought after book. We need to take pride in our own heritage rather than try to ape the west and such books shall go a long way to develop pride in our culture and heritage.
Mon Jan 04, 07:37:00 AM IST
Anonymous said...
Kodos to Prof.Dr.Kanagasabapathy for binging out such a wonderful book.
K.Subhash Chandiran, Coimbatore - 35.
Mon Jan 04, 08:56:00 AM IST
நிமிர்ந்து பறக்கும் இந்தியக் கொடி

அமெரிக்காவில் நிதி நெருக்கடி பெரிதாக உருவெடுத்து ஒரு வருட காலம் முடிந்து விட்டது. ஆரம்பத்தில் பிரபலமான முதலீட்டு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பெரிய காப்பீடு மற்றும் வங்கி நிறுவனங்கள் மீள முடியாத சிக்கல்களில் இருப்பதாக அறிவித்தன. நிதி சார்ந்த துறைகளைத் தொடர்ந்து, உற்பத்தி உள்ளிட்ட பிற துறைகளையும் அந்த நெருக்கடி பாதித்தது. வேகமாகப் பரவிய நெருக்கடி ஐரோப்பிய நாடுகளைத் தாக்கி, பின், உலகின் பல பாகங்களுக்கும் சென்றது. அதனால், அமெரிக்க நிதி நெருக்கடி உலகின் பொருளாதார நெருக்கடியாக மாறியது.நிறுவனங்களை அழிவிலிருந்து தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கவும் அமெரிக்க அரசு பெரும் தொகைகளை ஒதுக்கியது. சிக்கலில் இருந்த பெரிய கம்பெனிகளில் அரசே பங்குகளை வாங்கி, அவற்றைத் தத்தெடுத்துக் கொண்டது. பாதிப்புக்குள்ளான நாடுகள் பலவற்றிலும், அவர்களுக்குப் பொருத்தமான வகைகளில் திட்டங்கள் தீட்டப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆயினும், நெருக்கடியின் தாக்கம் மேற்கத்திய நாடுகளை வெகுவாகப் பாதித்துள்ளன. அதனால், வளர்ச்சி விகிதங்கள் மிகவும் குறைந்தும், எதிர்மறையாகவும் உள்ளன. காலாண்டு வளர்ச்சி விகிதங்களை கணக்கிட்டுப் பார்த்தால், நெருக்கடிக்குப் பிந்தைய கடந்த ஒரு வருட காலத்தில், பெரும்பாலான நாடுகளில் குறைந்தது ஒரு காலாண்டிலாவது பூஜ்யத்துக்கும் கீழே வளர்ச்சி சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு, அந்த நாடுகளை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது. வேலை இழப்புகளும், நிறுவனங்கள் மூடப்படுதலும் இன்னமும் குறைந்தபாடில்லை. அமெரிக்க நாட்டில் வேலையில்லாதோர் சதவீதம் 10ஐ நெருங்கியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரையிலும் 90க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. அதனால், மக்களின் வாழ்க்கை இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது.அதே சமயம், இந்த நாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்த விவரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள், சில உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன. முக்கியமாக பொருளாதார நெருக்கடி அவர்களையும் பாதித்திருந்தாலும், அதனால் அவர்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளவில்லை. சிக்கனமான நடைமுறைகளும், குடும்ப அமைப்பு முறையும், திட்டமிட்ட வாழ்க்கையும் அவர்களை ஆபத்திலிருந்து காத்துள்ளன. அங்கு தொழில் செய்யும் சில இந்தியர்கள் தற்போது, தங்களது தொழில்களை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த பல வருடங்களாகவே அதிக அளவில் பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். நெருக்கடிக்கும் பின்னரும் அது குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது.
கடந்த 2008 - 09ல் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இங்கு அனுப்பப்பட்ட தொகை, 46 பில்லியன் டாலருக்கு மேல் உள்ளது. (இந்திய நாணய மதிப்பில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) இது, அதற்கு முந்தைய ஆண்டில் அனுப்பப்பட்ட தொகையை விட, 15 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம். அதனால், வெளிநாட்டு வாழ் மக்கள் தமது தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில் இந்தியர்கள் அனுப்புவது தான் உலகிலேயே அதிகமான தொகை.மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு சிக்கல்களில் உழலும் போது, அங்கு வாழ்வதற்காகச் சென்ற இந்தியர்கள் பெரிய பிரச்னைகளின்றி தொடர்ந்து முன்னேறுவதற்கான காரணம் என்ன? நிதி நெருக்கடிக்குப் பின், கடந்த ஒரு வருட காலத்தில் முக்கியமான நாடுகள் பலவற்றில் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாகவும், பூஜ்யத்துக்கு கீழேயும் சென்று விட்டபோது, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு காலாண்டிலும் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவீதமும் அதற்கு மேலும் இருக்கக் காரணம் என்ன?
இதற்கான விடை தற்கால பொருளாதாரக் கோட்பாடுகளில் இல்லை. மாறாக, அது மக்களின் வாழ்க்கை முறைகளில் தான் உள்ளது. நவீன பொருளாதார கோட்பாடுகள் கடந்த 250 வருட காலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவானவை. அவை அவர்களது குறுகிய கால அனுபவங்களையும், தனிநபர் வாழ்க்கை முறைகளையும், எண்ணங்களையும் ஒட்டி ஏற்படுத்தப்பட்டவை.காலனி ஆதிக்க காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வந்த இயற்கையான வழிமுறைகளை ஐரோப்பியர்கள் அழித்தனர். பின்னர், அவர்களது முறைகளை காலனி நாட்டு மக்கள் மேல் திணித்து, அவையே உயர்ந்தது என்ற எண்ணத்தையும் பரப்பினர். ஐரோப்பிய முறைகளே எல்லாவிதத்திலும் மேலானவை என்றும், அவையே உலக முழுமைக்கும் சரியானதாக இருக்கும் என்றும் கருத்துக்களை உருவாக்கினர். உலகின் பெரும்பகுதி, அப்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அது பெருமளவு சாத்தியமானது.பின்னர், ஐரோப்பிய பொருளாதாரம் சரிந்து அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதாரமாக உருவெடுத்த போது, அமெரிக்க கருத்துக்களே உயர்வானவை என்ற கருத்து ஏற்படுத்தப்பட்டது. அதனால், கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக அமெரிக்க கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.ஆனால், சென்ற வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அந்த எண்ணங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்து விட்டது.
ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சு ஆகியவையே கூட அமெரிக்க முறைகள், தங்களது நாடுகளுக்குப் பொருத்தமாக அமையாது எனச் சொல்கின்றன. அமெரிக்க கோட்பாடுகள், உலகின் பல பகுதிகளிலும் கடந்த சில வருடங்களாகவே பெருமளவு தோல்வியைத் தழுவி வருகின்றன.அதேசமயம் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் செயல்பாடுகளும், வேகமான வளர்ச்சியும் உலகைத் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. இனி, உலகப் பொருளாதாரம் மீண்டெழுவதே கூட இவ்விரு நாடுகளின் தலைமையில் தான் நடக்கும் என, சர்வதேச நிபுணர்கள் கணித்து சொல்கின்றனர்.வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், கடந்த இரண்டாயிர வருட காலத்தில், உலகின் முதல் நிலை பொருளாதாரமாக இந்தியா விளங்கி வந்ததை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பின்னர், ஆங்கிலேயர்களின் சுரண்டல்களாலும், சுயநலக் கொள்கைகளாலுமே இந்தியாவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்படியானால், நாட்டின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலையில் வைத்திருக்கக் கூடிய அணுகுமுறைகள் நம்மிடம் பல நூற்றாண்டு காலமாகவே இருந்து வந்துள்ளது புலனாகிறது.
சுதந்திரம் வாங்கும் போது, இந்தியா ஒரு ஏழை நாடாக, கல்வியறிவு குறைந்த, தொழில் வளமில்லாத நாடாகவே இருந்தது. அதனால், உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை இல்லை. ஆனால், ஒரு 60 வருட காலத்தில் எத்தனையோ சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கிடையிலும், உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாக உருவாகி உள்ளது.மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளைக் கூட எதிர்கொண்டு, முன்னேறும் அளவுக்கு வலுவான தன்மையை கொண்டுள்ளது. அதனால் பொருளாதாரம், வளர்ச்சி என்பது பற்றியெல்லாம் தங்களுக்குத் தான் முழுவதும் தெரியும் என்று இதுவரை மார்தட்டிக் கொண்டிருந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், இந்தியாவின் பொருளாதார நிலைமை நன்றாக உள்ளது என இப்போது சான்றிதழ்களை கொடுக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்?அது, நமது மக்களின் வாழ்க்கை முறைகளில் பின்னிப் பிணைந்து அவர்களை வழி நடத்துகிறது. ஆம்... அது தான் இந்திய கலாசாரம். கடின உழைப்பு, எளிய வாழக்கை, அதிக சேமிப்பு, குடும்பமும், சமூகமும் சார்ந்த வாழ்வியல் முறைகள், பாசம், அர்ப்பணிப்பு, தொழில் முனையும் தன்மை இவையெல்லாம் அதன் வெளிப்பாடுகள்.
அன்னிய சக்திகள் நம்மை சிதைத்த போதும், அரசுகளும், கொள்கைகளும் மாறி மாறிப் போகும் போதும், இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்து அதை வழிநடத்தி செல்வது நமது நாட்டின் அடிப்படையான கலாசாரமே.சமூக நல விரும்பிகள், அறிஞர் கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தி யாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தமது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. ஞாயிறு தோறும் வெளிவரும்.
- ப.கனகசபாபதி -கட்டுரையாளர், மேலாண்மை பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.
DINAMALAR 13.12.2009
வாசகர் கருத்து
இந்திய தேசத்தைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும் கட்டுரையாசிரியர் புதிய கண்ணோட்டத்தையும், நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளார். இது போன்ற கட்டுரைகளை தினமலர் தொடர்ந்து வெளியிட வேண்டும்.
by V.S. Bharathanban,kovai,India 12/14/2009 6:42:46 PM IST
வணக்கம் மேலும் நன்றி ஐயா இந்த கருதுத்களுக்கு
by கணேஷ் ,maldives,Maldives 12/13/2009 3:18:34 PM IST
முற்றிலும் உண்மை. ஒன்று அதிகமான மனித ஆற்றல், இரண்டு கூட்டு குடும்பமுறை, மூன்று எதிலும் சிக்கனம் பார்த்து செயல்படும் குணம், நான்கு எல்லாவிதமான வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ளது, அரசு என்ற இயந்திரம் சரியானவர்களின் கையில் இருந்தால் உலகமே மூக்கில் கைவைத்து இந்தியாவை பார்த்து வியக்க வைக்கலாம். சுயநல அரசியல் வாதிகள் உள்ளவரை அது நடக்காது. ஆதங்கத்துடன் அப்துல் ரஹ்மான், சவுதி அரேபியா
by G. அப்துல் ரஹ்மான் ,Alkhobar, Saudi Arabia ,Saudi Arabia 12/13/2009 12:01:08 PM IST
சேமிப்பு சார்ந்த இந்திய பொருளாதாரம்
தினமணி 14.10.2006
உலகின் முதல் நிலை பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உலக வங்கியின் கணக்குப்படி வாங்கும் திறனின் அடிப்படையில் 2005 ம் ஆண்டு இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய வருமானம் 3.7 டிரில்லியன் டாலர்களுக்கு ÷
மல் (ரூபாய் மதிப்பில் 1,74,20,200 கோடி) உள்ளது. 2007 ல் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெருளாதார நாடாக இந்தியா இருக்கும் என கணிக்கப்பட்டள்ளது. இந்தியவைச் சேர்ந்த பல கம்பனிகள் இன்று வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றில் பல வெளி நாடுகளுக்குச் சென்று, அங்கும் தொழில்களை பெருக்கி வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜீன் வரையிலான ஆறு மாதங்கள் மட்டும் இந்தியக் கம்பனிகள் 6 பில்லியன்
டாலர் (ரூபாய் 27,600 கோடி) முதலீடு செய்து எண்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தியும் அல்லது தம்முடன் இணைத்தும் உள்ளன. உலகின் மிக வேகமாக வளரக்கூடிய 12 நாடுகளில் இருந்து உள்நாட்டில் செயல்படும் நூறு கம்பெனிகளை பாஸ்டன் ஆராய்ச்சி மையம் பட்டியலிட்டுள்ளது. அதில் இருபத்தியோரு கம்பெனிகள் இந்தியாவை சேர்ந்தவை.நமது நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் உள்ளன. இம் மையங்கள் ஒவ்வொன்றிலும் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்காண தொழில் நிறுவனங்கள் செயல் படுகின்றன.உதாரணமாக சூரத், ராஜ்கோட், லூதியான,திருப்பூர்,சிவகாசி ஆகியவற்றை சொல்லலாம் இவை ஒவ்வென்றும் பல இலட்சங்களில்
இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தியை ஈட்டுபவை. இம்மாதிரி தொழில் மையங்களில் பல உலக அளவில் முக்கிய துவம்பெற்று, சர்தேச வியாபாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் பெயர் பெற்றுள்ளன. இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? நமது மக்களின் அதிகமான சேமிப்பும் அதையொட்டிய மூலதனமும். சேமிப்பு என்பது நமது நாட்டில் அத்தியாவசியக் கடமையாக தொன்றுதொட்டே போதிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி குன்றி மக்களின் தனிநபர் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 1860 களில் தனிநபர் ஆண்டு சராசரி வருமானம் வெறும் முப்பது ரூபாயாக இருந்ததாக தாதபாய் நௌரோஜி கணக்கிட்டார். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டதால் நிறைய சேமிப்பு செய்ய வாய்ப்புகள் இல்லை. சுதந்திரம் பெற்றவுடனேயே மக்கள் தனக்குக்கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு நிலைகளில் உழைக்கவும் அதன் மூலம் முடிந்தவரை சேமிக்கவும் தலைப்பட்டனர். 1951 மொத்த பொருளாதார உற்பத்தியில் சுமார் 9 விழுக்காடு சேமிக்கப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலையில் இது மிகவும் அதிகமான சேமிப்பாகும். ஏனெனில் அந்தச் சமயத்தில் 45 விழுக்காடு மக்கள் வருமை கோட்டிற்குக் கீழே வாழ்ந்தனர். படிப்பறிவு பெற்றவர்கள் 18 விழுக்காடு மட்டுமே. சராசரி ஆயுள் 32 வருடம். அந்தச் சூழ்நிலையிலும் 9 விழுக்காடு சேமிப்பு. இன்றைக்கு வசதியான நாடுகளாகப் பேசப்படுகிற பல மேற்கத்திய நாடுகளில் இந்த அளவு சேமிப்பு இல்லை. இந்தச்சேமிப்பில் சராசரியாக நான்கில் மூன்று பங்குக்கு மேல் குடும்பங்களும் குடும்பம் சார்ந்த தொழில்களும் கொடுக்கின்றன. கம்பனி மற்றும் அரசுத் துறைகள் மீதியை சேமிக்கின்றன. அதிலும் அரசத் துறையின் பங்கு மிகக் குறைவு. இவ்வகை சேமிப்பு மூலம் பல்வேறு நிலைகளில் தொழில்களை ஏற்படுத்த மூலதனம் உருவாகிறது. அதனால் நிறைய அளவில் தொழில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. மேலும் கம்பனி மற்றும் அரசுத் துறைகளும் வங்கிகள் மூலமாக இவ்வகை சேமிப்பகளைத் தங்கள் மூலதனத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. சுதந்திரம் பெற்றது முதல் சேமிப்பும் மூலதனமும் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளன. சென்ற ஆண்டு மட்டும் அரசு கணக்குப்படி அதிகாரப் பூர்வ சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.1 சதவீதம் ஆகும். இந்த அதிகாரப்பூர்வ சேமிப்பு முழுமையானதல்ல. ஏனெனில் நமது மக்கள் பல்வேறு வழிகளில் சேமிப்புகளில் ஈடுபடகின்றனர். உதாரணமாக உலகில் உற்பத்தியாகும் தங்கத்தில் கிட்டத்தட்ட கால் பங்கு நமது மக்களால் வருடாவருடம் வாங்கப்படுகிறது. ஆனால் இந்த முதலீடு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சேமிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இது மட்டுமின்றி சிட்பண்டுகள் போன்ற முறைகள் மூலமும், உறவுகள் அடிப்படையிலும் சேமிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்க முடியுமானால், நமது சேமிப்பு இன்னும் பல மடங்கு அதிகமாகும். அமைப்பு சாரா துறையின் கீழ் 3 கோடிக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் நாடு முழுவதும் உள்ளதாக மத்திய அரசின் 1998 பொருளாதாரக் கணக்கெடுப்பு கூறுகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் முற்றிலும் சொந்தப்பணத்தில் மூலதனம் போட்டு நடத்தப்படுபவை. 5 சதவீத அமைப்பகள் மட்டுமே அரசு மற்றும் நிதி நிறுவன உதவியைப் பெறுபவை. சிறு தொழில் துறையில் கீழ் 1 கோடியே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 96 சதவீதம் தனிநபர் அமைப்புகளாகவும், கிட்டத்தட்ட 2 சதவீதம் பங்குதாரர் அமைப்புகளாகவும் நடத்தப்படும் தொழில்கள். மொத்தத்தில் சுமார் 98 சதவீத எண்ணிக்கை நிறுவனங்கள் தனிநபர்களும் பங்குதாரர்களும், முழுமையாகப் பொறுப்பேற்று நடத்தப்படும் தொழில்கள் ஆகும். இந்த விவரங்கள் நமக்கு உணர்த்துவது என்னவெனில், இந்தியப் பொருளாதாரம் சொந்த சேமிப்பு மூலமே நடத்தப்படுகிறது என்பதாகும். சிறிய தொழில்கள் மிகப்பெரும்பாலும் சொந்த சேமிப்பிலேயே நடத்தப்படுகின்றன. அவைகளில் நிறைய தொழில்களுக்கு தாங்கள் விரும்பியபோதும் வங்கிகள் மூலம் போதிய நிதி கிடைக்க மிகுந்த சிரமங்கள் உள்ளன. பெரிய கம்பெனிகளை பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் எளிதாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியம். அதனால் தொழில் துறைக்கான கடன்களில் முக்கியப்பங்கு கம்பனிக்கே செல்கின்றன. ஆயினும் உலக நாடுகளில் தனியார் துறைக்கு கிடைக்கின்ற வங்கிக் கடன்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவில் கிடைக்கும் கடன் விகிதம் குறைவாகும். இதன் முலமாக ஒட்டு மொத்தமாக நமது பொருளாதாரம் சுயசார்பு மிக்க பொருளாதரமாக விளங்குவது நமக்குப் புரியும். வெளிநாட்டு மூலதனம் கடந்த 1992 முதல் இந்தியாவுக்குள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வகை மூலதனம் குறித்த கட்டுப்பாடுகள் கடந்த வருடங்களில் பல நிலைகளில் தளர்த்தப்பட்டு, இன்று குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர மற்ற துறைகளில் பெரிய கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்படுகின்றது. சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை, இந்தியாவில் பொருளாதாரம் சொந்த நிதியையே ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இன்று உலகில் சேமிப்பு அதிகமாக இருப்பதே சீனா, இந்தியா உள்ளிட்ட முன்னேறும் நாடுகளிடமும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடமும்தான். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் சேமிப்பு மிகக்குறைந்தும் இல்லாமலும் உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் சேமிப்பு என்பது இல்லை. அவர்கள் எதிர்காலத்தில் வர உள்ள வருமானத்தை கூட கணக்குப்போட்டு, அதை வைத்து கடன் வாங்கி, இப்போதே செலவு செய்து விடுகின்றனர். அதனால் அவர்களின் மூலதனமும் குறைந்து வருகின்றது. இந்திய மக்கள் இயற்கையாகவே சேமிப்ப குணம் உள்ளவர்களாதலால், சேமிப்பை உக்குவிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தை எல்லாத் துறைகளிலும் வரவேற்கவேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டு மூலதனம் இங்கு வரும்போது பெரிய அளவில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.அந்தச் சலுகைகளை உள்நாட்டுத் தொழில் முனைவேருக்கு அளித்தால், நிறைய சமயங்களில் அவர்களே போதிய நிதியை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். உள்நாட்டு மூலதனத்தால் வரக்கூடிய லாபம், மேலும் மேலும் இங்கேயே பயன்படுத்தப்பட்டு பொருளாதாரம் மேலும் வலுவடையும். வெளிநாட்டு மூலதனத்தை வைத்து ஒரு நாடு சீராக வளர்ந்ததாக உலகில் எந்த உதாரணமும் இல்லை.