வெற்றிக்கதைகள் 23












பணம் கொழிக்கும் பட்டம் தொழில்
ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பலமான காற்று வீசத் தொடங்கிவிடும்.
சிறுவர்களும் வானுயர பட்டம் பறக்கவிட கிளம்பிவிடுவார்கள். பல
வண்ண காகிதங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்களை போட்டி
பாட்டுக்கொண்டு அதிக உயரத்தில் பறக்க விடுவது என்பது ஒரு கலை. அதைப்பார்த்து ரசிக்க ஒரு கூட்டமே இருக்கும். சிறுவர்களால் பொழுதுபோக்கிக்காக பட்டம் பறக்கவிடப்படுவதாக நமக்கு தான்றினாலும் பல கோடி ரூபாய்களை திரட்டும் ஒரு தொழிலாகவும் பட்டம் தயாரிப்பு தொழில் இருக்கிறது என்பது வியப்பான செய்தி.தமிழகத்தில் மட்டுமல்லாமல் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பஞ்சாப், உத்திரபிரதேசம், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பட்டம் பறக்கவிடும் பழக்கம் மிகவும் பிரபலமாக உள்ளது.



வடமாநிலங்களில் உத்ராயணம் காலத்தில் மகர சங்கராந்தியின்போது பட்டம் விடுவது ஒரு பெரும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. உத்ராயணம் என்பது சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல் லும் காலத்தை குறிக்கும். இதை மகரசங்கராந்தி தினத்திற்கு 3 தின ங்களுக்கு முன்பிருந்து பட்டம் பறக்க விடும் விழாவாக வடமா நிலங்களில் கொண்டாடுகிறார்கள். அந்த நாட்களில் ஊர் முழுவதும் பல வண்ணங்களில் பட்டங்கள் பறந்துகொண்டிருக்கும்.குஜராத் மாநிலத்தில் உத்ராயண காலத்தைத்தவிர கிருஷ்ணர் பிறந்த தினமான ஜன்மாஸ்டமி மற்றும் தசரா விழாக்காலங்களிலும் மக்கள் பட்டங்களை பறக்க விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக அகமதாபாத், சூரத், பரோடா உள்ளிட்ட பகுதிகளில் உத்ராயண காலத்திலும், ராஜ்÷ காட், ஜாம்நகர், பவநகர் போன்ற பகுதிகளில் தசரா காலத்திலும் பட்டம் விட்டு விழாவினை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. நம் நாட்டைத்தவிர சீனா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுகின்றன. இதனால் பட்டம் தயாரிப்பது ஒரு மிகப்பெரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியும், பல லட்சம் பேருக்கு வேலையும் கிடைத்துள்ளது. பட்டம் தயாரிப்பில் முன்னணி மாநிலமாக குஜராத் திகழ்கிறது. இம்மாநிலத்தின் பல பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பட்டம் தயாரிப்பதையே குடிசை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். அகமதாபாத் மிகப் பெரிய உற்பத்தி மற்றும் பட்டம் விற்பனை மையமாக திகழ்கிறது. உத்ராயண காலத்தில் இங்கு மட்டும் 10 லட்சம் பட்டங்கள் விற்பனையாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சங்கராந்தி சமயத்தில் இங்கு "பட்ட நகரம்' என்ற தனியான நகரம் உருவாக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு தினசரி 24 மணி நேரமும் பட்டங்கள் விற்பனை செய்ய ப்படுகின்றன. நதியாத், பரோடா, சூரத், கும்பத் போன்ற பகுதிகளில் பட்டங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்காக வீடுகள் முழுவதுமே தொழிற்கூடங்களாக மாறி பட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அகமதாபாத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள மகூதா என்ற ஊர் பட்டம் தயாரிப்பில் மிகவும் தொடர்புடையது. மாநிலத்தின் பல மையங்களில் உருவாகும் பட்ட ங்கள் ஓரங்களில் நுõலிடப்பட்டு இங்கு தான் முழுமை பெரு கிறது.ராஜ்கோட், ஜாம்நகர், பவநகர் ஆகியவை மாநிலத்தின் முக்கிய வியாபார பகுதிகளாகும்.பட்டம் தயாரிப்பதில் அதிகளவு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்கள் விவசாய வேலை, சிறுவியாபாரங்கள் என வெவ்வேறு வகைகளில் வ ருமானம் சம்பாதிக்க முயலும்போது பெண்கள் வீட்டிலிருந்தபடியே பட்டம் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். அதனால் பட்டம் தயாரிப்பில் பெண்களின் பங்கு 60 சதவீதமாக இருக்கிறது. வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. மகூதாவில் பெண்கள்தான் சுமார் 90 சதவீதம் பட்டம் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமான சமயங்களில் பட்டம் வேலை செய்வதற்காக உத்திரபிரதேசத்தில் இருந்து ஆட்கள் வரு கின்றனர். அந்த காலங்களில் மொத்த வேலையாட்களில் 20 சதவீதம் வரை அவர்கள் இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.பட்டம் தயாரிப்பு தொழில் மற்ற தொழில்களைவிட சற்று வித்திய õசமானது. இந்த தொழிலை பொறுத்தவரை வியாபாரம் என்பது விழாக்காலங்களில் மட்டும்தான். ஆனால் உற்பத்தி பல மாதங்கள் நடக்கும். உதாரணமாக அகமதாபாத். நதியாத் உள்ளிட்ட மைய ங்களில் மார்ச் முதல் ஜனவரி மாதம் வரை 10 மாதங்கள் உற்பத்தி இருக்கும். அதேசமயம் பரோடா, சூரத், கும்பத் போன்ற பகுதிகளில் உற்பத்தி அக்டோபர் முதல் ஜனவரி வரை 4 மாதங்கள் மட்டுமே.இந்த தொழிலைபொறுத்தவரை பெரிய கட்டிடங்கள், இயந்திரங்கள் ஆகியவை தேவையில்லை. எனவே மூலதனம் குறைவு. 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழே முதலீடு செய்து தொழிலை ஆரம்பித்ததாக நிறைய பேர் கூறினார்கள். எனவே சதாரண நிலையிலுள்ள மக்கள் தொழிலில் நுழைவதற்கான வாய்ப்பு இந்த தொழிலில் அதிகமாக உள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையோர் தங்களின் சேமிப்புகள், உறவுகள் மற்றும் தொடர்புகள் ஆகியவற்றின் மூலமே ஆரம்ப கால முதலீட்டை திரட்டிக்கொண்டதாக கூறினர்.உற்பத்தியார்களை தவிர மொத்த விற்பனையாளர்களும், சில்லரை விற்பனையாளர்களும் தொழிலில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்கிடையே ஒப்பந்தங்கள் ஏதுமின்றி நம்பிக்கையின் ÷ பரிலேயே தொழில் நடைபெறுகிறது. ஆனாலும் வாராக்கடன் என்பது மிகவும் சொற்பமே. அண்மைக்காலத்தில் பட்டங்கள் பல வித வடிவங்களிலும், அளவுகளிலும் தயாரிக்கப்படுகின்றன. விதவிதமான வண்ணக் கலவைகளிலும், பிடித்தமான கடவுள்களை கொண்டும் பட்டங்கள் வெளிவருகின்றன. சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை கொண்ட பட்டங்களும் உண்டு. ஒரு ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் அதற்கு மேலும் விலை பெறும் பல்வேறு விலைகளில் ஆன பட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பட்டங்களை விட உபயோகிக்கும் கயிரானது சாயம், ரசாயனங்கள், கண்ணாடி பொடி ஆகியவற்றால் பூசப்பட்டு கத்தி போன்ற கூர்மைய õன தன்மையை பெறுகிறது. அதற்கு மாஞ்சு என்று பெயர். அந்த கயிறு மற்ற பட்டங்களை வெட்டும் விளையாட்டுக்கு பயன்படுகிறது. பட்டம் தொழிலைப்போலவே அது சம்பத்தப்பட்ட பிற தொழில்களும் முக்கியமானவை. உதாரணமாக பட்டம் விடும்போது உபயோகப் படுத்தும் தொப்பி, கையுறை, கண்ணாடி போன்ற பொருட்கள் தய õரிப்பிலும், விற்பனையிலும் பல கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறது. மகாசங்கராந்தி காலத்தில் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆண்டுதோறும் பட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. அதைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். குஜராத் மாநிலத்தில் வருடா வருடம் சர்வதேச பட்ட விழா அரசு சார்பில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள வெளிநாடுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் வருகின்றன. ராஜஸ்தானில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாலைவன பட்ட விழாக்களும் நடைபெறுகின்றன. எனவே பட்டம் வெறும் காகிதமும், நுõலும் மட்டுமல்ல. அதற்கு பி ன்னால் ஒரு வரலாறே உள்ளது. அதையொட்டி ஒரு பெரிய பொரு ளாதாரமே செயல்பட்டு வருகிறது.







140க்கும் மேற்பட்ட நாடுகளில் பட்டம் விடுவது பழக்கத்தில்
உள்ளது. மேலைநாடுகளில் பட்டத்துக்கு அசோசியேசன்கள் உள்ளன.
கிழக்கு சீனாவில் உள்ள வைபாஸ் நகரம் உலகின் பட்ட தலைநகராக
உருவெடுத்துள்ளது. 2002ல் அங்கு நடைபெற்ற சர்வதேச பட்ட
விழாவில் ஒரு கோடி பட்டங்கள் விற்பனையும், 220 கோடி அளவு
வியாபாரமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ட
விழாக்களை உலகெங்குமுள்ள பட்டம் விடும் நாடுகளுடன் நல்லு
றவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளாக சீனா பய
ன்படுத்திக்கொள்கிறது.

No comments: