Why DMK’s Claim That Sanatana Dharma Denied Education Is Baseless ?

 

Besides calling for the eradication of Sanatana Dharma during the infamous Chennai conference, Tamil Nadu minister Udyanadhi Stalin stated that the policy of Sanatana is that we (meaning the non-Brahmin castes) should not study. Last month during the convocation function of a college in Thoothukudi district, TN Assembly Speaker Appavu mentioned that during the earlier periods only seven percent people could study in India.

The same Appavu while speaking in a Catholic institution in Trichy during June 2022, noted that it was the Christian missionaries who made education available to all; they also brought social justice and the Dravidian movement is an extension of their work. He had also stated that the Catholic missionaries are the main reason for the growth of Tamil Nadu; it was they who laid the foundation for the state; but for the Catholic missionaries, Tamil Nadu would have been a state like Bihar. Later when questions were raised about his speech, he explained that he only spoke the history.

The main reason for the DMK leaders to speak along the above lines is to emphasize that those belonging to no-Brahmin castes were denied education during the earlier centuries by the Brahmins, while they dominated it. Besides, they also try to perpetuate the impression that the process of giving education to all was initiated only by the British.  

The impression that education was not given to all the Indians before the arrival of the British was a myth created by the colonial rulers and the missionaries to subjugate us. Till today the DMK and the leftists have been parroting their views to obliterate our history and divide the communities. Unfortunately, majority of the educated Indians themselves are not aware of the facts, as the education system dominated by the Congress- leftist-DMK eco-system do not allow people to know the true history.   

But what is the truth? India was a pioneer in education and had always been known for her superior education since the ancient periods. We all know that the first university in the world was established in our country about 2700 years earlier. Nalanda university was considered as Asia’s university, as people from our neighboring countries including China got their education here. There were several other universities over the years.

 

The first book on medicine and surgery was written here more than 2600 years ago. Chanakya wrote his Arthashashtra, the first book on politics and economics, around 2300 years. There have been outputs of the highest intellectual order over several centuries in diverse fields. The great saint Thiruvalluvar wrote Thirukkural more than two thousand years ago. For several centuries continuously since the Sangam age, there have been literary and spiritual works of the highest quality in Tamil. The authors of these works were from different backgrounds, including women.

There were women who devoted their lives completely for intellectual pursuits. Intellectual giants such as Gargi and Maitreyi contributed to the Vedas. In Tamil Nadu, Avvaiyar who lived during the Sanagam age contributed more than fifty verses to Puranaanooru. The one who wrote Thriuppaavai that is sung in all the Vaishavaite temple across the world, was the eighth century Tamil woman - saint Aandal.  

How could India and Tamil Nadu have had such great giants and produced so many books in different fields without education during the ancient periods? When we raise such questions, we can try to go towards the answers.

While addressing the Royal Institute of International Affairs in London in 1931, Mahatma Gandhi stated that the literacy had declined in India during the earlier   50-100 years and said the Britishers were responsible for it, thus paving way for the “beautiful tree” of Indian education to perish.  He was challenged to provide details, but he did not have the time to study the issue in detail. Later the noted Gandhian Dharampal took upon himself the responsibility of studying the Indian education system from the British documents and the archival materials. He published his work under the title “The Beautiful Tree – Indigenous Indian Education In The Eighteenth Century.”

The details for his work were from the British documents, surveys and British - Indian Govt. sources. They include the Surveys of Indigenous Education made by the British administrators in the then Madras Presidency during 1822-25 and   in the Bombay Presidency during 1820s, Report by a former missionary William Adam on the districts of Bengal and Bihar during 1835-38 and a later work by G.W. Leitner relating to Punjab.

The facts completely nail the false criticisms being levelled against the ancient Indian education system by the DMK, Left and such other groups over the last so many years. Let us take three major issues raised by the DMK one by one. Here we have to remember that even before the periods of the said surveys, the decay of the Indian education system had started due to the British policies and hence the conclusions derived here are for the periods during which India was facing difficulties. British officials themselves admit that the indigenous education system was much better during the earlier periods.  

The first major issue is the allegation that the education system during the earlier centuries was poor and hence education was not widespread. But what are the facts?  Thomas Munroe, who was the Governor General of the Madras Presidency from 1820 noted that in the areas under his Presidency “every village had a school.” Similarly, in the then Bengal and Bihar regions, W. Adam concluded that every village had at least one school and “there will still be 1,00,000 villages that have these schools.” He also mentioned that there were around 100 institutes of higher learning in in each district of Bengal, thus taking the total to 1800 for Bengal.   

In the same manner, officials of the Bombay Presidency who studied parts of it noted that “there is hardly a village, great or small, throughout our territories, in which there is not at least one school, and in larger villages more.” Later the observations made by G.W.Leitner showed that the spread of education was of a similar extent in Punjab. Thus the Survey Reports prepared by the British officers in different parts of the country at the district levels show that almost every village had a school, financially supported by the villagers themselves.

While writing about the education system in the Malabar region of Kerala, Peter Della Valle wrote in 1823 that no people appreciate the importance of education more than the Hindus. Thus even after repeated invasions by the aliens and the disturbances caused by the Europeans, the literacy levels were reported to be very high at the global level even during the eighteenth century. Author Makkhan Lal notes: “In the contemporary world, no other country had such a high percentage of literate population”

The second issue is a serious criticism. DMK, DK and their associates have been repeatedly emphasizing over the years that education was available only for the Brahmins, while denying the same to all others, particularly those from the backward, scheduled caste and scheduled tribe communities.

What are the facts? When we take the area under the present Tamil Nadu state, the school students from the non-Brahmin castes in different districts were high, averaging between 78 percent to 90 percent. Even when we leave the Kshatriyas and Vaishyas, who were considered to belong to the Forward Castes category, the Sutras and similar castes dominated the school system. The share of Brahmin students in different districts varied between 8.6 percent to 22 percent, averaging around 13 percent for the state.

The number of students from the Sutra and other castes (apart from the Forward castes) in districts formed the highest share averaging between about 70 percent to 84 percent. The students from the Sutra families alone averaged more than 70 percent in districts such as the then Coimbatore, Trichy, South Arcot and Chengalpattu. The number of Muslim students averaged between 2.4 percent and 10 percent in different districts.  So where is the question of education being controlled by the Brahmins and denied to all other castes.

The third point raised by the vested interests is that it was the Britishers (Christians - to use the words of Appavu ) who brought education to India and there was nothing much in India earlier. Again let us see the facts. Even during the early eighteenth century, school education was not available to all in Britain. Dharampal notes that “School education, especially at the people’s level was rather an uncommon commodity in Britain.”  Even that education was limited to few sections and confined to one to three hours per day. Details show that during the turn of the nineteenth century even the number of schools in England was less, about half of the schools in the Madras Presidency.

So, when school education was not available to most of the people in Britain, what expertise did they have to come here and give education to us ? In fact, the reality is the opposite. Many of the Britishers themselves acknowledged that they had introduced the education system prevailed in India for centuries in their country after learning from us.

In this connection, it is relevant to note that while the indigenous Indian education system was getting decayed, the number of schools and students enrolled were increasing in Britain. W.Adam, Leitner  and many of the district collectors in Madras Presidency have clearly mentioned that the Britishers were responsible for the death of the indigenous Indian education system.

Thus the British systematically destroyed the indigenous education by removing all the support systems and income sources to the institutions. In 1835, the Macaulay system of education was introduced in India. As a result, the native Indian education systems underwent a sea-change. Education became costly and was thus denied to all. By 1891, the official records show that the literacy rate was just 6.1 percent.  In a period of around six decades, the whole scenario of Indian education changed completely.

The Srilankan - born historian and expert on India Ananda Coomaraswamy noted that the ‘alien and rootless’ education system introduced by the British ‘destroyed the social balance in which, traditionally, persons from all sections of the society appear to have been able to receive fairly competent schooling.’ Well-known American author Will Durant observed in 1930: “Only 7 percent of the boys and 1.5 percent of the girls receive schooling” with school goers averaging just 4 percent. He noted that by then the schools were extracting high fees, making it difficult for most to get education. 

The above details clearly reveal that native education system was widespread across India giving opportunities to all the sections of people, including the so-called Sutra and other castes. Besides, the details prove that it was the British who destroyed the indigenous system and while improving their school education in Britain.

So the criticisms being levelled against our forefathers, particularly the Sanatana Dharma is completely unfounded. Clearly this is another colonial narrative kept alive by the DMK to tarnish the image of Tamil culture and our Dharma. At least from now, the DMK, communists and their associates should understand the true history of India and Tamil Nadu, and refrain from levelling baseless charges. Otherwise, they will be thrown into the dustbin of history much sooner than their expiry periods.

(P.Kanagasabapathi is State Vice President, TN BJP)

(Swarajya, Sept 9,2023)

சியாம பிரசாத் முகர்ஜி என்னும் தேசபக்தர்

 

மேற்கு வங்கத்தில் பிறந்து தேச ஒருமைப்பாட்டைக்  காப்பாற்றப் போராடி காஷ்மீரில்  தனது லட்சியத்துக்காக  உயிரையே  துறந்த டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி  பன்முகத் தன்மை கொண்டவர். ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, சிறந்த கல்வியாளராக, சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய தொழில் துறை அமைச்சராக,  பின்னர் அசுர பலம் பொருந்தி அப்போது ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகத் தேசியக் கட்சியை நிறுவி அதன் முதல் தலைவராகப் பணியாற்றியவர்.

1901 ஆம் வருடம் ஜூலை ஆறாம் நாள் மேற்கு வங்காளத்தில் ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் சியாம பிரசாத் பிறந்தார். அவரது தந்தை பின்னாளில் கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார். சியாம பிரசாத் எம்.ஏ மற்றும் பி.எல். பட்டங்களைப் பெற்று பின்னர் இங்கிலாந்து சென்று சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றார். அதன் பின் இந்தியா திரும்பி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.

1929 ஆம் ஆண்டு அவரது 28 வயதிலேயே வங்காள மாநில சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பின்னர்  33 ஆவது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்றார். அப்போது  இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம், விவசாயக் கல்வி, இந்திய வரலாறு மற்றும் பண்பாடு பற்றிய ஆய்வுகள் உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.

 அந்த சமயத்தில் கவிஞர் ரவீந்திர நாத தாகூரைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த அழைத்தார். அங்கு தாகூர் முதன் முதலாக வங்க மொழியில் பட்டமளிப்பு உரையை நிகழ்த்தி, தாய் மொழிக்குப் பெருமை சேர்க்கும் செயலுக்கு வித்திட்டார்.  அப்போது சியாம பிரசாத் அவர்கள் கல்வி முறையைத் தொழில்களோடு இணைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

1941 ஆம் வருடம் அப்போதைய வங்காளப் பகுதியின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.  அந்தச் சமயத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான அவரது பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் 1942 ஆம் வருடம் ஆங்கிலேய அரசு அதிகாரத்தைத் தக்கவைத்து கொண்டு கொடுமையான முறையில்  நாட்டு மக்களைத் துன்புறுத்தவதாக் கூறித் தனது பதவியைத் துறந்து அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

அந்தக் கால கட்டத்தில்  வங்கப்பகுதியில் இந்துக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகி வந்தனர். ஆங்கிலேய அரசு மதவாதிகளுக்குத் துணை போகும் வகையில் நடந்து கொண்டு வந்தது. எனவே பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்து மகாசபையில் இணைந்து, பின்னர் அதன் அகில பாரத தலைவராகப் பணியாற்றினார்.

அந்த சமயத்தில் வங்கப்பகுதி முழுவதையும் பாகிஸ்தானுடன் இணைத்து ஒன்றாக்க முஸ்லீம் லீக் நடவடிக்கை எடுத்து வந்தது. 1946ல் அதற்கெதிராக இந்துக்கள் பெரும்பான்மையாக  வாழும் வங்காளப் பகுதி தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என முகர்ஜி அறைகூவல் விடுத்தார்.  அதற்காக வங்காள இந்துக்களின் தாய் மண் இயக்கத்தை ஆரம்பித்துப் போராட்டத்தை முன்னெடுத்தார். 

அதன் பலனாகத் தான் 1947ல் தேசப்பிரிவினையின் போது தற்போதைய மேற்கு வங்காளம் இந்தியாவின் ஒரு பகுதியாக நமக்குக் கிடைத்தது. எனவே வங்காளத்தை நமது நாட்டின் ஒரு பகுதியாக்கி அதன் மூலம் பெரும்பான்மை மக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்ததில் சியாம பிரசாத் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. 

இந்தியா சுதந்திரம் பெற்ற பின், சர்தார் பட்டேல் அவர்களின் முயற்சியில் சியாம பிரசாத் நேருவின் தலைமையில்  அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது அவர் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அஸ்திவாரமிட்டார்.  1948 ஆம் வருடம் இந்தியாவின் முதல் தொழில் கொள்கையை அறிவித்தார். தேசத்தின் அடிப்படைத் தொழில்கள் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றில் சுய சார்படைய வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. அதற்காக சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளரத் திட்டமிட்டார்.  

தேசப் பிரிவினைக்குப் பின் ஆரம்பம் முதலே பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் உள்ளிட்ட பிற இனத்தவர்கள் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர். அந்த விசயம் குறித்து நேருவிடம் முகர்ஜி தனது கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். பின்னர் மத்திய அரசு பாகிஸ்தானுடன் சேர்ந்து நேரு - லியாகத் ஒப்பந்தம் போட்டது. அதன் மூலமும் அங்கு வாழும் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி முகர்ஜி தனது எதிர்ப்பைத் தெரிவித்து 1950ல்  மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார்.

அதன் பின் நமது நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒட்டு மொத்த மக்களின் நலன்களையும் காப்பாற்றக் கூடிய வகையில் ஒரு கட்சி தேசத்துக்கு அவசியம் எனக் கருதி தேச பக்தர்களுடன் தீவிரமாக ஆலோசித்தார். தொடர்ச்சியாக  1951 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பாரதிய ஜன சங்கம் கட்சி நிறுவனப்பட்டு, அதன் முதல் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  

1952 ஆம் வருடம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜன சங்கம் மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களில் ஒருவர் சியாம பிரசாத் முகர்ஜி. நேருவின் தலைமையில் அப்போதே காங்கிரஸ் கட்சியின் போக்கு  பல வகைகளிலும் தவறானதாக இருந்தது. அதில் தேச ஒருமைப்பாட்டுக்கு விரோதமான செயல்பாடுகளும் இருந்தன.

அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்களின் எதிர்ப்புகளையும் மீறி நேரு அரசு, ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகளை சட்டப்பிரிவு 370 மூலம் அளித்தது. அதன் மூலம் அந்த மாநிலத்துக்கு மட்டும் வேறான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு  செல்வதற்கு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்னும் முறை கொண்டு வரப்பட்டது.

எனவே அவற்றை சியாம பிரசாத் முகர்ஜி கடுமையாக எதிர்த்தார்.  ஒரே நாட்டில், இரண்டு அரசியலமைப்புகளும், இரண்டு பிரதமர்களும், இரண்டு தேசிய சின்னங்களும் எப்படி இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார். ஒரே நாட்டுக்குள் செல்வதற்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை எனவும், பிற மாநில மக்கள் அங்கு சென்று குடியேறுவதற்கு உரிமை வேண்டுமெனவும் கூறினார். தனிப்பட்ட சலுகைகள் தேசத்தின் ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கும் என எடுத்துச் சொன்னார்.  ஆனால் அவற்றுக்கு எந்த பதில்களும் இல்லை.

எனவே நியாயமில்லாத சலுகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடைகளை நீக்க வேண்டி 1953 மே மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு  நேரடியாகச் சென்றார்.  அந்த மாநிலத்தின் எல்லையைக் கடக்கும் போது  கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த மாநிலத்தில் சிறை பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அங்கிருந்த போது சுமார் உடல் நலம் குன்றி சுமார் ஐம்பது நாட்களுக்கப்புறம் ஜீன் 23 ஆம் தேதியன்று  அவர் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை வேண்டி முகர்ஜியின் தாயார் நேருவுக்குப் பல முறை வேண்டுகோள் விடுத்தார். அதற்குச் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேயில்லை.

தேச ஒற்றுமையையும்  ஒருமைப்பாட்டையும் வேண்டிப் போராடி வந்த சமயத்தில் அந்த மகத்தான தலைவர் தனது ஐம்பத்தி இரண்டாம் வயதில் காலமானார். சுதந்திர இந்தியா தனது பண்பாடு, கலாசாரத்துடன் ஒற்றுமையாக  வாழ வேண்டும் எனக் கனவு கண்டு உழைத்த மாமனிதரின் வாழ்க்கை நிறைவு பெற்றது.

அவர் காலமானது பற்றி ஆச்சாரிய கிருபளானி சொல்லும் போது  பாரதத் தாயின் மீதும் தேச ஒற்றுமையிலும்  முகர்ஜிக்கிருந்த பற்று அளப்பரியது எனக் கூறினார். மேலும் வங்காள அமைச்சரவையிலிருந்தும், நேரு  அமைச்சரவையிலிருந்தும் அவர் விலகியதும், ஜம்மு-காஷ்மீர் சென்று போராடியதும் இந்த நாட்டுக்கும் அதன் ஒருமைப்பாட்டுக்காகவுமே  என்று  பாராட்டினார். அதே சமயம் அவரது அகால மரணத்தால்  நாட்டுக்கு அவரது சேவை முழுமையாக கிடைக்காமல் போனது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமும் பெருமையும் மிக்க நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டிக் காத்து அதனை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதே  நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்பது சியாம பிரசாத் முகர்ஜி அவர்களின் வாழ்வும் மரணமும் நமக்குச் சொல்லும் செய்தியாகும்.

( கட்டுரையாளர் -  அறங்காவலர், டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனம், புது டெல்லி)

( தினமலர்.காம்  – ஜூலை 6,2023)

மாமனிதர் அம்பேத்கர் வழியில் மோடி

 

மரியாதை நிமித்தமாகபாபாசாஹிப்என்னும் அடைமொழியுடன்  அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் ஒரு மாமனிதர். அந்தக் காலத்திலேயே அமெரிக்கவின் கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்என்னும் இரண்டு பெரிய வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் டாக்டர் பட்டம் பெற்றவர். வழக்கறிஞர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.  .

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த குழுவுக்குத் தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணி மகத்தானது.  எளிமையான  பட்டியலினக் குடும்பத்தில் பிறந்து, சொல்ல முடியாத அவமானங்களை எதிர்கொண்டு, வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு அளப்பரிய சாதனைகளைச் செய்தவர்.  நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் கலாசார பாரம்பரியத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர் என்பதால் அவரது உண்மையான வரலாறு மற்றும் சிந்தனைகள் பொது வெளியில் மறைக்கப்பட்டன. அவர் இருபதாம் நூற்றாண்டின் காலத்தை மீறிய சிந்தனையாளர். ஆனால் அரசியல் தலைவர்கள் அவரை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள்ளே அடைத்து வைத்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம்.

ஆரம்ப முதலே  காங்கிரஸ் கட்சி அவரது வளர்ச்சியை விரும்பவில்லை. அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக்கி அவரது அறிவை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. 1952 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு பம்பாய் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவரைக் கேவலப்படுத்தும் வகையில் அவரின் கீழ் உதவியாளராக வேலை பார்த்த கஜ்ரோல்கர் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. நேரு நேரடியாக களத்தில் இறங்கி பல கூட்டங்களில் பேசினார்.

அவருக்கு எதிராக கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டாங்கே வாக்கினை அம்பேத்கருக்கு அளிப்பதற்குப் பதிலாக வீண் செய்யுங்கள் என்று வெளிப்படையாகப் பிரசாரம் செய்தார். அதனால் அம்பேத்கர் தேர்தலில் தோல்வியுற்றார். பின்னர் 1954ல் நடந்த பந்தரா தொகுதிக்கான இடைத் தேர்தலில் அவர் போட்டியிட்ட போதும், மீண்டும் காங்கிரஸ் கட்சியால் தோற்கடிக்கப்பட்டார்.

கம்யூனிஸ்டுகளுடன் நான் இணைந்து செயல்பட மாட்டேன்; ஏனெனில் நான் கம்யூனிசத்தை நம்பவில்லை எனத் தெளிவாக அறிவித்தார் அம்பேத்கர். மேலும் கம்யூனிசமும் ஜனநாயகமும் இணைந்து பணியாற்றும் என்பது முழுக்க பொருத்தமில்லாதது எனக் கூறினார். எனவே கம்யூனிஸ்டுகள் அவரை பூர்ஷ்வா, பிரிவினை அரசியல் செய்பவர். தலித் மக்களைத் தவறாக வழி நடத்துவபர், சந்தர்ப்பவாதி மற்றும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எனப் பலவகைகளில் மோசமாக வர்ணித்தார்கள்.

தேச நலனும் ஒருமைப்பாடுமே மூச்சாக கொண்டு வாழ்ந்த மாபெரும் தலைவர் அம்பேத்கர். பிரதமர் நேரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும்  தனி உரிமைகள் கொண்ட சட்டப்பிரிவு 370ஐ க் கொண்டு வந்த போது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது தேசத்துக்குத் துரோகமான செயல்; எனவே தான் சட்ட அமைச்சராக இருக்கும் வரை அதைக் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் எனச் சூளுரைத்தார். பின்னர் அதைத் தந்திரமான  வகையில் நேரு சட்டமாக்கினார்.

அதன் விளைவாக அங்கு தீவிரவாதம் பெருகி, ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானதை தேசம் கண்டது. நாட்டு மக்கள் அனைவரும் சகோதரர்கள். எனவே அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டுமென அவர் முயற்சித்தார். ஆனால் காங்கிரஸ் அதை அனுமதிக்கவில்லை.

இந்தியக் கலாசார மற்றும் ஆன்மிகத்தின் மேல் ஆழமான பற்றுக் கொண்டவர் அம்பேத்கர். இந்தியாவின் பூகோள ஒற்றுமையை விடவும், கலாசார ஒற்றுமை நாடு முழுவதையும் ஆழமாகப் பிணைக்கிறது எனக் கூறினார். இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்த இந்துக்களை இங்கு திரும்பி வருமாறு அறைகூவல் விடுத்தார். அவர்களைக் கொண்டு வர முயற்சியும் எடுத்தார். இன்று இந்துக்கள் அங்கு படும் கொடுமைகளைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு தீர்க்கதரிசி என்பது புரியும்.  

1927 ல் பட்டியலின மக்கள் கோவில் நுழைவு பற்றி எழுதும் போது, மற்ற இந்துக்களுக்கு இந்துத்வா எப்படி சொந்தமோ, அதே போல பட்டியலின மக்களுக்கும் சொந்தம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்துத்வாவின் வளர்ச்சியும் பெருமையும் வசிஷ்டர் போன்ற பிராமணர்கள், கிருஷ்ணர் போன்ற ஷத்திரியர்கள், ஹர்ஷா போன்ற வைசியர்கள் மற்றும் துக்கா ராம் போன்ற சூத்திரகள் என அனைவரது ஒட்டு மொத்த பங்களிப்பாலும் தான் நிகழ்ந்துள்ளது என எடுத்துக் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழு நேர ஊழியரான அமரர் தத்தோபந்த் தெங்கடி அண்ணல் அம்பேத்கருக்கு மிகவும் நெருக்கமானவர். அம்பேத்கர் ஆரம்பித்து தலைவராக இருந்து நடத்திய பட்டியலின மக்கள் கூட்டமைப்புக்கு, அவரையே பொதுச் செயலாளராக்கினார். 1954 பந்தரா தேர்தலில் தனது தேர்தல் முகவராக தெங்கடியை நியமித்தார். 1930 களில் ஆர். எஸ்.எஸ். தினசரிக் கூடுதலை புனேவில் நேரடியாகச் சென்று பார்த்து பின்னர் அதன் தலைவர் டாக்டர் ஹெட்கேவர் அவர்களைச் சந்தித்தார். 

ஆரம்ப முதலே நேருவுடன் கொண்டிருந்த வேறுபாடுகள் அதிகரிக்கவே 1951ல் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினார். தனது விலகல் கடிதத்தில் நேரு எவ்வாறு தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமலும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான அரசு கமிசன் அமைக்காமலும், தவறான வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றியும் வருகிறார் என்னும் விசயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் அம்பேத்கர் வாழ்ந்த போது மட்டும் அவரை உதாசீனப்படுத்தவில்லை. அவர் மறைந்த பின்னரும் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கத் தவறியது.நேருவுக்கு அவர் பிரதமராக இருந்த போது 1955 ஆம் வருடமே பாரத் ரத்னா கொடுக்கப்பட்டது. இந்திரா காந்தியும் தான் பிரதமராக இருந்த போது 1971ல் பாரத் ரத்னாவைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால் இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஆட்சியில் பாரத் ரத்னா கொடுக்கப்படவேயில்லை. அவரது மறைவுக்குப் பின் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி 1990ல் பாரதிய ஜனதா ஆதரவளித்த வி.பி.சிங் ஆட்சியில் தான்  அந்த விருது கொடுக்கப்பட்டது. அதே போல பாராளுமன்றத்தின் மத்திய அவையிலும் அவரது படம் 1990ல் தான் வைக்கப்பட்டது.

அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கரை நமது தேசத்தின் மாபெரும் தலைவராகப் போற்றுகிறது. எனவே மோடி அரசு அமைந்த பின்னர் அவரது வாழ்க்கையோடு நெருங்கிய சம்பந்தமுடைய ஐந்து இடங்களில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம்பஞ்ச தீர்த்தங்கள்அமைக்கப்பட்டுள்ளது. அவை மத்திய பிரதேசத்தில் அவரது பிறந்த இடம், லண்டனில் தங்கிப் படித்த இடம், நாக்பூரில் தீட்சை பெற்ற இடம், டெல்லியில் வாழ்ந்து மறைந்த இடம்  மற்றும் மும்பையில் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகியவையாகும். இப்போது அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருவதால் அவை புண்ணிய தலங்களாக மாறியிருக்கின்றன.

ஆரம்ப காலந்தொட்டே மோடி அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மேல் அளப்பரிய மரியாதை இருந்து வந்துள்ளது. 1987ல் அவர் குஜராத் மாநில பொதுச் செயலாளராக இருந்த போதே பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளை கட்சி சார்பாக நிறுவினார். பின்னர் 2007ல் முதலமைச்சராக இருந்த போது பல இடங்களில் அம்பேத்கர் பவன்களை கட்டினார்.

அவரது முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து கொள்ள ஒரு யானை மேல் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தையும், அம்பேத்கர் படத்தையும் வைத்துக் கொண்டு குஜராத் வீதிகளில் மற்ற தலைவர்களுடன் நடந்து சென்றார். பின்னர் பிரதமரான பின் 2015 ஆண்டு அண்ணலைக் கௌரவிக்கும் விதமாக நவ 26 ஆம் நாளை அரசியலமைப்புச் சட்ட நாளாக அறிவித்தார். அது இப்போது வருடா வருடம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேற கல்வி, வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்களில் வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் வெவ்வேறு பொறுப்புகளில் அதிகமான பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை மோடி அரசு அமர்த்தி வருகிறது.

தற்போதைய பாராளுமன்றத்தில் பட்டியலின, மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 131 தொகுதிகளில் 97 பேர் பாரதிய ;ஜனதாவைச் சேர்ந்தவர்கள். 113 உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். தேசத்தின் முதல் குடிமகள் மலைவாழ் புதல்வி. மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கமிசனுக்கு 2019ல் மோடி அரசு சட்ட பூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ளது.

கடைநிலை மக்கள் முன்னேற்றத்துக்காக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக மோடி அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சுமார் 12 கோடி கழிவறைகள், சுமார் பத்து கோடி இலவச எரிவாயு இணைப்புகள், 48 கோடிக்கு மேற்பட்ட புதிய வங்கி கணக்குகள், முத்ரா கடனுதவித் திட்டம் எனப் பல திட்டங்களும் பெரிய பலன்களைத் தந்து வருகின்றன.

ஜனதன திட்டத்தின் மூலம் இன்று ஏழைக் குடும்பங்கள் தங்கள் கணக்குகளில் 1,99,000 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக கொண்டுள்ளனர்.   ஜன திட்ட  பயனாளிகளில் அதிகபட்சமாக 27 கோடிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். முத்ரா திட்டத்தைப் பொறுத்தவரையில் 2021-22 ல் முடிந்த ஏழு ஆண்டுகளில்  18.91 லட்சம் கோடி ரூபாய் அளவு கடன் சுமார் 35 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடன் பெற்ற அமைப்புகளில் 68 விழுக்காடு பெண்களால் நடத்தப்படுபவை. 51 விழுக்காடு பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களால் நடத்தப்படுபவை.

பட்டியலின சமூக குழந்தைகள் பள்ளிக் கல்வி மட்டுமன்றி, நாட்டின் மிகச் சிறந்த நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமாகவுள்ள  உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பெற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டியலின இளைஞர்கள் அரசுப் பணிகளில் எளிதாகப் போட்டியிட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ஆதர்ஷ் கிராம திட்டம் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளின் ஒட்டு மொத்த கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. பெண்கள்,   பட்டியலின மற்றும் மலை வாழ் மக்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில்ஸ்டேண்ட் அப் இந்தியாசிறப்புத் திட்டம் கடந்த ஏழு வருடமாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் இது வரை 40,700 கோடி ரூபாய் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

நமது நாடு முன்னேறுவதற்கு விவசாயம் மற்றும் தொழில் துறைகள் முன்னேறுவது அவசியம் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். அதற்காக மோடி அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பிரதமரின் சுய சார்பு திட்டம் என்பது இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கும்.

எனவே மோடி அரசு அம்பேத்கரின் கனவான சமூக ரீதியாக கீழ் நிலையில் இருப்பவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றும் வகையில் முழு மூச்சாகப் பணியாற்றி வருகிறது. அவர்களுக்குத் தரமான கல்வி கொடுப்பது, வேலை வாய்ப்பு அளிப்பது, அவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்குவது, மற்றும் அதிகாரத்தில் அமர்த்துவது எனப் பல தளங்களிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன.

எனவே அரசியலுக்காக அல்லாமல் உண்மையான சமூக நீதிக் காவலான மோடி விளங்கி வருகிறார். அதனால் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மோடி அரசு அம்பேத்கர் என்னும் மகத்தான ஆளுமையைக் கொண்டாடியும், அவரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டும் வருகிறது.

( ஒரே நாடு, சென்னை, ஏப். 2023)

தேசப் பணியில் பாரதிய ஜனதா பேரியக்கம்

 

பாரதிய ஜனதா கட்சி 1980 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மாதம் தனது நாற்பத்தி நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த நாற்பத்தி மூன்று ஆண்டுகளில் தனது பணிகளால் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு பேரியக்கமாக மாறி, தற்போது உலகின் மிகப் பெரிய ஜனநாயக கட்சியாகச் செயல்பட்டு வருகிறது.   

இந்திய நாடு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. வெவ்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி உலகின் முதன்மை நாடாக விளங்கி வந்த பெருமைக்குரியது. அந்நியப் படையெடுப்புகள் மற்றும் காலனியாட்சி சிதைவுகள் நாட்டுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. அதனால் நாடு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது.    

சுதந்திரத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டிய  நேரு அரசின் அணுகுமுறை மற்றும் நேரு-லியாகத் அலிகான் ஒப்பந்த விசயத்தில் பிரதமரின் போக்கு ஆகியன காங்கிரஸ் கட்சி தேசிய உணர்வோடு மக்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படவில்லை என்பதை உணர்த்தின.

அவற்றைச் சரி செய்ய முயன்று தோற்றுப் போன மத்திய அமைச்சர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி தனது பதவியிலிருந்து  விலகினார். அதனால் தேச நலனை மையப்படுத்திச் செயல்படக்கூடிய ஒரு கட்சி நாட்டுக்கு அவசியம் என முக்கியமான தேசியவாதிகள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் பாரதிய ஜனசங்கம் 1951 ஆம் ஆண்டு  முகர்ஜி அவர்களைத் தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியும் அதன் முந்தைய அவதாரமான ஜன சங்கமும் அன்று முதல் அதே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தேச ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைக் காப்பாற்றுவது, மண்ணின் கலாசாரத்தைப் பேணிக் காத்தல், கடைநிலை மனிதனை முன்னேற்றும் செயல்பாடுகள், வெவ்வேறு துறைகளிலும் வளர்ச்சி, சுதேசி அணுகு முறைகள், உலக அளவில் தேசத்தை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்டவை அதன் முக்கிய அம்சங்கள்.    

1952 ஆம் வருடம் பிரதமர் நேரு, ஜம்முகாஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவுடன் போட்ட ஒப்பந்தம் அந்த மாநிலத்துக்கென தனியான   சட்டம், கொடி மற்றும் பிரதமர் பதவி ஆகியவற்றைக் கொடுத்தது.  மேலும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து அங்கு நுழைய அனுமதி வாங்கும் முறையைக் கொண்டு வந்தது.  

அதை எதிர்த்து 1953 ல் முகர்ஜி அவர்கள் அந்த மாநிலத்தில்  நுழைந்த போது கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இரண்டு  மாதங்கள் முடியும் முன்னரே மர்மமான முறையில் காலமானார். தேசத்தின் முழுமையான  ஒருங்கிணைப்புக்காக  தனது 52 வயதில் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டார்.

1947 ல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், கோவாடையூடாமன் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகள் போர்ச்சுகீஸ் மற்றும் பிரெஞ்சு அரசுகளின் கீழ் நீடித்து வந்தன. அவற்றுக்கான விடுதலைகளுக்காக ஜன சங்கம் தீவிரமாகப் போராடி, உயிர்ப்பலி கொடுத்து வெற்றி கண்டது. 

ஆரம்ப முதலே பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நேருவின் தேவையற்ற சமாதானப் போக்கை ஜனசங்கம் எச்சரித்து வந்தது. சீனாவின் ஊடுருவல்களை எதிர்த்து 1959-60 ஆண்டுகளில் தீவிரமாக குரல் கொடுத்தது. 1965 ல் பாகிஸ்தான் குஜராத்தில் ஒரு இடத்தைப் பிடித்த பின்னரும் அவர்களுடன் சமாதானமாகப் போக நேரு விரும்பினார். அதை எதிர்த்து கட்சி நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கூட்டங்கள் நடத்தியது. அதே சமயம் பாகிஸ்தானுடன் போர் வரும் சமயங்களில் மத்திய அரசுக்கு முழு ஆதரவை  அளித்தது.

1967 முதல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகப் பல மாநிலங்களில்  கூட்டணி அரசுகளை அமைத்து ஆட்சியில் பங்கு கொண்டது. 1975ல் இந்திரா காந்தி அவசர நிலையைக் கொண்டு வந்த போது அதை எதிர்த்துப் போராடிச் சிறை சென்றவர்களில் அதிகம் பேர் ஜனசங்கம் மற்றும் அதன் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான். பின்னர்  காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒரு பெரிய கட்சியை உருவாக்க வேண்டி ஜன சங்கம்  ஜனதா கட்சியின் ஒரு அங்கமானது.

1977ல் ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் அமைவதற்கு   ஜனசங்க அமைப்பினர் பெரிய பங்கு வகித்தனர். அந்த ஆட்சியில் திரு வாஜ்பாய் மற்றும் திரு அத்வானி உள்ளிட்டவர்கள் முக்கிய பொறுப்புகளை வகித்தனர். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜனதா கட்சி உடைந்த போது, பாரதிய ஜனதா உருவானது.

அடுத்த கட்டமாக 1998 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சி தலைமை வகித்த கூட்டணி ஆட்சியை  அமைத்தது.  அப்போது   பிரதமர் வாஜ்பாய் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி இந்தியாவின் வலிமையை உலகுக்கு உணர்த்தினார். பின்னர் 1999 தேர்தலிலும் பாரதிய ஜனதா அதிக இடங்களை வென்று கூட்டணி ஆட்சியை அமைத்தது. எனவே 2004 வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது.

அதன் பின் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரு மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசுகள் நாட்டைச் சீரழித்தன. பின்னர் 2014 தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா கட்சியிலான கூட்டணி அரசு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைந்தது. அப்போது தான் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது. 

அப்போது முதல் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அதிகபட்சமான கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக கட்டமைப்புகள் வலிமைப்படுத்தப்பட்டும், நவீன மயமாக்கப்பட்டும் வருகின்றன. எல்லைகளில் அத்து மீறுவோருக்குக்  கடுமையான பதிலடி கொடுக்கப்படுகிறது. அதனால் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா அடங்கிக் கிடக்கின்றன.

சிறப்பு சலுகையினால் ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறினார்கள். பெண்கள், பட்டியலின மக்கள் ஆகியோருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. எனவே 2019 ஆம் வருடம் மோடி அரசு 370 பிரிவை நீக்கி தேச ஒருங்கிணைப்பை உறுதிப் படுத்தியது. அதனால் அங்கு தீவிரவாதம் குறைந்து வளர்ச்சியை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது.

மேலும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த பிரிவினைவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்துள்ளன. வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு, அவை தேசிய நீரோட்டத்தில் இணைந்து வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. மேலும் இடது சாரி தீவிரவாதம் வேகமாக குறைந்து வருகிறது.

இந்தியா பாரம்பரியமான பொருளாதார வழிமுறைகளைக் கொண்டு உலகின் செல்வந்த நாடாக விளங்கி வந்த பெருமைக்குரியது.  ஆனால் சுதந்திரம் பெற்றதும் நேருவின் அரசு அந்நிய சித்தாந்தை அடிப்படைக் கொள்கையாக நடைமுறைப் படுத்தியது. அதனால் நாட்டின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

அதே சமயம் 1954 ஆம் வருடமே ஜன சங்கம் சுதேசிக் கொள்கை அவசியமென அறைகூவல் விடுத்தது. பின்னர் 1965 ஆம் வருடம் ஒருங்கிணைந்த மனித நேய தத்துவத்தை ஜன சங்கத்தை உருவாக்கிய சிற்பியும் சிந்தனையாளருமான தீனதயாள் உபாத்யாயா அவர்கள் முன் வைத்தார். அது கட்சியின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது மோடி அரசின் வழிகாட்டு நெறியாக விளங்கி வருகிறது..

ஏழை மக்கள், பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடி வகுப்பினர் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினருக்கு சிறப்புத் திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  அதனால் அவர்கள் பெரும் பலன்களைப் பெற்று வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தைக் கண்டு  வருகின்றனர். இளைஞர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மோடி ஆட்சியில் மட்டும் சாதாரண மக்களுக்காக சுமார் பன்னிரெண்டு கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் பத்து கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தில் இதுவரை 48 கோடிக்கு மேற்பட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.

முன்னர் இருந்த அரசுகள் செய்யத் தயங்கிய பல விசயங்களையும் மோடி அரசு தைரியமாகச் செயல்படுத்தி  வருகிறது. சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் தாய் மொழியையும், தொழில் கல்வியையும் அடிப்படையாக கொண்ட தேசிய கல்விக் கொள்கை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கட்டமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும்  வருகின்றன. நாட்டுக்கு ஆதரமாக விளங்கும் விவசாயம் மற்றும்  குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு அவை வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. அதனால் சென்ற நிதியாண்டில் ஏழு விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் உலகிலேயே வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது.

 நாடு நீடித்த தன்மையுடன் சிறந்து விளங்க வேண்டுமெனில் சுயசார்பு  அவசியம். அந்த வகையில்இந்தியாவில் தயாரிப்போம்திட்டத்தில் தொடங்கி, சுய சார்பு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தி மோடி அரசு கொள்கைகளை வகுத்து வருகிறது. அதனால் உள்நாட்டு தயாரிப்புகள் அதிகமாகி, சீனா போன்ற நாடுகளிடமிருந்து வரும் இறக்குமதிகள் குறைந்து வருகின்றன.

கொரோனா சமயத்தில் குறுகிய காலத்திலேயே உள் நாட்டில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் அதிகமாக 221 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு நாம் தடுப்பூசிகளை அனுப்பி உதவி புரிந்துள்ளோம். அதன் மூலம் உலகில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது.

அதனால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நாடு மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டு வருகின்றது. உலகப் பொருளாதாரத்தில் 2014-ஆம் வருடம் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது ஐந்தாவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. மேலும்  இந்தியர்களின் தனி நபர் வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்து தற்போது 1.97 லட்சம் ரூபாயாக உள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இருண்டு கிடக்கும் உலக பொருளாதார சூழலில் ஒளி வீசும் நட்சத்திரமாக இந்தியா விளங்கி வருகிறது எனக் குறிப்பிடுகின்றன.

இந்திய தேசத்தின் அடிநாதமாக விளங்குவது தனித்துவம் வாய்ந்த நமது பண்பாடு. அதனடிப்படையில் நமது மண்ணுக்கே உரித்தான கலாசார முறைகளைப் பேணிக் காப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக நாட்டு மக்கள் காண விரும்பிய இராமபிரான் ஆலயம் அவருடைய பிறப்பிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. புனிதமான காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிக்கப்படுள்ளது.

சுதந்திரம் பெற்றது முதல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆட்சியில் வாக்கு வங்கி அரசியல் பிரதானமாக இருந்து வந்தது. அதற்கு மாற்றாக அனைவருக்குமான வளர்ச்சி என்பது பாரதிய ஜனதா ஆட்சியின்  அடிப்படை அம்சமாக இருந்து வருகிறது. அண்மைக் காலமாக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிடமும் நட்புறவு அதிகரித்துள்ளது.

2014 முதல் வெவ்வேறு துறைகளிலும் நாடு நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி, தேச பக்தி மிக்க அர்ப்பணிப்புள்ள தலைவர்கள், கடுமையான உழைப்பு ஆகியன நாட்டை உயர்த்திக் கொண்டு வருகின்றன. அதனால் நாட்டில் பதினேழு மாநில மற்றும் யூனியன் பிரதேச பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது.

எனவே தற்போது இந்தியா உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. சுதந்திரத்துக்குப் பின் குடும்ப மற்றும் வாக்கு வங்கி  அரசியலிலிருந்து நாட்டைக் காப்பாற்றி, புதிய இந்தியாவை உருவாக்குவதில் பாரதிய ஜனதா முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் பல தரப்பட்ட பிரிவினரின் ஆதரவையும் பெற்று  மக்களுக்கு நம்பிக்கை தரும் கட்சியாக மென்மேலும் வளர்ந்து வருகிறது. .

( ஏப்ரல் 6 பாரதிய ஜனதா கட்சி நிறுவன நாள்)

( தினமலர், சென்னை, ஏப்ரல் 6, 2023)