Rebuilding India 19


Demonetisation is a major step to build a new economy 


Black money remains a serious impediment to the development of the Indian economy. Nehruvian socialism, crony capitalism and unchecked corruption are among the major factors that have facilitated the growth of black economy over the years. As a result, few   small but influential groups are reaping enormous benefits at the cost of the common people and the country. 

Though the issue of tackling the menace of black money used to be discussed occasionally over the years, no serious attempt has been taken by the Government so far with full conviction. Besides, the size of the money have grown manifold during the recent periods. Apart from black money, there are fake currency notes in circulation feeding the terrorist, Naxal and other anti-national activities who are bent upon destroying the country.

There are varying estimates of black money by different agencies. A recent report by the Ambit Capital Research mentions that the size of the black economy for calendar year 2016 could be over Rs.30 lakh crores, accounting for 20 per cent of India’s GDP. An earlier report in 2013 by the National Institute of Public Finance and Policy appointed by the Government to estimate the black money in India and held overseas noted presented an alarming picture.

It noted that the black economy could be nearly three quarters of the size of India’s reported GDP. As for the black money in circulation is concerned, estimates based on different sources indicate that the cash in black could be as much as Rs.6.5 lakh crore, accounting for 38 per cent of the share of currency in circulation.

The reports of the Reserve Bank of India indicate that the circulation of Fake Indian Currency Notes (FICN) has been on the rise posing a grave threat to the security of our nation. The reports show that nearly six lakh notes were detected during 2014-15, from around 4.90 lakh notes during the previous year. The Financial Action Task Force report of 2013 noted that the Indian rupee was the ninth most counterfeit currency in terms of its value in the world, most of it printed in Pakistan.  

The impact of black money and fake currency notes have far reaching influence on our nation than we imagine. Most of the population, who are honest in their dealings and especially those from the ordinary segments, suffer a lot in their day to day lives. The sufferings take place in diverse forms such as higher land prices, inflation, high interest rates, corruption, increasing capitation fee in educational institutions and terror attacks. All these factors seriously affect the lives of our people, who despite their best efforts are forced to face many difficulties.

It is in this connection that the announcement of our Hon’ble Prime Minister on Nov.8, 2016 making the high denomination notes lose their legal tender status assumes importance. It is estimated that there are around sixteen lakh crore worth of money in circulation in the country. Of this, Rs.500 and Rs.1000 notes are estimated to be around 86 per cent. The remaining money in circulation is in smaller denominations.

By withdrawing the higher denomination notes and allowing the exchange and deposit of genuine old currencies at one stroke, the Government has taken a major step to tackle the issue of black money and fake currency notes. This is by far the boldest step by any Government in Independent India.

The initial reports indicate that substantial sums of funds are reaching the banking channels on a daily basis at a faster rate, though the Government have given fifty days of time to the people to clean up their accounts. It is significant to note here that in the true Indian spirit our people have willing taken up on their shoulders few    difficulties that they have to face during the transition period.

The results of demonetisation are being felt even at this initial stage, though there is a lot time to see the full impact. Those who have amassed huge cash through wrong means are all on the wrong foot. They might have to lose much of their loot, as they cannot prove their sources. This would act as a damper in future to the all those who want to engage in corrupt practices.  

With the accumulation of funds in the banking system, it   is expected that lending rates will decline in future. This would increase the economic activities, enabling the industrial and business community to get funds at lower rates. They have been continuously voicing their opinion for lower rates to compete at the international level.

This would particularly help the entrepreneurial community belonging to the MSME segments to borrow funds at lower rates. At present the major difficulty for the non-corporate sector is the lack of access to the low cost funds, which cripples their functioning. Hence this would be big boost for them. 

It is an open secret that huge amounts of black money is diverted into certain sectors such as real estate. As a result the land prices have become very costly during the recent years. Hence the majority of the population cannot even imagine buying a piece of land to construct a house, especially in big cities. Experts note that henceforth there would be reduction in the prices of land.

Opportunities for keeping black money encourages corruption. As a result we are witnessing the huge levels of corruption prevailing across the country. Even the critical sectors that are expected to provide basic services to people such as education, health and infrastructure have become the major centres of corruption, leaving the majority sections at the mercy of God. Ordinary people are not in a position to enjoy the fruits of freedom, as there is corruption at different levels. The present step is expected to curtail corruption to a large extent.

Terrorist activities have already come down in the last few days. Normalcy is returning to Jammu & Kashmir after nearly four months of disturbances, including stone pelting. Reports say that Naxals seem to have suffered heavily as their stocks of money has lost their value.

Besides, the latest development has created an opportunity to the ordinary people and the informal sector to operate through the banking system. The operations of the Government through the banks have stopped corruption in their dealings with the public. Initiatives such as payment of wages under the rural employment scheme,   provision of gas subsidies and payment of scholarships to students being directly transferred to the bank accounts of the beneficiaries have resulted in full payments without any leakage.

The present Government under the leadership of the Prime Minister has been taking series of steps from the beginning to unearth black money and curtail corruption. Beginning with the setting up of Special Investigation Team to get hold of black money immediately after the assumption of office and the opening of Jan Dhan accounts scheme for people without bank accounts to the latest agreement with the Swiss Government to share the details of black money holders in their banks, the Prime Minister has been taking continuous steps on these issues.

India is fast emerging as a powerful nation at the international level. One of the critical factors that hinder our development journey is the black money. It has to be severely dealt with if India is to progress for the development of all the sections of population. Against this background, the Prime Minister has taken a very significant step to curtail black money and we all have stand as one with him at this critical juncture. 

தீன தயாள் என்னும் தீர்க்கதரிசி

உலக வரலாற்றில் காலனி ஆதிக்கமும் அதையொட்டிய ஐரோப்பியர்களின்  முன்னேற்றமும் ஒட்டு மொத்த மனித குலத்தின்  சிந்தனா முறைகளில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக உலகளாவிய சிந்தனை முறைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு, ஐரோப்பிய முறைகள் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டன. பெரும்பாலான நாடுகளில் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைகளில் இருந்ததால், அது எளிதாகிப் போனது.

நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டிலும் அது நடந்தேறியது. தொடர்ந்து வந்த காலங்களில் கல்வித் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அவர்களின் சித்தாந்தங்களை பாடத் திட்டங்களில்  புகுத்தினார்கள். எனவே தொடர்ந்து வந்த தலைமுறைகளுக்கு மேற்கத்திய சித்தாந்தங்கள் மட்டுமே தெரிய வந்தன.

மனித வாழ்க்கைக்கு ஆதரமானது பொருளாதாரம். எனவே அதிலும் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய அனுபவங்களை வைத்து அங்கு எழுதப்பட்ட  முதலாளித்துவ மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களை மட்டுமே இரு பெரும் அடிப்படைப் பொருளாதார சிந்தனைக் கருத்துக்களாக முன் வைத்தனர்.

ஆகையால் கடந்த சுமார் இரு நூறு ஆண்டுகளாகவே பொருளாதாரம் என்று வரும் போது அது மேற்கத்திய நாடுகளை ஒட்டியதாகவே இருந்து வருகிறது. அதனால் பிற நாடுகளுக்கு எனச் சுயமான பொருளாதாரச் சிந்தனை ஒன்று இருக்க முடியும்  என்பதைக் கூட மேற்கத்திய நிபுணர்கள் அண்மைக் காலம் வரை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது அவர்களின் கோட்பாடுகளையும், வழி முறைகளையும் முன் மாதிரியாக வைத்தே முடிவெடுக்கும் சூழ்நிலை உலக அளவில் நிலவி வந்தது.

அது போலவே மக்களுக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பு ஒரு நாட்டுக்கு அத்தியாவசியமானது. இந்திய நாடு மன்னராட்சியிலும் கூட உயர்ந்த ஜனநாயக நெறி முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளதை வரலாறு எடுத்துக் கூறுகின்றது. ஆனால் நம் முன் வைக்கப்படுவது மேற்கத்திய அரசியல் சித்தாந்தங்கள் மட்டுமே.   உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் நடை முறைகள் எங்காவது வழி காட்டு முறைகளாக உள்ளனவா?

இந்திய நாடு மிகவும் தொன்மையானது. நமக்கென்று ஒரு மிகப் பெரிய பொருளாதார பாரம்பரியம் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகப் பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினைக் கைவசம் வைத்து, ஒரு வல்லரசாக இந்தியா இருந்து வந்துள்ளதை அண்மைக் கால ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

அது மட்டுமன்றி கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் மட்டும் மிகப் பெரும்பாலான காலம் உலகின் அதிக செல்வந்த நாடாக விளங்கி நாம் வந்துள்ளோம். ஆங்கிலேயர் ஆட்சியின் சுய நலக் கொள்கைகளால் நமது பொருளாதாரம் சுரண்டப்பட்டு, இந்தியா ஏழை நாடாகிப் போனது.

எனவே மிகச் சிறப்பான பொருளாதாரப் பின்னணியைக்  கொண்டிருந்த நமது நாட்டுக்கெனத் தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் அணுகு முறைகள்  இருந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளச் சுதந்திர இந்தியா தவறி விட்டது. அதன் விளைவுகளைத் தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 ஒவ்வொரு நாட்டுக்கும் எனத் தனித்தன்மை  ஒன்று உண்டு. அந்த நாட்டுக்குத் தகுந்த கொள்கைகள் மூலமே முழுமையான பலன்களைப் பெற முடியும். அந்த வகையில் நமது தேசத்தின் அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் நமது மண் வாசனையை ஒட்டியே அமைய வேண்டும் என ஐம்பது வருடங்களுக்கு முன்னரே உரக்கச் சொன்னவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்கள்.

பன்முகத் திறமைகள் கொண்ட அவர் தமது வாழ்க்கை முழுவதையும் திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் தேசத்துக்கே அர்ப்பணித்துக் கொண்ட மகான். ஒரு தத்துவ ஞானி, சமூகவியலாளர், சிந்தனாவாதி, எழுத்தாளர், அரசியல் தலைவர் மற்றும்  பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பல பரிமாணங்களில் ஜொலித்தவர் அவர். ஆனால் உலகில் பிரபலமாக நிலவி வந்த மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றாக இந்திய வாழ்க்கை முறை சார்ந்த கோட்பாட்டை அவர் முன் வைத்ததால், இதுவரை அவர் பரவலாக அறியப் படாதவராகவே இருந்து வருகிறார்.

இந்திய வரலாற்றில் தற்போதைய காலம் மிகவும்  முக்கியமானது. ஏனெனில் அண்மைக் காலங்களில் மேற்கத்திய சித்தாந்தங்களின் தோல்வி உலக அளவில் உணரப்பட்டு வருகிறது. அவர்களின் நாடுகளிலேயே அவர்களது கருத்துக்கள் பலன்களைத் தரவில்லை; மாறாகச் சிரமங்களை அதிகமாக உண்டாக்கி வருகின்றன.

எனவே நாம் நமக்குப் பொருத்தமான கொள்கைகளைப் பற்றிச் சிந்திக்க இது சரியான தருணமாக உள்ளது. அந்த வகையில் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் சிந்தனைகள் நமக்குச் சரியான வழிகாட்டியாக அமைய முடியும்.

அவரது அரசியல் பொருளாதார தத்துவத்தை அவர்  ”ஒருங்கிணைந்த மனித நேயம்” எனக் குறிப்பிட்டார். அதில் மனிதனின் உடல், அறிவு மற்றும் ஆன்மா ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்தார். அதன் மூலம் பொருள் சார்ந்த புற வாழ்க்கை மற்றும் ஆன்மிகம் சார்ந்த அக வாழ்க்கை ஆகிய இரண்டையும்  ஒன்று சேர்த்தார்.  

அதிகாரப் பரவலற்ற அரசியல் அமைப்பு மற்றும் கிராமத்தை மையமாகக் கொண்ட சுய சார்புத் தன்மை உள்ள பொருளாதாரம் என்பதாக அவரது தத்துவம் அமைந்துள்ளது.   அதை இந்திய நாட்டின் கலாசாரம்,  வாழ்க்கை முறை, உயர்ந்த நெறிகள் ஆகியவற்றை ஒட்டி அவர் அமைத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள அணுகு முறைகளால் முழுமையான பலன்கள் நமக்குக் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் அவை நமக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதுதான். அதை நாம் இப்போது தான் உணர்கிறோம். ஆனால் தீனதயாள் அவர்கள் இது குறித்துப் பல காலம் முன்னரே உணர்ந்து, அவற்றுக்கு மாற்றாக 1965 ஆம் வருடத்திலேயே தமது கருத்துக்களை  வெளியிட்டார்.

எனவே அவர் ஒரு தீர்க்க தரிசி. மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றாக நமது தேசத்தின்  சிந்தனைகளை ஒட்டிய தத்துவத்தை முன் வைத்தவர்.  அதில் மக்களின் ஒட்டு மொத்தமான முன்னேற்றத்துக்கான அணுகு முறைகள் குறித்த கருத்துக்கள் மையமாக உள்ளன.  இந்த சமயத்தில் மேற்கத்திய சித்தாந்தங்கள் பொருளை மட்டுமே மையமாக வைத்து தோற்றுப் போய் வருவதை நாம் உணர வேண்டும்.

தீனதயாள் உபாத்யாய அவர்கள் பிறந்து இந்த வருடம் நூறாண்டுகள் நிறைவு பெறுகிறது. எனவே இப்போதாவது நாம் அவரது சிந்தனைகளைப் படித்து, நமது நாட்டுக்கான அணுகுமுறைகள் குறித்த ஒரு தெளிவான எண்ணத்தைப் பெறுவது அவசியமாகிறது.

( காண்டீபம், திருப்பூர், அக்.2016)
 




ஜன தன திட்டம் – சுதந்திர இந்தியாவின் சாமானிய மக்களுக்கான வரலாற்றுச் சாதனை


நமது தேசத்தின் மிகப் பெரிய பொருளாதார பலமே மக்களின் சேமிக்கும் குணம் தான்.  சேமிப்பு என்பது நமது மக்களின் வாழ்வில் ஊறிப் போன ஒரு பழக்கம்; வாழ்க்கை முறை. இது தொன்று தொட்டு பாரம்பரியமாகவே இங்கு இருந்து வந்திருக்கின்றது.

அந்நியர்களின் ஆட்சிக் காலத்தில் நமது பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. அதனால் பல நூற்றாண்டுகளாக உலகின் பொருளாதார சக்தியாக  விளங்கி வந்த நமது தேசம், ஒரு ஏழை நாடாக மாறிப் போனது. விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் எனப் பலவும் நசிந்து போயின.  

அந்தச் சமயத்தில் பெரும்பான்மை மக்களுக்கு வாழவே வழியில்லை. எனவே சேமிப்பு என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்க இயலாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.  மேலும் முந்தைய காலங்களில் இருந்து வந்த பாரம்பரிய நிதி சார்ந்த அமைப்பு முறைகள் எல்லாம் அப்படியே மழுங்கிப் போயின.

எனவே சுதந்திரம் பெற்ற சமயத்தில், மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி அமைப்புகளின் தொடர்பு எதுவும் இருக்கவில்லை. அந்தக் கால கட்டத்தில்  பொருளாதாரத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கி, எண்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் சார்ந்திருந்த துறையாக விவசாயம் இருந்து வந்தது. ஆனால் தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு அடிப்படை வங்கி உதவிகள் கூட எதுவும் கிடைக்கவில்லை; மாறாக அவர்கள் தங்களின் தேவைகளுக்கு மிக அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார்களையே நம்பி இருந்தனர். 

தொடர்ந்து வந்த காலங்களில் நிதி மற்றும் வங்கித் துறைகள் வளர்ச்சி பெற்ற போதும், பெரும்பான்மை மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து, சேவைகள் விரிவடைந்த போதும், அவை பெரும்பாலும்  பணக்காரர்களையும்,  படித்தவர்களையும்  மையப்படுத்தியே அமைந்திருந்தன. 

எனவே நிதித் துறையும், வங்கிகளும் பெரும்பான்மை சாமானிய மக்களை ஒதுக்கியே வைத்திருந்தன; அவர்களை உள்ளடக்கியதாக இல்லை. அதனால் மக்களின் சேமிப்புகள் அதிகரித்த போதும், சாமானிய மக்கள் தங்களின் சேமிப்புகளை வங்கி மற்றும் அமைப்பு சாராத வழிகளிலேயே அதிகமாக  மேற்கொண்டனர்.

நமது பொருளாதாரமே சிறு மற்றும் குறு தொழில்களை அடிப்படையாகக் கொண்டது. அவற்றையெல்லாம் நடத்துபவர்கள்  சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பங்கள் நடத்தும் அமைப்பு சாராத் தொழில்கள் தான் பெரும் பங்கினை வகித்து  வருகின்றன.  

இந்தியாவில் சிறிய தொழில்கள் மட்டுமே சுமார் ஆறு கோடி அளவு இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அவை தான் நாட்டிலேயே அதிகமாக பன்னிரண்டு கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்பினை வழங்குகின்றன. ஆனால் அவற்றை நடத்துபவர்களில் பெரும்பான்மையோருக்கு வங்கி வசதிகள் எதுவும் கிடைப்பதில்லை.
உலக வங்கியின் ஒரு கணக்கெடுப்பு 2013 ஆம் ஆண்டில் இந்திய மக்களில் பாதிப்பேருக்கு கீழே தான் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எனத் தெரிவிக்கிறது. அதனுடைய இன்னொரு புள்ளி விபரப்படி 2014 ஆம் ஆண்டில் உலக அளவில் வங்கிக் கணக்கில்லாத இளைஞர்களில் அதிகம் பேர், அதாவது 21 விழுக்காடு, நமது நாட்டில் தான் உள்ளதாகச் சொல்லியுள்ளது.

சாதாரண மக்கள் தான் அதிகம் உழைப்பவர்கள்; அவர்களுக்கு நிதி உதவிகள் அவசியம்; அவர்கள் நடத்தும் தொழில்கள்   நிதி அவசியமாகத் தேவைப்படுபவை. அவர்கள் நாட்டின் நிதி அமைப்புடன் இணையும் போது, தேவைப்படும் உதவிகளை அவர் தம் தொழில்களுக்குப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் அவர்களின் சேமிப்புகளையும் ஒருமுகமாக வங்கிகளை நோக்கி வர வைக்க முடியும். அவற்றின் மூலம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நமது பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

ஆனால் இது குறித்து முந்தைய கால கட்டங்களில் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவை முழுமையானதாக இல்லை; மேலும் அவற்றில் போதிய தீவிரம் காட்டப்படவில்லை. ஆனால் மோடி அரசு பதவியேற்ற பின்னர், முதன் முறையாக சாமானிய மக்களை நாட்டின் நிதி அமைப்பில் அங்கமாக இணைக்கும் வண்ணம், ஒரு ஒருங்கிணைந்த திட்டம் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது.

அது தான் ஜன தன திட்டம் என்பதாகும். அதில் குறைந்த பட்ச இருப்புத் தொகை என எதுவும் இல்லாமலேயே வங்கிக் கணக்கினைத் தொடங்கலாம். அதற்கு டெபிட் கார்டு  கொடுக்கப்படும். குறைந்த பட்சத் தொகை இருக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களை கணக்குத் தொடங்க பயப்பட வைத்தது. அதை நீக்கியதன் மூலம் மக்களுக்கு இருந்த பயம் மறைந்து போனது. மேலும் டெபிட் கார்டு என்பது சாமானிய மனிதனுக்கும் கிடைக்கும் என்கின்ற முறையும் நடை முறையானது.

கணக்கினை முறையாக பராமரிக்கும் போது  அதற்கு ஓவர்டிராப்ட் வசதி கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் தேவைகளுக்கு மக்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். திட்டத்தின் இன்னொரு அம்சமாக கூடவே வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கான காப்பீடும் செய்யப்படுகிறது.  

ஆகவே முதன் முறையாக புதிய நோக்கில் சாமானிய மக்களையும் சக்தி வாய்ந்தவர்களாக்கும் வகையில் இத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே சேமிப்புக் கணக்கு, தேவைக்கேற்றவாறு கடன் உதவிகள், இது வரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு காப்பீடு மற்றும் பென்சன் போன்ற நிதி உதவிகள் கிடைக்கச் செய்வது ஆகியனவாகும்.

இதன் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒருவருக்காகவாவது வங்கி வசதிகளை ஏற்படுத்தித் தருவது தேசிய நோக்கமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  மேலும்  மத்திய, மாநில  அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் எல்லா பரிவர்த்தனைகளும் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செல்ல ஏற்பாடு செய்வது இதன் இன்னொரு முக்கிய அம்சமாகும். அதன் மூலம் ஊழல் ஒழிக்கப்பட்டு, மக்களுக்கான பயன்கள் முழுவதும் அவர்களுக்கு அப்படியே கிடைக்கும்.  

இதை ஒட்டியே சிறிய தொழில்களுக்குக் கடனளிக்கும் முத்ரா திட்டம், மாதம் ஒரு ரூபாய் பிரீமியத்துக்கு விபத்துக் காப்பீடு, வருடம் 330 ரூபாய் பிரீமியத்துக்கு ஆயுள் காப்பீடு மற்றும் அடல் பென்சன் ஆகிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.

ஜன தன திட்டம் இது வரை அத்தனை இலக்குகளையும் முறியடித்து ஒரு பெரும் சாதனை படைத்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் வரை 24.10 கோடி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் சுமார் 1.8 கோடி கணக்குகள் துவங்கியதற்காக மத்திய நிதித் துறைக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 

இத் திட்டத்தின் மூலம் வைப்புத் தொகையாக ரூபாய் 42,094 கோடி சேர்ந்துள்ளது. மேலும் இதில் சேர்ந்தவர்களில் அறுபது விழுக்காடு பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


எனவே சுதந்திர இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் மிகப் பெரிய நிதித் துறைத் திட்டம் ஜன தன திட்டமாகும். இதன் மூலம் சாமானிய மக்கள் முதல் முறையாக நிதி அமைப்பில் இணைக்கப் பட்டுள்ளனர். இதன் பலன்கள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் இத்திட்டம் ஒரு மிக முக்கியமான பங்கினை வகிக்கும். அதற்காக மோடி அரசுக்கு நமது பாராட்டுக்கள். 

Rebuilding India 18



New Education Policy Is Much Needed

India was the pioneer in education during the ancient times and  she continued to remain as a powerful centre for knowledge at the global level for several centuries. The superior educational system that prevailed during those periods enabled India to make pioneering contributions in diverse fields, besides keeping the nation economically and spiritually the most prosperous. 
   
The interference of the colonial masters during the 1830s led to the native system of education being thrown out and replaced with a totally alien system. As a result, the nation suffered and the sufferings continued with a huge loss. Great men such as Swami Vivekananda, Aurobindo, Tagore and Gandhiji have emphasized the need for a right kind of education, but still we have a very long way to go.  

Hence all those concerned with the future of India are deeply worried about the state of the education system in the country. In spite of several attempts being made over all these years after independence, a lot remains to be done.  So it is imperative that we take new initiatives urgently.

It is in this connection that the steps being taken up by the central Government for a New Education Policy is to be welcomed. For this purpose, the Ministry of Human Resource Development, Government of India has circulated some inputs for the Draft National Education Policy 2016 for wider discussions and suggestions. Earlier the Ministry had organized meetings with stakeholders at different places, besides receiving suggestions directly through different modes of communication.  

The previous education policy was made in 1986 and it was subsequently revised in 1992. The last thirty years has witnessed a lot of changes both at the national and international   levels.

The western economic ideologies are now dead. For the first time after the emergence of the West about three centuries ago, it openly acknowledges that their economic models are no longer universal and hence there are other functioning models in the world. It means a lot for a country like India that has her own native functioning models.

The era of superpowers and economic hegemony are over now. The richer parts of the world are facing multiple crisis, at the economic, social, cultural and the family levels. Their contributions to the global economy are decreasing. At the same time, Asia is fast emerging as the powerful region. 

The performance of the last two years reveal India emerging as the fastest growing economy in the world. The respect for India at the international level is increasing day by day. India commands a much higher recognition at the international gatherings and her words are heard like never before.

At the national level, people are getting more confident of their fundamentals and strengths. India’s progress in different fields is making them realize that they are capable of achieving much more on their own. For the first time they have elected a nationalistic   government, committed to make India a powerful nation, with a clear majority.

Simultaneously there are vast changes in many other fields surrounding our lives. For example, the developments in communication technology is fast changing our day to day activities.  

The main focus of the new education policy, its vision, mission, goals and objectives appear to be well thought of and timely for an emerging nation with a long history like ours. It takes into consideration our failures after independence and the thrust areas that we have to concentrate upon. The draft notes that the goals of the policy are:  raising the credibility of the education system, improving the employability of persons and ensuring equitable access to education for all.

The focus is on inclusive education, a right that was denied to the majority sections from the ordinary and the marginalized backgrounds after the introduction of the Macaulay system by the British.  It has to be set right at the earliest, because education is the fundamental right of every citizen.

The draft policy emphasizes providing education to the sections of population that remain neglected, such as the tribals. During the recent years, there is a large movement of people in search of jobs to different places. A large number of the children of the migrant population, especially from poorer backgrounds, are not able to get into the education system. It is good that the policy takes into account their educational needs.

Importance is given to life-long learning, skill development, employability and development of entrepreneurial abilities. This approach needs to be appreciated, as we have a lot of potential that remains untouched. We are a nation with the largest number of youth population in the world. But they lack the skills required for doing different jobs.

For example, one study on the engineering graduates notes that only 17 per cent of them are employable; which means 83 per cent of our graduates are unemployable, a rather pitiable state.  Hence making our students learn different skills is essential. In this connection, skills have to be imparted from the school level itself based on the interests of the students. A growing economy such as ours needs more skilled people that we lack today.

On the other hand, we have a very large number of highly skilled people from different fields such as artisans and technicians.  But they are not recognized in the outside world, as they lack the official recognition. It is necessary that they have to be certified and recognized based on their skills, so that their contribution would be more. We have to welcome the policy pointing out the issue of certifying the uncertified expertise.

Different studies have pointed out the significance of providing education through one’s own mother tongue. The policy notes that education in mother tongue would be provided up to standard V. Besides, it notes that the three language formula would be followed from standard VI. In this connection, importance should be given to Sanskrit, as it contains a treasure of knowledge which would be a boon to the children. We have to understand that many of the western countries teach Sanskrit in schools and universities.

Emphasis on yoga and significance to local arts and literature are to be welcomed. Soon they have to become part of the curricula in the respective regions. The Initiative for Cultural and Moral Training (IMCT), Chennai has documented more than hundred types of traditional games and sports activities prevalent in Tamil Nadu that develop the mental and physical abilities of children. Unfortunately, they are not in practice in the academic system due to neglect. We have to bring them back as they are time-tested techniques.

In the development of a nation, cultural and value education plays a major role. The unfortunate aspect of the modern education system is the neglect of this vital area in the curriculum. Hence serious have steps have to be taken to provide the best of value education to the children. The history and heritage of our country should be taught from the nationalistic perspectives. The children should be able to develop a pride for the nation from young days.

An important aspect that is missing in the education system today is the lack of synergy between what is taught in class rooms and what is prevalent in the outside world. Most of the subjects, especially in the higher education system relating to fields such as social sciences and management, still teach outdated and irrelevant western ideas. While we have to take steps to teach all the best concepts and practices from all parts of the world, the core of  education has to be India-centric.
 
(Yuva Bharati, Vol.44, No.2, Sept.2016)


சரக்கு மற்றும் சேவை வரி ( ஜி.எஸ்.டி) சீர்திருத்தம் மோடி அரசின் மிகப் பெரிய சாதனை


கடந்த பல வருடங்களாகத் தீர்வு காணவே முடியாத பிரச்னையாக இருந்த ஒரு மிக முக்கியமான பொருளாதாரச்  சீர்திருத்தம்  மோடி அரசின் பக்குவமான அணுகுமுறையால் தற்போது நடைமுறைக்கு வரவுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவைக் கையில் எடுத்துக் கொண்ட பின்னர், அதைத் தடுக்க காங்கிரஸ் கட்சி அத்தனை தந்திரங்களையும்  மேற்கொண்டது. அதற்குச் சில எதிர்க் கட்சிகளும் துணை போயின. ஆனால் மத்திய அரசின் உறுதியான    அணுகுமுறையால் இப்போது அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறி, சட்டமாகும் நிலையில் உள்ளது.

இது சுதந்திரத்துக்கு அப்புறம் மறைமுக வரித் துறையில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய சீர்திருத்தமாகும். நமது தேசம் பல மாநிலங்களையும், வெவ்வேறு வகையான இயற்கை வளங்கள் மற்றும் தொழில்களையும் கொண்டது. எனவே பொருள்கள்  மற்றும் சேவைகள் சம்பந்தமான  பரிமாற்றம் என்பது மாநிலங்களிடையே தினந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் வரி விதிப்புகள்  பற்றிய விசயங்களில் இன்னமும் மாநிலங்களுக்கிடையே நிறைய  வித்தியாசங்கள் நிலவி வருகின்றன.

அதனால் நாடு முழுவதும் வரிகள் சீராக இல்லை. எனவே சில துறைகளில் வரிக்கு மேல் வரி எனப் போட்டு, பொருட்களின் விலைகள் அதிகமாகின்றன. மாநிலங்களில் நிலவும் வெவ்வேறு விதமான வரி வித்தியாசங்கள், வரிகளை  ஏய்ப்பவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.  மேலும் நாடு முழுவதும் சீரான வரிக் கொள்கை  இல்லாததால் தொழில் செய்பவர்களுக்கு   நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன.  

முன்னேறிய நாடுகள் பலவும் சீரான வரிக் கொள்கையைக்  கடைப்பிடித்து வருகின்றன.  எனவே நமது பொருளாதாரம் வளர்ந்து, சந்தைகள் விரிவாகும் இந்தச் சமயத்தில் சரக்கு மற்றும் சேவைகளுக்கான சீர்திருத்தம் அவசியமாகிறது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரித்து, மத்திய மாநில அரசுகள் வரி வசூலிப்பதற்கான அடிப்படை அதிகரிக்கப்படும். வரிக்கு மேல் வரி ஏற்றுவது தடுக்கப்படும். அதனால் வரி ஏய்ப்பது நிறுத்தப்பட்டு, தொழில் செய்வது எளிமையாகும். நாடு முழுவது வரி ஒரே அளவாக அமையும்.

அதனால் மத்திய மாநில அரசுகள் தற்போது விதித்து வரும் வெவ்வேறு வரிகள் இல்லாமல் போகும். மத்திய அரசின் உற்பத்தி வரி, சேவை வரி, சுங்கம் சம்பந்தமான கூடுதல் வரிகள் உள்ளிட்டவை நீக்கப்படும். மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி, நுழைவு வரி, பொழுது போக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி உள்ளிட்ட வரிகள் இனி இருக்காது. அதன் மூலம் தேவையில்லாத சிரமங்கள் நீக்கப்பட்டு, வரிச் சுமைகளும், வரிகள் பற்றிய பிரச்னைகளும் குறையும்.

மேற்படி வரிகள் சம்பந்தமாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைக் களைய ஆணையம் அமைக்கப்படும். அது கூட்டாட்சித் தத்துவ  முறையில் செயல்படும்.  இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதால் ஆரம்ப காலங்களில் சில மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளைச் சரி செய்யத் தேவையான  உதவிகள் செய்து தரப்படும் என மத்திய அரசு  உறுதியளித்துள்ளது.


மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க் கட்சிகள் தெரிவித்த நடைமுறைக்குச் சாத்தியமான பல்வேறு கருத்துக்களும் மசோதாவில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து விளக்கமளித்தனர். அதன் பலனாகத் தான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இறுதியில் ஒரு மனதாக மசோதா நிறைவேறத் தங்களின்  ஆதரவை அளித்துள்ளன. இதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இதன் தாக்கம் எதிர் வரும்  பல காலங்களுக்கு  அடிப்படையான ஒன்றாக  அமையும். 

இரண்டாண்டுகளில் இமாலய முயற்சி- புதிய இந்தியாவுக்கான அடித்தளங்கள்


கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி இந்தியாவின்  பிரதமராக திரு.நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவர் பொறுப்பேற்று இப்போது  இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தச் சமயத்தில் மோடி அரசின் செயல்பாடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.  ஏனெனில் இந்த இரண்டாண்டுகளில் சுதந்திர இந்திய வரலாற்றின் பல அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

 நமது நாடு பல்வேறு  தனிச் சிறப்புகளைப் பெற்றது.  நீண்ட நெடிய வரலாறு, உயர்ந்த பாரம்பரியம், உலகளாவிய சிந்தனைகள், வெவ்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகள் எனப்  பல விதங்களிலும் உலகின் முன்னோடியாக விளங்கி வந்தது. பொருளாதாரத் துறையில் உலகின் செல்வந்த நாடாகப் பல நூறாண்டுகள் தொடர்ந்து இருந்து வந்தது.

நமது நாட்டின் செல்வச் செழிப்பும், குணாதிசயங்களுமே அந்நியர்களை நமது நாட்டின் பக்கம் இழுத்தன. பின்னர்  பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இழந்து, பெரும் சேதங்கள், சீரழிவு, அவமானம் மற்றும் அச்சுறுத்தல்களையெல்லாம்  எதிர் கொண்டு கடைசியாக சுதந்திரத்தைப் பெற்றோம். அதற்காகப் பல்வேறு கால கட்டங்களில்  நாட்டின் பல பகுதிகளிலும் பல  இலட்சக் கணக்கான பேர் எதிரிகளை எதிர்த்துப் போராடியும், வீர மரணம் தழுவியும், வெவ்வேறு வகைகளில் பங்களித்துத் தமது வாழ்வை அர்ப்பணித்தனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது சுயநலமிக்க  கொள்கைகளால் நமது பொருளாதாரம் சீரழிந்து, நாடு வறுமையும் பஞ்சமும் மிகுந்ததாக மாறிப் போனது. விவசாயம், தொழில், கல்வி எனப் பல துறைகளிலும் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. வலுவான நமது கட்டமைப்புகள் எல்லாம் செயலிழந்து போயின. 

எனவே சுதந்திரம் பெற்ற உடனே நமது நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை வகுக்க வேண்டும்; அதன் மூலமே நாடு ஒட்டு மொத்தமான முன்னேற்றத்தைக் காண முடியும் என மகாத்மா காந்தி போன்றவர்கள் விரும்பினர். ஆகையால் சுதந்திரத்துக்கு முன்னரேயே, நாடு சுதந்திரம் அடைந்ததும்  கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார அணுகுமுறைகள் குறித்துப் பலரும்  விவாதம் செய்து சரியான அணுகுமுறைகளை முடிவு செய்ய வேண்டுமென அவர் முயற்சி எடுத்தார். அதற்காக அவர் நேருவுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு அதை நிராகரித்து விட்டார்.  

சுதந்திரம் பெற்ற பின்னர்  நாட்டுக்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஜவகர்லால் நேரு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சி அந்நிய சித்தாந்தமான சோசலிச  முறையையே மையமாக வைத்தது.   அதன் மூலம்  பொருளாதாரத்துக்கெனத் தனக்கே உரித்தான வெற்றிகரமான வழிமுறைகளைக்   கொண்டிருந்த நமது நாட்டில், அந்நிய சித்தாந்தம் திணிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பொருளாதாரம் தவறான திசைக்குத் தள்ளப்பட்டது.

தொடர்ந்து வந்த இந்திரா காந்தி அரசு, சோசலிசத்தை  வலுவாகப் பிடித்துக் கொண்டது. ’வறுமையை ஒழிப்போம்’ என்பது வெற்றுக் கோஷமாக்கப்பட்டது. கூடவே மதச் சார்பின்மை என்பது அரசியலாக்கப் பட்டது. பின் வந்த காலகட்டத்தில் நாட்டுப் பொருளாதாரம் மோசமான விளைவுகளை எதிர் கொண்டது. எனவே அப்போதிருந்த காங்கிரஸ் அரசு  மற்றொரு  அந்நிய சித்தாந்தமான உலக மயமாக்கலை அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. ஆக நமது நாட்டைப் பெரும்பான்மை காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தமது பொருளதாரக் கொள்கைகளை வகுக்கும் போது ஒவ்வொரு முறையும் அந்நிய வழி முறைகளையே முன் வைத்து வந்தன. அதனால் நாடு நமது வளங்களையும், மக்களின் திறமைகளையும் பயன்படுத்தி முழுமையான பலன்களைப் பெற முடியவில்லை.   

 பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி, இன்ன பல துறைகளிலும், தேசியத் தன்மைகள் அற்ற அந்நியச் சிந்தனைகளேயே ஆட்சியாளர்கள்   ஆராதித்து வந்தனர். கல்விக் கூடங்கள் சொந்தச் சிந்தனைகள் எதையும் வளர்க்காத  மேற்கத்திய கோட்பாடுகளை மட்டுமே போதிக்கும் பணி மனைகள் ஆகிப் போயின. அயல் நாட்டுக் கொள்கைகளிலும், உள்நாட்டு பாதுகாப்பு விசயங்களிலும் கூட தேசத்தின் நலன் முதன்மைப் படுத்தப்படவில்லை.

2004 ஆம் வருடம் தொடங்கி அடுத்த பத்தாண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபட்டது. இலட்சக் கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் என்பதெல்லாம் நடைமுறைக்கு வந்தது. நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விசயங்களில் கூட காங்கிரஸ் கட்சியின் சுய நலமும், குறுகிய எண்ணங்களுமே மையமாக இருந்தன. அவர்களின் பின்பகுதி ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. பெரு வாரியான  மக்கள் நம்பிக்கை இழந்து நின்றார்கள்.

அந்தச் சமயத்தில் தான் குஜராத் முதல்வராக இருந்த  மோடி தலைமையில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்திய அரசியலில் முப்பது வருடங்களுக்கப்புறம் ஒரு கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப்  பெற்றது அப்போது தான்.
அப்போது தொடங்கி கடந்த இரண்டு வருடங்களாகப் பல புதிய அணுகுமுறைகள் மூலம் வெவ்வேறு  முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதம மந்திரியாகத் தன்னைக் கருதாமல், தான் நாட்டின் பிரதான  சேவகனாகவே  இருக்க விரும்புவதாக அவர் அறிவித்தார். பாராளுமன்றத்துக்கு முதல் முறையாகச்  சென்ற போது அதன் படிக்கட்டில் தனது தலையை வைத்து வணங்கினார்; அதன் மூலம் பாராளுமன்றம் புனிதமானது என உணர்த்தினார்.

1950 களில் நாட்டுக்கான கொள்கைகளை வகுப்பதற்கு அப்போதைய பிரதமர் நேரு திட்டக் குழுவை அமைத்தார். அது ரஷ்யக் கம்யூனிஸ்ட்  தலைவர் ஸ்டாலினின் திட்டமிடுதலுக்கான அமைப்பு முறையை வைத்து ஏற்படுத்தப்பட்டது.  அந்த முறையில் திட்டமிடுதலை மெத்தப் படித்த சில பேர் டெல்லியில் உட்கார்ந்து மேற்கொண்டு வந்தனர். காலப்போக்கில் திட்டக் குழுவானது உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவற்றில் பணியாற்றி, மேற்கத்திய பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிர நடைமுறைப் படுத்தும் நிபுணர்களின் கூடாரமாக மாறிப் போனது.

தனது முதல் சுதந்திர தின விழா உரையில், திட்டக் குழுவுக்கு மாற்றாக  ஒரு அமைப்பு உருவாக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி 2015ஆம் வருடம்  ஜனவரியில் நிதி ஆயோக் என்னும் புதிய அமைப்பு அறிவிக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சம்  வருங்காலங்களில் பாரதிய சிந்தனைகளின் அடிப்படையிலேயே நாட்டுக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்படும் என்பதாகும்.

மேலும் இனி மேல் கொள்கைகள் வகுக்கும்போது பிற நாட்டு அணுகுமுறைகள் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே பின்பற்றப்படாது என்பதும் தெளிவாக்கப்பட்டது. இந்த அறிவிப்பு இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் சுதந்திரத்துக்கு அப்புறம் முதல் முறையாக கொள்கை வகுப்பது என்பது நமது தேசத்தின் நடை முறைகளை மையமாக வைத்து மட்டுமே இருக்கும் என்று ஒரு அரசு தெளிவாக்கியுள்ளது.

திட்டக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசப் பிரதிநிதிகள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தும், கூட்டாட்சித் தத்துவத்தை மையமாக வைத்தும்  செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் திட்டமிடுதல் என்பது கீழிருந்து மேல் நோக்கிச் செல்வதாக இருக்கும் எனவும், தேசத்தின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆட்சிக்குப் பெரும் இடையூறாக இருப்பதே ஊழல் தான். அதனால் மக்களுக்குச் சென்றடைய வேண்டிய பலன்கள் முழுமையாக அவர்களைப் போய்ச் சேருவதில்லை. எனவே நிர்வாகத்தில் ஊழலை அகற்றுவதற்காகப் பிரதமர் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயரதிகாரிகள் மட்டத்தில் திறமையும் நேர்மையும் மிக்கவர்களுக்கே முக்கியமான  பொறுப்புகள்  கொடுக்கப்பட்டு வருகின்றன. ஊழலில் ஈடுபடுவோர், செயல்பாடு இல்லாதவர்கள் ஆகியோர் பணியிலிருந்து  நீக்கப்பட்டும், தண்டனைகளுக்கு உள்ளாகியும் வருகின்றனர்.

கோப்புகள் ஒரே இடத்தில் தேங்காமல் இருக்க வழி முறைகள் வகுக்கப்பட்டு அவற்றைக் கடைப்பிடிப்பது கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மட்டத்தில் ஊழலற்ற நிர்வாகம் உறுதியாக்கப்பட்டுள்ளது.இடைத் தரகர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.    

நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த தொழில் நுட்பம் முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது. அரசு சொத்துக்களை ஏலம் விடும் முறைகள் முற்றிலும் வெளிப்படையாக்கப் பட்டுள்ளன. அதனால் நிலக்கரி, அலைக்கற்றை உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் இதுவரை ஏலம் விடப்பட்டதில் மட்டும், பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் அரசுக்குச் சேர்ந்துள்ளது.

சாதாரண மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அரசின் உதவித் தொகைகள், மானியம் மற்றும் அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும், அவர்களை நேரடியாகச் சேரும் வண்ணம் இப்போது புதிய முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் படி அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தும் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அவர்கள் யாருடைய தயவுமின்றி அதை முழுமையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.

வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப்பரிமாற்றம் செயல்படுத்தப்பட்டதால் இதுவரை 31 கோடி பயனாளிகளுக்கு 61 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட முறை மூலம் போலி நபர்களும்  களையப் பட்டுள்ளனர். உதாரணமாக ஒரே நபர் போலியான பெயர்களில்  பல சமையல் எரிவாயு கனெக்சன்களை வைத்துக் கொண்டு அதன் மூலம் மானியங்களையும் பெற்று வந்தனர். அவை இப்போது நிறுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரம் அடைந்து அறுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்னரும், ஏழை மக்களை வங்கிகள் சென்றடையவே இல்லை. அந்தக் குறையைக் களைய பணம் எதுவும் செலுத்தாமலேயே வங்கிக் கணக்குத் துவங்கும் ஜன தன திட்டத்தை மோடி துவக்கினார். அதன் மூலம் இதுவரை சுமார் 22 கோடி புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.  அவற்றின் மூலமே அரசின் பணப் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் சாதாரண மக்கள் அவர்களின் கணக்குகளில் போட்ட முதலீடு மட்டுமே நாடு முழுவதும் சேர்ந்து 37 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வரும்  மற்றொரு அம்சம் நாட்டின் அடிப்படைத் துறைகளான விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் குறித்த சரியான பார்வை இல்லாத தன்மையாகும். மிக அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பளித்து, அதிகம் பேரை சொந்தக் காலிலேயே நிற்க வைத்து வருபவை குறு, சிறு தொழில்கள் தான். ஆனால் அவற்றில்  புதியதாக ஈடுபட விரும்புவர்களுக்கும், ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நிதி எளிதாகக் கிடைப்பதில்லை. வங்கிகள் மூலம் அவர்களுக்கு வெறும் நான்கு விழுக்காடு உதவியே கிடைக்கிறது. எனவே அவர்கள் தனியார்களிடம் மிக அதிகமான வட்டியைக் கொடுத்து கடன் வாங்கி சிரமப்படும் நிலையில் உள்ளனர்.

அவர்களின் குறையைப் போக்கும் வகையில் மோடி அரசு முத்ரா வங்கி என்கின்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் சாதாரண மக்கள் தொழில் நடத்த எளிதாகக் கடன் பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் மட்டும் இதுவரை மூன்றரை கோடி தொழில் முனைவோர்களுக்கு ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படிக் கடன் பெற்றவர்களில் அதிகமானவர்கள் பெண்கள்.

விவசாயத் துறையைப் பொருத்த வரையில் முக்கியமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை நடைமுறைக்கு வந்துள்ளன. நமது விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக ஆக்குவோம் என்கின்ற இலக்கினைப் பிரதமர் அறிவித்துள்ளார். அதற்காக புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம், யூரியா உற்பத்தி அதிகரிப்பு, மண் பரிசோதனை முறைகள், சிறு தடுப்பணைகள் அதிகம் கட்டுவது உள்ளிட்ட முயற்சிகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.   
கிராமங்களை முன்னேற்றுவதன் மூலமே நாட்டை முன்னேற்றமடையச் செய்ய முடியும். அந்த வகையில் இந்த வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையில் கிராம முன்னேற்றம் மற்றும் விவசாயத்துக்காக முன்னுரிமை கொடுக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு  வேகமாக  வளர்ச்சியடைய வேண்டுமென்றால் கட்டமைப்பு வசதிகள் அவசியமாகிறது. அதில் முக்கியமாக சாலைகள், தடையில்லா மின்சாரம் ஆகியவை முதன்மையானது. புதிய சாலைகளை உருவாக்கவும், சாலை வசதிகளைப்  பெருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு நாளைக்கு வெறும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே சாலைகள் போடப்பட்டு வந்தன. அது இப்போது இருபது கிலோ மீட்டர்களாக அதிகரித்துள்ளது.

மோடி அரசு எடுத்து வரும் வேகமான நடவடிக்கைகளின் காரணமாக மின்சாரம் பற்றாக்குறை நிலையிலிருந்து உபரி நிலைக்கு மாறி வருகிறது.  மின்சார சேமிப்பை அதிகப்படுத்த நாடு முழுவதும் ஒரு கோடிக்கு மேற்பட்ட  எல்.ஈ.டி பல்புகள் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் இருளில் மூழ்கிக் கிடக்கும் கிராமங்களை அரசு  கணக்கெடுத்த போது, அவை பதினெட்டாயிரத்துக்கு மேல் இருந்தன. ஆயிரம் நாட்களுக்குள் அவை அனைத்தையும் ஒளி பெறச் செய்ய வேண்டும் எனப் பிரதமர் அறிவித்தார். அதன்படி இதுவரை 7781 கிராமங்களுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

நாடு முன்னேற்றம் பெற இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும்; புதிய துறைகளிலும் தொழில்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வசதிகள் இருக்க வேண்டும். அதற்காக மத்திய அரசு வெவ்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்களின் திறன்களை அதிகரிக்க முதன் முறையாக திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தொழில்கள் பெருக அரசு நடவடிக்கைகள் எளிமையாக்கப் பட்டு வருகின்றன. அதனால் முதலீடுகள் வெகுவாக அதிகரித்துள்ளன.   எந்த முன்னேற்றமும் ஏழை மக்களைச் சென்றடையவில்லையானால், அது முழுமையடையாது. அந்த வகையில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்தப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் எரிவாயு  இணைப்புகள் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வீடில்லாத நகர்ப்புற ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளும், கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகளும் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுத்தமான இந்தியா, மேக் இன் இந்தியா ( இந்தியாவில் உற்பத்தி செய்வோம்), டிஜிட்டல் இந்தியா எனப்  பல புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாகப் பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களில்,  கழிவறைகள் கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி, இதுவரை சுமார் 1.92 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

பொதுவாக இந்தியா என்றாலே வெளி நாடுகளில் நாம் ஒரு சாதாரண வளரும் நாடாகத் தான் பார்க்கப்பட்டு வரும் நிலை பரவலாக இருந்து வந்தது.  அந்த நிலையை மாற்றுவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் பிரதமர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்து வருகின்றன. வெளி நாடு வாழ் இந்தியர்கள் பெருமையுடன் தமது தாய் நாட்டைப் பற்றிப் பேசுவது அதிகரித்துள்ளது. இனி உலக அரங்கில் எந்த வித சர்வதேசப் பொருளாதார அரசியல் முடிவுகளையும் நமது நாட்டின் பங்களிப்பு இல்லாமல் செய்ய முடியாது என்னும்  நிலை உருவாகியுள்ளது. அண்மையில் நடந்த சர்வதேச சுற்றுச் சூழல் மாநாட்டில் இந்தியா முக்கியமான பங்கினை ஆற்றியது இங்கு குறிப்பிடத் தக்கது.

அறுபத்தைந்து வருடங்களாக நம்மை ஆட்சி செய்து வந்த அரசுகள், இந்த நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பெருமையாகக் கருதாத ஒரு அவல நிலை நீடித்து வந்தது. பிரதமர் வெற்றி பெற்றதும் தனது தொகுதியான வாரணாசியில் நெற்றியில் சந்தனமும் குங்குமும் பூசி, ஆரத்தி எடுத்து இறைவனை வழி பட்டது இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாத ஒரு அரிய செயலாகும். 

அனைவருக்கும் வளர்ச்சி என்கின்ற மந்திரத்தை முன் வைத்து உறுதியுடன் செயல்பட்டுக்குக் கொண்டிருக்கும் மத்திய அரசு அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியது.  அரசு எடுத்து வரும் வெவ்வேறு முயற்சிகளில், சிலவற்றின் பலன்கள் உடனடியாகத் தெரிகின்றன. இன்னும் பலவற்றின் பலன்கள் எதிர் வரும் காலங்களில் தான் முழுமையாகத் தெரியும். ஏனெனில் இப்போது போடப்படுவது செழிப்பான எதிர்காலத்துக்கான வலுவான அஸ்திவாரங்கள். மோடி அரசின் பணிகள் மென்மேலும் சிறக்க வேண்டும்; அதன் மூலம் வெகு சீக்கிரமே நமது தேசம் உலக அளவில் முதன்மை நிலைக்கு வர வேண்டும்.


( சுதேசி செய்தி, ஜூன் 2016)

முன்னேற்றப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்



இந்தியப் பொருளாதாரம் தனித்தன்மைகளைக் கொண்டது. அதன் வேர்கள் பாரம்பரிய மிக்க நமது மண்ணில் ஆழமாக வேறூன்றிக் கிடக்கின்றன. நமது பொருளாதாரச் சிந்தனைகள் மேற்கத்திய முதலாளித்துவ மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களுக்கு வெகு காலத்துக்கு  முற்பட்டவை. அவை நமது மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை மற்றும் கருத்தோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு சோசலிச சித்தாந்தத்தை மையமாக வைத்து நாட்டுக்குப் பொருத்தமில்லாத கொள்கைகளை வகுத்தது. அதனால் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்களால் நாட்டின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கூடத் தீர்க்க முடியவில்லை. 1980 களின் இறுதியில் சோவியத் ருஷ்யா பத்துக்கும் மேற்பட்ட நாடுகளாகச் சிதறுண்டு போன போது, உலக முழுவதும் கம்யூனிசம் தோற்றுப் போனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
அந்தச் சமயத்தில் நமது நாட்டுக்குப் பொருத்தமான சரியான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக் கொள்ள மீண்டுமொரு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்போது காங்கிரஸ் அரசு உலக மயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம் மீண்டுமொரு மேற்கத்திய சித்தாந்தத்தை நடைமுறைத் திட்டமாக அரசு அங்கீகரித்தது.
அதனால் இந்தியப் பொருளாதாரத்தில் சில கடுமையான விளைவுகள் ஏற்பட்டன. நமது நாட்டுக்கு அடிப்படையான விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாயின. வேலை வாய்ப்பு உருவாக்கம் குறைந்து, அந்நிய நிறுவனங்களின் தாக்கங்கள் அதிகரித்தன. எனவே 1990 களின் பிற்பகுதியில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது.
அந்த சமயத்தில் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கியமான முடிவுகளை எடுத்தது. அதன் விளைவாகக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் மற்றும் இந்தியத் தொழில்களில் வளர்ச்சி ஆகியன ஏற்பட்டன. முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில், வேலை வாய்ப்பு உருவாக்கம் பெருமளவு அதிகரித்தது. சுதந்திரம் பெற்ற பின், ஜனசங்கம் அங்கம் வகித்த ஜனதா கட்சி ஆட்சிக்குப் பின் இரண்டாவது முறையாக, வாஜ்பாய் ஆட்சி மத்திய அரசின் நிதி நிலைமையை பற்றாக்குறையிலிருந்து உபரியாக மாற்றிக் காட்டியது.
அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு உலக அளவில் உயர ஆரம்பித்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக உலக நாடுகள் இந்தியப் பொருளாதாரத்தை அங்கீகரிக்கத் தொடங்கின. இந்திய நாடு எதிர்காலத்தில் பெரிய பொருளாதாரமாக உருவாகும் தன்மையைக் கொண்டது என மேற்கத்திய நாடுகளும், பன்னாட்டு அமைப்புகளும் ஒப்புக் கொள்ளத் துவங்கின.
அப்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டனி 2004 வது வருடம் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. எல்லாத் துறைகளிலும் ஊழல்கள் பெருகி, சர்வதேச அளவில் நமது நாடு ஊழல் மிகுந்த தேசம் என்னும் அவப் பெயரைப் பெற்றது.
அடிப்படையான தொழில்களின் வளர்ச்சி பின்னடைவைக் கண்டது. கடைசி ஐந்து வருடங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. நாட்டின் பொதுச் சொத்துகளைக் கூட்டணிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கூறு போட்டுக் கொண்டது. விலைவாசி அதிகரித்து மக்கள் வாழ்க்கை நடத்தவே பெரும் சிரமப்பட்டனர். பத்து வருடங்களுக்கு முன்னர் பெரும் நம்பிக்கையுடன் விளங்கிய இந்தியப் பொருளாதாரம், காங்கிரஸ் ஆட்சியில் பெரும் சீரழிவைச் சந்தித்தது.
2014 ஆம் வருடம் நடந்த தேர்தலில் திரு. நரேந்திர மோடி அவர்கள் முந்தைய முப்பது வருடங்களில் இல்லாத அளவு பெரும்பான்மை இடங்களைப் பெற்று பாரதீய ஜனதா கட்சித் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியை அமைத்தார். அந்த வருடம் சுதந்திர இந்தியாவுக்கு மட்டுமன்றி, இந்தியப் பொருளாதாரத்துக்கும் ஒரு திருப்பு முனையா அமைந்துள்ளதை கடந்த இருபத்தி மூன்று மாத கால மோடியின் ஆட்சி வெளிப்படுத்துகின்றது.
மத்திய திட்டக்குழு என்பது 1950 களில் நேரு பிரதமராக இருந்த போது அப்போதைய சோவியத் நாட்டின் தலைவர் ஸ்டாலினின் அணுகுமுறைகளை ஒட்டி இங்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அது டெல்லியிலிருந்து கீழாக அதிகார வர்க்கத்தின் மூலம் திட்டமிடலை மையமாகக் கொண்டது. காலப் போக்கில் உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் பணி புரிந்து சந்தைப் பொருளாதார ஆதரவு நிலைப்பாடு கொண்ட நிபுணர்கள் வழி நடத்தும் அமைப்பாக மாறி விட்டிருந்தது.
பிரதமரான பின் தனது முதல் சுதந்திர தின உரையில் திட்டக்குழு மாற்றியமைக்கப்படும் என மோடி அறிவித்தார். அதன் படிநிதி ஆயோக்அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் முக்கிய நோக்கமே மேல் நாட்டு பொருளாதாரச் சிந்தனைகளை அப்படியே கடைப்பிடிக்காமல், பாரதீய சிந்தனைகளின் அடிப்படையில் தேசத்தை மையமாக வைத்துக் கொள்கைகளை வகுப்பதுதான். அந்த முறையில் நமது தேசத்தின் சூழ்நிலை மற்றும் அடித்தனங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி கொள்கைகள் வகுக்கப்படும் எனப் பிரதமர்  அறிவித்தார்.
நிதி ஆயோக் குழுவில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் முக்கியமான  இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கூட்டுறவு முறையில் மாநிலங்கள் ஒன்றாக இணைந்து தேசத்தின் வளர்ச்சிக்காகத் திட்டமிடும் சூழல் உருவாகி உள்ளது. எனவே கீழிலிருந்து மேலாகச் செல்லும் திட்டமிடும் முறை உருவாகி உள்ளது. அதன் மூலம் சுதந்திரம் பெற்று முதன் முறையாக அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னர், நமது தேசத்தை மையமாக வைத்துக் கொள்கைகளை வகுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நமது தேசத்தின் பொருளாதாரத்துக்கான ஆதாரமே விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் ஆகும். அவை தான் பெரும்பான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் அளித்து வருகின்றன. எனவே அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்க பல புதிய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும். ஏனெனில் விவசாயிகள் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சூழ்நிலைகளால் நிறைய சமயங்களில் அதிக இழப்புகளை சந்திக்கின்றனர். இந்த வருடம் ஏப்ரல் 14 அன்று அறிவிக்கப்பட்டுள்ள சந்தைகளை இணைக்கும் திட்டத்தின் மூலம், எதிர்காலத்தில் நாடு முழுவதும் ஒரே சந்தை உருவாகி, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் இலாபகரமாக விற்கக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. யூரியா உற்பத்தி அதிகரிப்பு, எத்தனாலுக்கான அறிவிப்பு, விவசாயிகளின் கணக்கில் நேரடியாக அரசு பணம் செலுத்தும் முறை ஆகியன விவசாயிகளின் பிரச்னைகளைக் களைய அரசு எடுத்து வரும் முயற்சிகளைக் காட்டுகின்றன.
நமது நாட்டில் உள்ள குறு, சிறு தொழில்கள் 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகின்றன. ஆனால் அவற்றுக்குக் கிடைக்கும் வங்கி உதவி வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே. அவை பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினங்களைச் சேர்ந்த சாதாரண மக்களால் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே அவை போதிய நிதியுதவி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன.
அவற்றுக்கு நிதியுதவி கொடுத்து சாதாரண மக்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக உருவாக்கவும், வேலை வாய்ப்புகளை வேகமாகப் பெருக்கவும் முத்ரா வங்கி என்னும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கடந்த ஒரு வருடத்திலேயே இதுவரை பல்லாயிரக்கணக்கான பேர் உதவி பெற்றுள்ளனர். முத்ரா வங்கி இந்தியத் தொழில் துறை வரலாற்றில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்  என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் கட்டமைப்புகள் தரமாக இருக்க வேண்டும். அதன் மூலமே தொழில்கள் பெருகி வேலை வாய்ப்புகள் அதிரிக்கும். எனவே அதற்காக கட்டமைப்புத் துறைகளில் அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் இதுவரை மின்சாரத்தையே பார்த்திராத கிராமங்களே சுமார் பதினேழாயிரத்துக்கு மேல் உள்ளன. அவையெல்லாம் கண்டறியப்பட்டு, மார்ச் 2018 க்குள் அத்தனை கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கும் நடவடிக்கை வெகு வேகமாக நடந்து வருகிறது. திட்டமிட்டதற்கு முன்பாகவே இதுவரை மூன்றில் ஒரு பங்கு கிராமங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன.
சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நாளைக்கு சராசரியாக தினமும் இரண்டு கிலோ மீட்டர் அளவு தான் சாலைகள் போடப்பட்டன. ஆனால் மோடி அரசில் அது பத்து மடங்கு அதிகரித்து, இப்போது தினமும் இருபது கிலோ மீட்டர் அளவு சாலைகள் போடப்பட்டு வருகின்றன. அதை முப்பது கிலோ மீட்டராக உயர்த்த அரசு செயல் பட்டு வருகிறது.
ஜனசங்கத்தின் சித்தாந்தை உருவாக்கிய சிந்தனையாளர் மரியாதைக்குரிய தீன தயாள் உபாத்யாய ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே கட்சியின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.  அதன் அட்டிப்படையில் சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கியில் பணமில்லாமல் கணக்கு துவங்கும் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தில் இதுவரை இருபது கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் கணக்கு துவங்கியுள்ளனர். அதன் மூலம் அவர்கள் வைப்பு நிதியாக வங்கிகளில் முப்பதாயிரம் கோடிக்கு மேல் செலுத்தியுள்ளனர்.  சாதாரண மக்களெல்லாம் கணக்குத் துவங்கியதால், இப்போது அவர்களுக்கு அரசு கொடுக்கும் உதவித் தொகைகள், மானியம் போன்றவையெல்லாம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்து விடுகின்றன. அதனால் அவர்களுக்குச் சேர வேண்டிய முழுமையான தொகை போய்ச் சேர்கிறது; மேலும் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் வேகம் ஆகியவை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் சேவகர்களாகச் செயல்படுகின்றனர். எந்த வித ஊழலுக்கும் இடம் கொடுக்காத நல்லாட்சி நடை பெற்று வருகிறது.
கடந்த வருடமே சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளரக் கூடிய நாடாக இந்தியா உருவாகி விட்டது.  பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் கால வரையறைக்குள் இலக்கினை அடையும் நோக்கில் செயல்படுத்துப்பட்டு வருகின்றன. எனவே இந்திய தேசம் ஒரு நிரந்தரமான வளர்ச்சியை நோக்கிய பயணத்தை வெற்றி கரமாகத் துவக்கிச் சென்று கொண்டுள்ளது. அதன் மூலம் நமது பொருளாதாரம் உலக அளவில் ஒரு சிறப்பான நிலையினைக் கூடிய விரைவிலேயே அடையும். 

( ஒரே நாடு - சிறப்பிதழ், சென்னை, மே 2016)