சுதேசிக் கல்வியே சுயகல்வி-தினமலர் உரத்த சிந்தனை

l

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் (அனுமதி மற்றும் நடைமுறை ஒழுங்குபடுத்தும்) சட்ட வரைவை லோக்சபாவில் அறிமுகப்படுத்துவதற்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வரைவு அனேகமாக இந்த ஆண்டிலேயே, சட்டமாக இயற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களுக்கு, இந்தியாவில் நிறுவனங்களை அமைக்கவும், பட்டங்களை அளிக்கவும் இந்த வரைவு அனுமதிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாகவே, பல முனைகளிலிருந்து வந்த எதிர்ப்புகளால், இது கிடப்பில் போடப்பட்டிருந்தது.பின், அரசு செயலர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில பிரிவுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இப்போது கூட, முக்கிய எதிர்கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும், இந்த வரைவை சட்டமாக்கக் கூடாது என, எதிர்ப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆளுங்கட்சியிலேயே கூட, இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டால், நமது மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கென நிறைய பல்கலைக்கழகங்கள் இருக்கும் எனவும், அதனால் இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு, போட்டி அதிகரிக்கும் எனவும், அதன் மூலம் கல்வியின் தரம் உயரும் எனவும், கல்வி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் பல்கலைக்கழகங்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வளர்ந்த நாடுகளைப் போல, நம் நாட்டிலும் அதிகம் பேர் படிக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது.

கல்வித்துறை என்பது, நாட்டிலுள்ள மற்ற பல துறைகளைப் போன்றதல்ல. அது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் நிர்ணயித்து, நாட்டின் முன்னேற்றத்தில் முதன்மையான பங்கு வகிக்கும் அடிப்படையான துறை. ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தங்களது குழந்தைகள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்க, துணைபுரியும் கல்வியை கொடுத்து அவர்களின் வாழ்வையும், வளத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே, அரசும், அதைச்சார்ந்த சமூகமும், கல்வி குறித்த கொள்கைகளில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என்றவுடனே, நமது மனதில் தோன்றும் முக்கியமான நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகள் உள்ளிட்டவைதான். அந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரங்களின் தன்மை, அங்குள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி பார்த்தாலே, அவர்களின் உயர்கல்வி பற்றிய நிலைமையை நம்மால் அறிய முடியும்.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உயர்கல்விக்கு பிரபலமான நாடுகளில், தனிநபர் சுதந்திரம் மேலோங்கி குடும்பங்களும், சமூகங்களும் வெகுவாக சிதைந்துவருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நாற்பது சதவீதம் குழந்தைகள், திருமணமாகாத உறவுகளின் மூலம் பிறந்துள்ளன.

உலகின் பல பெரிய தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ள அந்த நாடுகளில், அதிக கல்வி கற்றவர்கள் உயர் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் தவறான வழிமுறைகள் மூலம் தங்களது சுயலாபத்துக்காக அரசையும், மக்களையும் ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. அதனால், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கல்வி மற்றும் போதனை முறைகள் கூட முழுமையானதாக இல்லையென, அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். 'அண்மைக்காலமாக உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, கடந்த நாற்பது வருடங்களாகத் தாங்கள் போதித்து வந்த தவறான கோட்பாடுகளே காரணம்' என, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற, நிபுணர்கள் தற் போது வெளிப்படையாக ஒத்துக் கொள்கின்றனர்.மேற்கு நாடுகளின் வரலாற்றை பார்த்தோமானால், அவர் களது சமூக மற்றும் பொரு ளாதாரம் குறித்த பல கோட்பாடுகளும், அவர்களது நாடுகளிலேயே தொடர்ந்து தோற்றுப்போய் வருவது தெரியவரும்.

தற்போதைய நெருக்கடியால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம், அவர்கள் இப்போது வழி தெரியாமல் திகைத்துக் கொண்டுள்ளனர்.அதே சமயம் இந்தியா, பலவிதமான சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு இடையிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதனால், உலகிலேயே அதிகமான வேகத்துடன் வளரக்கூடிய இரண்டாவது நாடாக உருவாகியுள்ளது. பலவிதமான குறைபாடுகள் இருந்தபோதும், இந்தியாவின் பொருளாதார, குடும்பம் மற்றும் சமூக முறைகளை உலகின் பிற நாடுகள் முன்மாதிரியாக பார்க்கின்றன.அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்கள், உலகின் எந்த நாட்டோடும் போட்டிபோட்டு வெற்றி பெருமளவு திறமையுள்ளவர்களை உருவாக்கி வருகின்றன.

தேவையான வசதிகளை அரசால் ஏற்படுத்திக் கொள்ள இயலாதெனில், அதை நம் நாட்டிலுள்ள தனியார் துறையிடமே கொடுத்து அவற்றை சரியான முறையில் கண்காணிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை பொருத்தவரையில், அவர்கள் இங்கு லாப நோக்கோடுதான் வருவர். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின், அமெரிக்காவில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான நிதி உதவிகளை பல மாநிலங்கள் வெகுவாகக் குறைத்து வருகின்றன.சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் அவர்களது சில கல்வி நிறுவனங்கள் தங்களைத் தொழிலில் தக்கவைத்துக் கொள்ள, வேறு நாடுகளை நோக்க ஆரம்பித்துள்ளன.அதிலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட, வேகமாக வளரும் நாட்டில் வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த சமயத்தில் அவர்கள் இங்கு வர முயற்சிப்பது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே .கல்வித் துறையில் நமது நாடு ஆரம்ப காலத்தொட்டு உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு நடத்திய கணக்கெடுப்புகள் உலகிலேயே அதிக அளவு கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது எனத் தெரிவிக்கிறது. அதற்குப் பின்னர்தான் கல்வித்துறையின் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கல்வியானது கற்கும் ஒவ்வொருவரின் வாழ்வையும், நாட்டின் வளத்தையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.

தற்போதைய பாடத்திட்டங்களை பெரும்பாலும், மேல்நாட்டு வாழ்க்கை முறை மற்றும் கோட்பாடுகளை சார்ந்தவையாகவே உள்ளன. இதைக் களைய பாடத் திட்டங்களிலும், செயல்பாடு முறைகளிலும், உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தேவையான முதலீடுகளை செய்வதற்கு நம் நாட்டில் தனியார் துறை தயாராக உள்ளது. எனவே, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள உரிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். தனிமனித வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைகளிலும் பெருமளவு தோல்வியை தழுவி வரும் மேல் நாட்டினரிடமிருந்து எந்த விதமான உயர்கல்வியை நாம் எதிர்பார்க்க முடியும்? மற்ற பிற நாடுகளை விடவும் வலுவான ஆதாரங்களைப் பெற்றுள்ள நம்மால் ஏன் தேவையான மாற்றங்களை செய்ய முடியாது?

- பேராசிரியர் ப.கனகசபாபதி - இயக்குனர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம்

வாசகர் கருத்து
அற்புதம் !!!!!!!!!!!!!!!!!
by S Dhasarathan,chennai,India 26-04-2010 20:32:16 IST
அன்னியர்களின் பார்வை நம் நாட்டிற்கு வந்து குவியும் அன்னியச்செலவானியின் மீது பட்டு விட்டது! எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை இந்திய மண்ணில் கால் பதிக்க விடக்கூடாது.பிரபலமான பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.ஏற்கனவே கல்வி என்பது சாமானியர்களுக்கு கனவாக மாறி வரும் இந்த வேளையில் புதிய வரவு நடுத்தர மக்களை நிலை குழையச்செய்து அவர்களை ஆண்டியாக்கி அலைய வைத்து விடும்.தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தியைப் பெருக்கித் தரும் நிறுவனங்களுக்கு அனுமதி தரலாம்.இதன் மூலம் படித்து விட்டு வீட்டுக்கு இரண்டு பொறியாளர்கள் வேலை வாய்ப்புக்காக தவம் கிடக்கும் அவலநிலை மாறிவிடும்
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates 25-04-2010 23:32:06 IST
தனிமனித வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைகளிலும் பெருமளவு தோல்வியை தழுவி வரும் மேல் நாட்டினரிடமிருந்து எந்த விதமான உயர்கல்வியை நாம் எதிர்பார்க்க முடியும்? மற்ற பிற நாடுகளை விடவும் வலுவான ஆதாரங்களைப் பெற்றுள்ள நம்மால் ஏன் தேவையான மாற்றங்களை செய்ய முடியாது?ஒரு பானை சோறுக்கு இது போதும்--மிக நன்று--
by S.R. SEKHAR,coimbatore,India 25-04-2010 19:12:44 IST
நாம் நமது அடையாளங்களையும், புராதன வாழ்வியல் நெறிகளையும் அன்னியருக்கு தேவையான கல்விமுறையால் இழந்துவிட்டு நிற்கிறோம். புதிய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதால் அப்படியுள்ள புராதன அறிவையும், நமது நிலா அமைப்பு சார் வாழ்வியலையும் தொலைத்து விடுவோம் என்ற நிலையை வரவேற்பதுபோல் உள்ளது.
by M Siva,KUWAIT,India 25-04-2010 17:07:38 IST
நம் நாட்டு கல்வியே மேல், அயல் நாட்டு கல்வி வெறும் படிப்பை மட்டுமே அளிக்கும், ஆனால் நம் நாட்டு கல்வியோ படிப்புடன் ஒழுக்கத்தையும், குடும்ப உறுதியையும் அதன் மென்மையும் நிலைநாட்டும்.
by கணேஷ் ,Maldives,Maldives 25-04-2010 16:30:05 IST
This article proves that the foreign institutes are always money minded and that too they only come to India to survive in this recession period. So, you never get good education and this would not give us benefit. Please don''t allow foreign institutions.
by R செந்தில்குமார்,zurich,Switzerland 25-04-2010 15:23:11 IST
Prof.KanagaSababathy is right in his opinion that permitting foriegn universities to have their campuses in India alone could not deliver the desired results promised by the HRD ministry. In fact, we in India do have a lot of fascination for foreign university degrees because of lack of adequate information about such universities and also a lot of myths about UK, US degrees.Education as such is culture specific in particular and nation-specific in general and so should be rooted to a nation''s legacy and future development; it is in a broader sense empowering the citizens with the objective of building the society and the nation.In this sense I wish to state that foriegn universities can only cater to our elite population''s fancy to have a foreign degree without contributing anything towards bettering the intellectual growth of our younger generation and thereby our nation in a holistic manner.Our HRD minister Kapil Sibel is right when he opines that we need more and more universities and colleges prportionate to our population. To fulfill this requirement and also to prevent a large number of students traveling abroad for education, the ministry has decided to permit foriegn iniversities. But all these attempts seem to undermine certain factors relating to the nature of Indian education providers and that of those abroad. In my experience as a university teacher abroad, brushing shoulders with other nationals and teachers mostly trained in UK, US and Australia, I can declare with conviction that Indians are second to none in professional skills, brilliance, education or work culture. What ails the Indian educational sector is lack of infrastructural facilities to carry out focussed research on specialised areas due to lack of funds. As such we end up as jack of all trades and master of none whereas our foriegn counterparts excell in their specialised areas. Hence, instead of permitting foriegn universities our government should encourage the private players along with the government to establish more universities with a very strong apolitical constitutionally constituted regulatory body to enforce stipulations and with emphasis on infrastructral facitities for research. Individualizing our syllabus content and keeping the student-teacher ratio to an efficient level and keeping our objective on empowering our people and therby building India will elevate our universities on a par or even superior to the universities abroad.
by Dr swami D. Francis,Libya,India 25-04-2010 14:13:42 IST
Now it is very clear why they want to close the Deemed Universities. Do you know in one of the government colleges there are two different classes - one for capitation students and another one for government quota students? Instead of allowing foreign universities in our soil - help the present Universities both government and private - give them advice - follow up - do something to improve the quality constructively. Othewise the foreign universities will function here only to widen the gap between an ordinary Indian and mega rich indian - and will make some people''s pockets fat by draining our pockets.
by N R,Sana'a,Yemen 25-04-2010 13:25:30 IST
நல்ல கருத்து மேலும் உண்மை யான கருத்து! எங்கு தான் பிரச்சனை! இந்திய அரசு இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்! we have tremendous private university people, but why dont to create new more IITS, NITs, IISC''c to stat up on US people sudents are willing to do their PHD in IISCs and IITs. By keep in mind that Govt of India Can have very good policy with all the Hingher Education to be with them only and Separate special wing to be incorp[orated in this scenes. Its may provide, JOBS to Some educated one, People, Culture, Educations and upligt ment of people can have in thier own regions.
by n வெங்கட்குமார்,trichy,India 25-04-2010 12:13:38 IST
மிகவும் சிந்திக்ககூடிய கட்டுரை. உயர் கல்விகளில் மட்டும் தான் அரசு நிறுவனம் தரமான கல்வியை கொடுக்கிறது உதாரணம் அண்ணா பல்கலைகழகம் மண்டல பொறியியல் கல்லூரி .பனிரெண்டாம் வகுப்பு வரை பெரும்பாலும் தனியார் பள்ளிகளே தரமான கல்வியை கொடுக்கிறது.குறிப்பாக மாணவர்களின் disclipne ,punctuality போன்ற நற்குணங்கள் தனியார் பள்ளிகளில் மட்டுமே உள்ளது .எப்படி இருந்தாலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்ககூடாது .இந்தியாவின் கலாச்சாரம் ,பண்பாடு ,கல்விதரம் ,பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பார்த்து பொறாமைகொண்டு எந்தெந்த வழிகளில் இந்தியாவின் பெயரை கெடுக்கவேண்டுமோ அந்தந்த வழிகளில் வளர்ந்தநாட்டினர் முயற்சி செய்கிறார்கள் அதற்கு நாம் துணை போக கூடாது .சேதுராமன் நன்னிலம்
by p சேதுராமன் நன்னிலம் ,Dubai,UnitedArabEmirates 25-04-2010 11:29:49 IST
தயவுசெய்து இந்த கட்டுரையின் நகலை மத்திய அரசுக்கு அனுப்பவும். நன்றி.
by சாமிமுத்து சிவகுமார் ,singaporeanthivayal,India 25-04-2010 10:55:48 IST
நம்மால் ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். கையேந்தி நின்றதெல்லாம் போதும். இனியாவது சுயமாக முடியு எடுப்போம்.
by g அழகுநம்பி,qatar,India 25-04-2010 08:44:11 IST
QUALITY EDUCATION CAN BE ONLY GIVEN BY THE GOVT. BEEING A NON PROFITAL ORGANISATION GOVT ALONE GIVE A GOOD EDUCATION TO ITS PEOPLE. THE BEST INSTITUTES OF INDIA LIKE ANNA UNIVERSITY, JIPMER, REC ARE GOOD EXAMPLES OF GOVT INSTITUES. PRIVATE ORGANISATIONS ARE PROFITE MINDED AND THEY NEVER BOTHER ABOUT QUALITY. TO GET 100% RESULTS WE KNOW HOW PRIVATE MATRIC AND HS SCHOOLS ABUSE STUDENTS. HOW CAN WE EXPECT QUALITY FROM PRIVATE MEDICAL COLLEGES WHO BRIBED DESAI AROUND Rs 30 CRORES TO HAVE AUTHORISATION SO STOP FURTHER PRIVATE AND FORGIEN EDUCATIONAL INSTITUATIONS..
by Paris EJILAN,-,France 25-04-2010 04:30:30 IST
சிறந்த கட்டுரை அளித்த தினமலருக்கு மிக்க நன்றி
by k சுப்புராஜ்,Sharjah,India 25-04-2010 01:19:08 IST
.


பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்-வாசிப்பனுபவம்:அறிவன்

இன்றைய உலகில் நாம் எந்த நாடுகளில் வாழ விரும்புகிறோம்?

பெரும்பாலும் மேற்குலக நாடுகள் அல்லது ஆசியாவில் மேற்குலக நாடுகளின் பாவனையில் இருக்கும் நாடுகள்;எடுத்துக்காட்டினால் ஆஸ்திரேலியா அல்லது சிங்கப்பூர்.இவை தவிரமத்திய கிழக்கு நாடுகளின் தேர்வில் துபை அல்லது அமீரக நாடுகள் வர வாய்ப்பிருக்கிறது.

இவற்றை விட்டால் மேற்குலக,ஐரோப்பிய,அமெரிக்க,பிரிட்டிஷ் நாடுகள் தான் நாம் பெரும்பாலும் செல்ல,தங்க,வாழ விரும்பும் நாடுகளாக இருக்கின்றன.இவையே உலகின் முதல் நிலைநாடுகள்.

மற்ற நாடுகள் வளரும் நாடுகள் என்றும் தேர்ட் வோர்ல்ட் என்றும் அழைக்கப்படுகின்றன.சிங்கையின் சீனியர் லீ எழுதிய புத்தகமான சிங்கையின் வளர்ச்சியை விவரிக்கும் இரண்டு புத்தகங்களில் இரண்டாவது புத்தகத்தின் தலைப்பே From Third World to First World என்பதுதான்.

என்ன காரணம்?

மேற்குறிப்பிட்ட நாடுகளில் நிலவும் கட்டமைப்பு வசதிகள் முதல் காரணம்.வீட்டிலிந்து,தண்ணீர்,மின்சாரம்,போக்குவரவு போன்ற எந்த தேவைகளுக்கும் சாமானிய மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக வேண்டிய நிலவரம் இந்த நாடுகளில் இல்லை.காசைக் கொடுத்தால் எல்லாம் சட்டென கிடைக்கும்;அதுவும் பொருளுக்கு அல்லது சேவைக்கு வேண்டிய அளவில்
கொடுத்தால் போதும்;இடைத்தரகாகவோ கையூட்டாகவோ பெரும்பணம் செலவு செய்ய வேண்டியது இல்லை.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அரசால் நிகழ்த்தப்படும்,அல்லது சமூகத்தால் நிகழ்த்தப்படும் அழுத்தங்கள் இல்லை.

இரண்டாவது காரணம் சாதாரண மனிதனின் சம்பாத்தியத்திற்கும் அவனது தினப்பாட்டின் செலவுகளுக்குமான விகிதாசர வேறுபாடு.அதாவது அமெரிக்காவில 5000 டாலர் சம்பாதித்தால் எளிதாக 2500 டாலர் செலவுக்குள் ஒரு மாத செலவுகளை சமாளிக்க முடியும்.சிங்கையிலும் இதே நிலைதான்(சமீப நாட்களான வீட்டு விலை,மட்டும் வாடகை நிலவரம்
தவிர்த்து!).இந்தியாவில் இருந்து பெருமளவில் வரும் தொழில் நுட்ப பணியாளர்கள் இந்த அளவில் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் இதே நிலை இந்தியாவில் பணியாற்றும் ஒருவருக்கான குடும்ப செலவுகள் சம்பாத்தியத்தில் 50 சதவீதத்திற்கள் அடங்குமா என்பது கேள்விக்குறி.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் தன்னுடைய சம்பாத்தியத்தில் எளிதாக 50 அல்லது 40 சதம் சேமிக்க முடியும் என்பது இந்த நாடுகளில் சாத்தியம்;இந்தியாவில் இது சாத்தியம் இல்லை.அதிகப்படியான சமூக வாழ்வின் பத்திரம் மற்றும் ஒழுங்கு ஆகிய காரணங்கள்.

இவை பற்றிய காரணங்களே பெருமளவு வெளிநாட்டுக்கு செல்லும் நுட்பத் தொழிலாளர்கள் அந்தந்த நாடுகளிலேயே தன் வாழ்க்கையைத் தொடர்வதின் காரணம்.


அடுத்த முக்கியமான காரணம் நாணயப்பரிவர்த்தனையின் இந்தியாவில் கிடைக்கும் அதிக சேமிப்புத்திறன்.அதாவது மேற்கண்ட நாடுகளில் சம்பாதித்து இந்தியாவில் சேமித்தால் இந்திய ரூபாயின் மதிப்பில் குறுகிய காலத்தில் சேமிக்க முடிந்த அதிகப் பணம்.

இக்காரணங்களால் இன்றைய இந்தியாவில் வாழ ஒரளவு படித்த,வாழ்வை அனுபவிக்க விரும்பும் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதில்லை;மாறாக வெளிநாட்டு வாழ்வை விரும்புகிறோம்.

ஆனால் சென்ற ஆண்டில் நடந்த பொருளாதார,நிதிப் புயலில் முதலில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் மேற்குறிப்பிட்ட நாடுகளே முதலாவதாக இருந்தன.சொர்க்கம் போன்ற வாழ்வு என்று நினைத்த நாடுகளில் வாழும் நிலையைத் தேரந்தெடுத்த சில இந்தியர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் நிலை வரை சென்ற நிகழ்வுகள் நடந்தன.

முதல்நிலை அதாவது ஃபர்ஸ்ட் வேர்ல்ட் நாடுகள் என்றழைக்கப்பட்ட நாடுகளே நிதிச் சந்தை வீழ்ச்சியில் அதிகம் சிதைவுற்றன !

ஆசியாவின் 'வளரும் நாடுகளான'' இந்தியாவும் சீனமும் இந்த சுழிக்காற்றில் அதிகம் பாதிக்கப்படவில்லை.அங்கெல்லாம் சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் புரட்டிப்போடும் மாற்றங்கள் நிகழவில்லை;கண்ட சிறிய பின்னடவையும் மீறி முன்னேற்றம் காணத் துவங்கிய நாடுகளிலும் இந்த இரண்டு நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.பிரிட்டன்.ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் இன்னும் அடிவயிற்றில் நெருப்புடன் இருக்கின்றன.

இடைப்பட்ட சிங்கை மற்றும் ஆஸ்த்ரேலிய நாடுகளில் நடுவாந்திரமாக இருக்கின்றன,மதில் மேல் பூனை போல.

அதிலும் சிங்கையின் கதை முற்றிலும் மாறுபட்டது.லீ க்வான் யூ என்ற
அதி புத்தி சாலியான ஆட்சியாளரின் தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் ஆலோசனையின் படியே பெரும்பாலும் சிங்கையின் பொருளகாதார,சமூகக் கொள்கைகள் கட்டமைக்கப்படுகின்றன;இவை ஒரு தனிப் பதிவில் விவாதிக்க வேண்டிய விவரங்கள்.

ஆக நிதிச்சந்தையில் அடித்த புயலில் அதிகம் ஆட்டம் கண்ட நாடுகள் முதல் நிலை நாடுகளே,மூன்றாம் நிலை நாடுகள் அல்ல.

என்ன காரணம்?

நமக்கெல்லாம் வரலாற்று நினைவு மிகவும் சமீப காலத்தியது.இந்திய வரலாறை எடுத்துக் கொண்டாலும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடு என்றும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்றும் பெரும்பாலும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகள் மேற்குலக நாடுகளாக இருப்பதுமாக ஒரு பரவலான எண்ணம் இருக்கிறது.

ஆனால் இந்தியா இப்படி மூன்றாம் உலக நாடாகவே இருந்ததா?

பாரதப் பொருளாதாரம்;அன்றும்,இன்றும் என்ற தலைப்பில் கிழக்கு வெளியீட்டில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது.அதன் உள்ளடக்கம் ஒரு தெளிவான பார்வையை முன் வைக்கிறது.இந்த புத்தகம் தரும் செய்தியைப் பற்றி நான் முன்பே அறிந்திருக்கிறேன் எனினும் ஒரு புத்தகவடிவில் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய இப்படி வரு பார்வையே எதிர்கொண்டது இப்போதுதான்.

ஆசிரியருக்கும்,அவரின் ஒரு உரையைக் கேட்டு அதனால் மிகவும் கவரப்பட்டு அதை ஒரு புத்தகவடிவில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பத்ரிக்கும் பாராட்டுக்கள்.

இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய சுமார் 2000 ஆண்டுப் பார்வையை முன்வைக்கிறது புத்தகம்.

17 ம் நூற்றாண்டு வரை உலகப் பொருளாதாரத்தின் சுமார் 65 சதவிகிதப் பங்கை சீனமும் இந்தியாவும் வைத்திருந்திருக்கின்றன.இந்தியாவின் பங்கு சுமார் 30
சதவிகிதம்.இந்தியா.பழங்கால தமிழகத்தின் வரலாறுகளில்,சோழர்கள் ஆட்சியில் பல வரலாற்றுக் குறிப்புகளில் இந்தியா உலக நாடுகள் பலவற்றுடனும் செய்த வணிகம் பற்றியும் இந்தியாவில் குவிந்திருந்த செல்வ நிலை பற்றியும் பல குறிப்புகள் கிடைக்கின்றன;அவற்றை இப்புத்தகம் குறிப்பிட வில்லையெனினும் முகலாய அரசர்களை முதன் முதலில் சந்திக்க வந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதர்கள் அரண்மனையில் எங்கும் புழங்கிய தங்கப் பாத்திரங்களைப் பார்த்து மூச்சடைத்து நின்ற செய்தியும்,இந்தியாவை முழுமையாக காலணியாதிக்கதில் கொண்டு வர வேண்டும் என்று அவர்களுக்கு உதயமான உத்தியும் மறைக்கப்பட்ட வரலாற்றின் பகுதிகள்.

சுமார் 300 ஆண்டுகளாக பிரிட்டிஷ் சுரண்டிய இந்தியாவின் செல்வமே பிரிட்டன் முதல் உலகத்திற்கு முன்னேறிய செய்தியின் சுருக்கம்.இந்தியா என்னும் தங்கச் சுரங்கம் கையில் அகப்படும் வரை அமெரிக்காவுடன் ஆண்டு வரிக்காக போரிட்டுக்கொண்டு ரௌடித்தனம் செய்து கொண்டிருந்த நாடு பிரிட்டன்.இந்தியா பிரிட்டனின் நேரடி ஆதிக்கத்தில்,அதாவது விக்டோரியா மகாராணியின் ஆதிக்கத்திற்கு கிழக்கிந்தியக் கம்பெனியிலிருந்து மாறிய போது இங்கிலாந்து அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அளித்த பெரும்தொகையும் திரும்பவும் இங்கிலாந்து அரசால் இந்தியாவிலிருந்தே சுரண்டப்பட்டது,வரி விதிப்பின் மூலம்!இது போக வைசிராய்கள் போனபோதும் வந்த போதும் கப்பல் கப்பலாக இந்தியாவின் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன.ஒரு கப்பலில் எவ்வளவு செல்வம் தங்கம்,வைரம்,கனிமப் பொருள்களாக ஏற்றப்பட முடியும்? 300 ஆண்டுகளில் எவ்வளவு செல்வம் சுரண்டப்படலாம்?

இவ்வளவு சுரண்டலுக்குப் பின்னும் சுமார் 60 ஆண்டுகளுக்குள்,எதிர்காலத்தின் வல்லரசாக மாறக் கூடிய சாத்தியம் இருக்கக் கூடும் நாடாக இந்தியா வலிமை பெற்றதற்குக் காரணம் என்ன?பலர் 90 களுக்குப் பிறகான புதிய பொருளாதாரக் கொள்கை காரணம் என்று எண்ணலாம்,அது ஒரு காரணியாக இருந்தாலும் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் நீண்ட கால நோக்கில் அதிகமாக இருக்க முடியும் என்ற ஒரு பார்வையையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.

அந்தக் காரணம் என்ன என்பதைப் பற்றிய என் சிந்தனையின் அனுமாணங்களையே புத்தகமும் சுட்டியது எனக்கான இனிய ஆச்சரியம்.இங்கு விளக்கி விடலாம் என்றாலும் புத்தகத்தைப் படிக்கும் சுவை மாறாமல் இருக்க வேண்டும் என்பதால்,புத்தகத்தைப் பரந்துரைக்கிறேன்.

எனக்குத் தோன்றிய சில குறைகள்:

1.புத்தகத்தில் கூறியது கூறல் அதிகமாக இருப்பது போல இருக்கிறது.

2.செய்திகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் வடிவம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது;புத்தகத்தை ஒரு மூச்சில் படிக்கும் போது கருத்தாக்கம் அங்கங்கு அலைவது போல ஒரு தோற்றம் தருகிறது.அதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

3.சான்றுகளைக் குறிப்பிடும் போது அடிக்குறிப்புகளை அந்தந்தப் பக்கத்தில் அளித்திருந்தால் நம்பகத் தன்மை இன்னும் அதிகரித்திருக்கலாம்.

ஆனாலும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்!

பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்
ப.கனகசபாபதி
கிழக்கு வெளியீடு.
விலை:ரூ.125

பொருளாதார நெருக்கடிக்குப் பின் சேமிப்பை நாடும் அமெரிக்கர்கள்

பேராசிரியர்.ப.கனகசபாபதி

             2008 ஆம் வருடத்தின் இரண்டாவது பாதியில் அமெரிக்காவில் எரிமலையாய் வெடித்த நிதி நெருக்கடி நமக்கு ஞாபகம் இருக்கும். உலகளவில் பெரிய மூலதன நிறுவனங்களாக விளங்கிய பிரபலமான கம்பெனிகளில் ஆரம்பித்து, ஆயுள் காப்பீட்டு நிறுவனம், வங்கிகள் எனத் தொடர்ந்து பின்னர் உற்பத்தித் துறையையும் பாதித்து, மிகப்பெரிய வாகன நிறுவனங்களான ஜெனரல் மோட்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சுனாமி போலே பாதித்தது
              அந்த நெருக்கடி. அப்போதே  ஐரோப்பாவிலும் பரவி உலகின் பல பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் நிதி நெருக்கடியாக தோன்றிய ஒரு நிகழ்வு குறுகிய காலத்திலேயே உலகின் பொருளாதார நெருக்கடியாக மாறி உலக நாடுகளை, குறிப்பாக மேற்கத்திய பொருளாதாரங்களை, சில மாதங்கள் நிலை குலைய செய்து விட்டது. தொடர்ந்து அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாயினர்.
                         உதாரணமாக அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பத்து சதவீதத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட நிறுவனங்களையும், மக்களையும் சிக்கல்களிலிருந்து காப்பாற்ற அரசுகள் பல லட்சம் டாலர்களை உதவித் தொகைகளாக அளித்து வருகின்றன. ஆயினும் சென்ற 2009 ஆம் வருடம் முழுவதுமே பெரிய அளவில் முன்னேற்றமில்லை. சென்ற வருடம் மட்டும் அமெரிக்காவில் 120 ௦க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. இந்த வருடமும் இதுவரை அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
                   மேற்கு நாடுகள் பலவற்றின் பொருளாதார நிலைக்கு முக்கியமான காரணம் அங்கு நிலவும் சேமிப்பு இல்லாத தன்மையேவாகும். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சேமிப்பு குறைந்தும், பூஜயத்துக்கும் கீழேயும் உள்ளது. பூஜ்யத்துக் கீழே சேமிப்பு என்றால் வரவுக்கு மீறிய செலவு என்று அர்த்தம். அதாவது கடன் வாங்கி செலவு செய்யும் நிலை. அதனால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை. ஆயினும் செலவுகளைக் கட்டுப்படுத்த அதிக முயற்சிகள் இல்லை.
                                 ஏனெனில் அவர்களது நவீன பொருளாதார சித்தாந்தமே செலவு செய்வதை மையமாகக் கொண்டு அமைக்கப் பெற்றது. அதனால் கடன் வாங்கியாவது செலவு செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். செலவு செய்யாமலிருப்பது நல்லதல்ல என போதிக்கப்பட்டது. செலவு செய்யாமல் இருப்பவர்கள் விபரம் தெரியாதவர்கள் எனவே கருதப்பட்டனர்.     
                 அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ஆலன் க்ரீன்ஸ்பேன் என்பவர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து ஓய்வு பெற்றவர். அண்மைக்காலம் வரையில் அவர் அமெரிக்கர்களுக்கு எதிர்காலம் இருப்பதால் சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதே சமயம் இந்தியா, சீனா போன்ற தேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிர் காலம் குறித்த அச்சமிருப்பதால் அவர்களுக்கு சேமிப்பு அவசியமாகிறது என்றும் கருத்து தெரிவித்தார்.
                          அங்கெல்லாம் கிரெடிட் கார்டு கம்பெனிகள் கடன் அட்டைகளை சுலபமாகக் கொடுத்து மக்களை செலவு செய்ய ஊக்குவித்தன. அரசின் கொள்கைகளும், வங்கிகளின் செயல்பாடுகளும் அதற்கு ஏதுவாக அமைந்தன. சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் வங்கிகளில் பெருமளவு குறைக்கப்பட்டு மக்கள் எளிதாகக் கடன் வாங்குமாறு துண்டப்பட்டனர். அதனால் வங்கிகளின் வட்டி விகிதம் ஒரு சதவீதத்துக்குக் கீழும் குறைக்கப்பட்டது. எனவே மக்கள் சேமிப்பது முட்டாள் தனம் எனக்கருதும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
                      ஆனால் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவர்களது எண்ணங்களில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது. தங்களது பொருளாதார வழிமுறைகள்தான் சரியானது; உலக முழுமைக்கும் பொருத்தமானது எனக்கருதி வந்த பெரிய நிபுணர்களில் சிலரே தங்களின் தவறுகளை உணர ஆரம்பித்துள்ளனர்.
           2008 ஆம் ஆண்டுக்கான நோபெல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார பேராசிரியர் கிரக்மேன் என்பவர் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கு நாடுகள் உருவாக்கித் தந்த பொருளாதார கோட்பாடுகள் தவறாகிப் போய்விட்டன என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
                   தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு என்பது அவசியம் என மக்கள் உணர ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. சென்ற ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான 'நியூஸ் வீக்' பொருளாதார நெருக்கடிக்குப்பின் அங்கு ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளது. சில ஆய்வுகளை மேற்கோள் காட்டி அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் மக்களின் சேமிப்பு 4.5 சதவீதம் வரையிலும் அந்நாட்டில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
                          சேமிப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு அந்நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் 15 சதவீதம் வரை மக்கள் சேமிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தக் கட்டுரை அங்கு ஏற்பட்டு வரும் மன மாற்றங்களை எடுத்து வைக்கின்றது.
                          இப்போது மக்கள் மனங்களிலே அங்கு ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அவர்கள் இதுவரை பரவலாக நம்பி வந்த கருத்துக்களுக்கு மாற்றான சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் துவங்கி இருப்பதற்கான அறிகுறியை இந்த மாற்றங்கள் உணர்த்துகின்றன. அவற்றின் முலம் அவர்கள் வாழ்கையை நோக்கும் தன்மையும் மாறி வருவதாகத் தெரிகிறது. உதாரணமாக அங்கெல்லாம் கடைக்குச் செல்லும் மக்களில் வசதி படைத்தவர்கள் வழக்கமாக அதிக விலை பெரும் பொருட்களை தங்களது தகுதிக்குத் தகுந்தவாறு நிறைய வாங்குவது வழக்கமாகும். ஆனால் இப்போது வசதி படைத்த மக்களில் சிலர் கூட விலை அதிகமில்லாத பொருட்களை தேர்ந்தெடுக்கத் துவங்கியுள்ளனர்.
                                   நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யும் வழக்கம் உலக அளவில் அமெரிக்காவில் அதிகமாக உள்ளது. சுமார் 55 சதவீதம் மக்கள் அங்கு நிதிச் சந்தை சார்ந்த முதலீடுகளில் முலதனம் செய்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனல் அங்கு நிதிச் சந்தைகளுக்கு முக்கியத்துவம் அதிகம். வங்கி சேமிப்பு போன்ற குறிப்பிட்ட வருமானம் தரும் பாதுகாப்பான முதலீடுகளை விட பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் மக்கள் அதிக அளவு சேமிப்புகளை போட்டு வருகின்றனர். அவற்றில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்ப்புக்கள் இருந்த போதும், அதிக வருமானம் கருதி அந்த சிரமங்களை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு சொல்லப்பட்டது. அதனால் மக்களும் அவ்வாறே செய்தும் வந்தனர். எனவே நம்மைப் போன்ற நாடுகளை அவர்கள் சுட்டிக் காட்டி, இங்கு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களை அதிகரிக்க வேண்டும் என அறிவுரையும் சொல்லி வந்தனர்.
                   ஆனால் நியூஸ் வீக் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு, தங்கள் சந்தித்தவர்களில் பாதிப்பேர் சந்தைகளில் முதலீடு செய்வதை நிறுத்தி விட்டதாகவும், அதில் பெரும்பான்வையானவர்கள் அடுத்த மூன்றாண்டுகளில் பங்குகளில் பணம் போடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் முலம் அந்நாட்டு மக்களும் தங்களது சேமிப்புகளை சிரமமில்லாத முதலீடுகளில் முலதனம் செய்ய தற்போது விரும்புவது தெரிய வருகிறது.
                                  மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்களின் வாழ்க்கை பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டதாக அமைந்துள்ளது நமக்குத் தெரியும். அதனால் குடும்பம், உறவுகள், சமுகம் உள்ளிட்ட அடிப்படையான பந்தங்கள் எல்லாம் அவர்களுக்கு அப்புறம்தான். ஆனால் நெருக்கடிக்குப் பின்னால் அந்த விஷயங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. பணம் சம்பாதிப்பதை விட குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவு செய்வதை அவர்கள் முக்கியமாக கருதத் துவங்கியுள்ளனர்.
                                         ஆக பொருளாதார நெருக்கடி சேமிப்பு முதல் குடும்ப உறவுகள் வரையான அவர்களது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது தெரிய வருகிறது. அமெரிக்க பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் சேமிப்பை பற்றிய பாடம் அறிமுகப்படுத்தப் போவதாக சில நாட்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டது.
                                      எனவே மேற்கத்திய நாடுகள் இது வரை கொண்டிருந்த முக்கியமான சிந்தனைகளில் எல்லாம் மாற்றங்கள் நிகழ்வதற்கான அறிகுறியை மக்களின் நடவக்கைகள் தெரிவிக்கின்றன. இந்திய மக்களின் வாழ்க்கை முறை, இப்போது அவர்களில் சிலர் கடைப்பிடிக்கத் துவங்கியிருக்கும் சிந்தனைகளைச் சார்ந்த நம்பிக்கைகளைத்தான் காலங்காலமாக இறுகப்பிடித்து வந்துள்ளது. நவீன கோட்பாடுகளை மீறிய அந்த நம்பிக்கைகள்தான் நம்மை இன்று, எவ்வளவோ சிரமங்களுக்கிடையிலும், வாழ வைத்துக் கொண்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக விளங்கவும் உதவி புரிகிறது.
                        அவர்களெல்லாம் பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் இப்போதுதான் அரிச்சுவடி கற்க ஆரம்பித்துள்ளனர். அதே சமயம் நமது நாட்டிலேயே சிலர் ஆடம்பரப் பொருட்களை தேவையில்லாமல் வாங்கி அளவுக்கு மீறி செலவு செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனரே? அவர்களை என்ன சொல்ல?



-----தினமலர் - 21.02.2010















"பாரத பொருளாதாரம் அன்றும் இன்றும்'

"பாரத பொருளாதாரம் அன்றும் இன்றும்'

இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்ல மறந்தே போய்விட்டது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் பேரா. கனகசபாபதி (அப்போது பி.எஸ்.ஜி நிர்வாகவியல் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்தார்; இப்போது கோவையில் உள்ள தமிழக நகரவியல் கல்வியகத்தின் இயக்குனராக இருக்கிறார்) ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் குருமூர்த்தி, பண்டைய பாரதப் பொருளாதாரம் என்பது கேபிடலிசமும் கிடையாது; கம்யூனிசமும் கிடையாது என்ற பொருளில் பேசினார். கனகசபாபதியுடன் பேசும்போது அவர் பண்டைய இந்தியப் பொருளாதார முறைமைகள் பற்றி எழுதிய ஒரு புத்தகம் நிர்வாகவியல் கல்லூரிகளில் பாடப்புத்தகமாக இருக்கிறது என்ற தகவலைச் சொன்னார்.

அகடெமிக் ஆக இல்லாமல் பொதுமக்கள் படிக்கக்கூடிய வகையில் இதனை எளிதாக எழுதித்தர முடியுமா என்று அவரைக் கேட்டிருந்தேன். அடுத்த பல மாதங்கள் கழித்து அவர் ஒரு மேனுஸ்கிரிப்டை தைத்த நோட்டுப்புத்தகங்களில் எழுதி அனுப்பிவைத்தார். அதில் பல மாறுதல்களைச் செய்து அவருக்கு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பிவைத்தேன். மீண்டும் சில மாறுதல்கள். இறுதியாக புத்தக வடிவம் பெற்ற அது மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்தியர்கள் பொதுவாக வரலாற்று ஆவணங்களை எழுதிவைப்பதில்லை. முகலாயர்கள் காலத்துக்குப் பிறகுதான் அழுத்தமான ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இப்போதுதான் ஆங்கிலேயர் காலம் தொடர்பான ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் (The Men Who Ruled India, P. Mason). நன்கு எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், ஆங்கிலேயர்கள் ஏதோ பராபகாரிகள் என்றும், முகலாயர்கள் மற்றும் பிற முட்டாள் ராஜாக்களின் கையில் மாட்டித் தவிக்கும் இந்தியர்களைக் காக்க வந்த புண்ணியவான்கள் என்றுமே சித்திரிக்கப்படுகிறார்கள். அந்தச் சித்திரமும் அவசியம்தான். ஆனால் மறுபக்கம், இந்தியா என்ற ஒரு ‘நிலப்பரப்பு’ (ராஜ்ஜியம், தேசம் என்ற வரம்புகளுக்குள் அடைபடாத ஒரு பகுதி இது) உலகின் முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்தவந்த ஒரு பகுதி, திடீரென எப்படி பிச்சைக்கார நாடாக ஆனது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

அந்தக் கேள்விக்கு ஒருவிதத்தில் பதில் சொல்கிறார் பேரா. கனகசபாபதி. அத்துடன் இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் என்ன என்பதைப் பற்றியும் அலசுகிறார்.

இந்துத்துவம், காலனியம், பின்காலனியம், கம்யூனிசம் போன்ற பல இசங்களின் பின்னணியில் இந்த நூலாசிரியர் சொல்வதை பலரும் ஆழ்ந்து விமர்சிக்கலாம். இதுவரையில் வலுவான விமர்சனங்கள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. கனகசபாபதி தினமலர் பத்திரிகையில் இதே தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியுள்ளார். அதற்கும் அதிகமான எதிர்வினைகள் வந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே புத்தகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதால் இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இது நிர்வாகவியல் மாணவர்களுக்காக மட்டுமல்ல, பொதுவான வாசகர்களுக்குமான புத்தகம். எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தகமும்கூட.

இதனைத் தொடர்ந்து, பேரா. கனகசபாபதி அடுத்து சில நூல்கள் எழுதுவதில் இறங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பாடப்புத்தகங்கள் எழுதுவதைவிட பொதுமக்களைச் சென்றடையும் தமிழ் நூல்களளை எழுதுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்கிறார் இவர். இதேபோல பிற அகடெமிக் பேராசிரியர்களும் வெகுஜன நூல்களை தமிழில் எழுத ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

[பின்குறிப்பு: இன்று ஒரு நாள் (ஞாயிறு) மட்டுமே, சென்னை புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகம் 100 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. அது ஒன்றே போதும், இதன் விற்பனை வேகத்தைச் சொல்ல!] -பத்ரி சேஷாத்ரி

புத்தகத்தை வாங்க
.
Posted by Badri at 23:06
Labels: புத்தகம்
3 comments:
M Ramachandran said...
Happy to note that this book sold more nos
and feel it will take swadeshi thoughts to the readers

Thanks to both Badri and Kanagasabapathy ji

Mon Jan 04, 07:27:00 AM IST
K Sriram said...
I think, it will be much sought after book. We need to take pride in our own heritage rather than try to ape the west and such books shall go a long way to develop pride in our culture and heritage.

Mon Jan 04, 07:37:00 AM IST
Anonymous said...
Kodos to Prof.Dr.Kanagasabapathy for binging out such a wonderful book.
K.Subhash Chandiran, Coimbatore - 35.

Mon Jan 04, 08:56:00 AM IST

நிமிர்ந்து பறக்கும் இந்தியக் கொடி


அமெரிக்காவில் நிதி நெருக்கடி பெரிதாக உருவெடுத்து ஒரு வருட காலம் முடிந்து விட்டது. ஆரம்பத்தில் பிரபலமான முதலீட்டு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பெரிய காப்பீடு மற்றும் வங்கி நிறுவனங்கள் மீள முடியாத சிக்கல்களில் இருப்பதாக அறிவித்தன. நிதி சார்ந்த துறைகளைத் தொடர்ந்து, உற்பத்தி உள்ளிட்ட பிற துறைகளையும் அந்த நெருக்கடி பாதித்தது. வேகமாகப் பரவிய நெருக்கடி ஐரோப்பிய நாடுகளைத் தாக்கி, பின், உலகின் பல பாகங்களுக்கும் சென்றது. அதனால், அமெரிக்க நிதி நெருக்கடி உலகின் பொருளாதார நெருக்கடியாக மாறியது.நிறுவனங்களை அழிவிலிருந்து தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கவும் அமெரிக்க அரசு பெரும் தொகைகளை ஒதுக்கியது. சிக்கலில் இருந்த பெரிய கம்பெனிகளில் அரசே பங்குகளை வாங்கி, அவற்றைத் தத்தெடுத்துக் கொண்டது. பாதிப்புக்குள்ளான நாடுகள் பலவற்றிலும், அவர்களுக்குப் பொருத்தமான வகைகளில் திட்டங்கள் தீட்டப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆயினும், நெருக்கடியின் தாக்கம் மேற்கத்திய நாடுகளை வெகுவாகப் பாதித்துள்ளன. அதனால், வளர்ச்சி விகிதங்கள் மிகவும் குறைந்தும், எதிர்மறையாகவும் உள்ளன. காலாண்டு வளர்ச்சி விகிதங்களை கணக்கிட்டுப் பார்த்தால், நெருக்கடிக்குப் பிந்தைய கடந்த ஒரு வருட காலத்தில், பெரும்பாலான நாடுகளில் குறைந்தது ஒரு காலாண்டிலாவது பூஜ்யத்துக்கும் கீழே வளர்ச்சி சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.



வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு, அந்த நாடுகளை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது. வேலை இழப்புகளும், நிறுவனங்கள் மூடப்படுதலும் இன்னமும் குறைந்தபாடில்லை. அமெரிக்க நாட்டில் வேலையில்லாதோர் சதவீதம் 10ஐ நெருங்கியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரையிலும் 90க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. அதனால், மக்களின் வாழ்க்கை இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது.அதே சமயம், இந்த நாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்த விவரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள், சில உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன. முக்கியமாக பொருளாதார நெருக்கடி அவர்களையும் பாதித்திருந்தாலும், அதனால் அவர்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளவில்லை. சிக்கனமான நடைமுறைகளும், குடும்ப அமைப்பு முறையும், திட்டமிட்ட வாழ்க்கையும் அவர்களை ஆபத்திலிருந்து காத்துள்ளன. அங்கு தொழில் செய்யும் சில இந்தியர்கள் தற்போது, தங்களது தொழில்களை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த பல வருடங்களாகவே அதிக அளவில் பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். நெருக்கடிக்கும் பின்னரும் அது குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது.



கடந்த 2008 - 09ல் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இங்கு அனுப்பப்பட்ட தொகை, 46 பில்லியன் டாலருக்கு மேல் உள்ளது. (இந்திய நாணய மதிப்பில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) இது, அதற்கு முந்தைய ஆண்டில் அனுப்பப்பட்ட தொகையை விட, 15 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம். அதனால், வெளிநாட்டு வாழ் மக்கள் தமது தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில் இந்தியர்கள் அனுப்புவது தான் உலகிலேயே அதிகமான தொகை.மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு சிக்கல்களில் உழலும் போது, அங்கு வாழ்வதற்காகச் சென்ற இந்தியர்கள் பெரிய பிரச்னைகளின்றி தொடர்ந்து முன்னேறுவதற்கான காரணம் என்ன? நிதி நெருக்கடிக்குப் பின், கடந்த ஒரு வருட காலத்தில் முக்கியமான நாடுகள் பலவற்றில் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாகவும், பூஜ்யத்துக்கு கீழேயும் சென்று விட்டபோது, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு காலாண்டிலும் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவீதமும் அதற்கு மேலும் இருக்கக் காரணம் என்ன?




இதற்கான விடை தற்கால பொருளாதாரக் கோட்பாடுகளில் இல்லை. மாறாக, அது மக்களின் வாழ்க்கை முறைகளில் தான் உள்ளது. நவீன பொருளாதார கோட்பாடுகள் கடந்த 250 வருட காலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவானவை. அவை அவர்களது குறுகிய கால அனுபவங்களையும், தனிநபர் வாழ்க்கை முறைகளையும், எண்ணங்களையும் ஒட்டி ஏற்படுத்தப்பட்டவை.காலனி ஆதிக்க காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வந்த இயற்கையான வழிமுறைகளை ஐரோப்பியர்கள் அழித்தனர். பின்னர், அவர்களது முறைகளை காலனி நாட்டு மக்கள் மேல் திணித்து, அவையே உயர்ந்தது என்ற எண்ணத்தையும் பரப்பினர். ஐரோப்பிய முறைகளே எல்லாவிதத்திலும் மேலானவை என்றும், அவையே உலக முழுமைக்கும் சரியானதாக இருக்கும் என்றும் கருத்துக்களை உருவாக்கினர். உலகின் பெரும்பகுதி, அப்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அது பெருமளவு சாத்தியமானது.பின்னர், ஐரோப்பிய பொருளாதாரம் சரிந்து அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதாரமாக உருவெடுத்த போது, அமெரிக்க கருத்துக்களே உயர்வானவை என்ற கருத்து ஏற்படுத்தப்பட்டது. அதனால், கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக அமெரிக்க கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.ஆனால், சென்ற வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அந்த எண்ணங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்து விட்டது.




ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சு ஆகியவையே கூட அமெரிக்க முறைகள், தங்களது நாடுகளுக்குப் பொருத்தமாக அமையாது எனச் சொல்கின்றன. அமெரிக்க கோட்பாடுகள், உலகின் பல பகுதிகளிலும் கடந்த சில வருடங்களாகவே பெருமளவு தோல்வியைத் தழுவி வருகின்றன.அதேசமயம் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் செயல்பாடுகளும், வேகமான வளர்ச்சியும் உலகைத் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. இனி, உலகப் பொருளாதாரம் மீண்டெழுவதே கூட இவ்விரு நாடுகளின் தலைமையில் தான் நடக்கும் என, சர்வதேச நிபுணர்கள் கணித்து சொல்கின்றனர்.வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், கடந்த இரண்டாயிர வருட காலத்தில், உலகின் முதல் நிலை பொருளாதாரமாக இந்தியா விளங்கி வந்ததை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பின்னர், ஆங்கிலேயர்களின் சுரண்டல்களாலும், சுயநலக் கொள்கைகளாலுமே இந்தியாவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்படியானால், நாட்டின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலையில் வைத்திருக்கக் கூடிய அணுகுமுறைகள் நம்மிடம் பல நூற்றாண்டு காலமாகவே இருந்து வந்துள்ளது புலனாகிறது.



சுதந்திரம் வாங்கும் போது, இந்தியா ஒரு ஏழை நாடாக, கல்வியறிவு குறைந்த, தொழில் வளமில்லாத நாடாகவே இருந்தது. அதனால், உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை இல்லை. ஆனால், ஒரு 60 வருட காலத்தில் எத்தனையோ சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கிடையிலும், உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாக உருவாகி உள்ளது.மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளைக் கூட எதிர்கொண்டு, முன்னேறும் அளவுக்கு வலுவான தன்மையை கொண்டுள்ளது. அதனால் பொருளாதாரம், வளர்ச்சி என்பது பற்றியெல்லாம் தங்களுக்குத் தான் முழுவதும் தெரியும் என்று இதுவரை மார்தட்டிக் கொண்டிருந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், இந்தியாவின் பொருளாதார நிலைமை நன்றாக உள்ளது என இப்போது சான்றிதழ்களை கொடுக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்?அது, நமது மக்களின் வாழ்க்கை முறைகளில் பின்னிப் பிணைந்து அவர்களை வழி நடத்துகிறது. ஆம்... அது தான் இந்திய கலாசாரம். கடின உழைப்பு, எளிய வாழக்கை, அதிக சேமிப்பு, குடும்பமும், சமூகமும் சார்ந்த வாழ்வியல் முறைகள், பாசம், அர்ப்பணிப்பு, தொழில் முனையும் தன்மை இவையெல்லாம் அதன் வெளிப்பாடுகள்.



அன்னிய சக்திகள் நம்மை சிதைத்த போதும், அரசுகளும், கொள்கைகளும் மாறி மாறிப் போகும் போதும், இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்து அதை வழிநடத்தி செல்வது நமது நாட்டின் அடிப்படையான கலாசாரமே.சமூக நல விரும்பிகள், அறிஞர் கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தி யாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தமது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. ஞாயிறு தோறும் வெளிவரும்.

- ப.கனகசபாபதி -கட்டுரையாளர், மேலாண்மை பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

DINAMALAR 13.12.2009

வாசகர் கருத்து

இந்திய தேசத்தைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும் கட்டுரையாசிரியர் புதிய கண்ணோட்டத்தையும், நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளார். இது போன்ற கட்டுரைகளை தினமலர் தொடர்ந்து வெளியிட வேண்டும்.
by V.S. Bharathanban,kovai,India 12/14/2009 6:42:46 PM IST

வணக்கம் மேலும் நன்றி ஐயா இந்த கருதுத்களுக்கு
by கணேஷ் ,maldives,Maldives 12/13/2009 3:18:34 PM IST

முற்றிலும் உண்மை. ஒன்று அதிகமான மனித ஆற்றல், இரண்டு கூட்டு குடும்பமுறை, மூன்று எதிலும் சிக்கனம் பார்த்து செயல்படும் குணம், நான்கு எல்லாவிதமான வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ளது, அரசு என்ற இயந்திரம் சரியானவர்களின் கையில் இருந்தால் உலகமே மூக்கில் கைவைத்து இந்தியாவை பார்த்து வியக்க வைக்கலாம். சுயநல அரசியல் வாதிகள் உள்ளவரை அது நடக்காது. ஆதங்கத்துடன் அப்துல் ரஹ்மான், சவுதி அரேபியா
by G. அப்துல் ரஹ்மான் ,Alkhobar, Saudi Arabia ,Saudi Arabia 12/13/2009 12:01:08 PM IST

சேமிப்பு சார்ந்த இந்திய பொருளாதாரம்

பேரா. ப.கனகசபாபதி


தினமணி 14.10.2006


உலகின் முதல் நிலை பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உலக வங்கியின் கணக்குப்படி வாங்கும் திறனின் அடிப்படையில் 2005 ம் ஆண்டு இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய வருமானம் 3.7 டிரில்லியன் டாலர்களுக்கு ÷
மல் (ரூபாய் மதிப்பில் 1,74,20,200 கோடி) உள்ளது. 2007 ல் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெருளாதார நாடாக இந்தியா இருக்கும் என கணிக்கப்பட்டள்ளது. இந்தியவைச் சேர்ந்த பல கம்பனிகள் இன்று வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றில் பல வெளி நாடுகளுக்குச் சென்று, அங்கும் தொழில்களை பெருக்கி வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜீன் வரையிலான ஆறு மாதங்கள் மட்டும் இந்தியக் கம்பனிகள் 6 பில்லியன்
டாலர் (ரூபாய் 27,600 கோடி) முதலீடு செய்து எண்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தியும் அல்லது தம்முடன் இணைத்தும் உள்ளன. உலகின் மிக வேகமாக வளரக்கூடிய 12 நாடுகளில் இருந்து உள்நாட்டில் செயல்படும் நூறு கம்பெனிகளை பாஸ்டன் ஆராய்ச்சி மையம் பட்டியலிட்டுள்ளது. அதில் இருபத்தியோரு கம்பெனிகள் இந்தியாவை சேர்ந்தவை.நமது நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் உள்ளன. இம் மையங்கள் ஒவ்வொன்றிலும் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்காண தொழில் நிறுவனங்கள் செயல் படுகின்றன.உதாரணமாக சூரத், ராஜ்கோட், லூதியான,திருப்பூர்,சிவகாசி ஆகியவற்றை சொல்லலாம் இவை ஒவ்வென்றும் பல இலட்சங்களில்
இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தியை ஈட்டுபவை. இம்மாதிரி தொழில் மையங்களில் பல உலக அளவில் முக்கிய துவம்பெற்று, சர்தேச வியாபாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் பெயர் பெற்றுள்ளன. இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? நமது மக்களின் அதிகமான சேமிப்பும் அதையொட்டிய மூலதனமும். சேமிப்பு என்பது நமது நாட்டில் அத்தியாவசியக் கடமையாக தொன்றுதொட்டே போதிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி குன்றி மக்களின் தனிநபர் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 1860 களில் தனிநபர் ஆண்டு சராசரி வருமானம் வெறும் முப்பது ரூபாயாக இருந்ததாக தாதபாய் நௌரோஜி கணக்கிட்டார். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டதால் நிறைய சேமிப்பு செய்ய வாய்ப்புகள் இல்லை. சுதந்திரம் பெற்றவுடனேயே மக்கள் தனக்குக்கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு நிலைகளில் உழைக்கவும் அதன் மூலம் முடிந்தவரை சேமிக்கவும் தலைப்பட்டனர். 1951 மொத்த பொருளாதார உற்பத்தியில் சுமார் 9 விழுக்காடு சேமிக்கப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலையில் இது மிகவும் அதிகமான சேமிப்பாகும். ஏனெனில் அந்தச் சமயத்தில் 45 விழுக்காடு மக்கள் வருமை கோட்டிற்குக் கீழே வாழ்ந்தனர். படிப்பறிவு பெற்றவர்கள் 18 விழுக்காடு மட்டுமே. சராசரி ஆயுள் 32 வருடம். அந்தச் சூழ்நிலையிலும் 9 விழுக்காடு சேமிப்பு. இன்றைக்கு வசதியான நாடுகளாகப் பேசப்படுகிற பல மேற்கத்திய நாடுகளில் இந்த அளவு சேமிப்பு இல்லை. இந்தச்சேமிப்பில் சராசரியாக நான்கில் மூன்று பங்குக்கு மேல் குடும்பங்களும் குடும்பம் சார்ந்த தொழில்களும் கொடுக்கின்றன. கம்பனி மற்றும் அரசுத் துறைகள் மீதியை சேமிக்கின்றன. அதிலும் அரசத் துறையின் பங்கு மிகக் குறைவு. இவ்வகை சேமிப்பு மூலம் பல்வேறு நிலைகளில் தொழில்களை ஏற்படுத்த மூலதனம் உருவாகிறது. அதனால் நிறைய அளவில் தொழில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. மேலும் கம்பனி மற்றும் அரசுத் துறைகளும் வங்கிகள் மூலமாக இவ்வகை சேமிப்பகளைத் தங்கள் மூலதனத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. சுதந்திரம் பெற்றது முதல் சேமிப்பும் மூலதனமும் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளன. சென்ற ஆண்டு மட்டும் அரசு கணக்குப்படி அதிகாரப் பூர்வ சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.1 சதவீதம் ஆகும். இந்த அதிகாரப்பூர்வ சேமிப்பு முழுமையானதல்ல. ஏனெனில் நமது மக்கள் பல்வேறு வழிகளில் சேமிப்புகளில் ஈடுபடகின்றனர். உதாரணமாக உலகில் உற்பத்தியாகும் தங்கத்தில் கிட்டத்தட்ட கால் பங்கு நமது மக்களால் வருடாவருடம் வாங்கப்படுகிறது. ஆனால் இந்த முதலீடு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சேமிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இது மட்டுமின்றி சிட்பண்டுகள் போன்ற முறைகள் மூலமும், உறவுகள் அடிப்படையிலும் சேமிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்க முடியுமானால், நமது சேமிப்பு இன்னும் பல மடங்கு அதிகமாகும். அமைப்பு சாரா துறையின் கீழ் 3 கோடிக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் நாடு முழுவதும் உள்ளதாக மத்திய அரசின் 1998 பொருளாதாரக் கணக்கெடுப்பு கூறுகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் முற்றிலும் சொந்தப்பணத்தில் மூலதனம் போட்டு நடத்தப்படுபவை. 5 சதவீத அமைப்பகள் மட்டுமே அரசு மற்றும் நிதி நிறுவன உதவியைப் பெறுபவை. சிறு தொழில் துறையில் கீழ் 1 கோடியே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 96 சதவீதம் தனிநபர் அமைப்புகளாகவும், கிட்டத்தட்ட 2 சதவீதம் பங்குதாரர் அமைப்புகளாகவும் நடத்தப்படும் தொழில்கள். மொத்தத்தில் சுமார் 98 சதவீத எண்ணிக்கை நிறுவனங்கள் தனிநபர்களும் பங்குதாரர்களும், முழுமையாகப் பொறுப்பேற்று நடத்தப்படும் தொழில்கள் ஆகும். இந்த விவரங்கள் நமக்கு உணர்த்துவது என்னவெனில், இந்தியப் பொருளாதாரம் சொந்த சேமிப்பு மூலமே நடத்தப்படுகிறது என்பதாகும். சிறிய தொழில்கள் மிகப்பெரும்பாலும் சொந்த சேமிப்பிலேயே நடத்தப்படுகின்றன. அவைகளில் நிறைய தொழில்களுக்கு தாங்கள் விரும்பியபோதும் வங்கிகள் மூலம் போதிய நிதி கிடைக்க மிகுந்த சிரமங்கள் உள்ளன. பெரிய கம்பெனிகளை பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் எளிதாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியம். அதனால் தொழில் துறைக்கான கடன்களில் முக்கியப்பங்கு கம்பனிக்கே செல்கின்றன. ஆயினும் உலக நாடுகளில் தனியார் துறைக்கு கிடைக்கின்ற வங்கிக் கடன்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவில் கிடைக்கும் கடன் விகிதம் குறைவாகும். இதன் முலமாக ஒட்டு மொத்தமாக நமது பொருளாதாரம் சுயசார்பு மிக்க பொருளாதரமாக விளங்குவது நமக்குப் புரியும். வெளிநாட்டு மூலதனம் கடந்த 1992 முதல் இந்தியாவுக்குள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வகை மூலதனம் குறித்த கட்டுப்பாடுகள் கடந்த வருடங்களில் பல நிலைகளில் தளர்த்தப்பட்டு, இன்று குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர மற்ற துறைகளில் பெரிய கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்படுகின்றது. சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை, இந்தியாவில் பொருளாதாரம் சொந்த நிதியையே ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இன்று உலகில் சேமிப்பு அதிகமாக இருப்பதே சீனா, இந்தியா உள்ளிட்ட முன்னேறும் நாடுகளிடமும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடமும்தான். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் சேமிப்பு மிகக்குறைந்தும் இல்லாமலும் உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் சேமிப்பு என்பது இல்லை. அவர்கள் எதிர்காலத்தில் வர உள்ள வருமானத்தை கூட கணக்குப்போட்டு, அதை வைத்து கடன் வாங்கி, இப்போதே செலவு செய்து விடுகின்றனர். அதனால் அவர்களின் மூலதனமும் குறைந்து வருகின்றது. இந்திய மக்கள் இயற்கையாகவே சேமிப்ப குணம் உள்ளவர்களாதலால், சேமிப்பை உக்குவிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தை எல்லாத் துறைகளிலும் வரவேற்கவேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டு மூலதனம் இங்கு வரும்போது பெரிய அளவில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.அந்தச் சலுகைகளை உள்நாட்டுத் தொழில் முனைவேருக்கு அளித்தால், நிறைய சமயங்களில் அவர்களே போதிய நிதியை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். உள்நாட்டு மூலதனத்தால் வரக்கூடிய லாபம், மேலும் மேலும் இங்கேயே பயன்படுத்தப்பட்டு பொருளாதாரம் மேலும் வலுவடையும். வெளிநாட்டு மூலதனத்தை வைத்து ஒரு நாடு சீராக வளர்ந்ததாக உலகில் எந்த உதாரணமும் இல்லை.

திவாலான நாட்டில் மனித வளம் அதிகமாம்

ஐநா சபையின் ஒரு தலைப்பட்சமான மனிதவள முன்னேற்ற அறிக்கை!


2009ம் ஆண்டுக்கான மனிதவள முன்னேற்ற அறிக்கையை ஐநா சபை அக்டோபர் 5ம் தேதி வெளியிட்டுள்ளது. 1990ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த அறிக்கையை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் மக்கள் இடம் பெயர்தல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், வாய்ப்புகள் மற்றும் கிராமங்கள் மையக்கருத்தாக விவாதிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மனிதவள அறிக்கை என்றவுடனே நம்நாட்டில் முக்கியமாக பேசப்படுவது இந்தியாவுக்கு அது கொடுத்துள்ள இடத்தைப்பற்றித்தான். முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் கூட இந்தியாவுக்கு கொடுக்கப்படும் இடத்தைப்பற்றி குறிப்பிட்டு அதனால் நாட்டையே ஒட்டு மொத்தமாக தாழ்வாக பேசுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் நாட்டைப்பற்றி ஒரு தவறான எண்ணம் பலரது மனதிலும் ஏற்படுத்தப்படுகிறது. 


ஆனால் அப்படி பேசுபவர்கள் பலருக்கு உண்மையில் அந்த அறிக்கையின் அடிப்படைகள் மற்றும் அளவுகோல்கள் பற்றி சரியாகத் தெரியாது. சர்வதேச அறிக்கை என்றவுடனேயே அதற்கு அதிகப்படியான மரியாதை கொடுத்து அதிலுள்ள விபரங்களை மிகைப்படுத்தி கருத்துகளை சொல்லிவிடுகின்றனர். நாடுகளின் மனிதவளத்தை கணக்கிட அந்த அறிக்கை மூன்று காரணிகளை எடுத்துக்கொள்கிறது. முதலாவது, மனிதர்களின் சராசரி ஆயுள் பற்றிய விபரம். இரண்டாவது, கல்வி பற்றியது. அதற்காக இளைஞர்களின் படிப்பு விகிதம் மற்றும் படிப்பவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மூன்றாவதாக வாழ்க்கைத்தரம் பற்றிய விபரம். அதற்காக நாட்டு மக்களின் சராசரி வருமானம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாட்டின் மொத்த வருமானம் மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு சராசரி வருமானம் கணக்கிடப்படுகிறது.

அந்த அறிக்கையில் மனிதவள முன்னேற்ற குறியீட்டைத்தவிர ஏழ்மைக்கான குறியீடு, பாலின முன்னேற்றக்குறியீடு மற்றும் பாலின ஆளுமை குறியீடு ஆகியவையும் கணக்கிட்டு கொடுக்கப்படுகின்றன. பாலின குறியீடுகளில் பெண்கள் முன்னேற்றம், ஆட்சி மற்றும் அதிகார பொறுப்புகளில் அவர்களின் பங்கு, வருமானம் மற்றும் ஆண், பெண் இடையேயுள்ள வித்தியாசங்கள் போன்ற விபரங்கள் 1995ம் ஆண்டு முதல் கொடுக்கப்படுகின்றன. மனிதவள குறியீட்டின் அடிப்படையில் எடுத்துக்கொண்ட 182 நாடுகளை இந்த ஆண்டின் அறிக்கை நான்கு பிரிவுகளாக பட்டியலிட்டுள்ளது. அதன்படி 38 நாடுகள் மிக அதிக மனிதவளத்தை கொண்டதாகவும், 45 நாடுகள் அதிக வளத்தை கொண்டதாகவும், 75 நாடுகள் சுமாரான வளத்தை உடையதாகவும், 24 நாடுகள் குறைந்த வளத்தையே பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பணக்கார நாடுகள் மிக அதிக மனித வளத்தை பெற்றுள்ளதாகவும், ஆப்பிரிக்க பகுதியை சேர்ந்த நாடுகள் மிகக்குறைந்த வளத்தை உடையதாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகின் மற்ற நாடுகள் இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையில் வருகின்றன. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசியப்பகுதி நாடுகள் சுமாரான மனிதவள முன்னேற்றமுடைய நாடுகளின் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

 இந்த ஆண்டு மனிதவள முன்னேற்றத்தில் உலகிலேயே அதிக வளம் பெற்ற நாடாக நார்வே இடம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும் உள்ளன. இந்தியா 134வது இடத்தில் உள்ளது. 2008ம் ஆண்டு அறிக்கைப்படி ஐஸ்லாந்து முதலிடத்திலும், நார்வே இரண்டாவது இடத்திலும் இருந்தன. மனிதவள அறிக்கைகள் பல்வேறு நாட்டு மக்களின் சராசரி ஆயுள், கல்வித்தகுதி மற்றும் சராசரி வருமானம் ஆகியவற்றை பட்டியலிடுவதால் நாடுகளின் நிலைமை பற்றிய சில முக்கிய விபரங்கள் நமக்கு தெரிகிறது என்பது உண்மை. ஆனால் மனிதவளம் என்பதே மேற்கத்திய மற்றும் பணக்கார நாடுகளில் மட்டுமே அதிகமாக இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுவது ஒரு தலைப்பட்சமானதாகும். ஐரோப்பிய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை தவிர மற்ற பகுதிகளில் மனிதவளம் குறைவாக இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது.மனிதவள குறியீட்டை கணக்கிட எடுத்துக்கொள்ளப்படும் காரணிகள் முழுமையானவை அல்ல. அவற்றை மட்டுமே வைத்து ஒரு நாட்டின் வளத்தை சரியாக கணக்கிட முடியாது.

 மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான குடும்பம், உறவுகள், வாழ்க்கை முறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மனிதனின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையான சேமிப்பு, மூலதனம், தொழில் முனைதல் ஆகியவற்றிற்கும் குறியீட்டில் இடமில்லை. வாழ்வுக்கு ஆதாரமான சுற்றுச்சூழல், அமைதி ஆகியவை அறிக்கைகளில் கருதப்படுவதேயில்லை. எனவேதான் பல நிபுணர்களும், அறிஞர்களும் மனிதவள அறிக்கைகள் குறைபாடுகள் நிறைந்தவை என்றே கருதுகின்றனர்.மனிதவளத்துக்கு ஆதாரமே நிறைவான குடும்பங்கள்தான். பெற்றோர்கள், உறவுகள், சமூகம், அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவை மனித வாழ்க்கையின் அடிப்படையான அம்சங்களாக உள்ளன. குடும்ப அமைப்பு முறையால் சேமிப்பு, முதலீடு ஆகியவை பெருகி கல்வி மற்றும் தொழில்களில் மக்கள் முன்னேறுகின்றனர். அதனால் நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

 மனித வள அறிக்கைகளின் குறைபாடுகளைப் பற்றித் தெரிந்து இந்த ஆண்டு முதல் இரண்டு இடங்களில் வந்துள்ள நாடுகளின் மனிதவளம் சம்பந்தப்பட்ட சில முக்கியமான விவரங்களை மட்டும் பார்ப்போம். அந்த இரு நாடுகளின் குடும்ப அமைப்புகள் வெகுவாக சிதைந்துள்ளன. 2002ம் ஆண்டு கணக்குப்படி நார்வேயில் 40 சதவீத திருமணங்களும், ஆஸ்திரேலியாவில் 44 சதவீத திருமணங்களும் விவாகரத்தில் முடிகின்றன. உலக அளவில் இந்த விகிதாசாரங்கள் அதிகமானதாகும். அண்மைக்கால நிலவரப்படி நார்வேயில் பிறந்த குழந்தைகளில் 55 சதவீதத்துக்கு மேற்பட்டவை திருமணமாகாத உறவுகள் மூலம் பிறந்தவை ஆகும். 12 சதவீத குழந்தைகள் எவ்வித உறவுகளுமில்லாமல் தனியாக வாழ்ந்துவரும் பெண்களுக்கு பிறந்தவை. உறவுகள் அற்றுப்போய் மனிதர்கள் இருப்பதால் அந்நாட்டில் 17 சதவீத மக்கள் தனிநபர் குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் 2001ம் ஆண்டு முதல் அங்கு பிறக்கும் குழந்தைகளில் 30 சதவீதத்துக்கும்மேல் திருமணமாகாத பெண்களுக்கு பிறந்தவை. 15 வயதுக்கு குறைவான குழந்தைகளுடன் வாழும் குடும்பங்களில் 22 சதவீதம் ஓரே ஒரு பெற்றோறை கொண்டவை. அதில் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தனியாக தாயை மட்டுமே கொண்டவை. குழந்தை மற்றும் தகப்பனை மட்டுமே கொண்ட குடும்பங்களும் அங்கு கணிசமாக உள்ளன.

 1986ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையான 15 ஆண்டு காலத்தில் தனி ஒருவரை மட்டுமே பெற்றோராக கொண்ட குடும்பங்கள் 53 சதவீதம் அதிகரித்துள்ளன. அத்தகு குடும்பங்களின் வளர்ச்சி தாய், தந்தை என இருவரையும் கொண்ட குடும்பங்களைவிட 14 மடங்கு அதிகமாக உள்ளது. அங்கெல்லாம் குடும்பங்கள் சிதைவதால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க உறவுகள் இல்லை. எனவே அந்தப் பொறுப்பினை அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் சமூகப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களது அரசுகள் பெரும் தொகைகளைசெலவு செய்கின்றன. நார்வேயில் அந்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 16 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 8.3 சதவீதமும் அவ்வாறு செலவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் அங்கு சேமிப்பு என்பதே ஏறத்தாழ இல்லை. நார்வேயில் 2007ம் ஆண்டில் சேமிப்பு சுத்தமாக இல்லை. மாறாக வருமானத்தை விடவும் அதிகமாக ஒரு சதவீதத்துக்கும் மேல் அந்நாட்டு மக்கள் செலவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ந்து சேமிப்பு என்பதே இல்லை. ஆனால் இந்த இரண்டு நாடுகள்தான் மனிதவள அறிக்கையில் முதல் இரண்டு இடத்தையும் பெற்றுள்ளன. அதற்குக்காரணம் மனிதவளம் குறித்த மேற்கத்திய நாடுகளின் குறுகிய கண்ணோட்டமேயாகும்.

 அவர்களது அளவு கோல்களை மட்டுமே வைத்து வெவ்வேறு விதமான பின்னணிகளை கொண்ட உலக நாடுகள் அனைத்தையும் பட்டியலிடுவதுதான் மனிதவள அறிக்கைகள். அதில் கலாச்சாரம் மிகுந்த உறவுகளை அடிப்படையாக கொண்ட இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த தாய் தந்தையரின் தியாகம், அவர்களது எளிய வாழ்க்கை முறை, அதிக சேமிப்பு, தொழில் முனையும் தன்மை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள எவ்விதமான காரணிகளும் இல்லை. மேலும் அந்த அறிக்கைகள் உலக நாடுகளின் மக்கள் தொகை மற்றும் வரலாற்று பின்னணி என எதையும் எடுத்துக்கொள்ளமல் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக சீனா, இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் மிகச்சிறிய நாடுகளும் ஒரே நிலையில் வைக்கப்படுகின்றன. நார்வேயின் மக்கள் தொகையே 48 லட்சத்துக்கு சற்று அதிகம். அதாவது சென்னையின் மக்கள் தொகையை விட குறைவு. ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை தமிழக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்குதான். மூன்றாவது இடத்திலுள்ள ஐஸ்லாந்தின் மக்கள் தொகை வெறும் 3 லட்சத்து சொச்சம். எனவே அந்த நாடுகளின் சராசரி வருமானம் அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஐஸ்லாந்து நாடே திவாலாகிவிட்டதாக அந்நாட்டு பிரதமர் தொலைக்காட்சிகளில் அறிவித்தார். ஆக இந்த அறிக்கைகளின்படி திவாலான நாட்டின் மனிதவளம் உலகின் முன்னணியில் இருந்து வருகிறது.

அறிக்கை தயாரிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பல நாடுகளின் பெயர்கள் அதிகம் படித்தவர்களுக்கு தெரியாத அளவு சிறியவை. அன்போர்ரா, லைச்டென்ஸ்டீன் என்பனவெல்லாம் நாடுகள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டு அதிவேகமாக வளர்ந்துவரும் நாடு சீனா மனிதவள அறிக்கையில் 92வது இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நாடு செயிண்ட் வின்சென்ட் அன் தி கிரெனடீஸ் என்பது. அது எங்குள்ளது. நீண்ட வரலாறு கொண்ட சீனாவையும், அடையாளம் தெரியாத நாட்டையும் எப்படி ஒரே தட்டில் வைத்து ஒப்பிட முடியும்.இந்தியா உலகின் முதன்மை பொருளாதாரமாக பல நுõற்றாண்டுகள் சிறப்பாக விளங்கி வந்தது. தொன்மையான கலாச்சாரத்தை கொண்டது. ஐரோப்பியர்களால் பலவழிகளிலும் சிதைக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளில் முன்னேறி உலகில் இரண்டாவது வேகமாக வளரும் நாடாக உருவெடுத்து வருகிறது. அதேசமயம் ஆஸ்திரேலியா நாடு அங்குள்ள பழங்குடிகளின் வாழ்க்கையை அழித்து, அவர்களது வாழ்க்கை முறைகளை சிதைத்து அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தியாவையும், ஆஸ்திரேலியாவையும் எப்படி ஒன்றாக பாவிக்க முடியும்.

 ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களின் முந்தைய காலனிகளும், அவற்றை சுரண்டிக் கொழுத்த ஐரோப்பிய நாடுகளும் இணையாகுமா.எனவே மனிதவளக் குறியீடுகள் அந்த அறிக்கையே குறிப்பிடுகின்ற மாதிரி மனிதவள முன்னேற்றத்தை கணக்கிடும் முழுமையான அளவுகோல்கள் அல்ல. அது மேற்கத்தியவர்களின் நோக்கில் சில காரணிகளை மட்டும் வைத்து தயாரிக்கப்பட்டவை. ஆகவே அதைவைத்து நாடுகளின் ஒட்டுமொத்த மனிதவளத்தை கணக்கிடுவது சரியாக இருக்காது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நம் நாட்டு மனிதவளம் குறித்து கருத்துக்களை தெரிவிப்பதும், விமர்சிப்பதும் தேவையில்லாதது.

தினமலர் - பேட்டி , அக்டோபர் 19, 2009

இந்திய வரலாற்றுக்கு புத்துயிர் தந்தவர்



இந்திய வரலாற்றுக்கு புத்துயிர் தந்தவர்


1931ம் வருடம் அக்டோபர் மாதம் லண்டன் நகரம். மகாத்மா காந்தி பேசுகிறார்: "நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம். இந்தியாவின் பழைய கல்வி முறை ஒரு அழகான மரம் போல் இருந்தது. அந்த மரம் இப்போது அழிந்து விட்டது.' ஆங்கிலேயர்களுக்கு இது அதிர்ச்சியான செய்தி. கல்வி அறிவை உலகுக்கு கொடுத்ததாக பறைச்சாற்றிக் கொண்டிருந்த அவர்களுக்கு இது ஒரு சம்மட்டி அடி. அவர்கள் சவால் விட்டனர். "உங்கள் பேச்சு உண்மையென நிரூபியுங்கள். அல்லது மன்னிப்பு கேளுங்கள்.' காந்திஜி தன்னால் இதை நிரூபிக்க முடியுமென சவாலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சுதந்திர இயக்கப்பணிகள் மற்றும் வேலைப்பளு காரணமாக அவரால் அதற்காக நேரம் கொடுக்க இயலவில்லை. எனவே அந்தப்பணி முடியாமலேயே காந்திஜி அமரரானார்.
அதற்கு பின் ஒரு இருபது ஆண்டுகளுக்கு அப்புறம் காந்திஜியின் ஆயுளில் நிறைவேறாத அந்தப்பணியை நிறைவு செய்யப்புறப்படுகிறார் அவரது சீடர். அந்த சீடரின் பெயர் தரம்பால். 1922 ம் வருடம் பிறந்த இவர் முதன்முதலாக தனது எட்டுவயதில் காந்திஜியை லாகூரில் பார்க்கிறார். கல்லூரிக் காலங்களிலேயே காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு தேசப்பணிக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கத் துவங்குகிறார். அதன்பின் கிராம முன்னேற்றம் மற்றும் ஆய்வுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். தரம்பாலின் ஆய்வுகள் காந்திஜியின் கல்வி குறித்த கருத்துக்களை நிரூபிக்கும் வகையில் அமைந்தது மட்டுமன்றி இந்திய தேசத்தின் பொருளாதார மற்றும் சமுதாய ஆதாரங்களை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் அமைந்தன. இவை மூலம் ஆங்கிலேயேர் இங்கு வருவதற்கு முன்னரே கல்வி, விவசாயம், தொழில், அறிவியல் எனப்பல துறைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா வளர்ச்சி பெற்றிருந்தது தெரிய வருகின்றது.
1960 களில் தொடங்கி தமது ஆய்வுகளை மேற்கொண்ட தரம்பால், புள்ளிவிவரங்களை பிரிட்டிஷ் ஆவணங்கள் மூலமே சேகரிக்கின்றார். அதற்காகப் பல ஆண்டுகள் லண்டன் மியூசியம் உள்ளிட்ட இடங்களில் செலவு செய்கின்றார். அதிக வருமானம் ஏதும் இல்லாமல் பிரதி எடுப்பதற்கே கஷ்டப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆவணங்களைப் பார்த்து கையாலேயே எழுதுகின்றார். அதன் மூலம் இந்திய தேசம் சம்மந்தமான பல விசயங்களை தொகுக்கின்றார். பின்னர் இவற்றை பல்வேறு புத்தகங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிடுகின்றார். சொற்பொழிவுகள் ஆற்றுகின்றார். இவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் இந்திய நாட்டின் பாரம்பரியங்களையும், பழைய அமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் தொழில் நுட்பச் சிந்தனைகளையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. இதன் மூலம் வரலாற்று ஆசிரியர்களும், கல்வியாளர்களும், பொருளாதார மற்றும் அறிவியல் கண்டறிய தவறிய பல அடிப்படை உண்மைகள் நமக்கு தெரிய வருகின்றன.
அவரது ஆய்வுகள் குறித்துக் குறிப்பிடும் போது முதலில் கல்வி குறித்த அவரது பணியினை எடுத்துக் கொள்ளலாம். இவை ஆங்கிலேயேர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியாவில் எடுத்த கணக்கெடுப்புகளின் அடிப்படையில் அமைந்தவை. பம்பாய் மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சிகளில் 1820 களிலும், வங்காள பிரசிடென்சியில் 1830 களிலும் இந்த கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடமும், வங்காளத்தில் மாவட்டத்திற்கு பத்து என்ற கணக்கில் பிரசிடென்சி முழுவதும் 1800 உயர் கல்வி நிலையங்களும் இருந்திருக்க வேண்டுமென ஆடம்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தரம்பால் எடுத்துரைக்கின்றார்.
பம்பாய் பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பள்ளிக்கூடமும், பெரிய கிராமங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளும் இருந்ததாக மூத்த ஆங்கிலேயே அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளி இருந்ததாக தாமஸ் மன்ரோ குறிப்பிட்டுள்ளார்.1850 வாக்கில் பஞ்சாபிலும் இதே சூழ்நிலை நிலவியுள்ளது.
இந்த பள்ளிகள் அனைத்தும் கிராம மக்களின் நிதி உதவிகளாலேயே நடத்தப்படுவதாக மேற்கூறிய அறிக்கைகள் கூறியுள்ளன. மேலும் சென்னை பிரசிடென்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்த உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து தரம்பால் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
ராஜமுந்திரி மாவட்டத்தில் 173, தஞ்சை பகுதியில் 109 என உயர்கல்வி நிறுவனங்கள் பல பகுதிகளிலும் செயல்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார். இந்தக் கல்வி நிறுவனங்கள் எந்தவித ஜாதி மத வேறுபாடுமின்றி செயல்பட்டு வந்ததாகவும் அவர் புள்ளி விபரங்களுடன் குறிப்பிடுகிறார். அதேசமயத்தில் இங்கிலாந்து நாட்டில் பள்ளிக் கல்விமுறை பரவலாக மக்களுக்குக் கிடைக்காமல் இருந்ததாகவும், இந்திய முறையை வைத்தே அவர்களின் பள்ளிக் கல்வி முறை பின்னர் அமைக்கப்பட்டதாகவும் தரம்பால் எடுத்துக்காட்டியுள்ளார். இதன் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய நாடு கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்ததாகச் சொல்லுகின்றார். கல்வி குறித்த தமது புத்தகத்திற்கு அவர் கொடுத்த தலைப்பு காந்திஜி லண்டனில் உபயோகப்படுத்திய வார்த்தைகளை வைத்தே அமைந்தது. "அழகிய மரம்; பதினெட்டாம் நூறறாண்டின் இந்திய கல்வி'.
கல்வி மட்டுமன்றி பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்திய அரசியலும் பஞ்சாயத்து ராஜ்ஜியமும், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வு செய்து அவர் புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்து வந்த பாரம்பரிய முறைகள் பற்றி ஆங்கிலேயர் இங்கு கண்டு எழுதிய விசயங்களையும் தரம்பால் தொகுத்துத் தந்துள்ளார். மேலும் இரும்பு தயாரிக்கும் முறைகள் பரவலாக இருந்ததையும், ஐரோப்பியயர்களுக்கு தெரியாத மருத்துவ முறைகள் இங்கு சாதாரணமாக மக்களிடையே பிரபலமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை பிரசிடென்சி பகுதிகளில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாவது நூற்றாண்டிலும் பெரும்பாலான வருடங்களில் நிலவரியானது விவசாய விளைச்சலை விட அதிகமாக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் 1800 முதல் 1850 வரையான ஐம்பது வருடங்களில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு விளைச்சல் நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்வதையே விட்டுவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 1820 களுக்குப் பின்னர் விவசாயமும், கிராமப் பொருளாதாரமும், உற்பத்தித்துறையும் ஆங்கிலேயேர்களின் வரிச்சுமைகளாலும், தவறான கொள்கைகளாலும் சிதைக்கப்பட்டதாக தரம்பால் எடுத்தச் சொல்லியுள்ளார்.
இந்திய நாட்டின் கொள்கைள் மற்றும் திட்டங்கள் நமது பாரம்பரியத்தையும் அனுபவங்களையும் ஒட்டியே அமைய வேண்டும் எனவும், மேற்கத்திய நாடுகளின் முறைகளை அப்படியே பின்பற்றுவது தவறு எனவும் தரம்பால் அறிவுறுத்துகின்றார். மாணவர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்வதன் மூலம், ஆர்வத்தையும், நேரடி தொடர்பையும் உண்டாக்கி, அதன்மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்த முடியும் எனச் சொல்கின்றார்.
இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் பல உண்மைகளை வெளிகொணர்ந்து இந்தியாவுக்கு எனத் தனியான சிந்தனை முறை உண்டு என உணர்த்திய தரம்பால் சென்ற அக்டோபர் மாதம் வார்தா ஆசிரமத்தில் காலமானார்.
அன்னாரது முயற்சி நமது தேச வரலாற்றுக்கு ஒரு புத்துயிர் கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. நூறு கோடி மக்களுக்குப் பெருமை அளிக்கும் பல விசயங்களை தரம்பால் வெளிக்கொணர்ந்து உள்ளார். பள்ளி, கல்லூரிகளில் அவரது ஆய்வுகள் புத்தகங்களாக வைக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும். இந்திய நாடு, தனது வேர்களை முழுமையாக தெரிந்து கொள்ளும் போது தான் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்த முடியும்.

தினமணி 2.12.2006



வெற்றிக்கதைகள் தொடர் - வாசகர் கடிதம்

வெற்றிக்கதைகள் தொடர் தினமலர் நாளிதழில் 26 வாரங்கள் வெளிவந்தது. இதற்கு வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. வாசகர்களிடமிருந்து தொடரைப் பாராட்டி எண்ணற்ற கடிதங்கள் வந்தன. அவற்றில் சில....
இரா.ஆறுமுகம் அருள்குமரன்,
நாகை மாவட்ட செயலாளர் ஐஎன்ஆர்எல்எப்,
மயிலாடுதுறை.
நாள்:5.4.2009
இருட்டு அறைவீட்டு சுவர்களில் மாட்டப்பட்ட ரசம் போன கண்ணாடிகளில் முகம்பார்த்து தலைவாரி பழக்கப்பட்ட நமக்கு, கம்ப்யூட்டர் டிஜிட்டல் கலர் புகைப்படமாக நம் முகத்தை நமக்கே காட்டும் முயற்சியில் பேராசிரியர் கனகசபாபதி ஈடுபட்டு வருகிறார்.நம் முகத்தை பார்க்க நமக்கே பொறாமை வந்துவிடுகிறது. பேராசிரியர் அவர்களின் நூல்கள் கிடைப்பதும், அதைப்படிக்க நேரம் கிடைப்பதும் சாதாரண விஷயமில்லை. ஆனால் மூன்றரை ரூபாயில் தினமலர் வாரந்தோறும் வெளியிடுகிறது. இதற்கு நன்றிகள்.
படிப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் எளிதாக உள்ளது
"புளியம்பட்டி இல்லையில்லை பொள்ளாச்சி போய் திரும்பவும் புளியம்பட்டி' என்ற சூர்யவம்ச சினிமா வசனம் போன்ற ஊதாரித்தனமான அமெரிக்க நிர்வாக முறையை இங்கேயும் சிலர் அறிமுகம் செய்யவும், கடைப்பிடிக்கவும் தொடங்கும் காலக்கட்டத்தில் இக்கட்டுரை மிக அவசியமானது.பாரசீகர்கள் முதல் பிரிட்டீஷ் வரை வரிசை வரிசையாக வந்தவர்களிடம் எல்லாவற்றையும் பறிகொடுத்து சொந்த வீட்டிலேயே அகதியானோம். அடிமையானோம் என்பதை தெளிவாக பேராசிரியர் பட்டியலிட்டுள்ளார்.
கட்ச் காம்பே வளைகுடா பகுதியில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், சோழமண்டல கடற்கரையிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் வணிகம் செய்த வணிக குழுக்கள் நசுக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுவிட்டன. மிச்சம் மீதி இருந்ததை வைத்துக் கொண்டு இந்த அளவிற்கு வர சென்ற தலைமுறைகள் இருந்தது மிக அதிகம்.மூன்றாம் தலைமுறைக்கும் தனத்தையும், தர்மத்தையும் சேர்த்து வைக்கும் நிதித்துறை மேலாண்மையை பேராசிரியர் அவர்கள் விளக்குவதைப் பார்க்கும் போது நம் மீதே நமக்கு பொறாமையை அதிகமாக்கின்றது.
தங்கள் உண்மையுள்ள,
.அருள்குமரன்.