புளியன்குடி: தமிழகத்தின் எலுமிச்சை நகரம்


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி வட்டத்தைச் சேர்ந்தது புளியன்குடி நகரம். பிரசித்தி பெற்ற சிவன், சங்கர நாராயணன் மற்றும் கோமதி தேவியார் கோவில்களைக் கொண்ட சங்கரன் கோவில் நகரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இன்னொரு விதமாகச் சொல்வதானால் இராஜபாளையம் நகரிலிருந்து வடக்கே சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவு.  

2001 ஆம் வருட கணக்குப்படி புளியன் குடி நகராட்சியில் வசிக்கும் மக்களின் அதிகார பூர்வ எண்ணிக்கை 60,124 பேர். தற்போது சுமார் 70,000 அளவு இருக்கும் எனச் சொல்கிறார்கள். நகராட்சி பகுதிக்குள் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பகுதி. பருவ மழைக் காலங்களைத் தவிர பொதுவாக வறட்சியான கால நிலையைக் கொண்டது. எலுமிச்சைச் செடி வளர ஏற்ற மண் மற்றும் சூழ்நிலையை உடைய பகுதி. 

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இடம். அதையொட்டி வியாபாரம், இதர தொழில்கள் மற்றும் கல்வி  ஆகியன பெருகியுள்ளன. விவசாயத்தை முன்னேற்ற வேண்டியதன் அவசியம் கருதி 1970 களிலேயே சில உள்ளூர் முன்னோடிகள் சேர்ந்து சிறு விவசாயிகள் சேவா சங்கம், புளியன் குடி  என்கின்ற அமைப்பை ஆரம்பித்ததாக அதன் செயலாளர் திரு. கோமதி நாயகம் ஐயா அவர்கள் பெருமையுடன் கூறுகிறார்.

எழுபத்தி ஒன்பது வயதாகும் ஐயா அவர்கள் அக்காலத்திய காந்திய நடைமுறைக் கல்வியைக் கற்று பின்னர் புளியன்குடி அரசுப் பள்ளியிலேயே சுமார் முப்பத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரும் ஒரு விவசாயி. மேலும் அந்தப் பகுதியின் கல்வி மற்றும் விவசாயத்துறைகளின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்படுபவர்.

புளியன்குடி விவசாயிகள் சேவா சங்கம் ஆரம்பம் முதலே மாவட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அரசின்  திட்டங்கள் மூலம் அந்தப் பகுதிக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும். மேலும் சேவா சங்கத்தின் உறுப்பினர்களான  திரு. அந்தோணிசாமி மற்றும் அமரர் திரு. வேலு முதலியார் ஆகிய இருவர் விவசாயத் துறையில் தங்களின் முன்னோடியான முயற்சிகளுக்குத் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று விருது பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமான செய்தியாகும்.

திரு.அந்தோணிசாமி அவர்கள் அந்தப் பகுதியின் முன்னோடியான விவசாயி. இயற்கை விவசாயத்தில் உள்ளார்ந்த நாட்டமும் அனுபவமும் உடையவர். எலுமிச்சை, கரும்பு, காய்கறிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். வறட்சிக்கும் நோய்களுக்கும் எலுமிச்சை விவசாயம் ஆட்பட்டு வருவது கண்டு அதற்கு முடிவு காண ஒரு புதிய ரகத்தை உருவாக்கி வெற்றி கண்டவர்.




படம்: நடுவில் உள்ள திரு.அந்தோணிசாமி அவர்களின் புதிய ரக எலுமிச்சை தோட்டத்தில் திரு. கோமதி நாயகம் மற்றும் கனகசபாபதி.

தண்ணீர்ப் பாசனமும் பூச்சி மருந்துகளும் தேவைப்படாத நாட்டு எலுமிச்சையை தாய்ச் செடியாகக் கொண்டு, அதனுடன் நாட்டு எலுமிச்சையை ஒட்டுக் கட்டி, பின்னர் நாட்டுச் செடியை முறையாக வளர வைத்து தனது புதிய ரகத்தை உருவாக்கியுள்ளார்.  மேலும் நாற்று நடுவதற்கு ஆறு மாதத்துக்கு முன் தொடங்கி நிலத்தை முறையாகத் தயார் படுத்தி, சரியான நாற்றுகளை நட்டு வளர்க்கும் போது தொடர்ந்து அதிகமான விளைச்சல் எடுக்க முடியும் எனக் காட்டி வருகிறார்.  

அதற்காக 2005 ஆம் வருடத்தில் குடியரசுத் தலைவரின் கண்டுபிடிப்புக்கான விருதினைப் பெற்றுள்ளார். சொட்டு நீர்ப் பாசனம் மூலமே விவசாயம் செய்கிறார். அவரது விவசாயம் பத்து மாதத்துக்குப் பலன் கொடுப்பதாகச் சொல்கிறார்.  மற்ற முறைகளில் எட்டு மாத விளைச்சலே சாத்தியம் என்கிறார். கொத்துக் கொத்தான காய்கள், தொடர்ச்சியான காய்ப்பு ஆகியனவற்றை இயற்கை முறைகள் மூலம் பெற முடியும் எனக் காட்டி வருகிறார்.

புளியன்குடி மட்டுமின்றி சிவகிரி வட்டம், சங்கரன் கோவில் வட்டம் மற்றும் இராஜபாளையம் பகுதிகளின் எலுமிச்சை உற்பத்தி அனைத்தும் சேர்ந்துதான் புளியன்குடியை எலுமிச்சை நகரமாக உருவாக்கி உள்ளன. ஏனெனில் எலுமிச்சைக்கான முதன்மையான சந்தை அங்குதான் உள்ளது.



1981 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட அந்த சந்தை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமன்றி கேரள மாநிலம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களுக்கும் செல்கிறது. கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. தங்களது சந்தை மூலம் 15000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகிறார்கள் என புளியன்குடி எலுமிச்சை கமிசன் மண்டி தலைவர் திரு.செ.குழந்தைவேலு தெரிவிக்கிறார்.



படம்: கமிசன் மண்டி தலைவர் திரு.குழந்தைவேலு அவர்களுடன்

கமிசன் மண்டி மூலம் நேரடியாக ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 50000 ஆயிரம் பேருக்கு மேலாகவும் வேலை கிடைப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் மண்டியை ஒட்டி லாரித் தொழில்   மற்றும் சாக்கு வியாபாரம்,  பனை ஓலை பின்னுதல் ஆகிய தொழில்கள் நடைபெறுகின்றன. அதனால் பத்து சாக்குக் கடைகளும், பட்டமடை சமூகத்தினரின் பனை ஓலை பின்னும் வேலைகளும் சுறுசுறுப்பாக நடை பெற்று வருகின்றன.

நாட்டின் பிற தொழில் மையங்களைப் போலவே இங்கும் வியாபாரம்  நம்பிக்கை அடிப்படையிலேயே நடைபெறுகிறது. வாரம் ஒருமுறை கணக்குகள் முடித்துக் கொள்ளப்படுகின்றன. எலுமிச்சை விவசாயம் மேலும் வளருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். அதனால் விவசாயிகள் தென்னையிலிருந்து எலுமிச்சைக்கு மாறி வருகின்றனர்.

எலுமிச்சை விவசாயம் மேலும் வளர அரசு முழு மானியம் கொடுக்க வேண்டுமென அவர்கள் வேண்டுகின்றனர். தற்போது அது குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் இல்லை. மேலும் இயற்கை வேளாண்மைக் கருத்தரங்குகளை அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும். அதன் மூலம் இயற்கை விவசாயாத்தின் பலன்கள் அனைவருக்கும் சென்றடைய முடியும் என கோமதி நாயகம் தெரிவிக்கிறார்.

நாட்டின் பல பகுதிகளில்  விவசாயிகள் நம்பிக்கை இழந்து காணப்படும் போது, விவசாயத்தை ஆர்வத்துடன் செய்பவர்களை புளியன்குடியில் பார்க்க முடிந்தது. மேலும் இயற்கை விவசாயம் மூலம் நன்கு விவசாயம் செய்ய முடியும் என்பதையும் அவர்களில் சிலர் எடுத்துக் காட்டி வருகின்றனர். அதற்காக சேவா சங்கமும் சில முன்னோடி விவசாயிகளும் எடுத்து வந்துள்ள முயற்சி பாராட்டத் தக்கது.


நாடு முழுவதும் பெரும்பாலும் உற்பத்தி மற்றும் தொழில் சார்ந்த மையங்களே பெரிய அளவில் செயல் பட்டு வருகின்றன. அந்த வகையில் முழுவதும் விவசாயம் சார்ந்த ஒரு வியாபார மையம் நல்ல முறையில் இயங்கி வருவது நமது சாதாரண மக்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறது. இந்த பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்து எனக்கு உதவி புரிந்த சென்னையைச் சேர்ந்த எனது  நண்பரும் இயற்கை வேளாண்மை ஆர்வலுருமான கம்பெனி ஆலோசகர் திரு.நந்தகுமார்  அவர்களுக்கும் எனக்கும் இந்த அனுபவம் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. 

மன்மோகன் சிங் என்ன செய்கிறார்?


2004 ஆம் வருடம் மே மாதம் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற போது அவரிடமிருந்து நாடே பெரிதாக எதிர்பார்த்தது. அவரது கட்சியைச் சாராதவர்களும் பொது மனிதர்களும் கூட அவரை  மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அரசியல் தலைவர்களைப் பார்த்தே பழகிப் போன மக்களுக்கு முதல் தடவையாக ஒரு பொருளாதார நிபுணர் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வருவது நல்ல மாற்றமாகக் கூடத் தெரிந்தது.

மன்மோகன் சிங்கிற்கு நாட்டின் பொருளாதாரத் துறைகளுடன் உள்ள  தொடர்பு அலாதியானது. பொருளாதாரம் சம்பந்தமான அரசின் பல துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். வணிக மற்றும் நிதி அமைச்சகங்களில் பொருளாதார ஆலோசகர், நிதித் துறை செயலர், திட்டக் குழு துணைத் தலைவர், பிரதமரின் ஆலோசகர், மத்திய வங்கி கவர்னர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ளார். 

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் வணிக மற்றும் முன்னேற்ற அமைப்பில் பணியாற்றியும்,  பின்னர் ஜெனிவாவில் வளரும் நாடுகள் சம்பந்தப்பட்ட குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்தும் சர்வதேச பொருளாதார விவகாரங்களிலும் நேரடியான அனுபவத்தைப் பெற்றுள்ளார். எனவே பொருளாதாரத் துறைகளில் வெவ்வேறு நிலைகளில் அவர் பெற்ற அனுபவம் பரந்து பட்டது. 

அவரின் மேற்படிப்புகள் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களில் இருந்தன. ஆரம்ப காலத்தில் தனது பணியைப் பொருளாதார ஆசிரியராக பஞ்சாப் மற்றும் டெல்லி பல்கலைக் கழகங்களில் ஆற்றியிருந்தார். எனவே அவரது படிப்பு மற்றும் உயர்  மட்டத்தில் பொருளாதாரம் சம்பந்தமான கொள்கைகள் வகுப்பதில் அவரின் அதிகப்படியான அனுபவங்கள் ஆகியன அவரிடமிருந்து ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

அவரை 1991 ஆம் வருடம் நரசிம்ம ராவ் பிரதமராகப் பொறுப்பேற்ற போது நிதி அமைச்சராக நியமித்தார். தொடர்ந்து வந்த காலத்தில் தாராள மயம் மற்றும் உலக மயமாக்கல் கொள்கைகள் இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டன. அதற்கு முன்னர்  தொழில்கள் சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களிலும் அதிகார வர்க்கங்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொழில் தொடங்குவதற்கு உரிமம் கொடுப்பதில் தொடங்கி, கம்பெனிகள் பங்குகளை வெளியிடும் போது விலையை நிர்ணயிப்பது வரை பல விசயங்களிலும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு இருந்தது.

நமது நாடு தொழில் முனையும் தன்மையை அதிகமாகக் கொண்ட மக்களை உடையது. ஆனால் அவர்களுக்குத் தொழில் செய்யப் பல விதத் தடைகள் இருந்தன. எனவே அரசின் கொள்கைகளில் இருந்த நடைமுறை இறுக்கங்கள் மற்றும் தேவையில்லாத கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டுமென பரவலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. அந்த வகையில் தாராள மயமாக்கல் தேவைப்பட்டது.

 ஆனால் கூடவே உலகமயமாக்கல் கொள்கைகளும் நடைமுறைக்கு வந்தன. உள் நாட்டுக் கட்டமைப்புகளையும் நிறுவனங்களையும் வலுப்படுத்தாமலேயே வெளி நாட்டுக் கம்பெனிகளையும் முதலீடுகளையும் அனுமதிப்பது தவறான செயலாகும். விவசாயம் மற்றும் பல வகையான சிறு தொழில்களில் அதிகமான மக்கள் ஈடுபட்டு வரும் நமது நாட்டில் திடீரென பன்னாட்டு முதலீடுகளை அனுமதிப்பது நாட்டின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விசயமாகும். ஆனால் அது குறித்து பரவலான விவாதங்கள் எதுவுமின்றி புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. 

அப்போது முதல் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பிதாமகனாக சித்தரிக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அந்தக் கொள்கைகளை அவர் அறிமுகப்படுத்துவதற்குக் காரணம் பிரதமராக இருந்த நரசிம்மராவ் எனக்  கூறப்படுகிறது. ஏனெனில் பிரதமரின் ஆதரவு இல்லாமல் அரசின் கொள்கைகளை முற்றிலும் வேறான வழியில் அமைத்திருக்க முடியாது. மேலும் அதற்கு முன்னர் மன்மோகன் சிங் உலக மயமாக்கல் கொள்கைகளுடன் அறியப்பட்டவராக இல்லை.  

எனவே அவர் தனக்கென சொந்தக் கொள்கைகள் எதுவும் இல்லாதவராகவும், பல வருடங்களாக அரசாங்கத்தில் ஒரு பணிவான உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவத்தால் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி செயல்படுவர் எனக் கூறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எப்படியாயினும் போதுமான கவனமில்லாமல் இந்தியாவில் உலக மயமாக்கல் கொள்கைககளை அறிமுகப்படுத்தியதில் அவருக்கு முக்கிய பங்குள்ளது. அதற்கு பன்னாட்டு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களும் காரணமாக அமைந்திருந்தன.

2004 ஆம் வருடம் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அமைத்த போது அவர் பிரதமராகப் பொறுப்பேற்றது ஒரு தற்செயலான நிகழ்வாகவே அமைந்தது. பின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2009 ஆம் வருடத்திலும் அவரே பிரதமராகப் பொறுப்பேற்றார். எனவே சென்ற மே மாதத்துடன் அவர் பிரதமராகப் பொறுப்பேற்று ஒன்பது வருடங்கள் முடிந்து விட்டன.

அதன் மூலம் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு அடுத்த படியாக அதிக வருடங்கள் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அதுவும் இந்தியாவைப் போன்ற பரந்த நாட்டில் அரசியல் பின்னணி இல்லாத ஒருவர் இவ்வளவு ஆண்டு காலம் தலைமைப் பொறுப்பு வகித்திருப்பது யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு நிகழ்வாகும். எனவே கடந்த ஒன்பது வருட காலத்தில் பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்டுள்ள முக்கியமான போக்குகளைப் பார்க்கலாம். அவற்றின் மூலம் அவர் கடைப்பிடிக்கும் கொள்கைகளையும் நாட்டு நடைமுறையையும் புரிந்து கொள்ள முடியும்.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பொருளாதார சீர்திருத்தம் என்கின்ற பெயரில் இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் எல்லாமே மக்களின் ஒட்டு மொத்த நலன் குறித்து மேற்கொள்ளப்படுவை அல்ல. அவற்றில் பெரும்பாலானவை வெறும் கொள்கை மாற்றங்கள் மட்டுமே. நாட்டின் கொள்கைகளில்  அடிப்படையாக எந்த ஒரு மாற்றம் கொண்டு வரும்போதும் அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.  .

அந்த வகையில் நமது பொருளாதார அடிப்படைகள், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவைகள் ஆகியவற்றை மையமாக வைத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் மன்மோகன் சிங் அரசுகள் கொண்டு வந்த முக்கிய மாற்றங்களில் மேற்கத்திய நாடுகளின் கோட்பாடுகள் மற்றும் ஆலோசனைகளே மையமாக அமைந்துள்ளன. அவற்றில்  பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மூலதனங்களின் பலன்களே அடிப்படையாகத் தெரிகிறது.

வெளி நாட்டு முதலீடுகள் பல துறைகளில் தேவையில்லாமல் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஈர்ப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் சலுகைகள் அரசு பணத்தில் மானியமாகச் செல்கின்றன. அதே சமயம் வேலை வாய்ப்பைத் தரக் கூடிய உள் நாட்டு சிறு தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டாம் பட்சமாகவே நடத்தப் படுகின்றன.  எனவே அவற்றின் செயல்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

மேலும் வெளிநாட்டு மூலதனம் மூலமாகவே இந்தியாவில் மூதலீடுகளை அதிகப்படுத்தி தொழில்களைப் பெருக்க முடியும் என்ற தவறான கருத்தை மன்மோகன் அரசும் சந்தைப் பொருளாதார ஆதரவாளர்களும் உருவாக்கி விட்டனர். அதன் மூலம் நமது நாட்டுக்கும் நமது மக்களுக்கும்  ஒரு அவப் பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் தவறான வகையில் நமது மக்களின் தன்னம்பிக்கை குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை விட நமது சேமிப்பு மற்றும் முதலீடு விகிதங்கள் மிகவும் அதிகமாகும். 

1991 முதல் இன்று வரை கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, இந்தியாவின் மொத்த முதலீடுகளில் உள்நாட்டு முதலீடுகளே 95 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய குறு, சிறு மற்றும் மத்திய வகை தொழில்கள் அனைத்தும் உள்நாட்டு மூலதனங்கள் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் குடும்ப அமைப்புகள் மூலம் உண்டாகும் சேமிப்புகளில் இருந்து அரசுத் துறை மற்றும் பெரிய கம்பெனிகளுக்கு அதிக அளவு தொகைகள் முதலீடுகளாகச் செல்கின்றன. இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் மையங்களில் பல்லாயிரம் கோடி வியாபாரம் மற்றும் ஏற்றுமதி உள்நாட்டு முதலீடுகள் மூலமே  நடந்து வருகிறது.

அந்த வகையில் மன்மோகன் அரசு சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்துள்ளது மிகப் பெரிய தவறாகும். சில்லறை வணிகம் அதில் ஈடுபட்டுள்ளவர்களால் சொந்தமாக மூலதனம் திரட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்தத் துறை அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பளித்து,  புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி பொருளாதாரத்தில் வலுவான பங்கு வகிக்கிறது. அதில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தது அந்தத் துறையை மட்டுமன்றி ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் செயலாகும்.

நாட்டுக்கு அடிப்படையான விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றன.  தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை நீடித்து வருகிறது சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது விவசாயத் துறையாகும். அது வீழ்ச்சியடைவது நாட்டின் எதிர்காலத்துக்குக் கேடு விளைவிக்கும். 
 .
பணக்கார நாடுகள்  பல கோடிக்கணக்கான டாலர்களை விவசாயிகளுக்கு மானியமாகக் கொடுத்து தங்கள் விவசாயத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். அதே சமயம் உலக மயமாக்கல் என்ற பெயரில்  எந்த ஆதரவுமில்லாத சாமானிய இந்திய விவசாயிகளை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பெரும் பண்ணைகளுடன் சமமாகப் பாவிப்பது எந்தவித நியாயமும் இல்லாத செயலாகும். பெரும்பான்மை மக்கள் சார்ந்துள்ள விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகள் எதுவுமில்லை. ஆனால்  உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பெரிய கம்பெனிகளுக்கு மட்டும் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  சலுகைகள் அவசியமில்லாமல் கொடுக்கப்படுகிறது.

நாட்டில் வேலை வாய்ப்பை அதிக அளவில் கொடுக்கக் கூடிய குறு மற்றும் சிறு தொழில்கள் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளால்  பாதிப்படைந்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்க  அரசிடமிருந்து உறுதியான முயற்சிகள் எதுவுமில்லை. மக்கள் கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக நகரங்களை நோக்கிச் செல்வது அதிகரித்து வருகிறது. அங்கும் அவர்களில் மிகப் பெரும்பாலனவர்களுக்கு கடும் போராட்டங்களே காத்துக் கிடக்கின்றன. ஆனால் அவை பற்றியெல்லாம் பேசப்படுவது கூட இல்லை.

மாறிவரும் பொருளாதாரக் கொள்கைகளின் இன்னொரு பரிணாமமாக மதிப்பிட முடியாத நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இதுவரை பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பலன்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்காகத் தாரை வார்த்துக்  கொடுக்கப்பட்டிருக்கின்றன. அலைக்கற்றை, கனிமங்கள் மற்றும் நிலக்கரி ஆகியவை அந்த வகையைச் சார்ந்தவை. இயற்கை வளங்கள் நாட்டு மக்களுக்குச் சொந்தமானவை. அவை மிகுந்த கவனத்துடனும் கடுமையான விதிமுறைகளுடனும் கையாளப்பட வேண்டியவை. ஆனால் சரியான கொள்கைகளும் தேவையான ஒழுங்கு முறைகளும் இல்லாமல் ஆட்சியாளர்களின் ஒத்துழைப்போடு அவை சூறையாடப்பட்டு வருகின்றன. 

அதே சமயம் கடந்த பத்து வருடத்தில் சென்ற நிதியாண்டு வரைக்கும் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாகவே இருந்து வந்துள்ளது. உள்நாட்டில் பல தொழில்கள் வளர்ச்சியடைந்தும், பிற நாடுகளில் இந்திய நிறுவனங்களின்  மூலதனங்கள் மற்றும் வியாபாரம் ஆகியன அதிகரித்தும் வந்துள்ளன. ஆனால் வளர்ச்சியின் போக்கு பரவலானதாகவும் அனைவருக்கும் பலனளிப்பதாகவும் இல்லை. அதிலும் சென்ற நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து ஐந்து விழுக்காட்டுக்குச் சென்றுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களுக்குச் சுமைகள் அதிகரித்தவாறே உள்ளன.

மேற்கத்திய சிந்தனைகளை மையமாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரக் கோட்பாடுகள் அங்கேயே பெரும் தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. அதனால் அந்தப் பொருளாதாரங்கள் நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகின்றன. மேலும் உலகின் பிற  நாடுகளிலும் பொருளாதாரங்களுக்கும் கடும் சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது ஒரு பொருளாதார நிபுணராக உள்ள மன்மோகன் சிங் அதே கொள்கைகளை நமது நாட்டில் கடைப்பிடித்து வருவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. 

நமது பொருளாதாரம் இயற்கையாகவே வலுவான அடிப்படைகளைக் கொண்டது. அதிக சேமிப்புகள், முதலீடுகளை உருவாக்கும் திறன், சிறு தொழில்கள், தொழில் முனைவதில் ஆர்வம் மற்றும் அரசுகளை நம்பி வாழ விரும்பாத மக்கள் ஆகியன  அதன் தனித்தன்மைகள். அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பதற்குப் பொருத்தமான கொள்கைகளை நாம் தான் வகுக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக வேறான சூழ்நிலைகளைக் கொண்ட பிற நாடுகளில் உருவான  கொள்கைகளைக் கடைப்பிடித்து வருவது பெரிய தவறாகும். அதனால் நாட்டுக்குச் சிரமங்களே மேலும் அதிகமாகும்.


( ஆழம், ஜூலை 2013)

Rebuilding India 3


                    Revamp the education system

Education is the gateway to life. It   plays a dominant role in transforming the lives of persons. The thoughts, approaches and world views get shaped in schools and colleges. Hence the education system is critical to the destiny of nations. 

India was known for her high quality of education since the ancient times. The nation remained a source of abundant wisdom, torch bearer of knowledge, pioneer in diverse fields and builder of institutions that enabled people to lead   purposeful lives. All these were possible due to the superior system of knowledge sharing that existed during those times.

The entry of the alien forces and their subsequent domination of the country created difficulties to the well-functioning educational systems. The introduction of the Macaulay method of education during the 1830s led to large scale destruction of the native systems. The educational system subsequently got completely westernized over the years. 

The modern system is largely artificial and makes very little effort to educate the child.  The ‘man- making education’ that Swami Vivekananda advocated is almost absent in the contemporary system. Value based education remains neglected, in spite of its emphasis by the higher judiciary and committees appointed by the governments. 

The first ever survey among school children carried out by the International Forum for India’s Heritage revealed that the higher the classes, the lesser was their happiness with the contents of education, teaching, examination and the whole system. Moreover, not many of them felt that education promoted an all-round growth. Their requirements were different.  91 per cent of them however, noted that they would be benefited by the induction and teaching of Indian culture in the school curriculum. 

Every country takes serious efforts to teach its true history. But unfortunately the Indian children are deprived of learning it and as a result know very little about the glory and greatness of the nation which inspired the rest of the world for several centuries since the earliest periods. They also do not know much about the difficult periods in the history of the nation, the untold suffering faced by their forefathers and the sacrifices of their valiant heroes. 

They are not exposed to their surroundings. They find it difficult to apply the concepts that they study to their lives.  Education has become mere pass ports for students to get jobs and earn money. Very little is taught to train the minds of children in the most productive and creative of ways. 

The situation in higher education is equally disturbing. In most of the areas, there is nothing original. The courses and the text books almost totally depend on the western concepts and theories. Books written by the foreign authors are a compulsory part of the process and the universities feel that only such books are best suited for the Indian conditions.  

We produce millions of educated people who know little about the country and her contributions to the development of knowledge systems over the centuries. We have economic professors who have never even seen the Arthashashtra, the first book on economics in the world, occupying university positions; physicians who have little knowledge about the contributions of Shushruta, the first surgeon in the world and mathematic teachers who do not know much about Aryabhatta or the origin of numbers. The level of illiteracy is more when it comes to the specialized subjects.  How many of our educated people are aware that there is abundant material with us in fields such as logic, phonetics, architecture and metallurgy? 

Higher education does very little to open the eyes of students to see what is happening in front of them. As a result the economic students get their degrees without even realizing that the driving force of the Indian economy is their own family systems, traditions and culture. Instead they are taught to belittle and curse the very foundations that sustain them. 

Students spend most of their time discussing theories that are either redundant or have very little relevance.   The western concepts and theories are based on their backgrounds, belief systems and experiences. Many of the modern theories in fields such as economics and management that are discussed in class rooms have already failed to provide results even in their places of birth. 

We are producing graduates who are mere imitations of the system. They lack the capacity to relate to things. In the name of modern education, the natural abilities of millions of youngsters are being butchered in class rooms.  The students getting out of institutions are made to feel like orphans. 

Even during the early twentieth century, Ananda Coomaraswamy described the impact of British education on Indians: “It is hard to realize how completely the continuity of Indian life has been severed. A single generation of English education suffices to break the threads of tradition and to create a nondescript and superficial being deprived of all roots – a sort of intellectual pariah who does not belong to the East or the West, the past or the future. The greatest danger for India is the loss of her spiritual integrity. Of all Indian problems the educational is the most difficult and most tragic.” 

India has been rising as a power. Her strong fundamentals are being recognized all over the world. All predictions point to a better economic future. In spite of the wrong approaches and poor understanding by the educated sections, the country is progressing.
In this connection, we have to take immediate steps to revamp the educational system. There are many issues that require immediate attention. We require young people with higher value systems, commitment, confidence, sense of responsibility and patriotism.  We need people with originality, creative abilities, entrepreneurship and empathy. 

We need leaders and visionaries who can direct the destiny of this great nation along the right path. The education should nurture the inborn talents and finer qualities of the younger generation. It should enable them to identify their inherent strengths and bring the best out of them. It should make them the best human beings, contributing to the all-round development of their surroundings and the nation.   

 To make it happen, a complete revamping of the education system is required. Mere cosmetic changes are not enough. Almost a century earlier, Sri Aurobindo advocated national education. He said: “… the full soul rich with the inheritance of the past, the widening gains of the present, and the large potentiality of the past, can come only by a system of National Education. It cannot come by any extension or imitation of the system of the existing universities with its radically false principles, its vicious and mechanical methods, its dead-alive routine tradition and its narrow and sightless spirit. Only a new spirit and a new body born from the heart of the Nation and full of the light and hope of its resurgence can create it ……”  

The western countries have been facing serious crisis in spite of their advancements in science and technology. Their lives at the personal, family and social levels are in turmoil. With all their ‘modern’ economic theories, many of which fetched   Nobel prizes, they have not understood even the most basic lessons in economics. 

India needs new systems, new courses, new theories, new text books and new approaches. The nation has to make a firm decision to revamp the existing system, as we have already lost more than six precious decades. Contemporary developments clearly prove that India has all the required fundamentals to create her own destiny without looking at others. Hence we have to begin the process in education and set the stage for a new India. 

References:
1.   Ananda Coomaraswamy, The Dance of Siva: Fourteen Indian Essays, The Sunwise Turn,  New York, 1918
2.    Michel Danino, Survey on Cultural Content in School Education, International Forum for India’s Heritage  (Submitted to Govt. of India), 2005
3.    Sri Aurobindo, Message on National Education, 1918 quoted in Out of the Ruins of the West …. India’s Rebirth, Mira Aditi, Mysore, 1993

 ( Yuva Bharati, Vol.40, No.11, Vivekananda Kendra, Chennai, June 2013)

Functioning Indian Economic Models - IIT Madras


Lecture on the  " Functioning Indian Economic Models" at Vivekananda Study Circle, Indian Institute of Technology, Madras  



பாரதப் பொருளாதாரம்: அன்றும் இன்றும் - பதிப்பாளருடன் கலந்துரையாடல்


’பாரதப் பொருளாதாரம்- அன்றும் இன்றும்’ புத்தகம் குறித்து நூலாசிரியர் கனகசபாபதி மற்றும்  பதிப்பாளர் திரு. பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்) கலந்துரையாடல்




வலுவான குடும்பம் வளமான இந்தியா - பதிப்பாளருடன் கலந்துரையாடல்

’வலுவான குடும்பம் வளமான இந்தியா’ புத்தகம் குறித்து நூலாசிரியர் கனகசபாபதி மற்றும்  பதிப்பாளர் திரு. பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்) கலந்துரையாடல்




அதிகரிக்கும் பொருளாதார சிரமங்கள்: வலுவான அடிப்படைகளும் தவறான செயல்பாடுகளும்


இந்திய தேசத்தைப் போலவே இந்தியப் பொருளாதாரமும் விசாலமானது. தொன்மையானதும் ஆழமானதும் கூட. அதனாலேயே நவீனக் கல்வி கற்றவர்களுக்கு அது பிடிபடுவதில்லை. அதன் சரியான வரலாறு மற்றும் தன்மைகள்  புத்தகங்களில் எடுத்துச் சொல்லப்படுவதில்லை. எனவே படித்தவர்களால் அதைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முடிவதில்லை.  மேற்கத்திய கோட்பாடுகள் மற்றும் அணுகு முறைகளை மட்டுமே சரியென நம்பும் நிபுணர்களுக்கு  இங்கு நிலவும் அடிப்படை விசயங்களின் உண்மைகள்  தெரிவதில்லை. 

இந்த மண்ணை, இங்கு வாழும் சாமானிய மனிதனை, சாதாரண  விவசாயியை, கிராமங்களை, சிறு தொழில்களைப் புரிந்து கொள்ளாத எவராலும் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இந்தியப் பொருளாதாரம் பரந்து விரிந்து கிடக்கின்ற இந்த தேசத்தின் பல கோடிக்கணக்கான குடும்பங்களில், அவை சார்ந்த சமூகங்களில் உயிர் வாழ்கிறது. அதன் அடிநாதம் பல ஆயிரக்கணக்கான கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான சிறு நகரங்களிலும் வேரூன்றியிருக்கிறது. அதைப் பல்கலைக்கழகப் புத்தகங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியாது.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உருவான கோட்பாடுகளை வைத்து இந்தியப் பொருளாதார நடைமுறைகளை அணுகுவது என்பது மிகவும் தவறான காரியம். பொருளாதார சிந்தனைகள் மற்றும் அணுகு முறைகள் எல்லாமே குடும்பம், சமூகம், மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசாரம் சார்ந்து நிற்பவை. ஆனால் பொருளாதாரத்தை மக்களிடமிருந்து பிரித்து அதைத் தனியாகப் பார்ப்பது என்பது மேற்கத்திய பொருளாதார சிந்தனைகளின் அடிப்படையாக உள்ளது.

அதனால்தான் அவர்களின் வழிமுறைகள் அங்கேயே தோல்வியடைந்து வருகின்றன. அதனால் மக்கள் கடுமையான சோதனைகளைச் சந்தித்து வருகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் அவர்களின் கோட்பாடுகள் தீமை பயப்பனவாகவே அமைந்துள்ளன. இந்தியாவிலும் அந்தக் கோட்பாடுகளின் தாக்கங்கள் தொடர்ந்து மக்களின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக அமைந்து வருகின்றன. ஏனெனில் மக்களைச் சார்ந்து அமையாத  எதுவும் நீடித்து நிற்க முடியாது.

நமது நாட்டில் சுதந்தரத்துக்குப் பின்னர் பெருமளவு பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து வந்த அரசுகளின் அணுகுமுறைகள் மற்றும் கொள்கைகள் பெரும்பாலும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பொருத்தமில்லாதவையாகவே அமைந்து வருகின்றன. ஆயினும்  அவற்றையெல்லாம் மீறி நாடு பல துறைகளில் வளர்ச்சியைக் கண்டு  வருகின்றது. அதற்குக் காரணம் இங்கு வாழும் மக்களின் இயற்கையான பொருளாதார நோக்கு, வாழ்க்கை முறைகள் மற்றும் அடுத்த தலைமுறைகளுக்காக வாழும் எண்ணம் ஆகியன.

சிக்கனமும் சேமிப்பும் இங்கு இயற்கையாகவே உள்ளது. அவற்றைப் பாடப் புத்தகங்கள் மூலம் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. எதுவுமே படிக்காத கடைக்கோடியில் வாழும் சாதாரண மனிதனுக்குக் கூட அவற்றின் முக்கியத்துவம் தெரியும். குடும்பத்துக்காக வாழக் கூடிய பண்பு, அதற்கான உழைப்பு, தேவையான முயற்சிகள், பிறருக்கான அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மை  ஆகியன இங்கு காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பண்புகள். அவையெல்லாம்தான் இந்தியப்  பொருளாதாரத்துக்கு ஆதாரமாக விளங்கி வருகின்றன.

 அதனால்தான்  எத்தனையோ சிரமங்களையும் மீறி நாடு தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. எனவே பல துறைகளில் முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.   இப்போது உலக அளவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. தொடர்ந்து சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் வேகமாக வளரக் கூடிய பொருளாதாரமாக விளங்கி வருகிறது. தொழில்கள், வியாபாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் சர்வதேச அளவில் தன்னுடைய முத்திரையைப் பதித்து வருகிறது.

அதே சமயம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 2008 ஆம் வருடத்தில் வெளிப்பட்ட பொருளாதார நெருக்கடி அவர்களைப் பெருமளவு பாதித்தது. அதனால் ஏற்பட்ட  சிக்கல்களிலிருந்து அந்த நாடுகள் இன்னமும் முழுமையாக மீண்டு வரமுடியாத நிலையில் உள்ளன. மேலும் அந்த நாடுகள் சரியென நம்பி வந்த கோட்பாடுகளும் அவர்களின் பொருளாதார அணுகுமுறைகளும் பெருமளவு தோற்றுப் போய்விட்டன.  

எனவே உலக அளவில் மேற்கத்திய முறைகளுக்கு ஒரு மாற்றாக இந்திய முறைகள் அங்கீகாரம் பெற்று வருகின்றன. மேற்கு நாடுகளின் பல பிரபலமான பல்கலைக் கழகங்கள், மேலாண்மை நிறுவனங்கள், ஆய்வு மையங்கள்  ஆகியன இந்திய முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டுள்ளன. நமது பொருளாதாரம், வியாபாரம் மற்றும் மேலாண்மை முறைகளைப் பற்றி மட்டுமன்றி, ஆன்மீகம், சமூகம், கலாசாரம் மற்றும் நிர்வாக முறைகளைப் பற்றியும் கூட அவர்கள் இங்கு வந்து ஆய்வு செய்து கொண்டுள்ளனர்.  அண்மையில் நடந்த கும்பமேளாவைப் பற்றிப் படிப்பதற்காகப் பெயர் பெற்ற அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகம் பேராசிரியர்களையும் ஆய்வாளர்களையும் அனுப்பியது.

ஆகையால் இந்தக் கால கட்டம் இந்திய நாட்டுக்கு ஒரு அரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளது. உலகில் சக்தி வாய்ந்தவையாக விளங்கும் பல நாடுகளும் இந்திய அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகள் குறித்து அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளன.  எத்தனையோ நெருக்கடிகளுக்கு இடையிலும் மேலெழுந்து வரும் நமது நாட்டின் பொருளாதார முறைகள் பிற  நாடுகளில் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மேலும் எதிர்காலம் குறித்த சர்வதேச கணிப்புகள் எல்லாமே இந்தியா மேலும் முன்னேறிச் செல்லும் என ஒருமித்த குரலில் உறுதியாகக் கூறுகின்றன. 
.
அதே சமயம் நமது நாட்டில் அண்மைக் காலமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் மிகவும் கவலை அளிப்பவையாக உள்ளன. 2003-04 ஆம் வருடம் தொடங்கி நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகமாக இருந்து வந்தது. 2011-12 வரையான ஒன்பது ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் ஒன்பது விழுக்காட்டுக்கு மேலாக வளர்ச்சி விகிதம் இருந்தது. அதனால் கடந்த ஒன்பது வருடங்களில்  சராசரி வளர்ச்சி விகிதம் 8.25 விழுக்காடு என இருந்தது.

நடுவண் அரசின் மத்திய புள்ளியியல் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள உத்தேச புள்ளி விபரங்கள் பொருளாதாரத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த அதிக வளர்ச்சி தடைப்பட்டு விட்டதைத் தெரிவிக்கிறது. 2012-13 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் வெறும் ஐந்து விழுக்காடாக மட்டுமே இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. இதுதான்  கடந்த பத்து வருடங்களில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான வளர்ச்சி விகிதமாகும்.

அதுவும் ஏற்கெனவே நலிந்து கிடக்கும் விவசாயத் துறையில் வளர்ச்சி  பாதியாகக் குறைந்து 1.8 விழுக்காடு மட்டுமே இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் பலவற்றிலும் வளர்ச்சி விகிதங்கள் குறைவாக சென்று விட்டது தெரிய வருகிறது. சென்ற 2011-12 ஆம் ஆண்டிலேயே வளர்ச்சி 6.2 விழுக்காடாகக் குறைந்து போயிருந்தது.  தொடர்ந்து அடுத்த வருடம் அது மேலும் குறைந்துள்ளது அதனால் சுதந்தர இந்தியாவில் இருந்து வந்த  வேகமான பொருளாதார வளர்ச்சிக் காலம், ஒரு மாற்றத்தைக் கண்டுள்ளது.  

வளர்ச்சி விகிதம் குறைந்தது மட்டுமன்றி பொருளாதாரத்தின் பல முக்கிய தளங்களில்  செயல்பாடுகள் வருத்தம் அளிப்பவையாக உள்ளன. நாட்டுக்கு அடிப்படையான விவசாயத் துறையில் மென்மேலும் சிரமங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. ஒரு புறம் சரியான கொள்கைகளும் திட்டங்களும் இல்லை. இன்னொரு புறம் தவறான கொள்கைகள் மூலம் விவசாயம் நசுக்கப்படுகிறது.

முறையான சிந்தனை எதுவுமில்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்ட மத்திய அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் கோடிக் கணக்கான ரூபாய்களை வருடா வருடம் வீணடிப்பது மட்டுமன்றி, விவசாயத்தைப் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கி விட்டது. ஆகையால்  இன்னமும் சுமார் அறுபது விழுக்காடு மக்கள் சார்ந்து வாழும்  விவசாயத் தொழில் இலாபகரமானதாக இல்லை. மேலும் பெரும்பாலான மக்களுக்குக் குறைந்த அளவு வருமானம் கூடக் கிடைக்காத நிலை உள்ளது. சமுதாயத்திலும் அதற்கான அங்கீகாரம் குறைந்து வருகிறது. அதனால் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

நமது நாட்டின் சிறப்பே சுய தொழில் சார்ந்த அதன் தன்மையாகும். பாரம்பரியமாகவே இந்திய சிந்தனை  சொந்தத் தொழில் செய்வதையே முக்கியமான வாழ்வியல் முறையாகச் சொல்லி வந்துள்ளது. சொந்தத் தொழில் என்பது மட்டுமே ஒரு மனிதனுக்கு சிறப்பான அங்கீகாரம் என விதுரர் குறிப்பிட்டுள்ளார். எனவே பெரும்பான்மையான மக்கள் ஏதாவது ஒரு தொழிலைச் சொந்தமாகச் செய்வதையே பெருமையாகக் கருதி வந்துள்ளனர். சொந்தத் தொழில் என்பது முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் என்னும் இரண்டு சித்தாந்தங்களுக்கும் மாற்றான முறையாகும். அதில் முதலாளித்துவத்தின் கொடூரமும், சோசலிசத்தின் அடக்குமுறைகளும் இல்லை. சிறிய தொழில்களே அழகானவை என்று சொன்ன ஸ்கூமேக்கரும்  அதையே வற்புறுத்தினார்.

அதனால் இன்றுவரை நமது பொருளாதாரத்தில் சுயதொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களால் அரசுகளுக்கு எந்த வித சுமைகளும் இல்லை. மாறாக அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்களின் உழைப்பை மட்டுமே நம்பி பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்கின்றனர். சுய தொழில்கள்  மட்டும் நாட்டின் மொத்த வருமானத்தில் சுமார் 35 விழுக்காடு அளவு பங்களிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சுய தொழில்களின் பங்கு மிகவும் குறைவு. ஆனால் கடந்த சில வருடங்களாக நமது நாட்டில் சுய தொழில்கள் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கிராமப் பகுதிகளில் மட்டுமன்றி நகர்ப்புறங்களிலும் அந்தப் போக்கு நிலவுகிறது. 2004-05 முதல் 2009-10 வரையான ஐந்து வருட காலத்தில் மட்டும் கிராமப் புறங்களில் சுய தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை  56. 5 விழுக்காட்டிலிருந்து 51.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. நகர்ப் புறங்களில் அது 43.3 விழுக்காட்டிலிருந்து 40.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

சுய தொழில்கள் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவது ஒரு நாட்டுக்கு நல்லதல்ல. அதனால் குடும்பங்கள் பிறரைச் சார்ந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. சுய தொழில்கள் பாதிக்கப்படும் போது அதைச் சார்ந்தவர்கள் வேறு வேலைகளைத் தேடிச் செல்கின்றனர். அது பல சமயங்களில் நகரங்களை நோக்கிய பயணமாகவே இருக்கிறது.  அங்கும் நிரந்தரமான வேலைகள் கிடைப்பதில்லை. அதனால் நாட்டில் தற்காலிக வேலைகளைச் செய்து வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

மக்களின் வாழ்க்கைக்கு ஏதாவது வாழ்வாதாரம் அவசியமாக இருக்க வேண்டும். சொந்தமாக எதுவும் செய்யாதவர்கள் வேலைகளைச் சார்ந்தே  இருக்கின்றனர். ஆனால் பொருளாதாரத்தில் வேலை உருவாக்கம் என்பது கடந்த பல  வருடங்களாகவே குறைந்து வருகிறது. தற்போதைய அரசுகள் கடைப்பிடிக்கும் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் மிகப் பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பட்டுக் கம்பளம் விரிப்பதாகவும், உள் நாட்டில்  வேலை வாய்ப்புகளைக் குறைப்பதாகவுமே அமைந்துள்ளன. மத்திய அரசின்  புள்ளி விபரங்களே இந்த உண்மைகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. 

2007 முதல் 2011 வரையான ஐந்து வருட காலத்தில் அமைப்பு சார்ந்த துறைகளில் வெறும் 17.23 இலட்சம் புதிய வேலைகளே உருவாக்கப் பட்டுள்ளன என மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை அமைச்சகம் தெரிவிக்கின்றது. நாட்டின் மக்கள் தொகை வருடத்துக்கு சுமார் ஒன்றரை கோடி அதிகரித்து வரும் போது புதிய வேலை வாய்ப்புகள் வருடத்துக்கு சுமார் 3.5 இலட்சம் அதிகரிப்பு என்பது மிகவும் குறைவானதாகும். அவ்வாறு உருவாக்கப்படும் குறைந்த வேலைகளே கூட தனியார் துறைகளில்தான்   ஏற்படுத்தப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த ஐந்து வருடங்களில் புதிய வேலை வாய்ப்புகள் எதையும் உருவாக்கவில்லை. மாறாக அங்கு 4.54 இலட்சம் வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

எனவே அண்மைக் கால பொருளாதார வளர்ச்சி என்பதே வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக இல்லாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலை நீடிப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. ஒரு பக்கம் வளர்ச்சி அதிகரித்து வருமானம் பெருகும் போது, மறு பக்கம் வேலை வாய்ப்புகள் குறைவது சமூகத்தில் மக்களிடையே பெரும் ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்கும். அந்த நிலை மேலும் பெருகுவது தவறு. நாட்டை எதிர்காலத்தில் அது மோசமான  விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.  

நமக்கு வலுவான அடித்தளங்கள் உள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் போதுமான அளவில் உள்ளன. தற்போது நமது மக்கள் தொகையில் பாதிப்பேர் இருபத்து ஐந்து வயதுக்குக் கீழானவர்களாக உள்ளனர். எனவே அதிக எண்ணிக்கையிலான  இளைஞர்கள் பட்டாளத்தை நாம் பெற்றுள்ளோம். மக்கள் தொகையைப் பொருத்த வரையில் வேலை செய்யக் கூடிய நிலையில் உள்ளவர்கள் எதிர்காலத்திலும் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே நாட்டின் வளர்ச்சிக்குச் சாதகமாக வளங்களும், வலுவான அடித்தளங்களும் உள்ளன. கடுமையாக உழைப்பதற்கும்,  முயற்சிகளை மேற்கொள்வதற்கும்  அதிக எண்ணிக்கையிலான மக்கள் தயாராக உள்ளனர். நாட்டின் குடும்ப, சமூக மற்றும் கலாசார அமைப்பு முறைகள்  முன்னேற்றத்தையும் இணக்கமான வாழ்க்கையையும் மக்கள் மேற்கொள்வதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளன.

இவ்வளவு இருந்தும் நாடு போதிய அளவு முன்னேற முடியாமல் இருப்பதற்குக் காரணம் சரியான கொள்கைகளும் திட்டங்களும் இல்லாமல் இருப்பது தான். நமக்கு இருக்கின்ற வளங்களையும் அடித்தளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குத் திட்டமிட்டு செயலாற்றும் சிந்தனையும் செயல் திறனும்  நமது ஆட்சியாளர்களிடத்தில்  இல்லை. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு நம்மிடத்தில் இளைஞர்கள் உள்ள போதும், அவர்களின் திறமைகளை நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பது குறித்து இன்று வரை அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

எனவே கொள்கை வகுப்பவர்களும் ஆட்சியாளர்களும் நாட்டின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தக்குப் பொருத்தமில்லாத வகையிலேயே  திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அதுதான் நமது முக்கியமான குறைபாடாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே மேல் மட்டங்களில் அதிகரித்து வரும் தவறுகளும், நாட்டு நலன் கருதாமல் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளும் பொருளாதார முன்னேற்றத்தை வெகுவாகப் பாதித்து வருகின்றன. அதனால் பல தரப்பட்ட மக்களும்  சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை தொடராமல் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதுதான் நமது இப்போதைய தலையாய கடமையாகத் தெரிகிறது.

( ஓம் சக்தி, ஜூன் 2013)

Rebuilding India 2



Need for change in thinking  

India was known for her original thinking since the ancient periods. One of the basic factors that differentiated India from the rest of the world had been her unique thoughts. It is those thoughts that made India excel in diverse fields, enabled her to attain higher levels of prosperity, helped the nation to develop stable institutions and influenced her people to strive towards higher aspirations. 

Unfortunately the alien domination, especially under the British, made Indians lose their confidence in the native thoughts, systems and institutions. Moreover, Indians were made to believe in the superiority of the west. The education system introduced by them made Indians feel that the Indian traditions and systems are of no use. Swami Vivekananda underlined as to how their education system made the Indian child to hate his/her own family and backgrounds and lose their originality from a young age.

To quote: “The child is taken to school, and the first thing he learns is  that his father is a fool, the second thing that his grandfather is a lunatic, the third thing that all his teachers are hypocrites, the fourth, that all his sacred books are lies. By the time he is sixteen he is a mass of negation, lifeless and boneless. And the result is that fifty years of such education has not produced one original man in the three presidencies. .. We have learnt only weaknesses.” The systematic attempts by the Europeans at different levels made Indians lose their spirit at all levels. Durant noted in 1930: “The result is a pitiful crushing of the Hindu spirit, a stifling of its pride and growth, a stunting of genius that once flourished in every city of the land.”

Unfortunately, even after the country attained Independence there were no efforts to rekindle the original thinking process. With the result the dependent mentality continued. The ruling classes and the policy making circles took all possible steps to follow the western ideas and practices. After four more than decades of freedom, Dharampal noted: “The shock and manner of the British conquest and the prolonged terror which accompanied it had not only disrupted Indian society, its localities, the interrelation­ships between its numerous localities as well as extended kinship groups; but worse yet, made them dumb.”

He explained as to how with the breaking up of the local institutions and established systems, the educated Indians replaced the Europeans to implement the western practices and lord over the natives. To quote: “With the weakening of the locality structure and the interrela­tionships amongst localities which made them whole and func­tional, the interrelationship of the various extended kinship groups came under heavy pressure as well. Further, with the breakdown of Indian political and administrative institutions, men from the more scholarly and more literate groups allowed themselves to be co-opted into the system created by the British. Though their co-optation till the early 20th century was mainly to fill the subordinate positions in the governing and coercive apparatus, later they became the immediate instruments of terrorising their own people.”

Swami Vivekananda warned against the imitation of the western systems, well before the other thinkers took it up. In his comprehensive essay on Modern India in 1899, he noted: “On one side new India is saying, “If we only adopt Western ideas, Western language, Western food, Western dress and Western manners, we shall be as strong and powerful as the Western nations”, on the other old India is saying, “ Fools! By imitation, others’ ideas never become one’s own; nothing, unless earned, is your own. Does the ass in lion’s skin become the lion?” On one side new India is saying, “What the Western nations do is surely good, otherwise how did they become so great?” On the other side old India is saying,” The flash of lightning is intensely bright, but only for a moment look out, boys, it is dazzling your eyes. Beware.”

But in spite of the warnings from the noble minds, the Indian establishment has been following the west. We ape them not just for their economic and political ideas, but also in matters relating to society, family and culture. Even after more than six decades of independence, we have failed to realise that the nature and backgrounds of India and the western countries are different.

There is no use in aping them without any reason. We will not able to get the desired results unless we follow systems suited to our national ethos and practices. The rise of the Indian economy and business over these years reveal the strength of the Indian fundamentals. The functioning Indian methods and approaches are getting recognized at the global levels for their strengths. In fact the western experts advise their countries to follow the Indian methods.  After conducting studies on the leadership system at the corporate levels in India, Peter Cappelli and others note: “The success of the India Way is important in its own right, of course, as it is crucial to the economic and social health of what will soon be the world’s most populous country. It may turn out to be just as important as a model for countries elsewhere, not just those struggling to modernize but also those that are already economically developed.”

We have to understand that India has enormous strengths. This is the reason why the top educational institutions from the western world have been coming to India to study our functioning systems. Recently the Harvard institutions from the US were in Prayag to study the Kumbh Mela. Indian systems have many positive features. India has natural, human and intellectual resources to the required extent. India has a long history which has critical lessons to offer to emerge as a successful nation. But we need to use them.

We need to think on our own to make the best use of the available resources and build the future that we want. Studies conducted at the field levels reveal that the functioning of our systems is based on the native strengths. India’s developments over the last sixty decades have been due to her unique thoughts, practices and approaches. In spite of success at different levels, India has not been able to solve the critical problems at the economic, social and cultural levels. The reason for this is our attitude to depend on others and follow them even in small matters. Besides, we have failed to understand and develop suitable concepts and theories in spite of the successful models functioning at different levels.

All this have to change. It can happen only when the educated and elite sections of the country realize the need for a reorientation in thinking. We should begin to think along the nation-centric lines, as India has everything in her. It is the first step to achieve for all that we aspire as a nation.

References:
1.     Swami Vivekananda, Completed Works, Advaita Ashrama, Calcutta, 1989
2.     Dharampal, Essays on Tradition, Recovery and Freedom, Other India Press, Goa, 2000
3.     Will Durant, The Case for India, Simon and Schuster, New York, 1930
4.     Peter Cappelli and others, The India Way, Harvard Business School Publishing, Massachusetts, 2011

( Yuva Bharati, Vol.40 No.10, May 2013)