Rebuilding India 7


Harness Youth Power

The future of a nation lies in its population. It is not just the quality, but the number of people also matter a lot in the prospects of a nation. There was a time when the western experts taught the world that a larger population is not good for a country. They believed that that the lesser the population, higher will be the advantage. But now the richer parts of the world are faced with the prospects of declining populations and the consequent difficulties associated with the situation. 

It is now being realized that countries having larger populations would be able to benefit from ‘population dividend.’  As a result India is expected reap benefits due to her higher population, compared to many other countries of the world. 

Steady population growth keeps a good proportion of working age population in the country. Maintaining a sufficient working age population is necessary to take up and continue the productive activities that are essential for the proper functioning of the economy. Moreover it is the working age population that supports the younger and older populations, defined as the ‘dependent population’.

Lesser marriages, increased divorce rates, breaking up of families and declining fertility rates are leading to birth of lesser children in many richer countries. Hence their working age population is declining, while the dependent population increases.  

It is estimated that “by 2050, the share of dependent population is projected to increase in all OECD countries, while declining only in the non-member economies of India and South Africa. The share of the dependent population is projected to be above 45% in Japan, Korea, Spain and Italy by 2050.” (OECD Fact book 2013)

The younger sections of the population are critical for the future of the country. Each country should have a good share of the youth population to take the nation forward. Unfortunately the youth population has been declining in the richer parts of the world during the past few decades. 

  The Fact book notes: “The youth population accounted for around 18% of the OECD total (on average) in 2010 with a steady decline since the 1970s. This fall is projected to continue as a result of lower fertility rates. By 2050 Japan and Korea are projected to have youth populations of 9% of the total, while only the United States (19%), Iceland (18%) and Estonia (18%) have projected youth populations close to the current OECD total.”

India is traditionally known for her higher population, due to the family orientation. India is fortunate to have a higher proportion of the youth population at present, which is expected to increase over the years. The Office of Registrar General and Census Commissioner, 2006, Government of India noted:  “The youth population in the age-group 15-34 years is expected to increase from 353 million in 2001 to 430 million in 2011 and then continue to increase to 464 million in 2021.”

The State of the Urban Youth report mentions that the youth population between the ages of 15-32 years comprises 35 per cent of the urban population and 32 per cent of the rural population in the country. It is estimated that by 2020 India would have 64 per cent of the population belonging to the category of the youth. The youth report published in 2013 notes: “Every third person you meet in an Indian city today is a youth. In about seven years the median age in India will be 29 years, very likely a city-dweller, making it the youngest country in the world. ”

This demographic advantage has the potential to offer India and our economy unlimited opportunities for growth. The nation  could reap larger benefits by making use of the higher proportion of the youth population. The report notes: “With the West, Japan and even China aging, this demographic potential offers India and its growing economy an unprecedented edge that economists believe could add a significant 2 per cent to the GDP growth rate.”

The report mentions the impact of the youth population on the higher growth of India. “Over the last two Census decades, when today's 'twenties were growing up, India has firmly inserted itself into the world economy. This world they inhabit will have, say global economists, seen a geopolitical shift with Asia as the fulcrum of economic growth.” Quoting government sources the report mentions: “Policy makers appear to be viewing the demographic dividend as the spring board that is needed to thrust India into a high growth era.”

Hence it is high time for the nation to take advantage of the youth power and plan for the future. It is unfortunate that the government is yet to define the category of youth clearly. The report notes:  “As a category Indian youth is ill defined. There is no agreement on how and why a particular age group may be defined as youth. ”

During January 2014, the new National Youth Policy was announced by the Government of India, replacing the earlier Policy of 2003.  But it did not propose any specific proposal or scheme with financial implications. There does not seem be a proper understanding at the higher policy making levels about the power  of the youth and their potential to contribute to the nation.

The report notes that around three-fourths of the young urban men and women are educated up to middle and secondary levels of schooling, though there are variations across states. We have to make plans to utilise their potential. In the rural areas, significant sections of the younger population have exposure in agriculture and rural activities. Necessary training has to be imparted to all of them to equip them in their fields.

The educational system has no clear programmes and policies to utilise the youth power from their early stages of life. The Indian children and youth have a very high potential, due to the inherent advantages that they have as Indian citizens. The family system, social capital and the cultural traditions are among the biggest sources of benefits to the Indians.

In this connection it is important to understand that a sizable share of the youth population in the country is in a highly disadvantageous situation. To quote the report: “A telling sign: one-fifth of the Indian urban population lives on less than a dollar a day. Additionally, the report finds that while income levels in cities may appear to be higher, the cost of living is also constantly increasing, resulting in shrinking savings, inadequate access to health care and lack of quality education. Maternal mortality remains the ‘top cause of death among young women.’ Further, more than half of young urban women are anaemic, pointing to inadequate food and nutrition.”
Besides, there are disparities with regard to education and other entitlements.  Such disparities lead to uneven access to opportunities in different regions across the country. “While India is undergoing a demographic transition, regional disparities in education mean the benefits will not be evenly spread across the country.”
The report finds that a person in an urban area has a 93 per cent greater chance of acquiring training than someone in a rural area. Hence the youth from those backgrounds that lack the facilities should be provided with them at the earliest.
While countries in the world are finding it difficult without younger populations, we are fortunate to have a good proportion of them. But the numbers will become a burden, if the youth are not used properly. Hence it is necessary to devise plans to prepare the youth from the younger days by providing all opportunities for their growth. 
With India’s diversity, resources and heritage, the youth of our nation have enormous opportunities to perform at different levels in diverse fields.  The nation will surely be able to touch newer heights at the global level when we harness the power of youth to the full extent.

References:

1.   OECD Fact book 2013, Organisation for Economic Cooperation and Development, Paris.
2.   State of the Urban Youth, India 2012:  Employment, Livelihoods, Skills, IRIS Knowledge Foundation, Mumbai, 2013 (commissioned by the  UN-HABITAT’s Global Urban Youth Research Network)

( Yuva Bharati, Vivekananda Kendra, Chennai, Mar 2014)



மன்மோகன் சிங் அரசின் வீழ்ச்சி


டாக்டர் மன்மோகன் சிங் 2004 ஆம் வருடத்தில் பிரதமராகப் பதவியேற்ற போது, நாடு முழுவதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பொருளாதார நிபுணர், பல்கலைக் கழகப் பேராசிரியர், நிதியமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை மத்திய அரசில் வகித்தவர், சர்வதேசப் பொருளாதார அமைப்புகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர், அரசியலில் எந்தக் குழுவையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாதவர் என அவருக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருந்தன. எனவே நியாயமான முறையில் திறமையாகச் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்  என்கின்ற எண்ணம் பொதுவாக  இருந்தது.

அந்த சமயத்தில் நாடு நல்ல வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. 1999 முதல் 2004 வரையான ஐந்து வருட காலத்தில் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. சாலைகளை மேம்படுத்துவதற்காக அதுவரை இல்லாத அளவு தங்க நாற்கரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தன. மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையேற்று நடத்திய ஜனதா கட்சி ஆட்சிக்கு அப்புறம், முதன் முறையாக, அடல் பிகாரி வாஜ்பாய் அரசின் கடைசி இரண்டு நிதி ஆண்டுகளில் தான் நாட்டின் நடப்புக்கணக்கில் உபரித் தொகை ஏற்பட்டிருந்தது. வழக்கமான எல்லா வருடங்களிலும் நிதிக் கணக்கில் பற்றாக்குறை இருப்பதுதான் வாடிக்கையாகும்.

எனவே அந்தக் காலகட்டத்தில்  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நமது நாடு குறித்த ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. 1998ல் பொக்ரானில் அணுகுண்டு வெடிக்கப்பட்ட பின்னர், சர்வதேச  அளவில்  பல வித தடைகளையும் மீறி வெளி நாடு வாழ் இந்தியர்கள், நமது நாட்டில் அதிகமாக முதலீடுகளை  மேற்கொண்டனர். அதன் மூலம் தாய் நாட்டின் மீது தங்களுக்கு உண்டான நம்பிக்கையை உலகுக்கு வெளிப்படுத்தினர். அதனால் நம்மை சாதாரணமான ஒரு மூன்றாம் உலக நாடாகப் பார்த்து வந்த உலக நாடுகளின் பார்வையே பெருமளவு மாறத் தொடங்கியது. அந்த சமயத்தில் நாடு காணத் துவங்கிய வேகமான பொருளாதார  வளர்ச்சி மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது.

எனவே மன்மோகன் சிங் அவர்களிடம் ஒரு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. அவர் நேர்மையானவர் மற்றும்  ஊழல் கறை படியாதவர் என்பது அவரைப் பற்றிய எண்ணத்தை மக்களிடம் மேலும் அதிகரித்தது. ஆனால் பிரதமராக இருந்த அவரது முதல் ஐந்தாண்டுக் காலத்திலேயே அவர் மேல் ஒரு வித அவநம்பிக்கை ஏற்படத் தொடங்கியது. அவர் முனைந்து செயல்பட்டுத்திய அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமும், அதைத் தொடர்ந்து தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாரளுமன்றத்தில் ஓட்டுக்காக உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்ததும் ஆட்சிக்குக் களங்கமாக அமைந்தன. அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியினரின் ஊழல்கள் அப்போதே அதிகரித்துக் கொண்டிருந்தன.  அதிகம் சம்பாதிக்க வாய்ப்புள்ள  துறைகளைக் கூட்டணிக் கட்சிகள் கேட்டுப் பெற்றுக் கொள்ளை அடித்து வந்ததை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனாலும் கூட தனிப்பட்ட முறையில் அவர் ஊழல்வாதியல்ல; எனவே மற்ற பல அரசியல்வாதிகளை விட அவர் மேலானவர் என்கின்ற எண்ணம் பெரும்பாலான மக்கள் மனதில் இருந்தது. அதனால்தான் அவரை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஒரு உறுதியில்லாத பிரதமர் என்று ஒருமுறை சொன்ன போது அந்தக் கருத்தின் ஆழத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

முதல் முறையாக அவருக்குப்  பிரதமர் பதவி கிடைத்ததே  ஒரு தற்செயலான நிகழ்வுதான். அவர் எப்போதுமே தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான கடிதத்துடன் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைப் பார்க்கச் சென்றார். அவரைச் சந்தித்து விட்டு வெளியில் வந்த பின்னர் தான் பிரதமர் பதவிக்கான மாற்று வேட்பாளர் குறித்த கருத்தையே வெளியிட்டார்.

பிரதமர் பதவியை  சோனியா காந்தி ஏற்பதில் சட்டப் பிரச்சனைகள் இருந்ததால்தான் கடைசி நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிய வந்தது. அப்போது கட்சியில் அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் இருந்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் மக்கள் செல்வாக்கு இல்லாத ஒருவரையே சோனியா காந்தி தேர்ந்தெடுக்க விரும்பினார். அதன் அடிப்படையில்தான் மக்களவையில் உறுப்பினராகக் கூட இல்லாதவரும், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாதவருமான மன்மோகன் சிங்குக்குப் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது.

தனது கட்சித் தலைமைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அனுசரணையாக நடந்து கொண்டதாலும், தனிப்பட்ட முறையில் ஊழல் புகார்கள் எதிலும் சிக்கிக் கொள்ளாததாலும் 2009ம் வருடத்தில் மக்களவைத் தேர்தல் வந்த போது மன்மோகன் சிங்கே ஆளும்  கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  எனவே காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரே மீண்டும் இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்றார்.

அப்போது மந்திரி சபையில் கூட்டணிக் கட்சிகள் தமக்கு வேண்டிய அதிக வருமானம் தரக்கூடிய துறைகளைப் பெறுவதற்கு நடத்திய பேரங்கள் அவரின் இயலாமையை முதன்முறையாக வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பின்னர் வெளிவந்த நீரா ராடியா ஒலி நாடாக்கள் மன்மோகன் சிங் அமைச்சரவை கேவலமான முறையில் எப்படி அமைக்கப்பட்டது என்பது பற்றியும்,  அதற்குத் தலைவராக விளங்கும் பிரதமர் எவ்வாறு துச்சமாக மதிக்கப்படுகிறார் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து வந்த காலங்களில் வெளி வந்த ஊழல்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இரண்டு ஜி எனப் பிரபலமாக அறியப்படும் அலைக்கற்றை ஊழல், சுதந்திர இந்திய வரலாற்றில் ஊழலுக்கான ஒரு புதிய வரலாற்றையே படைத்தது.  அது 1,76,000 கோடி ரூபாய் அளவிலான மக்களின் பணம் சம்பந்தப்பட்ட விசயம்  என்பது அதுவரை யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தொகையாகும். தொடர்ந்து வெளிப்பட்ட நிலக்கரி ஊழலில் அதை விடவும் அதிக தொகை சம்பந்தப்பட்டிருந்தது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான தேசத்தின் இயற்கை வளங்களை  மன்மோகன் சிங்  அரசு பெரிய நிறுவங்களின் சொந்த நலனுக்காகவும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கவும் துணை போனது மன்னிக்க முடியாத குற்றமாகும். நாட்டின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நேரடியாக அவற்றைச் சூறையாடியிருந்தார்கள். இவற்றுக்கெல்லாம் முன்னரே வெளிப்பட்டிருந்த காமன்வெல்த் விளையாட்டு ஊழல், பிற நாடுகளின் மத்தியில் நமக்கு அவப்பேரை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சுரேஷ் கல்மாடியும்  டில்லியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றங்கள் சாட்டப்பட்டன.

தொடர்ந்து வந்த காலங்களில் வேறு பல துறைகளிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காகத் தாங்கள் கொண்டு வந்ததாகப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும்  மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலேயே அதிக அளவில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக மத்திய அரசின் தணிக்கை துறை எடுத்துக் காட்டியுள்ளது. எனவே சுதந்திரத்துக்கப்புறம்  நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியாக மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக்காலம் அமைந்து விட்டது. 

ஊழல்கள் எங்கும் பரவியிருப்பதால் நிர்வாகம் பெருமளவு சீர்கெட்டு விட்டது. அதனால் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைப்பட்டு விட்டது. பத்தாண்டுகளுக்கு மேலாக நல்ல வளர்ச்சியைக் கண்டு வந்த பொருளாதாரம், சென்ற ஆண்டில் வெறும் 4.5 விழுக்காடு அளவே வளர்ந்துள்ளது. இந்த ஆண்டும் வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காட்டுக்கும் கீழாக இருக்குமென்று அரசின் புள்ளி விபரங்களே தெரிவிக்கின்றன.

வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தும் நாட்டில் தொழில்கள் செய்வதற்குப் போதுமான கட்டமைப்புகளை மேற்கொள்வதில் பெரிய சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தேவையான அளவுக்கு நிலக்கரி நம்மிடத்தில் இருப்பு உள்ளது. ஆனால் ஊழல் பிரச்சனைகளால் சிக்கிக் கொண்டு சரியான கொள்கைகளை வகுத்து நிலக்கரியை முறையாகப் பயன்படுத்த அரசாங்கத்திடம் திட்டமில்லை. எனவே தொழில்கள் மின்சாரமின்றித் தவிக்கின்றன.

மக்களுக்கு அதிக அளவில் வாழ்வழிக்கும் விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவை மிகுந்த சிரமத்தில் உள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்வதும் விளை நிலங்களை விட்டுப் போவதும் நாம் அன்றாடம் பேசும் தினசரி நிகழ்வுகளாக மாறி விட்டன. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திப் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய விவசாய மற்றும் உணவுத் துறைகளில் நுழையக் கங்கணம் கட்டிக் கொட்டு வேலை செய்து வருகின்றன.

அரசின் தவறான இறக்குமதிக் கொள்கைகளால் இந்தியத் தொழில்கள் பெருத்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. நம் நாட்டு சிறு தொழில் முனைவோர்களால் சுலபமாகச் செய்யப்படக்கூடிய பொருட்கள் எல்லாம் எந்த விதக் கட்டுப்பாடுமின்றி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிகளாக வந்து கொண்டுள்ளன. 2012-13 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 65000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சீனாவிலிருந்து இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு ஹோலிப் பண்டிகையில் உபயோகப்படுத்தப்பட்ட வண்ணப் பொடிகளும், வர்ணம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் சிறு குழாய்களும் 90 விழுக்காட்டுக்கு மேல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனச் செய்திகள் வந்துள்ளன. அதனால் மும்பை  உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வந்த பல நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான பேரின் வேலை வாய்ப்பு பறி போயுள்ளது. 

பல துறைகளிலும்  தொழில்களை நடத்தி வருபவர்கள் அவற்றை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். புதிய தொழில் முனைவோர் இருக்கின்ற சூழ்நிலையில் மூலதனம் போட்டு தொழில் துவங்க பயப்படுகின்றனர். எனவே நாட்டின் உற்பத்தித் துறையில் போதுமான வளர்ச்சி இல்லை. அதே சமயம் விலைவாசி  தொடர்ந்து  அதிகரித்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஒரு பொருளாதார நிபுணர் பிரதமராகப் பொறுப்பேற்று வழி நடத்தும் நாட்டில் பத்து வருடங்கள் கழித்து நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது.  மத்திய அரசின் நடப்புக் கணக்கில்   பற்றாக்குறை அதிகமாகி வருகிறது. 2013-14 ஆம் வருடத்துக்கான திட்டமிட்ட பற்றாக்குறையில் 95 விழுக்காடு, சென்ற டிசம்பர் 2013ல் நிறைவுற்ற ஒன்பது மாத காலத்திலேயே முடிந்து விட்டதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த நிதியாண்டு முடிவில் பற்றாக்குறை திட்டமிட்டதை விட மேலும் அதிகரித்து ஒரு புதிய இலக்கை எட்டுமெனத் தெரிகிறது. 

எந்த நாட்டுக்குமே அதன் அடிப்படையான அமைப்புகள் மிகவும் முக்கியமானவை ஆகும். ஏனெனில் ஆட்சியாளர்கள்  யார் வந்து போனாலும், அங்குள்ள அமைப்புகளின் வலிமையை ஒட்டியே அந்த  நாட்டின் பலம் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தியா உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு. நமக்கான கட்டமைப்புகள் பல வருடங்களாக ஏற்பட்ட அனுபவத்தில் உருவாக்கப்பட்டவை. அவற்றை முறைப்படி  காப்பாற்றி நம்பிக்கை கெடாமல்  கொண்டு செல்வது பொறுப்பிலுள்ள ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய  பணியாகும்.

துரதிர்ஷ்டவசமாக மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் முக்கிய அமைப்புகளான புலனாய்வுத் துறை, கண்காணிப்புக் குழு உள்ளிட்ட பலவற்றிலும் அரசின் தலையீடு மிகவும் அதிகரித்துப் போய் விட்டது. நாட்டின் முக்கிய ஊழல் குற்றங்களை விசாரிக்கும் மத்திய கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்புக்கு அரசால் நியமிக்கப்பட்டவரை பின்னர் உச்சநீதி மன்றம்  நீக்குகிறது. ஏனெனில் அதற்கான தகுதியில்லாதவரை பிரதமர் தலைமையிலான குழு எதிர்ப்புகளுக்கிடையிலும் தெரிந்தே நியமனம் செய்திருந்தது. மத்திய புலனாய்வுத் துறை எந்த வித சுதந்திரமுன்றி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூண்டுக்கிளி என நீதி மன்றத்தால் வர்ணிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் கண்காப்பில் இயங்கும்  வழக்கு விசாரணையில் பிரதமருக்கு மிகவும் வேண்டியவரான மத்திய சட்ட அமைச்சர் தலையிடுகிறார். அலைக்கற்றை ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்றக் குழு விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்படுகிறது. அந்தக் குழுவின் முன் சென்று நிதியமைச்சரும் பிரதமரும் பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைக்கின்றனர்.  அவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. அதனால் பாராளுமன்றக் குழுவுக்கான மரியாதை குறைந்து போகிறது. மத்திய அரசின் தணிக்கை அமைப்பான சிஏஜி,  அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டிய போது மத்திய அமைச்சர்களாலேயே சிறுமைப் படுத்தப்படுகிறார்.

எனவே மன்மோகன் சிங் அரசு தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அரசு அமைப்புகளின் செயல்பாடுகளைக் குலைப்பதற்கும் அவற்றை கேவலப்படுத்துவதற்கும் பலவிதமான  நடவடிக்கைககளை  மேற்கொண்டு வருகின்றன.  இது நமது நாட்டின் ஜனநாயக மாண்புகளுக்கு ஒரு அரசாங்கம்  செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். மேலும் நிலக்கரித் துறையில் பெரும் ஊழல்கள் பிரதமர் அந்தத் துறைக்குப் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் தான் நடைபெற்றுள்ளன. எனவே அவர் நேரடியாக அவற்றில் பலன் பெறாமல் விட்டிருந்தாலும், ஊழல்களுக்குத் துணை போயிருப்பதாகவே கருத வாய்ப்பிருக்கிறது.

எனவே அவரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர் திருவாளர் பரிசுத்தம் என்கின்ற நம்பிக்கை மக்களில் பெரும்பாலானவர்களுக்குப் போய் விட்டது.  மேலும் சுதந்தர இந்தியாவின் பெரும் ஊழல்கள் அதிகம் மிக்க அரசுக்கு அவர்தான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் என்கின்ற எண்ணம் வலுப்பெற்று விட்டது.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நாட்டுக்குப் பல தளங்களிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் தலைமையில் பொருளாதாரம் நல்ல நிலையை எட்டும் என்கின்ற கருத்து முற்றிலும் தவறாகப் போய்விட்டது. 2004 ஆம் வருடத்தில் அவர் பொறுப்பேற்ற போது நாட்டில் நிலவிய அபரிமிதமான நம்பிக்கையை  இப்போது அவநம்பிக்கையாக மாற்றி விட்டார். அதனால் நமது தேசத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றம் வழியறியாமல் தடைப்பட்டு நிற்கிறது.

அவரது ஆட்சிக்கால ஊழல்கள் சர்வதேச அளவில் நமது நாட்டுக்கு ஒரு பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன. அதனால்  நாட்டு மக்களுக்கு அரசியல் அமைப்புகளின் மேல் நம்பிக்கை குலைந்து வருகிறது. மேலும் அரசு அமைப்புகளின் செயல்பாடுகளில்  இந்த அரசாங்கத்தின்  தலையீடுகள், அவற்றின் சுதந்தரத்தைக் கெடுத்து அவற்றுக்குண்டான மரியாதையைக் கெடுத்து விட்டன.

மேலும் மன்மோகன் சிங் அவரது அண்மைக் கால செயல்பாடுகள் மூலம் அவருக்கிருந்த தனிப்பட்ட மதிப்பையும் கெடுத்துக் கொண்டு வருகிறார். அவரின் அமைச்சரவை ஒரு அவசரச் சட்ட ஆணையை பிறப்பிக்கிறது. அதை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக அவமதித்துக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட வேண்டும் என்கிறார். அவ்வாறு அவர் அமைச்சரவையின் முடிவை அவமதித்தற்குப் பிரதமர் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.

பிரதமர் என்பவர் மக்களிடத்தில் அவ்வப்போது ஊடகம் மூலமாகப் பேச வேண்டும். முக்கியமான சமயங்களிலாவது மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் இவர் கடந்த பத்து வருட காலத்தில் மூன்று முறை மட்டுமே பேசியுள்ளார். நமது எல்லைகளில் பணி புரியும் இராணுவ வீரர்கள் அநியாயமாகக் கொல்லப்படும்போதும், அண்டை நாடுகள் நமது எல்லைக்குள் ஊடுருவும்போது கூட அவர் எதுவும் கருத்து சொல்வதில்லை.

சுமார் ஆறு வருடம் கழித்து அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவரை ஒரு சாதாரண அரசியல் வாதியாக வெளிப்படுத்தின. மூன்று முறை மக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பிரதமராக வந்தால் நாட்டுக்கு விபத்தாக முடியும் என மன்மோகன் சிங் அறிவித்தார். மேலும் குஜராத் கலவரம் பற்றி உச்ச நீதி மன்றக் குழுவும் நீதிமன்றமும் அளித்த தீர்ப்புக்கு மாற்றான கருத்தை வெளியிட்டார். நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒரு பிரதமர் அவ்வாறு பேசியது அவரது பொறுப்புக்கும் தனி மனித நாகரிகப் பண்புகளுக்கும் முரணாக அமைந்திருந்தது.

எனவே மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐந்து வருட ஆட்சி என்பது நமது நாடு சுதந்தரம் அடைந்த பின் ஏற்பட்ட  துரதிஷ்டவசமான காலமாகவே அமைந்துள்ளது. அதற்குத் தலைமை தாங்கி  நடத்தி வரும் அவர் மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்டவராக உள்ளார்.


( ஓம் சக்தி, மார்ச் 2014)

சுவாமி விவேகானந்தருடைய பொருளாதாரக் கருத்துக்களின் இன்றைய அவசியம்


சுவாமி விவேகானந்தர் பன்முகத் திறமைகள் கொண்டவர் என்பது அவரைப் பற்றி நன்றாக அறிந்த அனைவருக்கும் தெரியும். ஒரு புனிதமான  துறவியாக, மகத்தான தேச பக்தராக, மிகச் சிறந்த சிந்தனையாளராக, உயர்ந்த கலாசாரத் தூதுவராக, ஏழைகளுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் ஓயாது குரல் கொடுத்த சமதர்ம வாதியாக, தலை சிறந்த நிறுவன அமைப்பாளராக, நிர்வாகத் திறமைகள் மிகுந்த தலைவனாக, மனித அவலங்களுக்கு எதிராய் அறைகூவல்  கொடுத்த  சீர்திருத்த வாதியாக,  தீர்க்க தரிசியாக வாழ்ந்து காட்டியவர் அவர்.

அதே சமயம் அவரைப் பற்றி விபரமாகத் தெரிந்தவர்கள் கூட முழுமையாக உணர்ந்து கொள்ளாத சில அம்சங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமானது பொருளாதாரம் குறித்த அவரது கருத்துகளாகும். அவரது பொருளாதாரக் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் தனித் தன்மை வாய்ந்ந்தவை. காலத்தை மீறிய தாக்கத்தைக் கொண்டவை. மக்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் அமையப் பெற்றவை.  

சுவாமி விவேகானந்தர் அக்காலத்திய பிரபலமான சர்வதேச பொருளாதர நிபுணர்கள் பலரின் கோட்பாடுகளை நன்கு படித்திருந்தார். நவீனப் பொருளாதாரத்தில் நுணுக்கமான விசயங்களைப் பற்றி நிபுணர்களிடத்தில் எடுத்துச் சொல்லும் அளவுக்கு அவருக்கென்று தனிப்பட்ட சிந்தனைகள் இருந்தன. 1893 ஆம் வருடத்திலேயே அமெரிக்காவில் அறிஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெள்ளி நாணய முறை பற்றித் தன்னுடைய கருத்துகளை எடுத்து வைத்தார்.

ஆனால் அவர் பெரும்பாலான பொருளாதார வாதிகளைப் போல வசதியான அறைகளில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு கருத்துக்களை உதிர்த்தவர் அல்ல. அவரது காலத்தில் இந்திய நாடு காலனி ஆட்சியின் கீழ் ஒரு அடிமை நாடாக மிகவும் மோசமான கால கட்டத்தில் இருந்தது. இந்திய வரலாற்றின் மிக வேதனையான காலம் என்று அதைச் சொல்ல முடியும். பாரம்பரியமாகச் சிறந்து விளங்கி வந்த  தொழில்களும் வாழ்வாதாரங்களும் ஆங்கில ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டிருந்தன. நாட்டின் பல பகுதிகளில் பசியும் பட்டினியும் மக்களை வாட்டிக் கொண்டிருந்தன. 1875 முதல் 1900 வரை மட்டும்  நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டிருந்தன. 
 
அந்த சமயத்தில்தான் சுவாமிகள் நாடு முழுவதும்  பயணம் மேற்கொண்டார். அப்போது விவசாயி, தொழிலாளி, அரச குடும்பத்தவர், சாமானியர் எனப் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை நேரில்  கேட்டறிகிறார். பின் வந்த காலங்களில் பல வெளிநாடுகளுக்குச் சென்ற போது அங்கு நிலவிய  சமூக, பொருளாதாரத் தன்மைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்கிறார். பரவலான அந்த நேரடி அனுபவங்கள் மூலம் தனது புத்தி கூர்மையைக் கொண்டு பொருளாதாரம் குறித்த பார்வையை விசாலமாக்கிக் கொள்கிறார். .

மேலும் இந்தியா மற்றும் பிற நாடுகளின் கலாசார, பண்பாட்டு வாழ்க்கை முறைகள் மற்றும் வரலாறுகள் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவின் மூலம்   பொருளாதாரம் குறித்து ஒரு மிகத் தெளிவான பார்வையை வகுத்துக் கொள்கிறார். எனவே அவரது பொருளாதார சிந்தனைகள் ஒட்டு மொத்த முன்னேற்றம்,  தேச நோக்கில் வளர்ச்சி, அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் நோக்கு, உயர் நெறிகள் ஆகியவற்றை மையமாக வைத்து அமைந்துள்ளன. அதனால் அவை இன்றைக்கும் பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் உள்ளன.

பொதுவாக ஆன்மிகத் தலைவர்கள் பொருளாதாரம் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் சுவாமி விவேகானந்தர் பொருளாதார முன்னேற்றமே வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் அடிப்படையானது என எடுத்துச் சொன்னார். மேலும் பொருளாதாரத்தின் வெவ்வேறு துறைகளைப் பற்றியும் தெளிவான கருத்துக்களை முன் வைத்தார்.

பசிப்பிணி ஒழிய வேண்டும்; உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளான கல்வி, முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஆகியன  அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; அவற்றைப் பூர்த்தி செய்வது தான் மற்ற எல்லாவற்றையும் விட தேசத்துக்கு அத்தியாவசியாமான குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்திச் சொன்னார். அவர் அன்று சொன்ன வார்த்தைகள் என்றைக்கும் பொருந்தக் கூடியவையாகும்.

ஏனெனில் வறுமையைப் போக்கி அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத எந்தப் பொருளாதார சிந்தனை முறையும் அறம் சார்ந்ததல்ல.  அறமில்லாத எந்தவொரு முறையும் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதை  உலக வரலாறு எடுத்துக் காட்டுகிறது. 1980 களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிச சித்தாந்தம் தோல்வியடைந்தது அதன் பின்னர் சந்தைப் பொருளாதாரக் கருத்துக்களே உலக முழுமைக்கும் பொருத்தமானது என அமெரிக்கா மற்றும் அதே வித  சிந்தனையைக் கொண்ட  நாடுகள் அறிவித்தன. 

 ஆனால் அண்மைக் காலமாக மேற்கத்திய சந்தைப் பொருளாதார முறைகள் அவர்களின் நாடுகளிலேயே பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. மேலும் உலகின் பிற பகுதிகளிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு, முறையில்லாத வளர்ச்சி, பெரும்பான்மை மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் செயல்பாடுகள், சுற்றுச் சூழல் சீரழிவு என்பதெல்லாம் அவர்கள் சித்தாந்தத்தின் வெளிப்பாடு என்பது தெளிவாகி வருகிறது.

மேற்கு நாடுகளின் பொருளாதாரத்துக்கு சரியான ஆதாரமில்லை எனவும் அதனால் அவர்களின் வளர்ச்சி நிலைத்த தன்மையுடையது அல்ல எனவும் சுவாமி விவேகானந்தர் அப்போதே அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர்களின் வாழ்க்கை முறையில் ஆன்மிகமும் உயர் நெறிகளும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். நூறு வருடங்களுக்கு மேலான பின்னர் அந்தக் கருத்துகளின் ஆழத்தை இப்போது தான் அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். அவற்றை அந்நாட்டு சிந்தனையாளர்கள் நினைவு படுத்துகின்றனர்.  
 
மேலும் பொருளாதார முன்னேற்றம் என்பது ஏழைகளின் குடிசைகளிலிருந்தும் நலிவடைந்தவர்களின் வாழ்விலிருந்தும் வர வேண்டும் என அவர் எடுத்துச் சொன்னார். ஏனெனில் குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டுமே வசதியைப் பெருக்கும் முறை அனைவருக்கும் பயனளிப்பதாக அமையாது. அது சமூகத்துக்கும் கெடுதலாக அமையும். எனவே வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும்.  அதைத் தான் இப்போது பொருளாதார நிபுணர்கள்  ’உள்ளடிக்கிய வளர்ச்சி’ ( inclusive growth)  என்று சொல்கின்றனர்.

இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் அவர் சரியான கருத்துக்களைக் கொண்டிருந்தார். இந்திய நாடு தொன்மைக் காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகில் சிறப்பாக விளங்கி வந்ததையும் அந்நிய ஆட்சியாளர்களால் சிதைக்கப்பட்டதையும் அவர் தெளிவாக அறிந்திருந்தார். எனவே இந்தியப் பொருளாதாரத்தைச் சொந்த முயற்சிகள் மூலமே சீரமைக்க வேண்டும் என விரும்பினார்.

அதற்காகப் பல விசயங்கள் குறித்தும் சிந்தித்துத் தனது கருத்துகளை எடுத்து வைத்தார். விவசாயத் துறையைப் பொருத்த வரையில் இந்தியா பல அனுகூலங்களைப் பெற்ற நாடு. பாரம்பரியாகவே விவசாயத்தில் மிகச் செழிப்பாக விளங்கி வந்த பகுதி. இயற்கை அமைப்பு, தட்ப வெட்பம், உழைக்கும் மக்கள், பாரம்பரியம் ஆகியன எல்லாம் நமக்கான சிறப்புகள். ஆனால் ஆங்கிலேயர்கள் விவசாயத்தைப் பெருமளவு சீரழித்திருந்தனர்.

எனவே பொருளாதாரத்தில் நமது நாட்டுக்கென உள்ள விவசாயம் சார்ந்த தனித்தன்மைகள் குறித்து கூச்சப்பட வேண்டியதில்லை என்பதை எடுத்துச் சொன்னார். பொருளாதாரம் என்றாலே விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதே சரியான அணுகுமுறை என்பது போன்ற எண்ணம் நவீன பொருளியல் வாதிகளால் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பல வருடங்களாவே நமது நாட்டில் விவசாயத்துறைக்குப் போதுமான கவனம் கொடுக்கப்படுவதில்லை. எனவே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தங்களின் தொழிலை விட்டு வெளியேறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

விவசாயத் துறையை ஒதுக்குவதால் ஏற்படப் போகும்  விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில் உணவுத் தேவைகளுக்காக அடுத்த நாடுகளைச் சார்ந்திருப்பது ஆபத்தில் போய் முடியும். மேலும் உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள நமக்குப் போதிய அளவு உணவு தயாரிக்க எந்த நாடும் இல்லை.

தொழில் துறையில் இந்தியா வளர வேண்டும் எனவும்,  அதற்காகக் கல்விக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்களுக்குத் தொழிற்கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் விரும்பினார். மேலை நாட்டுத் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், பல நாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் பல சமயங்களில் எடுத்துக் கூறினார். கடந்த அறுபது ஆண்டுகளில் இந்தியா முன்னேறி வருவதற்கான காரணம் நமது மக்கள்  தங்களின் கடுமையான உழைப்பினால்  தொழில்களைப் பரவலாக்கியது தான். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் நமது கிராமிய மற்றும் கலைத் திறன் நிறைந்த பொருட்கள் மேலை நாடுகளில் விற்கப்பட வேண்டும்; அதன் மூலம் இந்திய கிராமங்களும் சிறு தொழில்களும் வளர வேண்டும் என அவர் விரும்பினார். எனவே நகரத்து இளைஞர்களை அவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். வாரணாசி சேலைகளும் மூங்கில் பொருட்களும் வெளிநாட்டுத் தெருக்களில் விற்க வேண்டும் எனக் கனவு கண்டார்.

அந்தக் கருத்தின் ஆழத்தை  இந்தியக் கலை மற்றும் கிராமியப் பொருட்களுக்கு உலக முழுவதும் இன்றைக்கும் இருக்கும் வரவேற்பைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.  இன்று வெளிநாடுகளின் பல நகரங்களில் நமது துணிகளும், கிராமியப் பொருட்களும் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால் இன்னமும் கூட நமது கலை நயமிக்க பல பொருட்களின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளாமலும், அவற்றை முறையாக உற்பத்தி செய்து நமது நகரங்களிலும் வெளி நாடுகளிலும் விற்கப் போதுமான முயற்சிகளை எடுக்காமலும் நாம் இருக்கின்றோம். மேலும் அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.  இது உடனடியாகக் கவனம் எடுக்கப்பட வேண்டிய விசயமாகும்.

பிற நாடுகளைச் சாராமல் நாடு முன்னேற்றமடையத் தேவையான  நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என சுவாமிகள் வலியுறுத்தினார். 1893 ஆம் வருடம் கப்பலில் அமெரிக்கா செல்லும் போது தொழிலதிபர்  ஜாம்ஜெட்ஷி டாடாவுடன் நடந்த உரையாடலில்  இறக்குமதியைத் தவிர்த்து உள்நாட்டில் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் நாட்டுக்கு விளையக் கூடிய நன்மைகளை விளக்கியது அவரது கருத்துகளின் ஆழத்தை மட்டுமல்லாமல், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள வேகத்தையும் காண்பிக்கின்றது.

சென்ற வருடத்துக்கு முந்தைய பத்து வருட காலத்தில்  இந்தியப் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சியைக் கண்டது. அதனால் சராசரி வளர்ச்சி எட்டு விழுக்காடு அளவு இருந்தது. ஆனால் அது சென்ற வருடம் குறைந்து ஐந்து விழுக்காட்டைத் தொட்டது. நடப்பு வருடமும் குறைந்த அளவு வளர்ச்சிதான் இருக்குமெனக் கணிக்கப்படுகிறது. வளர்ச்சி குறைந்ததற்கான முக்கிய காரணமே அளவுக்கதிகமான இறக்குமதியாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதியைக் கட்டுப்படுத்தாமல் உள்நாட்டு உற்பத்தியைத் தவிக்க விட்டதனால் வேகமாக வளர்ந்து வந்த பொருளாதாரம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 

நமது நாடு தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என நாம் அடிமையாக இருந்த காலத்திலேயே சுவாமி விவேகானந்தர் எடுத்துச் சொன்னார். மேற்கத்திய நாடுகள் கடந்த இருநூறு வருடங்களாக தங்களின் சுய லாபத்திற்காக பிற நாடுகளை மையமாக வைத்தே பொருளாதாரக் கருத்துக்களை அமைத்துக் கொண்டு வருகின்றன. அதற்கேற்றவாறு கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.

அந்த வகையில் 1980 களில் உலக மயமாக்கல் கோட்பாட்டை மையமாக வைத்து உலக முழுவதும்  ஒரே சந்தை எனச் சொன்னார்கள். அதனால் சுலபமாகத் தங்களின் பொருட்களை பிற நாடுகளுக்கு விற்க வழி செய்தனர்.  தொடர்ந்து பிற நாடுகளும்  தமது பொருட்களையும் சேவைகளையும் குறைந்த செலவில் கொடுக்க ஆரம்பித்த பின்னர் அவர்களுக்கே பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே இப்போது உள்நாடு சார்ந்த வளர்ச்சி பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர்.

பொருளாதாரக்  கோட்பாடுகள், செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் என்றாலே அவை எல்லாம் மேற்கத்திய நாடுகள் சம்பந்தப்பட்டவை என்கின்ற எண்ணம்  பரவலாக எல்லோர் மனத்திலும் ஆழமாக உள்ளது. ஆனால் உண்மை என்ன? இந்தியாவுக்கெனப் பல்லாயிரம் ஆண்டு காலப் பொருளாதார வரலாறு உள்ளது.

கடந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு, பொது யுக தொடக்க காலத்தில், உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கினைத் தன் வசம் வைத்து இந்தியா மிகப் பெரிய வல்லரசாக விளங்கி வந்தது. அப்போது முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும் உலகின் இரு பெரும் செல்வந்த நாடுகளாக இந்தியாவும் சீனாவும் விளங்கி வந்துள்ளன. இந்த உண்மைகளை எல்லாம் ஆங்கஸ் மாடிசன் உள்ளிட்ட வரலாற்றாசிரியர்கள் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர்.  

இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைக் காலனிகளாக்கி அவற்றைச் சுரண்டித் தங்களின் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டன. அவையெல்லாம் உலகப் பொருளாதார வரைபடத்திலேயே பதினாறாம் நூற்றாண்டில் தான் எட்டிப் பார்க்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் மேலெழுந்து வந்த போது உலகின் பிற பொருளாதார முறைகளை அழித்தனர். அதனால் தொன்மையான பொருளாதாரமான இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் இயற்கையான செயல்முறைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தொடர்ந்து அவர்கள் தங்களை முதன்மைப் படுத்தி வரலாற்றைத் திரித்து எழுதினர்.

அதனால் அவர்களின் பொருளாதாரச் சிந்தனைகளும் செயல் முறைகளுமே உலக முழுமைக்கும் பொதுவானதாக ஆக்கப்பட்டது. எனவே அங்கு நிலவிய சூழ்நிலையை வைத்து அவர்களால் உருவாக்கப்பட்ட முதலாளித்துவமும் சோசலிமுமே உலகின் இரு பெரும் பொருளாதார சித்தாந்தங்களாக உருவாகின. பின்னர் இருபதாம் நூற்றாண்டில் உலகின் முதல் நிலைப்  பொருளாதாரமாக அமெரிக்கா தலையெடுத்த பின்னர், அவர்களின் கருத்துக்களும்  கோட்பாடுகளும் முக்கியத்துவம் பெற்றன.

எனவே நமது நாட்டிலும் பெரும்பான்மையான அறிவு ஜீவிகள் மற்றும் மெத்தப் படித்த மேதாவிகள் வெளிநாட்டுக் கருத்துக்களையும் வழிமுறைகளையுமே சரியென நம்புகின்றனர். இந்தியாவின் பொருளாதார வரலாறு மற்றும் சிறப்பான செயல்பாடுகள் பற்றி அவர்களுக்குத்  தெரிவதில்லை. ஆகையால் சுதந்தரத்துக்குப் பின்னரும் மேற்கத்திய சித்தாந்தங்களை ஒட்டியே தொடர்ந்து பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

1950 கள் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேல் சோசலிச சித்தாந்தமே அரசின் கொள்கைகளுக்கு ஆதாரமாக இருந்தது. பின்னர் அந்தக் கோட்பாடு உலக அளவில் பெரும் தோல்வியைத் தழுவியது. நமது நாட்டுப் பொருளாதாரத்திலும் சிக்கல்கள் எழுந்தன. அதன் பின்னர் உலக மயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரக் கருத்துக்களை ஒட்டிக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதனால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அடிப்படைத் தொழில்களான விவசாயம், சிறு தொழில்கள் ஆகியன பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளன. ஒரு பக்கம் நுகர்வுக் கலாசாரம் அதிகரித்து இன்னொரு பக்கம்  வேலையின்மையும்  வறுமையும் நிலவி வருகிறது.

2008 ஆம் வருடத்தில் உலகப் பொருளாதாரத்தில் பெரிய  நெருக்கடி ஏற்பட்டது. அதனால் மேற்கத்திய மற்றும் பணக்கார நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இன்னமும் முழுமையாக மீண்டு வர முடியவில்லை. மீள்வதற்கான சரியான வழிகளும் அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே அவர்களின் பொருளாதாரச் சிந்தனைகள் தோல்வியடைந்து விட்டதாக அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

ஆனால் இந்த சமயத்திலும் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில்  வலுவான அடிப்படைகளுடன் உள்ளது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி அரசின் அணுகுமுறைகளை மீறியதாக உள்ளது என நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். தவறான கொள்கைகள், மேல் மட்டத்தில் குழப்பங்கள் எனப் பல பிரச்னைகளையும் மீறி பொருளாதாரம் செயல்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் நமது மக்களின் கடின உழைப்பு, அதிக சேமிப்புகள், குடும்ப அமைப்பு முறை, வளர்ச்சிக்கு ஏதுவான பழக்க வழக்கங்கள் மற்றும் அவற்றையெல்லாம் தாங்கிப் பிடிக்கும் நாட்டின் சமூக கலாசார அடிப்படைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாடு அதிக வளர்ச்சியடைந்து போதிய  முன்னேற்றம் பெறுவதற்குத் தேவையான வளங்களும் வாய்ப்புகளும் நம்மிடமே நிறைந்துள்ளன. அப்படியிருந்தும் நாம் முக்கிய பிரச்னைகளைக் கூடத் தீர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை தேசத்தின் அடிப்படையில் வகுத்துக் கொள்ள முனையாமல் இருப்பது தான். அதைத் தான் சுவாமி விவேகானந்தர், “ எனது இலட்சியம் தேச நோக்கில் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் முன்னேற்றம்” என்று சொன்னார்.

சுவாமி அவர்களின் கருத்தை அண்மைக் காலமாக உலக முழுவதும் நிகழ்ந்து வரும்  மாற்றங்கள் உறுதிப்படுத்துகின்றன. நமது நாட்டுக்குள்ள வளங்களையும் அடிப்படைகளையும் கொண்டு நம்மால்  அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பெரிய வளர்ச்சியைக் காண முடியும். மேலும் உலகின் பிற நாடுகளுக்கும் சரியான வழிமுறைகளைக் காட்ட இயலும்.

எனவே சுவாமிகளின் கருத்துகள் முன்பை விடவும் இப்போது அவசியமாகின்றன. அதன்படி தேச நோக்கில் நமக்குத் தேவையான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் வகுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் போது சுவாமி விவேகானந்தர் விரும்பிய படி பாரத தேவி  அரியாசனத்தில் அமர்ந்து உலகுக்கு வழி காட்டும் நிலையை நம்மால் உருவாக்க இயலும்.

( ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் சிறப்பிதழ், ஸ்ரீ இராமகிருஷ்ணா மடம், சென்னை, டிச.2013 )    

   


Rebuilding India 6


Swami Vivekananda’s economic thoughts offer many valuable lessons

For every country, the central objective of economic principles should be the welfare and progress of all sections of people. The ideas, approaches and policies of each country should be based on its   fundamentals and ground realities. They should take into account the nature, background, experiences and potential of the people that comprise the nation.

It is all the more true for a country like India with a long history and unique backgrounds. But unfortunately the ruling establishment and the policy making circles are not aware of the realities and the functioning of the vast sections of our society. The elite and the educated sections coming out of universities know only the western concepts and theories taught to them in their class rooms.

The education system introduced by the British does not provide any scope to learn the background and functioning of our economy. As a result only those who have the practical exposure and knowledge about the unique functioning systems are able to understand the Indian economy.

Swami Vivekananda’s long travels across the nation and other parts of the world, his personal interactions with diverse sections of people and understanding of the history and functioning of societies provided him an opportunity to develop ideas based on the realities. His ideas and prescriptions are very useful to us even after more than a century. 

Swami Vivekananda believed that the well-being of the universe should be the guiding factor for all the economic activities of the government as well as the individuals. No economist in the world has ever prescribed such a noble motive as the basis for economic activities. To quote: “The Vivekananda doctrine is firm in the belief that the spirit of universal well-being should be the guiding force behind the economic actions of both the government and the individuals.” 1

As for India, Swamiji was very clear that improving the living standards of the masses was the top priority. He wanted development involving all sections of the society. He said:  "Let New India arise- out of the peasants' cottage, grasping the plough; out of the huts of the fisherman, the cobbler and the sweeper. Let her spring from the grocer's shop, from besides the oven of the fritter-seller. Let her emanate from the factory, from marts and from markets. Let her emerge from groves and forests, from hills and mountains." 2

Swami Vivekananda had original ideas for the different sectors of the economy. Take for example agriculture which is recognized as the primary sector in the economy. It is the basis for all the other economic activities, as it provides the most basic necessity of the human beings, namely food.

But unfortunately it is not given the required importance during the recent periods as modern economics assigns more emphasize to the other sectors. The financial and speculative fields dominate the economic discourse more than the productive areas. As a result the agricultural sector on which about sixty per cent of the population depends remains neglected.

Swami Vivekananda emphasized the importance of agriculture for India and underlined that the nation should not hesitate to make use of its strengths in the field.  Swamiji noted that “Indians must not shy off from the unique characteristics of being an agricultural economy.”3 Quoting Swami Vivekananda, Ghosh writes: “Few people in India sincerely think about this matter. This has happened due to our education system. But he thinks that proper development of agriculture is needed for the economic development of India.” 4

India has inherent strengths in agriculture, which other countries lack. She has a long history of superior performance and achievements. Nature has endowed the nation with rich lands, adequate water sources and sunshine throughout the year. Besides, we have hardworking population possessing generations of the traditional knowledge systems in the field. 

India is a huge nation with the second highest population in the world. Food security is very significant for the nation   in the contemporary context when one cannot depend on other countries for food. Besides, there is no other nation in the world which can provide food for one sixth of the humanity. Hence agriculture is very critical for India. Swami Vivekananda’s thoughts relating to agriculture assume importance in the present period, when thousands are farmers are committing suicides every year and it is   fast losing respect due to the wrong approaches of the policy makers over the years.

Swamiji was also aware of the need for the development of the   industrial sector. With this view, he encouraged the promotion of industries in all possible ways. He discussed about industries in India with several persons on different occasions, both in India and abroad. Besides, he supported the small scale and cottage industries.
He urged the youngsters from the urban areas to go and learn the traditional and artistic work in the rural areas. He said: “Go, and see, even now in the distant villages, the old woodwork and brick work. The carpenters of your town cannot even turn out a decent pair of doors. Whether they are made for a hut or mansion is hard to make out! They are only good at buying foreign tools, as if that is all carpentry! Alas! That state of things has come upon all matters in our country. What we possessed as our own is all passing away, and yet, all that we have learnt from foreigners is the art of speechifying [sic]” 5
The essential requirement for a good economy is the overall development of different sectors and the existence of balance among them.  Swamiji realized the need for this balance.  Ghosh notes: “He was aware that in a developing nation, the primary need for a balance growth was to establish some sort of concordant relation between agriculture and industry.”6    
Swami Vivekananda emphasized the need to develop our own methods to solve India’s problems. He said: “Open your eyes and see what a piteous cry for food is rising in the land of Bharata, proverbial for its wealth! Will your education fulfill this want?  Never. With the help of Western Science dry yourselves to dig the earth and produce food-stuffs – not by means of mean servitude to others- but by discovering new avenues to production, by your exertion aided by Western science. Therefore, I teach the people of this country to be full of activities, so as to be able to produce food and clothing for themselves.” 7  
Swamiji advocated development based on Indian ethos and realities. To quote: “There, in Japan, you find a fine assimilation of knowledge, and its indigestion, as we have here. They have taken everything from the Europeans, but they remain Japanese all the same, and have not turned European; while in our country, the terrible mania of becoming westernized has seized upon us like a plague.” 8
Thus Swami Vivekananda’s thoughts on economics offer us many valuable lessons for rebuilding India. 
References  
1.    Ghosh, Sarup Prasad, Swami Vivekananda’s Economic Thought in Modern International Perspective, The Ramakrishna Mission Institute of Culture, Kolkatta, 2010, p.526
2.       Swami Vivekananda, Complete Works, Vol. 7, No.1, Advaita Ashrama, Calcutta, 1992, p.327
3.    Swami Gamvirananda quoted in Ghosh, op.cit.,  pp. 52-53
4.    Ghosh, op.cit., p.53
5.     Swami Vivekananda, Complete Works, Vol.5 No.1, Advaita Ashrama, Calcutta, 1992, pp. 474-5
6.    Ghosh, op.cit., p.136
7.    Swami Vivekananda, op.cit., Vol.7, No.1, p.182
8.    Swami Vivekananda, op.cit., Vol. 5, No.1, p.372

 ( Yuva Bharati, Vol 41, No 5, Dec. 2013)