Success of Kite Industry and the Gujarat Model

  

For the past few months, particularly after the announcement of Narendra Modi as the prime ministerial candidate by BJP, discussions regarding the Gujarat model of development started seriously in public. Though the main participants in this exercise continue to remain the political parties, a few internationally known economists, besides the analysts and others, have been voicing their opinions.  

But more often the exercise has turned into a debate between a few numbers connected with the Gujarat economy and that of the other states in the country. When Amartya Sen, Jagdish Bhagwati and Arvind Panagariya got involved in it, it became a fight for their known ideological positions. Usually the critics identify Modi with “big business”, citing the Vibrant Gujarat summits that involve high profile industrialists.

But they all seem to miss one important point. What is the essence of the Gujarat model? Any economic model would prove to be ineffective if it does not provide adequate space for all the different segments of the society. In fact, the state should concentrate more on the development of the weaker and marginalised sections.

Indian economy is unique for many reasons. The unorganized sector plays a dominant role and is critical to our nation in terms of its contribution, employment and entrepreneurship. Unorganised sector includes the micro, small, medium and cottage units. This sector contributes the largest share to the national income. It is also the place where the less privileged and the ordinary sections of the society promote and operate their ventures. Economic Survey 2005 released by the Government of India notes that there were around 42 million enterprises in the unorganised sector, functioning across the country. 

It is in this connection that the recent discussions on the Gujarat kite industry becomes important. Usually the unorganized sector businesses do not get the attention of the higher authorities and the policy making circles, both at the state and central levels. In the same way, the Gujarat kite industry also remained unnoticed till a decade back.  

Kites play an important role in the lives of Gujaratis. Uttarayan is the annual event when the sun enters the northern orbit. It is celebrated in the state with much fanfare by flying kites. There are other festive occasions such as Gokulashtami, when kites are in demand.  

Muslims dominate the industry, particularly kite making. Women play the major role, with their involvement around 70 per cent or even more. Besides, this is an industry where both the Hindus and Muslims work together in close coordination. Hindus are slightly higher in the retail segment of kite business.

Around 2003, it was estimated that there were one lakh families directly employed in the business. Kite making is basically a home based activity involving the family members. The people in the industry were facing difficulties, as many other unorganised businesses in the country. Besides, the people engaged in the industry were also worried about the declining popularity of kites among the younger generation.

It was at this stage Narendra Modi, as the Chief Minister, swung into action. He invited those who were engaged in studies relating to the local industries from Tamil Nadu to study the kite industry and suggest plans for its promotion. A team of experts started working with the relevant authorities during 2003. Reputed agencies undertook the survey of the industry visiting various places where kite related activities were going on.

Strategies were formulated for both the short and the long terms. As a follow up, a workshop involving all the stakeholders in the industry was organised during Dec.2013.  The representatives of the manufacturers, retailers, wholesalers, NGOs, financial institutions, women and minority development bodies and kite experts at the national and international levels were invited for the programme. Besides, the concerned officials and Ministers also attended the workshop. It was meant for exchange of opinions and exploring new avenues.

While inaugurating the workshop, the Chief Minister announced that he would take all possible steps to take the industry forward to the higher levels. He also said that policies would be framed for the economic development of craftsmen. The workshop discussed various aspects related to the kite industry.

Issues relating to production, finance, marketing, raw materials, designing, exports and advertising were taken up for presentation. Apart from the experienced industry representatives, professional experts from reputed institutions and the administrators in banking, women and minority development organisations shared their views.

Ordinary people from the industry voiced their difficulties and explained their problems to the higher authorities directly in the presence of many others. It was also an occasion for all those who make policies to understand the functioning of the industry. Moreover, the people from the industry got an opportunity to listen to various experts, professionals and well-wishers. They were able to know the schemes available and get new insights for improving their business.

Since then the Gujarat Government has taken several measures to develop the industry over the last ten years. The crucial issues raised by the stakeholders during the study and later at the workshop have been addressed. Manufacturing of kites was covered under the cluster development scheme for cottage and rural industries announced during 2003-04. The Government took up training to those engaged in trade, besides helping the industry to make innovations.

It was suggested to the Government to organize kite festivals in different parts of the state to create an interest about kites among people. Accordingly the Government has been organizing festivals in many parts of the state. Besides, such festivals were also organized in Delhi and Mumbai on the theme, ‘Chalo Gujarat’. 

After ten years now, the turnover of the industry has crossed Rs.700 crores. It is a remarkable journey from Rs.35 crores during 2001-02. This is perhaps the first ever initiative taken by a state Government in independent India to successfully develop a business run by the ordinary and less educated sections of the society.

Narendra Modi has succeeded in making kites a symbol of Gujarat. Kites have also emerged as a symbol of the growth of the unorganized and cottage industries in the state. It signifies an inclusive model of growth which the other states in the country should take note of.


All round improvement involves the economic development of all the segments of the society. Modi is aware of this and that is the reason why he has been concentrating on the development of different sectors of the economy, involving diverse sections of people. The essence of the Gujarat model lies in this approach. 

( Centre Right India, May 4 2014) http://centreright.in/2014/05/success-of-kite-industry-and-the-gujarat-model/#.U2W_U9ySySo


பொருளாதார வரலாறு குறித்த இந்தியர்களின் அறியாமை


தேர்தல் காலங்களில் பலவிதமான விசயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்படுவதும் காரசாரமாக விவாதிப்பதும் வழக்கமான நடைமுறைதான். தற்போதைய தேர்தலின் வேகம் ஆரம்பிக்கும் முன்னரே தொடங்கி  எதிர்க்கட்சிப் பிரதமர் வேட்பாளரும் மத்திய நிதியமைச்சரும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்கள் குறித்து அவ்வப்போது தங்களின் கருத்துக்களைப் பரிமாறி வருகின்றனர்.  ஒரு சமயம் சென்ற நவம்பர் மாதம், ’இந்திய வரலாற்றில் மிகப் பெரும்பாலான மக்கள்  ஏழைகளாகவே இருந்துள்ளனர் என்றும்,  சிலர் மட்டுமே அரசர்களாகவும் நிலக்கிழார்களாகவும் வசதியாக வாழ்ந்துள்ளனர்’ எனவும்  நிதியமைச்சர் .கூறினார்.

அதற்கு முன்னர், நிதியமைச்சர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்த போது அங்கு இந்தியாவை ஐயாயிரம் வருடத்திய ஏழை நாடாகச் சித்தரித்திருந்ததாகக் குஜராத் முதல்வர் குறை கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியபோதுதான் சிதம்பரம் மேற்கண்டவாறு சொல்லிருந்தார். கூடவே  நரேந்திர மோதி வரலாற்றைப் படிக்க வேண்டும் எனவும் அவர் கிண்டலடித்திருந்தார்.  

மேற்குறிப்பிட்ட இரு முக்கிய  தலைவர்களின் கருத்துக்கள் குறித்து கடந்த ஐந்து   மாதங்களாகப் பொது வெளியில் எந்த விதமான விவாதங்களும் தொடர்ந்து எழவில்லை. எனவே அந்தக் கருத்துப் பறிமாற்றம் அப்படியே நின்று விட்டது. அதிலுள்ள அரசியலை ஒதுக்கி விட்டு அந்தப் பொருள் குறித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் தொன்மை வாய்ந்த நமது நாட்டின் பொருளாதார வரலாறு குறித்து முற்றிலும் மாறுபட்ட இரு வேறு கருத்துகள் நிலவுவது நம்மிடமுள்ள  பெரிய குறைபாட்டையே காட்டுகிறது.

ஒரு நாட்டின் எதிர்காலம் குறித்து வெவ்வேறு விதமான கணிப்புகள் இருக்கலாம். நிகழ்கால நடைமுறைகள் குறித்து சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் நடந்து முடிந்த வரலாறு குறித்து எப்படி முற்றிலும் வேறான கருத்துக்கள் இருக்க முடியும்? சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு ஆண்டுகளைக் கடந்து வந்த பின்னர் இன்னமும்  முந்தைய காலப் பொருளாதார நிலை பற்றிய அடிப்படை விசயங்களில் எவ்வாறு மாறுபட்ட கருத்துகள் நிலவ முடியும்? வளர்ந்த நாடுகள் ஏதாவது ஒன்றிலாவது இந்த  மாதிரி குழப்பத்தைப் பார்க்க முடியுமா?

ஐரோப்பியர்கள் தங்களது காலனியாதிக்க காலத்தில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளின் வரலாறுகளையும் அவர்களுக்குத் தக்கபடி எழுதினார்கள் என்பது அவர்களாலேயே ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மையாகும். அந்த வரலாறு அவர்கள் மட்டுமே மேலானவர்கள் என்கின்ற எண்ணத்தை உருவாக்கவும்,  பிற நாட்டு மக்கள்  எந்த விதமான சிறப்புக்கும் சொந்தமில்லாவர்கள் என்கின்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கவும் கடைப்பிடிக்கப்பட்ட உத்தியாகும். அப்போது கல்வி, கலாசாரம், தொழில், பொருளாதாரம் எனப்  பல விசயங்களிலும்  ஐரோப்பிய நாடுகளே  முன்னிலைப் படுத்தப்பட்டு, மற்ற நாடுகளின் உண்மை நிலைகள் மறைக்கப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வந்த தேசியக் கல்வி முறைய அழித்து புதிய முறையைத் திணித்தார்கள். அதன்படி கல்வியின் அடிப்படையும் நோக்கமும் மாறிப் போயின. நமது நாட்டின் செயல்பாடுகள், உண்மையான வரலாறு  என எல்லாமே கல்வித் திட்டத்திலிருந்து விலகிப் போயின. நாடு சுதந்தரம் பெற்ற பின் கல்வித் திட்டத்தை மாற்றுவதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தியும் அது இன்று வரை நடைபெறவில்லை. எனவே கல்வி குறித்த விசயங்களில் மேற்கத்திய தாக்கங்களே  இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நீண்ட பாரம்பரியமுள்ள இந்தியாவுக்கெனப் பல துறைகளிலும் ஒரு வரலாறு இருந்திருக்கென வேண்டும் என்பது பற்றிக் கல்வி நிறுவனங்கள் யோசிப்பது கூட இல்லை.

அதுவும் பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நமது நாட்டுக்கு என நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும்  முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால் அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில் நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற் புரட்சியில் தொடங்கியே உலகில்  பொருளாதார  வளர்ச்சி ஆரம்பித்ததாகப் போதிக்கிறது.

மேலும் நாம் சுதந்தரம் வாங்கும் போது இந்தியா ஒரு பெரிய ஏழை நாடாகவே இருந்தது. எனவே நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே முன் காட்டப்படுகிறது.  அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை. 

இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விசயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக சிலப்பதிகாரம் அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது, எப்படி  பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.

உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் புத்தகமாக அர்த்த சாஸ்திரம் கருதப்படுகிறது. அது சுமார் 2300 வருடங்களுக்கு முன்னால் மௌரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விசயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது. பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவங்களும் இல்லாமல் அப்படிப்பட்ட  நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இந்தியாவுக்குத் தொடர்ந்து பல நாடுகளிலிருந்து வெளி நாட்டவர்கள் வந்து கொண்டு இருந்துள்ளனர்.  பிந்தைய காலங்களில் தொழில் மற்றும் பணி நிமித்தமாக ஐரோப்பியர்கள் பலர் நமது நாட்டுக்கு வந்து தங்கியிருந்தும்  பார்த்தும் சென்றுள்ளனர். அவர்களில் பல பேர் இந்திய வாழ்க்கை முறை, சமூகம், கலாசாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல விசயங்களைப் பற்றி எழுதியுள்ளனர். அவை பெரும்பாலும் இந்தியா மேற்கத்திய நாடுகளை விடப் பலவகைகளிலும் சிறப்பாக இருந்ததாகவே சொல்கின்றன.

ஆயினும் அண்மைக் காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கத்திய அறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமன்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விசயங்களைச் சொல்கின்றன.

அவை உலகப் பொருளாதாரம் என்பதே ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை உறுதியாக மறுக்கின்றன. ஐரோப்பிய  நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான  அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து முன்னரே பல விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகியவையே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை  நிறுவுகின்றன.

அவற்றில் முக்கியமாக உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு ( Organisation for Economic Cooperation and Development) வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபல பொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை. உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றைப் புள்ளி விபரங்களுடன் அவை முன் வைக்கின்றன. இன்று வரைக்கும் அந்த ஆய்வுகளின் முடிவுகள் யாராலும் மறுக்கப்பட இயலாதவையாக உள்ளன. அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழி கோலப்பட்டுள்ளது.

அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் பொது யுகம் தொடங்கிய காலத்தில், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன.  அப்போது உலகின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ( 32.9 விழுக்காடு) இந்தியாவிடம் இருந்துள்ளது. இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும்  சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன.  

உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல் நிலைக்கு செல்ல முடியாது. அப்படியெனில் பொது யுகம் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகள்  இருந்திருக்க வேண்டும்..

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து சரஸ்வதி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள் கூட அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான  அடையாளங்கள் ஆகியவை குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர். பொதுயுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து விபரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக் கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளி விபரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச் சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டு வரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல் நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா  தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது. 1600ல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700ல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை  1820 இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே கடந்த இரண்டாயிரமாண்டு காலப் பொருளாதார  வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.

பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர் கொண்டது  என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார். அப்போது தான் முதல் தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல இலட்சக்கணக்கான பேரின் உயிர்களைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டது.

1750ல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக்  கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900 ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 1800லிருந்து 1850 வரைக்குமான  ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலை விட்டுச் சென்று விட்டனர் எனப் பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நௌரோஜி குறிப்பிட்டுள்ளார்.

சம காலத்தில் பணக்கார நாடுகளாகக் கருதப்படும் மேற்கத்திய நாடுகள் உலகப் பொருளாதார வரைபடத்தில் பதினாறாம் நூற்றாண்டில் தான் முதன் முதலில் தலையைக் காட்டுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம்  தொடங்கியே அவை குறிப்பிடத்தக்க பொருளாதார பலத்தைப் பெறும் பாதையில் பயணிக்கின்றன. மேலும் அண்மைக் காலமாக அந்த நாடுகள் வீழ்ச்சியைக் கண்டு வருவது அவர்களே ஒத்துக் கொள்ளும் விசயமாகும். அதே சமயம் சீனா மற்றும் இந்தியா, ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் உலக அளவில் மீண்டும் மேலெழுந்து வரத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் என கணிக்கப்படுகிறது.  

உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான கால கட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம் நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த சமயத்திலாவது  நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த  சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

வரலாறு குறித்த தெளிவான பார்வையில்லாத சமூகத்தைக் கொண்ட எந்த நாடும் எதிர் காலத்துக்கான பொருத்தமான கொள்கைகளை வகுக்க இயலாது. அதிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பவர்களுக்கே அடிப்படையான வரலாற்று உண்மைகள் கூடத் தெரியாமல் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.





குடிசைத் தொழில்கள் முன்னேற்றத்தில் திரு.மோதியின் ஈடுபாடு – ஒரு நேரடி அனுபவம்

   
நம்மில் பலர் சிறுவர்களாக இருந்த போது ஆடி மாதம் அதிகமாக வீசும் காற்றில் பட்டம்  விட்டு விளையாடி இருந்திருப்போம். பட்டம் வானத்தில் உயரமாகப் பறக்கும் போது அதைப் பார்த்து நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் கை கொட்டிச் சிரித்து மகிழ்ந்திருப்போம். நமது தமிழ் நாட்டை விடவும் வேறு  சில மாநிலங்களில் பட்டம் விடும் பழக்கம் அதிகமாக உள்ளது.

குஜராத் மாநிலத்தைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட விழாக் காலங்களில் மக்கள் பட்டம் விட்டுக் கொண்டாடுவதென்பது பரவலாக நடைமுறையில் உள்ளது. அவற்றில் முக்கியமானது சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் ’உத்தராயண்’ காலத்தின்  தொடக்கமாகும். அது வருடா வருடம் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு மகாசங்கராந்தி அன்று  நிறைவு பெறுகிறது.  அப்போது தமிழ் நாட்டில் நமக்கு தைப் பொங்கல் சமயம்.

உத்தராயண் சமயத்தில் பட்டம் விட்டுக் கொண்டாடுவது  குஜராத்தில் பாரம்பரியமாக இருந்து வரும் வழக்கம். சங்கராந்தி அன்று குடும்பங்கள் மற்றும் நட்புகளுடன் ஒன்று சேர்ந்து பட்டங்களை விடுவது ஒரு பெரிய திருவிழா போலவே   நடைபெறுகிறது. மேலும் கோகுலாஷ்டமி உள்ளிட்ட வேறு சில சமயங்களிலும் பட்டம் விடும் பழக்கம் அங்கு உள்ளது.

 அந்த மக்களுக்குத் தேவைப்படும் பட்டங்கள் குஜராத் மாநிலத்திலேயே தயாராகின்றன.  இந்துக்களும்  முஸ்லிம்களும் இணைந்து அந்தத் தொழிலை நடத்தி வருகின்றனர். பட்டத் தயாரிப்புகளைப் பொருத்த வரையில் பெருமளவில்  முஸ்லிம் மக்கள்  ஈடுபட்டுள்ளனர். அதிலும் பெண்களின் பங்கு அறுபது விழுக்காட்டுக்கு மேல். அங்கு பட்டத் தொழில் என்பது ஒரு வெறும்  ஒரு குடிசைத் தொழில் தான். சாதாரண மக்கள் தங்களின் வீடுகளிலேயே தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1990களின் மத்திய காலத்தில் தொடங்கி முதுகலை மேலாண்மை மாணவர்களுடன் சேர்ந்து தமிழ் நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களில் நாங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தோம். பின்னர் 2001 ஆம் வருடம் தொடங்கி சுதேசி கல்விப் பேரவையில் இணைந்து நாட்டின் பிற மாநிலங்களிலும் ஆய்வுகள் விரிந்தன. அந்தப் பேரவை பிரபல பொருளாதார நிபுணர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களைத்  தலைமை ஆலோசகராகவும், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் முனைவர் கே.குழந்தைவேலு உள்ளிட்ட சில மூத்த  கல்வியாளர்களை  வழிகாட்டிகளாகவும் கொண்டு செயல்பட்டு வந்தது. தொழில் துறையில் தேர்ச்சி பெற்ற தணிக்கையாளர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அதில் பங்காற்றி வந்தனர்.

அந்த சமயம் 2003 ஆம் வருட பின்பகுதியில் ஒரு நாள் குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டத் தொழிலை முன்னேற்றுவது  குறித்து ஆய்வு நடத்தி ஆலோசனைகள் வழங்க  அம்மாநில முதலமைச்சர் திரு. நரேந்திர மோதி அவர்கள் கேட்டுக் கொண்டதாகத் திரு. குருமூர்த்தி அவர்கள் தெரிவித்தார். பின்னர் திரு. குருமூர்த்தி அவர்கள் தலைமையில் சுதேசி கல்விப் பேரவைக் குழு 2003 வருடம் நவம்பர் மாதத்தில்  ஆமதாபாத் சென்றது.

அப்போது  குஜராத் மாநிலத்தின் தொழில் துறைகளில் பொறுப்பு வகிக்கும் உயர் அதிகாரிகள், அக்குழுவைச் சந்தித்து பட்டத் தொழில் சம்பந்தமான விபரங்களை எடுத்துக் கூறினர். பின்னர் அந்தத் தொழில் பற்றிய கணக்கெடுப்பு, புள்ளி விபரங்களைச் சேகரிக்கும் விதம் மற்றும் ஆய்வுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை பற்றித் திட்டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து வந்த நாட்களில் கணக்கெடுப்பு வேலைகள் நடைபெற்றன.  கணக்கெடுப்புகள் முடிந்ததும்,   தொடர்ந்து அந்த வேலைகளில் ஈடுபட்டவர்களுடன் சுதேசி கல்விக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட மும்பை தணிக்கையாளர் குழு    கலந்துரையாடல் நடத்தி விபரங்களை ஒழுங்குபடுத்தினர்.

பின்னர் அந்தப் புள்ளி விபரங்களும் சேகரித்த மற்ற விசயங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.அவற்றை வைத்து பட்டத் தொழிலுக்கும், 2004 ஆம் வருடம் குஜராத் அரசு நடத்தத் திட்டமிட்டிருந்த சர்வதேசப் பட்ட விழாவுக்குமாகச் சேர்த்து இரண்டு கருத்தறிக்கைகளை சுதேசி கல்விக்குழு அந்த அரசுக்குத்  தயாரித்துக் கொடுத்தது.  மேலும் பட்டத் தொழில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள், வங்கி மற்றும் நிதி அமைப்புகள், நிபுணர்கள், தன்னார்வ அமைப்புகள், மற்றும் தொழிலின் பல்வேறு நிலைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் எனப் பலரின் கருத்துகளையும் கேட்டறிய ஒரு பணிமனை நடத்தலாம் என்ற கருத்தினை சுதேசிக் குழு அரசுக்கு வைத்தது. அதை குஜராத் அரசும் அப்படியே ஏற்றுக் கொண்டது.

தொடர்ந்து டிசம்பர் மாதம் 2003 ல் அந்த அரசு பணிமனையை  ஏற்பாடு செய்தது. அதை குஜராத் முதல்வர் திரு.நரேந்திர மோதி அவர்கள் துவக்கி வைத்தார். அதில் மாநிலத்தின் மூன்று அமைச்சர்கள், தேசிய சிறுபான்மையினர் முன்னேற்றம் மற்றும் நிதி நிறுவனத்தின் தலைவர், கனடாவைச் சேர்ந்த சர்வதேச பட்ட நிபுணர் முனைவர் ஸ்கை மாரிசன், மாநில தலைமைச் செயலர், சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், பட்டம் சம்பந்தப்பட்ட தொழிலில் வெவ்வேறு நிலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பட்ட ஆர்வலர்கள் எனப் பலரும்  கலந்து கொண்டனர்.

குஜராத் முதல்வர் பணிமனையைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அப்போது பட்டத் தொழிலை மேம்படுத்த அரசு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என அறிவித்தார். மேலும் பட்ட  உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஒருங்கிணைந்த கொள்கை வெளியிடப்படும் எனக் கூறினார்.  கூடவே பட்டத் தொழிலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு உயர்த்துவதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

தொடர்ந்து பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் தனித்தனியாக அமர்வுகளை நடத்தின. முதல் குழுவில் பட்டத் தொழிலின் தரத்தை உயர்த்துவது குறித்து பல தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது. பட்டங்களைத்  தயாரிப்பதில் உள்ள நடைமுறைகள், பட்டத் தயாரிப்புக்குத் தேவையான கச்சாப் பொருட்களான மூங்கில் மற்றும் பேப்பர்களைக் குறைந்த விலையில் சுலபமாகப் பெறுவதற்கான வழிகள், தயாரிப்பாளர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள  வேண்டியதன் அவசியம் ஆகியவை பற்றியெல்லாம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பட்டங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தவும், அவற்றை ஏற்றுமதி செய்யவும் பட்டத்துக்கான வடிவமைப்புகளில் எவ்வாறு புதுமைகளைச் செய்யலாம் என்பவை குறித்துச்  சர்வதேச பட்ட நிபுணர்  விளக்கினார்.

பட்டங்களை சந்தைப் படுத்துவது மற்றும் விளம்பரம் செய்வது பற்றிய விசயங்களை இரண்டாவது குழு ஆலோசித்தது. முத்ரா தகவல் தொடர்பு நிறுவனத்தின் பேராசிரியர்  அவற்றுக்கான அவசியம் மற்றும் உத்திகள் குறித்து எடுத்துரைத்தார்.

மூன்றாவது குழு பட்டத் தொழில் சம்பந்தமான நிதி விசயங்களைப் பற்றி விரிவாக விவாதம் செய்தது. குஜராத் மகளிர் பொருளாதார முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பட்ட உற்பத்திக்கான நிதியளிப்பு குறித்து விவரித்தார்.  நாட்டின் பிரபலமான பெண்கள் சேவை அமைப்பான சேவா ( SEWA) பொறுப்பாளர், பெண்கள் ஈடுபட்டுள்ள குடிசைத் தொழில்களில் வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய அவர்களின் அனுபவங்களை எடுத்துச் சொன்னார்.  பின்னர் குஜராத் சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண்மை இயக்குநர் தனது கருத்துகளைத் தெரிவித்தார். முன்னதாக குஜராத் பட்டத் தொழிலின் முன்னேற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல் திட்டம் குறித்து சுதேசி கல்விப் பேரவை தனது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டது.

மேற்கண்ட மூன்று அமர்வுகளிலும் குறைந்தது ஒரு அமைச்சரும், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளும் நாள் முழுவதும் இருந்தனர்.  ஒவ்வொரு அமர்வுக்கும் ஒரு அமைச்சரே தலைமை வகித்தார்.  ஆய்வுகளின் போது தொழிலில் தாங்கள் கண்ட குறைபாடுகள், மக்கள் எழுப்பிய பிரச்னைகள்,  தொழில் மேம்படுவதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை பற்றி கல்விப் பேரவையின் பிரதிநிதிகள் எடுத்துச் சொன்னார்கள்.

தொழிலில்  ஈடுபட்டுள்ள சாமானிய உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள்,  அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அனைவர் முன்னிலையிலும் தங்களின் பிரச்னைகளை வெளிப்படையாக எடுத்துக் கூறி தேவையான உதவிகளைக் கேட்டனர். அவர்களுக்கு ஆதரவாக  பட்ட ஆர்வலர்களும், நிபுணர்களும் பல விதமான  ஆலோசனைகளைத் தெரிவித்தனர். சில பிரச்னைகள் சம்பந்தமாக அமைச்சர்கள் அங்கேயே அதிகாரிகளுடன் பேசி முடிவுகளை அறிவித்தனர். முக்கியமான கொள்கை முடிவுகள் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டும் முதல்வர் மற்றும் அவற்றுக்குண்டான துறைகளுடன் விரிவாகக் கலந்தாலோசித்து முடிவுகளை அறிவிப்பதாக கூறினர்.

அங்கு அன்று கண்ட பல விசயங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தன. ஒரு குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள படிப்பறிவு குறைந்த சாதாரணப் பெண்கள், அமைச்சர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் தங்களின் சிரமங்களை மற்றவர்கள் முன்னிலையில் எடுத்துச் சொல்ல வாய்ப்புக் கொடுத்த விதம் வெளிப்படையான நிர்வாகத்துக்கு அடையாளமாகப் பட்டது.

   மேலும் அந்தப் பணிமனைக்கு ஆலோசனைகள் சொல்ல அழைக்கப்பட்டிருந்த பலரும் சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் உயர் பொறுப்பு வகிப்பவர்களாகவும் இருந்தனர். வழக்கமாக நிபுணர்களின் ஆலோசனைகள் என்பது பெரிய கம்பெனிகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் குடிசைத் தொழிலுக்குக் கூட அத்தகைய ஆலோசனைகள் கிடைக்குமாறு பொதுச் செலவில் அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது,  சாதாரண மக்களின் முன்னேற்றத்தில் அரசு கொண்டுள்ள உண்மையான அக்கறையை வெளிப்படுத்தியது.

மேலும் ஒரு மிகச் சிறு தொழிலில் ஈடுபட்டுள்ள சாமானிய மக்களுக்கும் அவர்களின் திறமைகள் மற்றும்  செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள பெரிய நிறுவனங்களில் இருந்து பேராசிரியர்களையும் நிபுணர்களையும் அழைத்து வந்து ஆலோசனைகள் கொடுத்தது, சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசின் நோக்கத்தை எடுத்துக் காட்டியது. பட்ட உற்பத்தியில் பெண்களும் சிறுபான்மையினரும்  அதிகம் ஈடுபட்டிருப்பதால், மகளிர் அமைப்புகளில் அனுபவம் பெற்று பொறுப்பு வகிப்பவர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின்  சிறுபான்மை முன்னேற்ற நிதி அமைப்புகளின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்  ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தது,  சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தில் அரசு உண்மையிலேயே ஈடுபாட்டுடன் செயல்பட்டதைக் காட்டியது.

பின்னர் அன்று மாலையில் குஜராத் முதல்வர் சுதேசி கல்விப் பேரவைக் குழுவினருக்கு தனது வீட்டில் தேநீர் அளித்தார்.  ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சர் என்கின்ற எந்த வித தோரணையும் இல்லாமல் மிகவும் இயல்பாகப் பேசினார். வீட்டில் அவரைத் தவிர இரண்டு உதவியாளர்கள் மட்டுமே இருந்தனர்.  குஜராத் தொழில்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றியே அதிகம் பேசினார். பட்டத் தொழிலை உலக அளவில் எடுத்துச் செல்லப் போவதாகவும், அதற்காக எவ்வாறு சர்வதேச பட்ட விழாக்களை   நடத்தத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்பது பற்றியும் எடுத்துச் சொன்னார்.

பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து ஆமதாபாத்தில் சர்வதேசப் பட்ட விழா ஜனவரி 2004 சங்கராந்தி சமயத்தில் நடைபெறுவதாக அழைப்பு வந்தது. அந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பட்டத் தொழில் சம்பந்தமாக சுதேசி கல்விப் பேரவை தயாரித்த புத்தகம்,   குஜராத்  மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரால் வெளியிடப்படுகிறது என்கின்ற  செய்தியும் கிடைத்தது.  

சுதேசி கல்விப் பேரவையின் சார்பாக தணிக்கையாளர் திரு. எஸ்.முரளிதரன் அவர்களும், நானும் அந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டோம். பின்னர் உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்திருந்த வெளி நாட்டு பட்ட ஆர்வலர்கள், பல நாடுகளில் வாழ்ந்து வரும் குஜராத்திகள், மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த மக்கள் ஆகியோர், பெரிய மைதானத்தில் வித விதமான பல வண்ணங்களைக் கொண்ட சிறியதும் பெரியதுமான பட்டங்களை விட்டு மகிழ்ந்தனர். முன்னர் குஜராத் மகளிர் தங்களுக்கே உரிய நளினத்துடன் பாடிக் கொண்டு அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்வித்தனர்.

பதினோரு வருடங்கள் கழித்து, இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில் எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளதாக செய்திகளில் படித்தேன். சில மாதங்களுக்கு முன்னரே பட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத்  தேவையான  பயிற்சிகள் எல்லாம் அரசு மூலம்  கொடுக்கப்பட்டு, அதனால் அவர்களின் திறன் அதிகரித்து   தொழில் முன்னேற்றம் கண்டு  வருகிறது என்று முதல்வர் பேசியதாகச் செய்திகள் வந்திருந்தன.

2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி பெருமளவு மாற்றியிருக்கிறார். குஜராத் பட்டங்களை சர்வதேச அளவில் பிரபலமாக்கியிருக்கிறார்.  அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. மேலும் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம்,  உண்மையான சமூக நல்லிணக்கம் மேலும் பெருக  அரசு விரும்புகிறது என்பது தெரிய வருகிறது. 

பொதுவாக மக்கள் சாதாரணமாகக் கருதும் பட்டத் தொழிலை முன்னேற்றுவதற்கு ஆய்வு செய்ய வெளி மாநிலத்தில் இருந்து கல்விப் பேரவை போன்ற அமைப்பினை  அழைத்து, பின்னர் அதில் பல நிபுணர்களை ஈடுபடுத்தி, அதனால் அதில் ஈடுபட்டுள்ள சாமானிய  மக்களின் வாழ்க்கையயும்,  மாநிலத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்தி வருவது அவரை ஒரு அசாதாரணமான தலைவராகக் காட்டுகிறது.   

( ’மோதியும் சிறு தொழில் வளர்ச்சியும் – ஒரு நேரடி அனுபவம்’, தமிழ்ஹிந்து.காம், ஏப்.24, 2014)

இந்தியா மீண்டெழ வாக்களிப்போம்



இந்தியா உலகின் தொன்மையான கலாசாரங்களில் மிகவும் முக்கியமானது. என்று தோன்றியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவு பழமையானது.  ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கான நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.  ஆயினும் அன்று தொட்டு இன்று வரை ஒரு தொடர்ச்சியான பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதாக  அறிஞர்கள் பலராலும் பாராட்டப்படுவது.

இந்த தேசத்தின் வரலாறு நம்மைப் பெருமைப்பட வைக்கிறது. அதனால் உலகின் எந்த நாட்டுக் குடிமகனுக்கும் இல்லாத சிறப்புகள் இங்கு பிறக்கும்  ஒவ்வொருவருக்கும் சொந்தமாகி விடுகின்றன.  விவசாயம், தொழில்கள், கல்வி, அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், மருத்துவம், கணிதம், சர்வதேச வணிகம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளிலும் முன்னோடியாக விளங்கி வந்துள்ள நாடு நம்முடையது.

என்றைக்கும் பொருந்தும் பல உண்மைகளை உலகுக்கு வகுத்துக் கொடுத்த பெருமையுடையது நமது தேசம். இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களும் உயர்ந்தவை என்று அத்தனை உயிரினங்களையும் மேலாகப் பாவிக்கச் சொல்வது நமது  சிந்தனை. மேலும் உயிரில்லாத  எல்லாப் படைப்புகளும் முக்கியமானவையே என  அவற்றுக்கென உரிய இடத்தைக் கொடுத்துப்  போற்றி வருவது நமது மரபு.

உலகில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்து வந்த போது “ யாதும் ஊரே யாவரும் கேளிர்”  என  மானிட இனம் முழுவதையும் உறவுகளாகப் பார்க்கச் சொன்னது நமது கலாசாரம். அதனால்தான் உலகின் பிற  பகுதிகளில்  ‘எங்களது  கருத்துகள் மட்டுமே சரி; மற்றவை அனைத்துமே தவறு’ என்ற எண்ணம் முன்வைக்கப்பட்டு அதனால் சமூகங்கள் பிளவு படுத்தப்பட்டு வந்த போதும்,  ஒன்று பட்ட மனித இனத்துக்கு மாற்றாக இருந்து வருவது இந்திய சிந்தனைகளே.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது கலாசாரத்தின் அடிநாதம். அதையே தாரக மந்திரமாக நாடு பூராவும்  ஒவ்வொரு சாதாரண மனிதனும் கூட கடைப்பிடித்து வருகிறான். பிரிவினை வாதங்களால் கட்டுண்டு அவதிப்படும் உலகில் அதுதான்  இன்றைக்குப் பிணி தீர்க்கும் அரு மருந்தாக இருந்து வருகிறது. காலங்காலமாகவே  உலகின் பிற பகுதிகளில்   இன ஒழிப்புகள்  நடந்து  பிற சமூகத்தினர்கள் விரட்டி அடிக்கப்பட்ட போது,  பாதிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடம் கொடுத்து,  ஆதரவளித்து  நம்மவர்க்கு இணையான உரிமைகளையும் கொடுத்து வந்தது இந்தியப்  பாரம்பரியம்.  

உலகில் எங்குமில்லாத அளவுக்கு எத்தனை எத்தனை வகையான நூல்கள் இங்கிருந்து வெளிவந்துள்ளன? வேதங்கள், உபநிடதங்கள், இராமாயணம்,  மகாபாரதம், திருக்குறள்  உள்ளிட்ட பலவும் காலத்தால் அழிக்க முடியாத உண்மைகளைச் சுமந்து நிற்கும் பொக்கிஷங்கள். என்றைக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளைச் சொல்லும் அட்சய பாத்திரங்கள். மேலும் அறுவை சிகிச்சை தொடங்கி அரசு நிர்வாகம், பொருளாதாரம் எனப் பலதரப்பட்ட துறைகளிலும்  நுட்பமான விசயங்களைச் சொல்லும்   பலவகையான படைப்புகள்.  

சிந்து சரஸ்வதி நாகரிக காலத்தின் செயல்பாடுகள் உலகையே ஆச்சரியப்பட வைக்கின்றன.  4500 வருடங்களுக்கு முன்பே முழுமையாகத் திட்டமிடப்பட்ட நகரங்கள்   ஒரு வளர்ச்சியடைந்த நகர்ப்புறக் கலாசாரம் நமது தேசத்தில் இருந்து வந்ததை வெளிக்காட்டுகிறது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு தொடங்கி சர்வதேச வணிகத்தில் இந்தியா முதல் நிலையில் இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர் அகர்வாலா கூறுகிறார்.

பொது யுக காலம் தொடங்குவதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே இந்திய வாழ்க்கை முறை உயர் நிலையில் இருந்து வந்துள்ளதை வரலாறு தெரிவிக்கிறது.  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தொடங்கி உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து  பல நூறாண்டுகள் முதலிடத்தில் இருந்து வந்ததை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே  ஐரோப்பியர்கள் இங்கு வந்து நாட்டின் அடிப்படைகளைச் சிதைக்கும் வரை இந்தியா உலகின் முதல் நிலைப் பொருளாதாரமாக விளங்கி வந்துள்ளது. அவர்கள் இங்கு வந்த சமயத்தில்  விவசாயம், தொழில்கள், வணிகம், கல்வி எனப் பல துறைகளிலும் இந்தியா மேல் நிலையில் இருந்ததை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

காலனி ஆதிக்கக் காலத்தில் ஐரோப்பியர்கள் உலக வரலாற்றைத் தங்களின் மேலாதிக்க தந்திரங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி எழுதினார்கள். அதனால் இந்தியாவின் வரலாறும் திரிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் திணிக்கப்பட்ட மெக்காலே கல்வி முறை தேசத்தின் பின்புலங்கள், நடைமுறைகள் மற்றும் சிறப்புகள் எனப் பலவற்றையும் மறைத்துப் போட்டது.

சுதந்தரம் வந்த பின்னர்  அரவிந்தர், தாகூர், காந்தி உள்ளிட்ட எத்தனையோ சிந்தனையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும் இன்று வரை தேசம் சார்ந்த கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவேயில்லை. எனவே நாடு பல துறைகளில் வளர்ந்த பின்னரும், தேசத்தைப் பற்றிச் சரியான பார்வையில்லாத இளைஞர்களையே நமது கல்விக் கூடங்கள்  உருவாக்கி வருகின்றன. 

நமது தேசத்துக்கென அசாத்தியமான சமூக மற்றும் பொருளாதார வலிமைகள் இன்றும் இருப்பதைக் கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பாரம்பரியமான நமது குடும்ப கலாசாரம், நீளும் உறவு முறைகள், பாசம், தியாகம் உள்ளிட்ட உயர் குணங்கள் ஆகியன நிறைவான வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கி வருகின்றன.  ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டும், மற்றவர்களுடன் உறவாடியும் வாழும் மனநிலையை நமது சமூகங்கள் பெற்றுள்ளன. இது தேசத்தின் அமைதிக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்து வருகிறது  என நிபுணர்கள் கூறுகின்றனர்.  

இங்குள்ள இயற்கை வளங்கள் அபரிமிதவானவை. தட்ப வெப்பம், நில அமைப்பு, நீர் ஆதாரங்கள், கனிம வளங்கள், செடி கொடிகளின் வகைகள் எனப் பலவகையிலும் நமக்குச் சாதகமான அம்சங்கள் நிறைந்துள்ளன. நமது தேசம் முழுவதும் பாரம்பரியமான நெசவு முறைகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என தனித்தன்மை வாய்ந்த தொழில்கள் பரவிக் கிடக்கின்றன. அமைப்பு சாராத் தொழில்களுக்கான பிரிவின் கீழ் மட்டும் நான்கு கோடிக்கு மேற்பட்ட  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் செயல்பட்டு வருவதாக மத்திய அரசின் பொருளாதாரக் கணக்கெடுப்பு 2005 கூறுகிறது.

நமது தேசத்தின்  மனித வளம் மிகவும் உயர்வானது. குடும்ப அமைப்பைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறைகளின் நன்மை கருதி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்  மக்களே இங்கு நிறைந்துள்ளனர். கடினமான உழைப்பை மேற்கொள்ளவும், எளிய அமைதியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவும் தயங்காத மக்களை நாம் அதிகம் பெற்றுள்ளோம்.  தொழில் முனைவோர்கள் மட்டுமே எட்டரை கோடி பேர்கள் நமது நாட்டில் உள்ளதாக லண்டன் வியாபார நிறுவனம் தெரிவிக்கிறது.

விவசாயம், நெசவு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, கிராமியக் கலைகள் எனப் பல விதமான  துறைகளில் கூர்மையான அறிவையும் பாரம்பரிய ஞானத்தையும்  கொண்ட பல லட்சக் கணக்கான பேர் நாடு பூராவும் நம்மிடையே வாழ்ந்து  வருகின்றனர்.  மேலும் உலகிலேயே அதிகமான இளைஞர் பட்டாளத்தை நமது நாடு  பெற்றுள்ளது. அவர்களின் திறமைகளைச் சரியான முறையில் பயன்படுத்தி அதனால்  தேசத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இத்தனை பெரிய வரலாறும் வலுவான அடித்தளங்களும் வாய்ப்புகளும் இருந்தும், ஏன் நமது தேசத்தில் இன்னமும் பல கோடி பேர் வறுமையிலும்  வாய்ப்புகளின்றியும் உழலுகின்றனர்? அடிப்படைப் பிரச்னைகளைக் கூடத் தீர்க்க முடியாத நிலைமையில்  ஏன் அரசாங்கங்கள் இருந்து  வருகின்றன? தேசத்தின் வரலாறு மட்டுமன்றி, நிகழ்கால செயல்முறைகள் பற்றிக் கூட  எந்த வித அடிப்படை புரிதலும் மக்களுக்கு ஏன் இல்லாமல் உள்ளது?   

அவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் நமது தேசத்தின்  அடிநாதங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி உறுதியாகக் கொள்கைகளை வகுத்து, நாட்டை வழி நடத்தக் கூடிய தலைமை நமக்குத் தொடர்ந்து  கிடைக்கவில்லை. சுதந்தரத்துக்கு அப்புறம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அதிகப் படியான காலம் வகித்து வந்தவர்களுக்கு இந்த தேசத்தின் அடிப்படைகள் பற்றி சரியான புரிதல் இல்லை.  அதனால் அவற்றில் போதுமான நம்பிக்கை இல்லை. எனவே அவர்கள் நமது கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் எல்லாவற்றையும் மேற்கு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யத் துவங்கினர்.  அது இன்று வரைக்கும் தொடர்ந்து சென்று கொண்டுள்ளது.  

அதனால் உலக வரலாற்றிலேயே மிகப் பெரும்பாலான காலம் ஒரு அளப்பரிய பொருளாதார சக்தியாக  விளங்கி  வந்த நமது தேசம், கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக முற்றிலும் வேறான  பின்னணிகளைக் கொண்ட ஐரோப்பிய- அமெரிக்க வழி முறைகளையே கடைப்பிடித்து வரும் அவலம் நிகழ்ந்தேறி வருகின்றது. அவர்களின் சமூக, கலாசார, பொருளாதார சிந்தனைகள் எல்லாம் தோற்றுப் போய் வருவதாக அவர்களே ஒப்புக் கொள்ளும் நிலையிலும் நாம் அவர்களை விடுவதாக இல்லை.  

வரம்பு மீறிய தனிநபர் வாழ்க்கை முறை, நுகர்வுக் கலாசாரம், அரசையே அதிகமாக நம்பி வாழும் தன்மை ஆகியன அவர்களின் அடிப்படை வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கியுள்ளன.  2008 ஆம் வெளிப்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னால், இன்னும் பல நாடுகள் சிக்கல்களிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் உள்ளன.

அதே சமயம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து தவறான கொள்கைகளையும் அணுகு முறைகளையும் மேற்கொண்டு வந்த போதும், இந்திய தேசம் மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த பல வருடங்களாக நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கள ஆய்வுகள்,  நமது சமூகங்கள்  அரசுகளின் பல தவறுகளையும் மீறி தேசத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தெளிவாக உணர்த்துகின்றன. 1960களில் இந்தியாவில் அமெரிக்காவின் தூதராகப் பணியாற்றியவரும், பொருளாதார நிபுணருமான கென்னத் கேல்ப்ரெய்த் 2001 ஆம் வருடம்  இங்கு வந்த போது,   இந்தியாவின் முன்னேற்றத்தில்  அரசை விட  மக்களும் கலாசாரமுமே மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன என அறிவித்தார்.   

அண்மைக் காலமாக  இந்தியா, சீனா ஆகிய  நாடுகளின் அடிப்படைகளும் , சிந்தனை முறைகளும் சர்வதேச  அளவில் அங்கீகாரம் பெறத் துவங்கியுள்ளன. எனவே உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களும், மேலாண்மை  நிறுவங்களும் நமது சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அவையெல்லாம் நமது தேசத்தின் சமூக, கலாசார அடித்தளங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்குப்  பேருதவி புரிந்து வருவதாகச் சொல்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் நமது நாட்டைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு தொடங்கியது. ஆனால் கடந்த சில வருடங்களாக  நிலைமை  மாறி வருகிறது.  அதற்கு முக்கியக் காரணம் ஊழல்கள் நிறைந்த உறுதியில்லாத ஒரு தலைமை நாட்டை ஆண்டு வருவது தான். நாட்டின் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான கொள்கைகள் முடிவுகள் குறிப்பிட்ட சிலரின் சொந்த லாபத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு வருகிறது.   

நம்முடைய நிதியமைச்சர் வெளி நாட்டில் போய் ஐயாயிரம் வருடமாக இந்திய நாடு ஏழை நாடாக இருந்து வந்திருக்கிறது என்று அறிவித்து வருகிறார். கடந்த  முப்பது வருடங்களுக்கு மேலாக அவர் பெருமையாகக் கருதும் அதே வெளி நாடுகளைச் சேர்ந்த பல பொருளாதார வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் பண்டைய பொருளாதாரச் செழிப்பு குறித்து ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த இரண்டாயிரம் வருடத்துக்கான உலகப் பொருளாதார வரலாறு பற்றிய ஆங்கஸ் மாடிசன் அவர்களின் ஆய்வு,  பொது யுகம் 0 வருடத்தில் உலக அளவிலான மொத்த பொருளாதார உற்பத்தியில்  இந்தியா 32.9 விழுக்காடு பங்களிப்புடன் மிகப் பெரிய வல்லரசாக விளங்கி வந்ததை எடுத்துக் காட்டுகிறது.  நாட்டைப் பற்றிய அடிப்படை வரலாற்று உண்மைகளைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் அதற்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பவர்கள்,  எவ்வாறு மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்க  முடியும்?

தொன்று தொடங்கி அன்று முதல் இந்திய தேசம் தனித் தன்மைகளுடன் விளங்கி வருகின்றது.  அது உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளமாக உள்ளன. எனவே நமது தேசத்தின் எழுச்சி நமக்கு மட்டுமன்றி உலகுக்கும் அவசியமாகிறது. அதன் உயர் நெறிகளும், அமைப்பு முறைகளும்,  ஆன்மிக சிந்தனையும், பரந்த பார்வையும் உலகின் பிற பகுதிகளுக்கும் தேவைப் படுகிறது. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் நாம் அடிமை நாடாக இருந்த போதே எதிர்காலத்தில் இந்தியா உலகுக்கு அளிக்க வேண்டியவை நிறைய உள்ளன என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த்  அறுதியிட்டுச்  சொல்லியுள்ளார்.

தனது நெடிய பயணத்தில் நமது நாடு சந்தித்த பிரச்னைகளும் எதிர்கொண்ட சவால்களும் ஏராளம். அவை ஒவ்வொன்றையும் தாண்டித் தான் இன்று இந்தியா நடை போட்டு வருகின்றது. நமக்குத்  தேவையெல்லாம் ஒரு நல்ல தலைமை மட்டுமே. இந்த தேசத்தின் வலிமைகளுக்கெல்லாம் அஸ்திவாரமாக விளங்கி வரும் உயர்ந்த கலாசாரத்தின் மீதும், நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காத்து வரும் பன்முகத் தன்மை கொண்ட சமூகங்கள்  மீதும் நம்பிக்கை வைத்துள்ள  ஒரு தலைமையே  நமக்கு அவசியம்.  

நமது எதிரிகளும், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளும் எந்த வித அச்சமுமின்றி நமது எல்லைக்குள் நுழைவதும், சர்வ சாதாரணமாக நமது வீரர்களைப் பிடித்து சென்று கொல்வதும் நமது தலைமையின் கோழைத் தனத்தைத் தோலுரித்துக்  காட்டுகின்றது. பெரும்பாலான கட்சிகள் மக்களின் உணர்வுகளைத் தூண்டும் சில வெற்று வாதங்களை மட்டுமே வைத்து கடந்த பல காலமாக அரசியல் நடத்தி வருகின்றன. அதனால்  நாட்டின் எதிர்கால நலனைக்  கருத்தில் கொண்டும், ஒட்டு மொத்த மக்களின் முன்னேற்றத்துக்குப் பொருத்தமான வகையிலும் சரியான கொள்கைகள்  வகுக்கப்படுவதில்லை. மாறாக மக்களைப் பிரித்து வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதும் போக்கு அதிகரித்து வருகின்றது. இது எந்த விதத்திலும் நாட்டுக்கு நல்லதல்ல.

எனவே தேச பக்தியும், ஒட்டு மொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும் சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக இருக்கக் கூடாது.

பாரம்பரிய மிக்க இந்த தேசம் மீண்டெழ நல்லவர்களின் தலைமை  வர வேண்டும். அரசியல் சுதந்தரம் பெற்று  அறுபத்தாறு ஆண்டுகள் கழிந்த பின்னரும் நம்பிக்கை இழந்து வாழும் நமது இளைய தலைமுறையினரை புதிய தெம்புடன் எழ வைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து  வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப் படுத்தும் வகையில்  வாய்ப்புகள் பெருக வேண்டும்.  புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியன் என்று சொல்லப் பெருமைப்படும் காலம் வர வேண்டும்.

உலகின் பலம் பொருந்திய நாடுகள் எல்லாம் தற்போது வலுவிழந்து நின்று கொண்டுள்ளன. எனவே இந்தக் கால கட்டத்தில் இந்தியா குறித்து சர்வ தேச அளவிலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆகையால் காலம் நமக்குத் தரும் அரிய வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  உலக அளவில் ஒரு நல்ல முன் மாதிரியாகவும், பொருளாதார சக்தியாகவும் விளங்கி வந்த நமது தேசம் மீண்டும் அந்த நிலையைக் கூடிய சீக்கிரம்  அடையும்  நிலைமை உருவாக வேண்டும். 

அதற்கேற்ற வகையில் வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பொருத்தமானதொரு தலைமை உருவாக நமது வாக்குகளை அளிப்போம்.   


Ancient Indian Economy: Modi is right, Chidambaram is wrong


This is election time. It is usual that the political leaders exchange opinions   during election season. But much before the current election fever started, there was an interesting exchange of words between the BJP Prime Ministerial candidate Naranedra Modi and the Union Finance Minister P. Chidambaram.

The Union Minister was reported to have asked the Gujarat Chief Minister to read books on history to understand the ancient Indian economy.  The news report in this connection mentioned that Chidambaram was clarifying his stand by saying: “Most Indians were poor throughout its history. Only a few were rich – kings and landlords. Modi should read books on history.” (ibnlive.in.com/news, Nov.15, 2013). The clarification was in reply to the statement of the Gujarat Chief Minister who had pointed out that “India’s Finance Minister went abroad where he described India as a 5000 year old poor nation.” 

More than four months after the above exchange between the two important political leaders of our country, there has been no discussion on this subject in public. While Mr.Modi has raised his voice on an important issue relating to the performance of the Indian economy during the earlier centuries, the clarification of the Finance Minister was casual.

We may have totally different opinions with regard to the future policies and the present approaches of our country. But how can there be two divergent opinions regarding history?  How it is that even after sixty six years of independence, India’s economic history is subject to speculations. Is it possible in any other developed country in the world?  

The history of India and much of the world was written by the European masters during the colonial periods with ulterior motives. This is the reason why the   world economic history begins with the industrial revolution during the eighteenth century in Europe. The idea was to make the western countries appear superior and others as mere followers. Unfortunately the much- educated Indians who shape the policies of our country still believe in the outdated colonial history,   disregarding the findings of the path-breaking research works by eminent economists over the years. They refuse to acknowledge that an ancient nation such as India could have a successful history of her own.

Studies relating to the Indus- Saraswathy civilization shows as to how highly planned cities existed around 4500 years back. Business historians note the dominance of India in international trade even during those times.  The first book on economics and politics was written in India about 2300 years back. It discusses about agriculture, industry, services sector, imports, exports, tax system and   consumer welfare in detail, besides the policies to be adopted and the administrative   systems required to manage the economy for better performance. Such a work would not have been possible without intimate knowledge of economics and the functioning systems.

There have been published research studies relating to the economic history from objective points of view since the 1980s.  The studies present two major findings. One is that the two ancient economies namely India and China were the most dominant players at the global level till the nineteenth century. The second finding is that the European countries enter the global economic arena with significant contributions only from the nineteenth century.

The most important of the above studies is the comprehensive research work relating to the economies of different countries during the previous two millennia. It was undertaken by the Organization for Economic Cooperation and Development under the leadership of the noted economic historian Angus Maddison. It is the most authoritative work undertaken so far and its findings have been accepted by the western world.

The study reveals that during the beginning of the common era (0 CE), India’s share of global GDP was 32.9 per cent. It is important to know that India was leading the global economy at that time with almost one-third of contribution. It was outstanding performance. We have to remember that no western power has ever touched that mark in the history during the last two thousand years. Such a performance would not have been possible without strong foundations and better functioning systems built over many centuries.

China was following India with a share of 26.2 per cent. All the western world put together was only contributing less than 15 per cent. In fact the richer countries of the contemporary world namely the US, the UK and others show their faces individually in the global economic map only during the sixteenth century. 

Another important fact about the ancient Indian economy is its remarkable ability to remain as the most prosperous nation for most of the time in history.  Maddison notes that India continued to remain at the top for several centuries, till China overtook it during 1600 with 0.5 per cent higher share. India went ahead of China again in 1700, to be pushed to the second position once more during 1820. Thereafter the both the economies had to face onslaughts from the colonial powers and witness declines.

Paul S Kennedy notes that India’s share of global manufacturing was 24. 5 per cent during 1750. In a period of just 150 years, during 1900, the share fell down to 1.7 per cent. At the same time, the share of the UK had moved up from 1.9 per cent to 18.5 per cent during the above period. All the sectors of the economy suffered a lot during those times. Millions of people had to lose their lives due to the famines orchestrated by the wrong policies. The destructive approaches of the alien rulers destroyed our economy and made India a very poor country.

As a result the performance of India declined drastically and its share of global GDP was 4.2 per cent during 1950. Dadabhai Naoroji lamented that the per capita income of Indians during the nineteenth century was the lowest among the “civilized world”. Will Durant records that “British rule in India is the most sordid and criminal exploitation of one nation by another in all recorded history.”

By all accounts India remained a richer country till the nineteenth century, with a commendable performance in different fields. India and China remained the two dominant economic powers scene for most of the time. We have been once again witnessing the rise of China and India during the recent decades, even while the western countries are facing serious problems.

Different studies show that India has strong fundamentals and native functioning systems. India as a nation has enormous strengths and higher potential for superior performance. India’s onward march was disturbed midway by the policy paralysis and the wrong approaches of the UPA government. It is unfortunate that we have highly educated policy makers who are not even aware of the basic history of the economy that they are presiding over.

(www.niticentral.com April 5, 2014)