கலாசாரமே இந்திய வாழ்க்கை முறையின் ஆதாரம்


ஒரு நாட்டின் நோக்கம், வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் அதன் அடிப்படைத் தன்மையை ஒட்டியே அமைகின்றன. எந்தவொரு நாட்டுக்கும் அஸ்திவாரமாக விளங்குவன அங்குள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களே  ஆகும். அந்த அஸ்திவாரங்களைத் தாங்கிப் பிடித்து உயிர் கொடுப்பது கலாசாரமாகும். நாட்டின் ஒட்டு மொத்த தன்மையும் போக்கும் அதன் குடும்பங்கள்,, சமூகங்கள், மற்றும் கலாசாரத்தைச் சார்ந்தே அமைகிறது. 
இந்திய வாழ்க்கை முறை தொன்மையையும் சிறப்புக்களையும் பெற்றது. இந்தியக் குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள் தனித்தன்மைகளைப் பெற்றவை. அதற்குக் காரணம் இந்த தேசத்தின் உயர்ந்த கலாசாரமாகும். பல்லாயிரமாண்டுகளாக இந்தியா உலகின் முன்னணி நாடாக விளங்கி வந்ததற்கு அதுவே அடிப்படை. அதனால் தான் சுவாமி விவேகானந்தர் நமது நாட்டின் எல்லா மாற்றங்களும் இந்த மண்ணின் தனித்தன்மையை ஒட்டியே அமைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார். சுதந்திரத்துக்குப் பிந்தைய நமது அறுபத்தைந்து வருட கால முன்னேற்றங்கள் அனைத்துமே நமது கலாசாரத்தின் தாக்கத்தையே வெளிப்படுத்துகின்றன.
குடும்பங்களின் ஆதாரமாக தர்மம்
குடும்பம் என்பது சமூகம் மற்றும் கலாசாரத்துக்கு மட்டுமன்றி பொருளாதாரத்துக்கும் அடிப்படை அங்கமாக அமைந்துள்ளது. பிறப்பு  முதல் இறப்பு வரை மனித வாழ்க்கை குடும்பத்தைச் சுற்றியே அமைகிறது. குடும்பத்தின் ஆதாரமாக தாய், தந்தை, மனைவி, கணவன், குழந்தைகள், தாத்தா, பாட்டி உள்ளிட்ட உறவுகள் இருக்கின்றன. இந்த உறவுகள்  அனைத்துமே தருமத்தை ஆதாரமாகக் கொண்டவை. அன்பு, பாசம், தியாகம், அர்ப்பணிப்பு, கடமையுணர்வு என்பதெல்லாம் அதன் வெளிப்பாடுகள்.
நமது வீடுகளில் சம்பாதிப்பவர்கள் அது தமக்கு மட்டுமே சொந்தம் என நினைப்பதில்லை. நாட்டு மக்கள் தொகையில் மொத்தம் 28.1 கோடி பேர் மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர் என பயன்பாட்டு பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில் (National Council of Applied Economic Research)  கூறுகிறது. அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும் 1.4 மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர். மேலும் சுமார் 69 விழுக்காடு குடும்பங்களில் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கின்றனர்.
சம்பாதிப்பவர்கள் தங்களின் வருமானத்தைப் பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்குச் செலவு செய்யவே திட்டமிடுகின்றனர். அதில் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பொருட்படுத்தாமல் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் செலவு செய்வது என்பது பரவலாக உள்ள நடைமுறை.  
வருமானத்தை மட்டுமன்றி எதிர்காலத்துக்கான சேமிப்புகளைக்  கூட தங்களுக்கென மேற்கொள்ளாத தன்மை நமது மக்களிடத்தில் மிகுந்துள்ளது. எதிர்காலம் குறித்த மக்களின் சேமிப்புகளுக்கான  காரணங்கள் பற்றிக் கேட்ட போது, தங்களின் முதுமைக் காலத்துக்காகச் சேமிப்பது என்பது மூன்றாவது காரணமாகவே சொல்லப்பட்டதாக  மேற்கண்ட ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தின் எதிர்பாராத  சூழ்நிலைகளை சமாளித்தல்,   குழந்தைகளின் கல்வி ஆகிய இரண்டுமே  சேமிப்புக்கான முதலிரண்டு காரணங்களாக உள்ளன.
பாதுகாப்பு சார்ந்த முதலீடுகள்
 அதனால் நமது மக்களின் சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் எல்லாம் பாதுகாப்பு சார்ந்தவையாகவே உள்ளன. பங்கு சந்தை முதலீடுகள் போன்றவற்றைப்  பாதுகாப்பு குறைவெனக் கருதி ஒதுக்கி விடுகின்றனர். எனவே தான் வங்கி முதலீடுகள், தங்கம், வீடுகள் போன்ற சொத்துக்கள் வாங்குவதை மேற்கொள்கின்றனர். வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் முதலீடுகளைக் குறைப்பதில்லை.
இது ஏதோ படிக்காதவர்கள் மட்டும் செய்வதாக எண்ணக்கூடாது. கல்விக்குப் பேர் போன  தொழில் நகரமான கோவையில், பெண்கள் கல்லூரிகளில் பணி புரியும் நிதித் துறை சார்ந்த பேராசிரியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் கணிசமான பேர் தங்களின் வருமானத்தில் 50 விழுக்காடு வரை சேமிப்பவர்கள். அவர்கள் தான் மாணவர்களுக்கு மேல்நாட்டு நிதிச் சந்தைக் கோட்பாடுகள் மற்றும் பங்குச் சந்தையின் செயல்பாடுகளைப் பற்றி எல்லாம் சொல்லிக் கொடுப்பவர்கள். அந்த விசயங்களில் அறிவு பெற்றவர்கள். அவர்களின் சொந்த முதலீடுகளைப் பொருத்த வரையில் 95 விழுக்காடு பேர் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாகக் கருதுவதாக தெரிவித்தனர். 65 விழுக்காடு பேர் பங்குச் சந்தையில் எந்தக் காலத்திலும் முதலீடு செய்யப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தனர்.
சம்பாதிப்பவர்களில் பெரும்பாலனவர்கள் புதியாகச் சொத்துக்கள் வாங்கும் போது தங்களின் பெயர்களின் பதிவு செய்வதில்லை.  அந்தச் சொத்துக்களும் கூட தங்களின் உறவுகளின் பெயரிலேயே இருக்க விரும்புகின்றனர். கோவையில் படித்துப் பணி புரியும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஆகியோரிடம் நடத்தப் பட்ட ஆய்வுகளில் 60 விழுக்காடு பேர் மனைவி, கணவன், குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி என நெருங்கிய உறவுகளின் பேர்களிலேயே சொத்துகளை வாங்கியுள்ளது தெரிய வந்தது. வருமானம், செலவுகள் மற்றும் முதலீடுகள் குறித்து நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளிலும் குடும்ப நிறைவு ஒன்றைத்தான் தங்கள் வாழ்க்கையின்  முதன்மையான நோக்கமாகக் கருதுவதாக மக்கள் தெரிவித்தனர்.
உறவுகளே வாழ்வின் உயிர்நாடி
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் கடமைகளே நிறைந்துள்ளன. ஒவ்வொருவரும் உறவுகள் மற்றும் சமூகத்துடன் பின்னிப் பிணைந்து செல்லுமாறு வாழ்க்கை முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது குடும்பத் தலைவன் மற்றும் தலைவியின் கடமையாக உள்ளது. பின்னர் அவர்கள் வயதான பின்னர் அவர்களைப் பாதுகாப்பது குழந்தைகளின் கடமையாகிறது. அது போலவே சகோதரன், சகோதரி, மாமா உள்ளிட்ட உறவுகள் பலவற்றுக்கும் கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
பெண்களைத் தாய்மையின் வடிவமாக, தெய்வீகத்தின் அடையாளமாக மதிக்கும் தன்மை நம் பாரம்பரியத்தில் உள்ளது. அர்த்த நாரீஸ்வர தத்துவம், பெண் கடவுள்கள் நிறைந்திருப்பது, பூமி, கடல், மலை, நதி என இயற்கையின் பரிமாணங்களை அனைத்தையும் தாயாக வணங்கும் பண்பு ஆகியவை நமது கலாசாரத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது. வாழ்வின் முக்கியமான குடும்ப மற்றும் சமூக நிகழ்வுகளில் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. முக்கியமான குடும்ப, சமூக நிகழ்வுகளில் மனைவியுடன் இருக்கும்போது மட்டுமே ஆணுக்கு இடம் கொடுக்கப்படுகிறது.
வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் நமது கலாசாரம் கொண்டாடுகின்ற மரபு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் பல நிலைகளும் சிறப்பிக்கப்படுகின்றன. தாயின் வயிற்றுக்குள் கருவாக உருவானது முதல் கடைசி வரைக்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல விதமான வழிபாடுகள் மற்றும்  விழாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் மக்களை வாழ்வின் அடுத்த கட்டத்துக்குத் தயார் செய்யும் வகையில் உள்ளது.
 நமது பாரம்பரியத்தில் இல்லறம் என்பதே  வாழ்க்கையை மேல் நிலைக்குக் கொண்டு செல்லும் சாதனமாகக் கருதப்படுகிறது.  திருமணம் என்பது நிரந்தர உறவாகவும் பின்னர் வரும் பிறப்புகளுக்கும் தொடர்வதாகவும் கருதும் சிந்தனை புனிதமானது. வாழ்வின் பல உறவுகளையும் பிரிக்க முடியாததாக தத்துவார்த்த ரீதியாகவும் செயல்பாட்டு முறைகளிலும் அமைத்துள்ள தன்மை நமது வாழ்க்கை முறைகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
உறவுகளைப் பேணிப் பாதுகாக்கப் பலவிதமான விழாக்கள், சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நிறைந்துள்ளன. இல்லற உறவுகள் நீடித்திருக்க நாடு பூராவும் விரதங்கள் மற்றும் விழாக்கள். பல வட மாநிலங்கள் குஜராத் உள்ளிட்ட பகுதிளில் மனைவியர் விரதமிருந்து குடும்பத்துடன் கொண்டாடும் ‘கர்வா செளத்.’ நன்கு  படித்து பணியில் இருக்கும் நவீன பெண்களும் இதைப் பிரபலமாகக் கொண்டாடுகின்றனர்.
பீகார் மாநிலத்தின் மிகப் பெரிய விழா ‘சாத் பூஜா’ என்பதாகும். அங்கு மட்டுமன்றி மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், தில்லி, வட கிழக்கு மாநிலங்கள், மும்பை என நாட்டின் பல பகுதிகளிலும் அந்த விழா கொண்டாடப்படுகிறது. மனித வாழ்க்கையை பூமியில் நிலைத்திருக்கச் செய்வதற்காக சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தவும், குடும்பத்தினருக்கு நல்லது நடக்க வேண்டி வழிபடவும் அந்த விழா நடத்தப்படுகிறது. அந்த வகையான திருவிழாக்கள் மற்றும் நோன்புகள் தென் மாநிலங்களிலும் உள்ளன. காரடையான் நோன்பு, வரலட்சுமி விரதம் என வெவ்வேறு பெயர்களில் அவை கொண்டாடப் படுகின்றன.
அவ்வாறே சகோதர-சகோதரிகள், பிறந்த வீடு சம்பந்தப்பட்ட உறவுகள்  எனப் பலவற்றையும்  புதுப்பிக்கும் முறை நிலவுகிறது. அது மட்டுமன்றி இயற்கை, விலங்குகள், இயந்திரங்கள் என அனைத்தையுமே மதித்து வழிபடக் கூடிய தன்மை நமக்குள்ளது.
சமூகங்களின் பங்கு
உறவுகளின் விரிந்து செல்லும் கூட்டங்களும், தொடர்புகள் மற்றும் நட்புகளின் பங்கும் இந்திய சமூகங்களில் முக்கியமாக அமைகின்றன. குடும்ப வட்டங்களிலிருந்து இருந்து உலகமே ஒரு குடும்பம் என்னும் அணுகுமுறை வரை நமது கலாசாரத்தின் பரிமாணங்கள் சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவிக் கிடக்கிறது.   
சமூகம் சார்ந்த உறவுகள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதன் மூலம் யாருமே தனி நபரல்ல என்னும் உணர்வு உண்டாகிறது.  திருமணம், சிரமங்கள், விபத்துகள், இறப்பு என ஒருவரின் முக்கிய சமயங்கள் எல்லாவற்றிலும் சமூகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குடும்பங்களில் இறப்பு ஏற்படும் காலத்தில், சுற்றங்கள் அந்தக் குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் குறிப்பிட்ட கால முழுதும் எடுத்துக் கொள்வது நாட்டின் பல பகுதிகளிலும் நடை முறையில் உள்ளது.
சமூகங்களுக்குள் உள்ள உறவுகள் முன்னோர்களையும் குல தெய்வங்களையும் வைத்து அமைகின்றன. அனைத்து சமூகங்களுக்கும் தனித்தன்மை வாய்ந்த வரலாறுகள் உள்ளன.  அவை அனைத்துமே தெய்வங்களுடன் இணைக்கப் பெற்று பெரிய வரலாறுகளைக் கொண்டு விளங்கி வருகின்றன.
சமூகங்களின் உறவுகள் சார்ந்த முறைகள் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. அதனால் சமூக மூலதனம் பெருகி மக்களின் இணைந்து செயல்படும் தன்மை, வளர்ச்சி ஆகியன அதிகரிக்கும் தன்மை உள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சமூக மூலதனம் பெரும் பங்கு வகிப்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. உலக அரங்கில் ஜவுளித் துறையில் திருப்பூர் முன்னணியில் வருவதற்கு அங்கு நிலவும் உறவுகள்  சார்ந்த நிதி திரட்டும் முறைகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன என உலக வங்கியின் உலக வளர்ச்சி அறிக்கை 2001 தெரிவிக்கிறது. அதே போல குஜராத்தின் படேல் சமூகத்தினர் தங்களது உறவு முறைகளைக் கொண்டே அமெரிக்காவில் மோட்டல் துறை, உலக அளவில் வைர வியாபாரம் ஆகிய தொழில்களில் முன்னணியில் உள்ளது தெரிய வருகிறது.
இந்தியக் கலாசாரத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் வித்தியாசமின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவமாகும். யாரையுமே எதிரியாகப் பார்க்கக் கூடிய தன்மை நமது பாரம்பரியத்தில் இல்லை. மாறாக வெளியார்களையும் உயர்ந்த மரியாதையுடன் உபசரிக்கும் தன்மையை நாம் பெற்றுள்ளோம். அதுதான் நமது நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் காரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் தொழில்களில் பல்வேறு பிரிவு மக்களும் இணைந்து செயல்படும் தன்மை உள்ளது.
 சுய நிர்வாகம்
மேலும் சமூகங்கள் தம்மை சுயமாக நிர்வகித்துக் கொள்ளும் தன்மை உள்ளது. கடலோர மாவட்டங்களில் பட்டினவர் சமூகம் தங்களுக்கேயே நிரந்தரமான நிர்வாக அமைப்பு முறைகளை ஏற்படுத்திக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறான முறைகள் வெவ்வேறு வகைகளில்  நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. அதனால் குற்றங்கள் தடுக்கப்படுகிறது.  வழக்குகள் மிகவும் குறைவு.
பொதுச்சொத்துக்களை சமூகங்களே சரியான முறையில் பாதுகாக்க முடியும் என நோபெல் பரிசு பெற்ற அமெரிக்க பேராசிரியர் எலினர் ஓஸ்ட்ராம் தனது ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளார். அரசாங்கமோ தனியார் துறையோ அவற்றைப் பொருத்தமாகச் செய்துவிட முடியாது என அவரது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது நாட்டில் பழைய காலந்தொட்டு சமூகங்களே இவ்விதப் பொறுப்புகளை ஏற்று நடத்தி வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்னமும் பல விசயங்கள் சமூகங்களாகவே நடத்தப்படுகின்றன. அதனால் அரசுக்கும் சுமைகள் இல்லை.
கலாசாரம் சார்ந்த பொருளாதாரம்
பொருளாதாரம் என்பது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. எனவே அது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றின் உருவாக்கமே ஆகும். ஆகையால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாக அமைகிறது. நமது தேசம் இன்று இவ்வளவு குழப்பங்கள், தவறுகள் மற்றும் சிரமங்களையும் மீறி முன்னேறி வருவதற்குக் காரணமே கலாசார அடிப்படைகளாகும்.
சேமிப்புகள் நமது நாட்டில் அதிகமாக உள்ளன. கடந்த பல வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சுதந்திரம் வாங்கிய பின்னர், ஏறத்தாழ பாதிப்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடி வந்தனர். ஆனால் அப்போதே சேமிப்பு சுமார் ஒன்பது விழுக்காடாக இருந்தது. கடந்த சில வருடங்களாக அது முப்பது விழுக்காட்டைத் தாண்டி விட்டது. அதற்குக் காரணம் நமது மக்களின் கடமை உணர்வு ஆகும். அதுதான் ஒவ்வொருவரையும் தங்களால் முடிந்த அளவு சேமிக்கத் தூண்டுகிறது. அதனால் தான் நமது மக்கள் எங்கிருந்தாலும் சேமிப்புகளில் ஈடுபடுகின்றனர். உலக அளவில் வெளி நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில்  அதிக அளவு இந்தியர்களாலேயே அனுப்பப்படுகிறது.
நமது தொழில்கள் வளருவதற்குக் காரணம் மக்களின் தொழில் முனையும் தன்மையாகும். எவ்வளவோ சிரமங்களுக்கிடையிலும் முன்னேற வேண்டும் என்னும் உந்துதல் மக்களைப் பல வித முயற்சிகளில் ஈடுபட வைக்கிறது. அதற்கு குடும்பங்களே துணை நிற்கின்றன. உறவுகளும் சமூகங்களும் உதவுகின்றன. அதனால் தொழில்கள் வளருகின்றன. ஆகையால் தான் நமது நாட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் இன்னமும் பாதியளவுக்கு மேல் உள்ளனர். அதுவே அமெரிக்கா போன்ற நாடுகளில் வெறும் ஏழு விழுக்காடாகவே உள்ளது.
தொழில்களுக்குத் தேவையான மூலதனங்கள் ஏறத்தாழ அனைத்துமே  தொழில் முனைவோர்களின் சொந்த முயற்சியால் உறவுகள் மற்றும் தொடர்புகளை வைத்து திரட்டப்படுகின்றன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. சிறு மற்றும் மத்திய தர தொழில்கள் எல்லாவற்றிலுமே சூழ்நிலைகள் இவ்வாறுதான் உள்ளன. பெரிய தொழில்களுக்குத் தேவையான நிதியைக் கொடுப்பதிலும் மக்களின் சேமிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் நாட்டுப் பொருளாதாரம் உள்நாட்டு மூலதனம் சார்ந்ததாக அமைந்துள்ளது. அதனால் வெளி நாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து நாம் வாழ வேண்டிய அவசியமில்லாமல் இருக்கிறது.
 நிதிகளைச் சேர்ப்பதிலும் அவற்றைத் தொழிலுக்காக திரட்டுவதிலும் நமது மக்களின் முறை அலாதியானது. இன்றைக்கு சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் முன்னணியிலுள்ள நாடார் சமூகம் ஆரம்ப காலங்களில் தமது தொழில்களுக்கான நிதியை சமூகத்திடமிருந்தே திரட்டியது. அதற்கு அவர்கள் கண்டு பிடித்த முறைதான்  மகமை என்பதாகும். அதனால் இன்று ஒட்டு மொத்த சமூகமும் பல துறைகளில் முன்னேறி உள்ளது. இந்த மாதிரி முறைகள் எல்லாம் உயிப்பான சமூகங்கள் தங்களின் கலாசார வழிகளை ஒட்டி ஏற்படுத்தப்பட்டவை.
பொருளாதாரத்தில் குடும்பங்கள்
இந்தியப் பொருளாதாரம் குடும்பம் சார்ந்ததாகவே சார்ந்துள்ளது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் சுமார் 57 விழுக்காடு குடும்பம் சார்ந்த அமைப்புகள் மூலமே வருகிறது. சேமிப்புகள், வேலை வாய்ப்புகள், முதலீடுகள், வியாபாரம் எனப் பலவற்றிலும் இவற்றின் பங்குகள் தான் அதிகமாக உள்ளது. நாட்டிலுள்ள பெரிய கம்பெனிகளை எடுத்துக் கொண்டாலும் 95 விழுக்காட்டுக்கு மேல் குடும்பம் சார்ந்தவையாகவே உள்ளன. எனவே அரசு மற்று அமைப்பு சார்ந்த துறைகளின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் பொருளாதார நெருக்கடிகள் நம்மை வெகுவாகப் பாதிப்பதில்லை.
இந்திய வாழ்வின் அடிநாதம் கலாசாரமே
எனவே நம்மை எல்லா விதத்திலும் வாழ வைத்துக் கொண்டிருப்பது நமது கலாசார அடித்தளங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் நாம் அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது அவசியமாகிறது. அப்போதுதான் நமது குடும்பங்களையும் சமூகங்களையும் பொருளாதாரத்தையும் காப்பாற்ற முடியும். கலாசாரத்தைத் தொலைத்து விட்டு பிறவற்றைக் காப்பாற்ற முடியாது.  
மேலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார சமூகக் கருத்துகளும் அவர்களின் வழிமுறைகளும் தோல்வியைத் தழுவி வருகின்றன. இந்த சமயத்தில் இந்திய வழிமுறைகள் உலக முழுமைக்கும் முன் மாதிரியாக விளங்கி வருகிறது. நமது பாரம்பரியத்தின் பரந்த சிந்தனை, அரவணைப்பு, ஆன்மிக அணுகுமுறை உள்ளிட்ட குணங்கள் உலக முழுமையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக உள்ளன. உலகின் பிற வாழ்க்கை முறைகளில் இந்த நோக்கு இல்லை.
எனவே நமது கலாசாரம் காப்பாற்றப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அதை கடமையாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதுவே நாம் சுவாமி விவேகானந்தருக்குச் செய்யும் மரியாதையாக அமையும்.  

     http://vivekanandam150.com/?p=2875
( விவேகானந்தம்150.காம் இணைய தளம், ஏப்ரல் 4, 2013)

Relevance of Swami Vivekananda today



 As we are celebrating the 150th birth anniversary of the great monk, the question arises:  What is the relevance of Swami Vivekananda  today?  India has travelled a long way since the nineteenth century. What we see today is totally different from what was there during those times. India has changed politically, economically and socially over these years. There have been changes at the religious and spiritual levels. Lots of changes have been happening across the world.

A new global order is emerging now. The richer west that Swamiji witnessed 120 years back is fast losing its lustre during the recent periods. Both the western economic ideologies stand discredited.  Their social theories, management approaches and even their life styles are being seriously questioned.  They are no longer the providers of ideas and approaches to the rest of the world.

India is fast emerging as a dominant force in the global economy. International predictions repeatedly point out India reaching higher positions in the international economic arena in future. The way that India has been marching over the years, when the rich countries are beset with difficulties, is forcing them to look at India.     Reputed academic institutions have started turning towards India to learn from her functioning models. India’s stock as a nation has been rising globally, in spite of problems at the domestic level.   So in the changed circumstances, what is the need for the teachings of Swami Vivekananda?

Swamiji’s times (1863-1902) were very difficult for the country. Under the British rule, India was in her worst phase in economic history. Famines had become frequent.  Criminal assaults on the functioning systems and economic drains soon after commencement of Crown administration had already made India poor. The economy was in a very bad shape and the native systems were under destruction. Majority of the people were living without hope.  It was   during those difficult times that Swamiji foresaw a great future for India.

Swamiji was not an ordinary monk. He was a true seer and one of the most inspiring personalities of our times. He was different in many ways. The mission of his life was not his personal salvation; but the betterment of the lives of all. Serving others, and the less privileged in particular, was more important to him. He did not confine himself to religion and spirituality, though the core of his message revolved around them. He discussed passionately about the need for economic development, improvement of the lives of the weaker sections, industrialization, social equality, women education and youth power. In all these matters he was ahead of his times. He was a patriotic monk for whom the nation was more important than anything else.  He wanted India to regain her lost glory and emerge as the Jagat Guru.

India today has tremendous opportunities before her. As a nation, we have enormous strengths. We have strong fundamentals. India is blessed with plenty of resources. Not many countries in the world could boast of vast lands, huge rivers, varieties of flora and fauna and plenty of sunlight.  We have the demographic dividend, with one sixth of the humanity as our population. Besides, we have the largest number of youth in the world today. Our people are one of the most hardworking, enterprising, simple living, family oriented and peace loving citizens in the world.

Close knit families are our critical assets. They are the reason for bringing up responsible citizens, maintaining peace in the society, saving enormous amounts of money for the nation and creating new ventures.  Relationship based and integrated societies are the products of our system. We have huge social capital that helps us to maintain harmony and support economic growth. Indian families and communities possess the capacity to function on their own, without depending on the state. The story of independent India reveals that much of her progress has been mostly on her own, many times in spite of the government. 

Indian culture is unique. It is inclusive and nurtures diversity. It treats every being, every object, as divine. Its world view is comprehensive.  The age old culture of our nation remains as the bedrock of our lives and continues to guide our destiny, without many of us being aware of it. In an age filled with confusions and conflicts around the world, the time tested Indian culture remains the beacon light.

 But unfortunately there are forces that hinder the nation’s march towards realizing her full potential. Much of the educated sections are unaware of the real situation. The education system introduced by the British continues to influence our thinking, even after more than sixty five years of independence.  There is very little understanding about our history and the contemporary functioning. As a result we continue to ignore our strengths, and look elsewhere for solutions to every one of our problems. We fail to understand that we have had a glorious past that could provide us a few useful tips. India remained a global power economically, culturally and intellectually continuously for several centuries. On the one side she was very prosperous and highly productive, yet on the other side she was deeply spiritual. No other nation has such a record in the history of mankind.

We also fail to observe the contemporary functioning systems. The economic progress, social cohesiveness and family atmosphere that we see here are something special to us. Much of the world is finding it difficult to keep their families intact and societies harmonious. The native systems are helping our nation to move forward, even when the intellectual and ruling classes continue to fail us. But we refuse to see the realities that exist in front of us. It is precisely this attitude that is hindering the progress of our nation.

So what we need is a true understanding of our nation. We need to understand her from true perspectives. Educated sections of our country are the most crucial group of people, as it is they who represent India and interpret her functioning to others. The performing sections, which constitute the majority in the country, remain silent as they do not have a voice in the public discourse. Hence the educated sections have a critical role to play. 

The present time is very important. While the west is losing its way, India is emerging big on her own. And it is here that we need to learn from Swami Vivekananda, his life, his messages and his teachings. They are more relevant now, than at any other time in contemporary history. We need to know about our backgrounds, our fundamentals   and our weaknesses. There is no better person for this than Swami Vivekananda. He inspired the freedom movement more than anyone else. Mahatma Gandhi, Subash Chandra Bose, Rabindranath Tagore and several thousands of people were influenced by him. Their love for our motherland increased manifold after studying him. He was largely responsible for creating the patriotic fervor that motivated many people to fight for the country.

Swamiji was a multi-faceted personality. He singlehandedly demonstrated to the world the need for recognizing the diverse religious beliefs   for the progress of mankind and changed the whole course of the dialogue towards India at the international level. He was a great leader and an organization builder. The institutions founded by him are the standing testimonies. His priority was to improve the living conditions of the ordinary masses, the underprivileged and the weaker sections of the society. 

He was an icon for the people around the country and a true representative of the great Indian tradition.  He continues to remain so, particularly to the youth, even after 120 years. More than anyone else in the contemporary history of India, every Indian identifies himself/herself with Swamiji and his teachings. This is irrespective of age, position and background. His is the most respected public face in India today. He inspires each one through his words, deeds and personality.   There have been thousands of service organizations/ institutions promoted in different corners of the country during the past one hundred years, inspired by him. Many of them are promoted by the ordinary people and they are all silently engaged in different service activities, and many millions have benefited out of them.

Swamiji continues to remain the master motivator for the largest number of people in our country. It is especially in this connection, that we need to study him deeply during his 150th birth anniversary. We have to discuss his ideas, thoughts and mission. His life, speeches and writings teach us many valuable lessons.  Each of us must make the maximum contribution to make India the most powerful nation on earth. We have to dedicate ourselves for this, as there are negative forces operating everywhere.  We need to put all our energies together for this purpose. And Swami Vivekananda is the best role model for all of us in this noble mission.

( Yuva Bharati, Vol 40 No.8, Vivekananda Kendra, Chennai)

இந்தியப் பொருளாதாரமும் தொழிலாளர்களின் சிரமங்களும்



இந்தியப் பொருளாதாரம் தனித்தன்மை வாய்ந்தது. உலக அளவில் பல வலிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதிக அளவிலான சேமிப்புகள், கடுமையான உழைப்பினை மேற்கொள்ளத் தயங்காத  மக்கள், உறவுகளுடன் நெருங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள், பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எதிர் நீச்சல் போட்டு தொழில்களில் ஈடுபடும் தொழில் முனைவோர் என வெவ்வேறு அம்சங்கள் பொருளாதாரத்துக்குச் சாதகமாக உள்ளன.

எனவே உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவான விசயங்களே நமது நாட்டுக்கு அதிகமாக உள்ளன. பெரிய பணக்கார நாடுகளை விடவும்  நமக்கு  வலிமைகள் நிறைந்துள்ளன. வரவுக்கு அதிகமான செலவுகள், கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கம், நுகர்வுக் கலாசாரம், குறைவான சேமிப்புகள், தனி நபர் வாழ்க்கை முறை எனப் பலவும் அவர்களை சீரழித்து வருகின்றன. 

மேலும் கடந்த சில வருடங்களாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அணுகு முறைகள் பெருமளவு தோல்வியைத் தழுவிக் கொண்டு வருகின்றன.  அவர்களின் சந்தைப் பொருளாதார தத்துவங்கள் மக்களின் பிரச்சினைகளை அதிகப்படுத்தி விட்டன. நிதிச் சந்தையை மையப்படுத்தி  அமைந்துள்ள அவர்களின் செயல்பாடுகள் மக்களை மேலும் சிரமத்தில் தள்ளி விட்டுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, அதிக கடன் சுமைகள், பெருகி வரும் வருமான வித்தியாசங்கள் என்பனவெல்லாம் நடைமுறை ஆகி விட்டன. எனவே அங்கு பல நாடுகளில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதிக்கு வந்து போராடுவது அண்மைக் காலங்களில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் சுதந்திரத்துக்கு அப்புறம் துரதிர்ஷ்ட வசமாக மேற்கத்திய சித்தாந்தங்களை மையமாக வைத்தே கொள்கைகள் தீட்டப்பட்டு வருகின்றன. 1980கள் வரை சோசலிச சித்தாந்தமே நமது ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தது. பின்னர் அது அப்போதைய சோவியத் ரஷ்யாவிலேயே தோல்வியைத் தழுவிய போது இங்கும் கை விடப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக சந்தைப் பொருளாதாரம் சார்ந்த உலக மயமாக்கல் சித்தாந்தம்  மைய இடத்தில் உட்கார வைக்கப்பட்டது. எனவே தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய அணுகுமுறைகளை ஒட்டியே நமது நாட்டின்   கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

ஆகையால்  நமது வலிமைகளையும் தேவைகளையும் மையப்படுத்தி தேச நோக்கில் கொள்கைகளைத் தீட்டுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் முழுமையாக ஏற்படவில்லை. எனவே அதன் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம். நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. வருடா வருடம் ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். பல இடங்களில் வாழ்வாதரங்களைத் தேடி கிராமங்களை விட்டு மக்கள் அதிக அளவில் வெளியேறி வருகின்றனர். கைத்தொழில்கள், குறு மற்றும் சிறு தொழில்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துக் கொண்டுள்ளன. அதே சமயம் இன்னொரு பக்கம்  குறிப்பிட்ட சில பிரிவினர்களின் கைகளில் சுலபமாகப்  பணம் பெருகுவதும், நுகர்வுக் கலாசாரம் உள்ளிட்ட மேற்கத்திய தாக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தைக் கவனமாகப் பார்க்கும் போது கடந்த அறுபதாண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஒரு விசயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. அது என்னவெனில், இங்கு ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் அனைத்துமே கொள்கை வகுப்பவர்களின் குழப்பங்களை எல்லாம் மீறி மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகும். அதற்கு அடிப்படையாக நமது வாழ்க்கை முறையும் இந்த தேசத்தின் கலாசாரமும் ஆதார சக்திகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் அரசுகளின் கொள்கைகளும் அணுகுமுறைகளும் பொருத்தமாக இல்லாததால், நாட்டுக்குப் போதுமான பலன்கள் இல்லாதது மட்டுமின்றி வளர்ச்சியின் போக்கும் சரியானதாக இல்லை.

எனவே கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்து வந்த போதும், வளர்ச்சி என்பது பரவலாக இல்லாமலும் ஒரு தலைப்பட்சமாகவுமே அமைந்துள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட டெண்டுல்கர் குழு 2009 ஆம் வருடத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்  எனக் கணக்கிட்டு சொல்லியுள்ளது. 2009-10ஆம் வருடத்தில் நாட்டில் நிலவிய வேலை வாய்ப்பு நிலைமை சம்பந்தமான தேசிய உத்தேச மாதிரி கணக்கெடுப்பின் 66ஆவது சுற்று  மொத்த வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் 2009-10ல் முடிவுற்ற  ஐந்து வருட காலத்தில் அதற்கு முந்தைய ஐந்து வருடத்தை விட வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத்  தெரிவிக்கிறது.

வேலை உருவாக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக அமைய வேண்டும். அதுவும் நம்மைப் போன்ற மக்கள் தொகையை அதிகமாகப் பெற்றுள்ள நாட்டுக்கு அது மிகவும் அவசியம். அதிக மக்கள் தொகை என்பது நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்கான ஒரு நல்ல மூலதனமாகத் தற்போது கருதப்படுகிறது. ஏனெனில் உலகின் பல நாடுகளில் குடும்ப கலாசாரத்தைத் தொலைத்து விட்டதால் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து வருகிறது. அதனால் அங்கெல்லாம் வேலை செய்வதற்குத் தேவையானவர்களை விட இள வயதினர் எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். எனவே அந்த நாடுகளில் பலவிதமான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு எதிர்காலம் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் நமது நாடு உலகிலேயே அதிக அளவு இளைஞர்களை  பெற்றுள்ளது. எனவே அவர்களின் திறமைகளை முழுமையாகப்  பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவது கொள்கை  வகுப்பவர்களின் தலையாய கடமையாகும். ஆனால் அண்மைக் காலமாக வேலைகளை உருவாக்குவதற்கான  செயல் திட்டங்கள் குறைந்து வருகின்றன. வேலைகளை அதிக அளவில் உருவாக்கும் தன்மையுள்ள விவசாயம், கிராமப் பொருளாதாரம், குறு மற்றும் சிறு தொழில்கள் நசிந்து வருகின்றன. அதற்கான சரியான கொள்கைகள் வகுக்கப்படுவது இல்லை.

மேலும் அமைப்பு சார்ந்த துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 1990 களிலிருந்து பொதுத் துறை நிறுவனங்களில் வேலைகள் குறைந்து விட்டன. 1991 முதல் 2008 வரையிலுமான  இடைப்பட்ட பதினேழு வருடங்களில்  அமைப்பு சார்ந்த துறைகள் மொத்தமாக எட்டு இலட்சம் புதிய வேலைகளையே உருவாக்கியுள்ளன என்னும் புள்ளி விபரத்தை மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  எனவே கடந்த இருபது வருட கால நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த வேலை வாய்ப்பைக் குறைத்து ஏற்பட்ட வளர்ச்சியாகவே உள்ளது.

ஆகையால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் பொருத்தமான வேலைகள் இல்லாமல் தவிக்கின்றன. நிரந்த வேலைகளை இழந்த பல பேர் தினக் கூலிகளாக மாறும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.  அதே சமயம் சொந்தக் காலில் நின்று வாழ்க்கை நடத்தி வந்த சிறு விவசாயிகள் மற்றும் சிறிய தொழில்களை நடத்தி வந்தவர்கள் பலர் வேலை தேடிச் செல்லும் அவலம் அதிகரித்துக் கொண்டுள்ளது. எனவே மக்கள் செய்வதறியாது தவிக்கின்ற சூழ்நிலை அதிகரித்து வருகின்றது.

ஆகையால் நமது நாட்டைப் பொறுத்த வரையில் அஸ்திவாரங்கள் வலுவாக இருந்தும் ஒட்டு மொத்த வளர்ச்சி அனைவருக்கும் ஏற்படாத வகையிலும் வேலை வாய்ப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படாமலும் உள்ளது. அதற்கு அடிப்படையான காரணம் அரசுகளின் தவறான அணுகு முறைகளும் திட்டங்களும் ஆகும். எனவே அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் காக்க முடியாத கொள்கைகள் தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கான திசையில் அரசுகள் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அப்போது தான் நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்குமான முன்னேற்றம் ஏற்பட்டு வளர்ச்சி முழுமையானதாக அமையும்.

(பி.எம்.எஸ்.செய்தி, சென்னை, மார்ச் 2013)


பாலியல் வன்முறைகள்: சில சிந்தனைகள்



 தலை நகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி ஆறு பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதன் பின் சில நாட்கள் கழித்து மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி மரணமடைந்த துயரமான சம்பவம் நாடு முழுவதும் ஒரு பெரிய அதிர்வலையை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக டெல்லி மட்டுமன்றி நாட்டின் பல நகரங்களிலும் எதிர்ப்புப் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன. பின்னர் பாலியல் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து ஆலோசனைகளைக் கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற  நீதியரசர் வர்மா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை  அமைத்தது. விரைவிலேயே குழுவின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மத்திய அரசிடமும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதையொட்டி அரசு ஒரு அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அது பற்றி விவதாங்கள் மேற்கொள்ளப் பட்டு முக்கிய  முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. 

இதையொட்டி அதிகமாக விவாதிக்கப்படாத சில முக்கியமான கருத்துகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன. மேற்கண்ட விசயத்தை முதல் முறையாக சமூகமே முன்னெடுத்துச் செயல்பட்டது பாராட்டப்பட வேண்டியதாகும். மக்கள் பொதுவாகவே தங்களுடைய வாழ்க்கை, வேலைகள், பொறுப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் வழக்கம். பொதுவாக பெரும்பாலானவர்கள் வேலையை விட்டு வந்து வீதிகளில் இறங்கிப் போராடுவது இல்லை. அதுவும் டெல்லி போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் பெரு நகரங்களில் சுத்தமாக இல்லை. அண்மைக் காலங்களில் முதல் முறையாக சென்ற வருடம் தான் அன்னா ஹசாரே தலைமையில் லோக் பால் மசோதா வேண்டி அமைதி வழிப் போராட்டம் நடந்த போது மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.

அது டெல்லியில் மட்டுமன்றி நாட்டின் பிற நகரங்களிலும் பரவியது. அவரது உண்ணாவிரதத்தின் போது மக்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் ஆதரவளித்து வந்தது அப்போதே ஒரு வித மக்களின் எழுச்சியாகத் தெரிந்தது. ஆனால் லோக்பால் சம்பந்தமான போராட்டங்களுக்கு தலைமை இருந்தது. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அவர்களுக்குத் துணை புரிய வெளியில் தெரிந்த பொது வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்த முகங்கள் இருந்தன. அதற்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் ஏற்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் தாமாகவே தோன்றின. அவற்றுக்குப் பின்னால் பிரபலமான முகங்கள் இல்லை. அவற்றை நடத்துவதற்குப் பெரிய அமைப்புகள் எதுவும் இல்லை.  ஆயினும் போராட்டம் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்றது. அதில் குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள். அதுவும் எதிர்ப்பைக் காட்டுவதற்காக சம்பிரதாயத்துக்கு ஒரு நாள் மட்டும் நடத்தப்படாமல்,  உண்மையில் மன வேதனையுடன் மக்களின் ஒன்று பட்ட வேகத்தால் போராட்டம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டது. அதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொண்டு சில அவசியமான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதன் விளைவாக முக்கியமான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பாலியல் வன்முறை குறித்து அதிகார மட்டங்களில் நிலவிய  அக்கறையற்ற தன்மை மாறி வருகிறது.

ஆனால் அதே சமயம் இன்னமும் தொடர்ந்து கற்பழிப்புகள் உள்ளிட்ட பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. மக்களின் போராட்டம் மற்றும் அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பின்னரும் அவை வெகுவாகக் குறைந்ததாகத் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமைகள் திடீரென அதிகரித்து விடவில்லை என்றும் ஊடகங்களின் செயல்பாடுகளால் அது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் சிலர் வாதிடுகின்றனர். அது உண்மையாகவும் இருக்கக் கூடும். உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்க,  ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகமாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2010 ஆம் வருடத்துக்கான ஆய்வுகள், சுவீடனில் ஒரு இலட்சத்துக்கு 63.5 பேரும், அமெரிக்காவில் 27.3 பேரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறுகிறது. அதே சமயம் இந்தியாவில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 1.8 பேர் எனத் தெரிவிக்கிறது.

இதை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் குற்றங்களை எந்த விதத்திலும் நியாயப் படுத்துவதற்காக அல்ல. பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும் நமது கலாசாரத்தில் ஒரு சிறு குற்றமும் கூட நடக்காமல் இருக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பமும் ஆகும். பெண்களுக்கு எதிரான ஒரு சிறு தாக்குதல் கூட அந்த  சமூகத்தின் சீரழிவினையே காட்டுகிறது.

ஆனால் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது படிப்பு, சம உரிமை, தனி நபர் சுதந்திரம் ஆகியன அதிகமாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில் தவறுகள் குறைவாக இல்லை என்பதும், மாறாக மிக அதிகமாக உள்ளது என்பதுவும் ஆகும். ஆனால் நமது தேசத்தில் அவை குறைவாக இருப்பதற்குக் காரணம் காரணம்  நம்முடைய குடும்ப, சமூக அமைப்பு முறைகள் மற்றும் நமது கலாசார பாரம்பரியம் ஆகும்.  நமது சிந்தனை முறைகள் பெண்களை தெய்வமாகவும் தாய்மையின் வடிவமாகவும் மதிக்கும் தன்மையுடையவை. அதனால் தான் பெண்களை மிக உயர்வாக மதிக்கக்  கூடிய தன்மை இன்னமும் நாடு முழுவதும் பரவலாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அதே சமயம் இந்த மாதிரி விசயங்களில் நாம் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து திருப்தியடைந்து விடுவது மிகவும் தவறானதாகும். ஏனெனில் நமக்கென்று ஒரு பெரிய பொறுப்புள்ளது. நாம் நல்ல பின் பலத்தைப் பெற்றுள்ளோம். இங்கு ஒவ்வொரு பெண்ணுக்கு ஏற்படும் தாக்குதலும் நமது தனித் தன்மைக்கும் வாழ்க்கை முறைக்கும்  விடப்படும் சவாலாகும். எனவே இனி மேலும் பாலியல் வன்முறைகளைப் பார்த்து இன்னொரு துரதிர்ஷ்டமான  நிகழ்ச்சி எனக் கருதக் கூடாது. அவற்றைத் தடுப்பதற்கு என்ன முயற்சிகளையெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் கட்டாயமாக உடனே செய்ய வேண்டும். இல்லையெனில் நாம் பெரிய பாரம்பரியத்தைப் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.. நம்மில் ஒரு பாதியாக உள்ள பெண்களுக்கு அடிப்படையான பாதுகாப்பைக் கூடத் தர முடியவில்லை என்றால், நாம் எந்த விதமான சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம் ?  

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இது குறித்துப் பல போராட்டங்கள் மற்றும் விவாதாங்கள் நடந்து முடியும் சூழ்நிலையில் அதே டெல்லியில் பிப்ரவரி முதல் வாரத்தில் உள்ளே இருப்பவர்கள் தெரியாத மாதிரி உள்ள கண்ணாடிகளைக் கொண்ட வாகனம் ஒன்று வேகமாகச் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுகிறது. உள்ளே ஒரு பெண் நான்கு ஆண்கள்.  நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி பின்னர் நகரை விட்டு வெளியில் கடத்திக் கொண்டு போகும் போது வாகனத்தை நிறுத்தாமல் போன போதுதான் அந்த நிகழ்வு தெரிய வருகிறது. எந்த தலைநகரில் கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களாகவும் விவாதாங்களாகவும் நடந்து அதன் விளைவாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அங்கேயே இன்னமும் அதே விதமான  கொடுமை நிகழ்ந்துள்ளது.

பள்ளி மாணவியர், சிறுமியர் என வயது வித்தியாசமின்றி பாலியல் கொடுமை நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கின்றன. அதிலும் படித்தவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோர்  இந்த மாதிரி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்னும் போது  நமது கல்வி முறை பற்றியே வருத்தம் ஏற்படுகின்றது. மேலும் அதிகார மட்டத்தின் உயரத்தில் இருப்பவர்கள் பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவதும் பின்னர் அவை பெரிதாகும் போது அவற்றில் இருந்து தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக்க முயல்வதுமாகத் தெரிகின்றது. எனவே எந்த விதமான பேர்வழிகள் அதிகார மையங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளார்கள் என்பது குறித்தும் ஐயங்கள் எழுகின்றன.

பாலியல் வன்முறைகள் குறித்து பாராளுமன்றம் முழுமையாக விவாதித்து  தேவையான சட்டங்களை இயற்ற வேண்டுமென பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றின் மூலம் தவறு செய்யும் ஒவ்வொருவரும் தப்பிக்க முடியாமல் தக்க தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலை உருவாக  வேண்டும். அதனால் அந்த தவறுகளைச் செய்வதற்கு சம்பந்தப் பட்டவர்கள் அச்சப்பட வேண்டும். எனவே இது.உடனடியாகச் செய்யப்பட வேண்டிய அவசியமான முயற்சியாகும்.

ஆனால் பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் நாம் இது குறித்துப் பல கோணங்களிலும் முழுமையாக அணுகுவது நல்லது. ஏனெனில் இது நமது இன்றைய சமூகத்தின் முன் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை. சட்டங்கள் என்பவை தண்டனைகளை வைத்து குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகும். குற்றங்களைக் குறைக்க இன்னொரு முக்கியமான வழி அந்தக் குற்றங்களே நடைபெறாமல் இருக்கச் செய்வது பற்றியது. எனவே அந்தக் குற்றங்கள் நடை பெறுவதற்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்வதும் மிக முக்கியமானதாகும். இன்று நம்முடைய பொது விவாதங்கள் அனைத்தும் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் பற்றியே உள்ளன.

எனவே நாம் அவற்றைத் தவிர பிற வழிகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.  அந்த வகையில் பலராலும் முக்கியமாகக் கருதப்படுவது  இன்று நமது குழந்தைகளுக்கு உயர் நெறிகள், ஒழுக்கம் மற்றும் மதிப்பீடுகள் குறித்து எந்த வித போதனைகளும் இல்லை என்பது பற்றிய கவலையாகும். இவை பற்றி நமது நாடு சுதந்திரம் பெற்ற பின் மத்திய மத்திய அரசால் அமைக்கப் பட்ட உயர் மட்டக் குழுக்கள் கவலை தெரிவித்து, நமது விழுமியங்கள், உயர் நெறிகள் மற்றும் கலாசாரம் குறித்த போதனைகள் கல்விக்கூடங்களில் கொண்டு வரப்பட வேண்டும் எனப் பலமுறை  வலியுறுத்தியுள்ளன. உச்ச நீதி மன்றமும் இது குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

ஆயினும் இந்த விசயம் குறித்துத் தேவையான  நடவடிக்கைகள்  எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விசயமாகும். நம்மிடத்தில் மதிப்பிட முடியாத பெரிய சொத்துக்கள் இருக்கின்றன.. இங்கிருப்பது போல பண்பட்ட இலக்கியங்கள் வேறெங்கும் இல்லை. நாடு முழுவதும் பல மொழிகளிலும்  நீதி நூல்கள் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு பகவத் கீதை பல மேல் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படுகிறது. இராமாயணமும் மகாபாராதமும் உலகம் முழுதும் அறியப்பட்ட அற நெறி இலக்கியங்கள். ஆத்திச் சூடியும் கொன்றை வேந்தனும் அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய உயர் தரமான வழிகாட்டிகள். ஆனால் நாம் அவற்றையெல்லாம் போதிக்கத் தயங்குகிறோம். உயர் தரமான வாழ்க்கைக் கல்வியைப் போதிக்கக் கூடிய தமிழ் இலக்கியங்கள் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை.

ஆட்சியாளர்களின் போலிச் சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகள் அற நெறிக் கல்வியைக்  கொடுக்கத் தவறுகின்றன. அதனால் நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த வாழ்க்கைச் சூத்திரங்கள் நமது குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. ஒரு மனிதனின் விழுமியங்கள் சிறு வயது முதற் கொண்டு விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் அவன் வளரும் போது நல்லவனாக தன்னைச் செதுக்கிக் கொள்ள முடியும். இந்திய பாரம்பரியத்துக்கான சர்வதேச அமைப்பு பத்து வருடங்களுக்கு முன்னதாக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களிடையே ஒரு ஆய்வை நடத்தியது. அது வழக்கமாக மாணவர்களுக்குத் தேவையானவை பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றவர்களும் கருத்துச் சொல்வதாக இல்லாமல் மாணவர்களே தங்களின் உள்ளக் கிடக்கைகளைப் பற்றிச் சொல்வதாக அமைந்தது. அதில் முக்கியமான அம்சம் நாடு முழுவமுதுள்ள மாணவர்களில் மிகப் பெரும்பாலனவர்கள் கலாசாரக் கல்வி தங்களுக்கு அவசியம் ஒருமித்த குரலில் கூறியிருந்ததுதானாகும்.

எனவே மாணவர்களே வேண்டுமென்று கேட்கக் கூடிய அத்தியாவசியமான ஒன்றை நாம் கொடுக்கத் தவறி வருகிறோம். மகாத்மா காந்தி, தாகூர் உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள்  வலியுறுத்திக் கூறிய இந்த விசயத்தை நம்மால் மேலெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆகையால் இந்தச் சமயத்தில் கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சமூக வல்லுநர்கள் எனப் பலரும் இது குறித்துப் பேச வேண்டும். அதன் மூலம் கல்விக் கூடங்களில் ஒழுக்க நெறிகள், விழுமியங்கள் மற்றும் கலாசாரம் குறித்த அறிவு போதிக்கப்பட வேண்டும். அதற்காக அரசுகள் கட்டாயப் படுத்தப்பட வேண்டும்.  கல்வி என்பது நமது குழந்தைகளைப் பணம் சம்பாதிக்க உதவும் கருவிகளாக மட்டுமே மாற்றி வரும் நிலைமை மாற வேண்டும்.

மாறி வரும் உலக மயமாக்கல் சுழ்நிலையால் பொது மதிப்பீடுகளும் விழுமியங்களும் சமூக அளவில் குறையத் துவங்கியுள்ளன. அதனால் பொருளாதாரமே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டு மற்றவையனைத்தும் பின்னுக்குத் தள்ளப் படுகின்றன.  நுகர்வு கலாசாரம், பணமே முக்கியமெனக் கருதும் போக்கு, சுலபமாகச் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம், அடுத்தவர்களைப் பற்றி அக்கறையில்லாத தன்மை ஆகியவை அதிகரித்து வருகின்றன. எனவே விழுமியங்களைத் தாங்கிப் பிடிக்க உதவும் சமூகக் கட்டமைப்புகளின் தாக்கம் தளர்ந்து கொண்டுள்ளது. ஊடகங்கள், கல்வி முறைகள் எனப் பலவும் நவீனம் என்ற பெயரில் தனி நபர் சித்தாந்தம், குடும்ப மற்றும் சமூக அமைப்புகளின் சீரழிவுகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. எனவே மேற்கண்ட விசயங்கள் குறித்தும் நாம் விரிவாக சிந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

ஆகையால் சட்டங்கள்  மூலமாக பாலியல் வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும் அதே சமயத்தில், எந்த விதத் தவறுகளும் உருவாகமால் தடுப்பதற்குத் தேவையான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் எல்லாப் பொறுப்புகளையும் அரசாங்கத்திடம் மட்டுமே விட்டு விடாமல், படித்தவர்களும் சமூகமும் சில அத்தியாவசியமான விசயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகின் மற்ற எந்த நாட்டையும் விட இந்த விசயத்தில் நமக்குப் பெரிய பொறுப்புள்ளது. சர்வதேச அரங்கில் மிக முக்கியமான நாடாக இந்தியா மேலெழுந்து வரும் இந்த காலகட்டத்தில் அடிப்படையான மாற்றங்கள் குறித்து சிந்தித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நமது கடமையாகும். அதற்காக இந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

( ஓம் சக்தி, மார்ச் 2013)


சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்



நமது தேசத்தின் மகத்தான ஒரு துறவியின் 150 ஆவது பிறந்த வருடத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நம்மில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம். ” மாறி வரும் தற்போதைய நவீன சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின்  கருத்துக்களுக்கான அவசியம் என்ன?”  ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைகள் முற்றிலும் வேறானவை. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் நமது நாடு பெருமளவு மாறியுள்ளது. அரசியல், சமூகம், பொருளாதாரம் என வெவ்வேறு தளங்களிலும் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த நூறாண்டு காலத்தில் உலக முழுவதிலுமே பல முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை தொடர்ந்து நிகழ்ந்தும் வருகின்றன. சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்   செல்வச் செழிப்பில் கண்ட பல பணக்கார நாடுகள் இன்று பொருளாதார நெருக்கடியில் உள்ளன. உலக முழுமைக்கும் மேற்கத்திய நாடுகளால் முன் வைக்கப்பட்ட அவர்களின் இரண்டு முக்கிய பொருளாதார சித்தாந்தங்களும் தோல்வியைத் தழுவி விட்டன. மேலும் அவர்களின் சமூகக் கோட்பாடுகள், சிந்தனை முறைகள் மற்றும் வாழ்க்கை முறை எனப் பலவும்  கேள்விக் குறியாகி வருகின்றன. எனவே அந்த நாடுகளின் உலகளாவிய தாக்கமும் செல்வாக்கும் அண்மைக் காலமாக குறைந்து கொண்டே வருகிறது. ஆகையால் இப்போது அவர்கள் உலக நாடுகளுக்குத் தீர்வுகள் கொடுக்கும் சூழ்நிலையில் இல்லை.

அதே சமயம் இந்தியா உலக அளவில் முக்கியமான நாடாக மேலெழுந்து வருகிறது. சர்வதேச அளவிலான எல்லாக் கணிப்புக்களும் உலகப்  பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை இந்தியா வருங்காலத்தில்  எட்டும் எனச் சொல்லி வருகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக பெரிய பணக்கார நாடுகள் எல்லாம்  கடும் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் தொடர்ந்து பெரிய பிரச்சனைகள் இல்லாமல் செயல் பட்டுக் கொண்டிருப்பது உலக முழுவதையும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதனால் ஆய்வு நிறுவனங்களும், பிரபல பல்கலைக் கழகங்களும் இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே வந்து கொண்டுள்ளன. இந்தியப் பொருளாதாரம், சமூகங்கள், தொழில் முறைகள் எனப் பலவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள அவர்கள் இங்கு  வந்த வண்ணம் உள்ளனர். .  

உலக அளவில் முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய  ஜி -20 என்னும் இருபது செல்வாக்கான நாடுகளின் அமைப்பில் இந்தியா இடம் வகித்து வருகிறது. இந்தியத் தொழில்களும், தொழில் நிறுவனங்களும் சர்வதேச அளவில் பரவி வருகின்றன.  எனவே உலகின் கவனம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் திரும்பிக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் அன்றைய வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும்?

சுவாமி விவேகானந்தரின் காலம் ( 1863-1902) நமது தேச வரலாற்றில் மிக ஏழ்மையானதும் சோகமானதுமாகும். அந்தச் சமயத்தில் பஞ்சமும் பட்டினியும் தலை விரித்தாடின. ஆங்கிலேயர்களின் மிகக் கொடூரமான  அணுகுமுறைகளாலும், அப்போதைக்கு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய நாட்டின் ஆட்சிப் பொறுப்பு அரசிக்கு மாறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுரண்டல்களாலும் நாடு மிகவும் வறுமையில் இருந்தது. முந்தைய நூற்றாண்டு தொடங்கி பல இலட்சக் கணக்கான பேர் பட்டினியால் ஏற்கெனவே உயிர் விட்டிருந்தனர். அப்போதும் பல பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் பசியால் வாடிக் கொண்டிருந்தனர்.  

அந்தச் சமயத்தில் தான்  விவேகானந்தர் நாட்டின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்க்கிறார். பல தரப்பட்ட மக்களிடமும் அவர்களிடத்துக்கே நேரில் சென்று பேசுகிறார். சாதாரண மக்களின் நிலைமையை எண்ணி மனம் வெதும்புகிறார். நாட்டின் அப்போதைய சூழ்நிலையை முந்தைய கால கட்டங்களுடன் எண்ணிப் பார்க்கிறார். பிறகு மேற்கத்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகிறார்.  இந்திய தேசத்தை உலக அரங்கில் மீண்டும் முதன்மையான இடத்தில் உட்கார  வைக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார். வரலாற்றின் மிக மோசமான கால கட்டத்தில் அடிமை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, தேசத்தை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது என்பது மற்றவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத காரியமாகும். ஆனால் சுவாமி விவேகானந்தர் அது சாத்தியம் என நம்பினார்.  

இன்றைய இந்தியாவுக்குப் பலமான அஸ்திவாரங்கள் உள்ளன. நாடு நிறைய வலிமைகளைப் பெற்றுள்ளது.  அபரிமிதமான இயற்கை வளங்கள்,  பரந்த நிலப்பரப்பு, காடுகள், மலைகள், நதிகள், இனங்காண முடியாத அளவு உயிரினங்கள், செடி கொடிகள், வருட முழுவதுவும் ஆதவனின் கதிர் வீச்சு, மண்ணுக்கு மேலே மட்டுமன்றி கண்ணுக்குத் தெரியாமல் கீழேயும் மதிப்பிட முடியாத மூலப்பொருள்கள் எனப் பலவிதமான அனுகூலங்கள் நமக்கு உள்ளன. மனித இனத்தின் ஆறில் ஒரு பகுதி மக்கள் இங்குதான் வாழ்ந்து கொண்டுள்ளனர்.   மேலும் தற்போது உலகில் உள்ள இளைஞர்களிலேயே அதிகம் பேர் இங்கு தான் உள்ளனர். மிகப் பெரும்பாலான மக்கள் எளிமை, கடின உழைப்பு, குடும்பப் பற்று, முயற்சி, அமைதியை நாடும் குணம் ஆகிய நல்ல தன்மைகளைக் கொண்டவர்களாக உள்ளனர்.    

இந்தியாவின்  குடும்ப அமைப்பு முறை நமது முக்கியமான சொத்தாகும். நமது குடும்பங்கள்தான் நல்ல மக்களை உருவாக்கி, நாட்டுக்குத் தேவையான சேமிப்புகளைப் பெருமளவு ஏற்படுத்தி, தமது முயற்சியினால் புதிய தொழில்களை உண்டாக்கி, சமூகத்தில் அமைதியை நிலை நாட்டி வருகின்றன. மக்கள் நிம்மதியாக வாழவும் பொருளாதார முன்னேற்றத்தை அடையவும் சமூகங்கள் உறுதுணையாக அமைகின்றன. நமது நாட்டில் சமூக மூலதனம் அதிகமாக உள்ளது. நமது குடும்பங்களும் சமூகங்களும் அடுத்தவரைச் சார்ந்து நிற்காமல் சொந்தமாக இயங்கும் தன்மை பெற்றவை. மேற்கத்திய நாடுகளைப் போல அவை எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைச் சார்ந்து நிற்பதில்லை. சுதந்திரத்துக்குப் பிந்தைய கடந்த  அறுபது ஆண்டு கால வளர்ச்சி மக்களாலேயே பெருமளவு முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பல சமயங்களில் அது அரசு இயந்திரங்களை மீறிய வளர்ச்சியாகவும் உள்ளது.

 இந்தியக் கலாசாரம் உயர் தரமானது. தனித்தன்மைகள் நிறைந்து நிற்பது. உலகமே ஒரு குடும்பம் என்னும் சிந்தனையில் அமைந்தது. உயிரில்லாத பொருள்களிலும் தெய்வீகத்தைக் காண்பது. கண்ணுக்குத் தெரியாத இந்தக் கலாசாரம்தான் இன்றைக்கும் நமது நாட்டின் அடித்தளமாக விளங்கி வருகிறது. இந்திய வாழ்க்கை முறையில் குடும்பங்களும், சமூகங்களும், அவற்றுக்கு ஆதாரமான கலாசாரமும் மிக முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.

ஆயினும் நமது நாடு அதன் வளங்கள் மற்றும் திறமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி முழுமையான பலன்களைப் பெற முடியவில்லை. அதனால் தேசம் பல விதமான சிரமங்களை அனுபவித்து வருகின்றது. அதற்கு முக்கியமான ஒரு காரணம் படித்த நமது மக்களின் தேசம் பற்றிய அறிவுப் பற்றாக் குறையாகும். இந்தியர்கள் இன்று உலக அளவில் அதிக எண்ணிக்கையில்  படித்துப் பல்வேறு நிலைகளில் உள்ளனர். சாதாரண நிலைகளில் உள்ள மக்களே  பெரும்பான்மையானவர்கள். பொது வெளியில் அவர்களின் கருத்துக்களுக்குப் பெரிய மதிப்பில்லை. மேலும் அவர்களுக்குச் சுலபமாகக் கருத்துக்களை வெளிப்படுத்தத் தெரியாது. எனவே படித்தவர்கள் தான் அவர்களுக்குமான பிரதிநிதிகளாக உள்ளனர். ஆகையால் படித்தவர்களின் பொறுப்பு அதிகம். அவர்களால் தான் நாட்டைப் பற்றி சரியான முறையில் விசயங்களை எடுத்து வைக்க முடியும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆங்கிலேயரால் திணிக்கப்பட்ட கல்வி முறையின் தாக்கம் சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னமும் அப்படியே பெரும்பாலும் நீடித்துக் கொண்டுள்ளது. அதனால் நமது நாட்டைப் பற்றி சரியான புரிதல் இல்லை. நமக்கான ஒரு பெரிய பாரம்பரியம் உள்ளது. உலகிலேயே அதிக செல்வச் செழிப்பான நாடாக வரலாற்றின் அதிக காலம் நாம் தானிருந்தோம். தொழில்கள், கல்வி, அறிவியல், தொழில் நுட்பம், வர்த்தகம், இலக்கியம், கண்டுபிடிப்புகள் எனப் பல துறைகளிலும் உலகுக்கே முன்னோடியாக விளங்கி வந்துள்ளோம். பொருளாதாரச் செழிப்பின் உச்சத்தில் இருந்த  போதும், ஆன்மிகத்தின் அடித்தளத்திலேயே கால்களைப் பதித்து  வைத்திருந்த சிறப்பினை உடையது நமது தேசம். இது உலகின் எந்த நாட்டிலும் காணப்படாத அதிசயமாகும். நமது வரலாற்றைச் சரியாகப்  படிக்கும் போது இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான  எத்தனையோ நல்ல விசயங்களை  நாம் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும். தவறுகளிலிருந்து பாடமும் கற்றுக் கொள்ளலாம்.  அவையெல்லாம்  நமது முன்னோர்கள் நமக்குச் சேர்த்து வைத்தச் சென்ற சொத்து.

நமது தேசத்தின் தற்போதைய நடைமுறைகள் மற்றும் அதற்கான அடிப்படைகள் ஆகியவை பற்றியும் நமக்குச் சரியான புரிதல்கள் இல்லை. எந்த ஒரு விசயமானாலும் அதை மேற்கத்திய அணுகுமுறைகளைக் கொண்டே பார்க்கும் பழக்கமே நம்மிடம் மிகுந்துள்ளது. ஏனெனில் நமது பாடப் புத்தகங்களில் தொடங்கி நாம் செய்திகளுக்காகத் தினசரி நாடும் ஊடகங்கள் வரை பெரும்பாலும் அப்படிப்பட்ட அணுகுமுறைகளை மையமாக வைத்தே அமைந்துள்ளன. எனவே நமது வலிமைகள் நமக்குப் புரிவதில்லை. சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூட பிற நாடுகளைப் பார்த்துச் செய்யும் பழக்கம் தொடர்கிறது.  

இந்தியப் பொருளாதாரத்துக்குப் பிற நாடுகளை விட வலிமைகள் இருப்பது  நமது கண்ணுக்கு முன்னால் நன்றாகத் தெரிகிறது. கடந்த சில  வருடங்களாக மேற்கத்திய நாடுகள் பெரும் சிக்கல்களைச் சந்த்தித்துக் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கு எந்த வழியும் தென்படவில்லை.  அதே சமயம் நமது பொருளாதாரம் எத்தனையோ குழப்பங்களுக்கு இடையிலும் வலுவாக உள்ளது. ஆயினும்  இதனுடைய அடிப்படை குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை. பணக்கார நாடுகள் பலவற்றில் ஆணும் பெண்ணும் முறையாக இணைந்து வாழ்வதே வெகுவாகக் குறைந்து வருகிறது. சமூகங்கள் சீரழிந்து வருகின்றன. ஆனால் எவ்வளவோ தாக்கங்களுக்கு அப்புறமும் நமது குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள் பெருமளவு சிறப்பாகச் செயல் பட்டுக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றின் தன்மைகளைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்து கொள்வதே இல்லை.

எனவே வரலாற்றை மட்டுமன்றி நிகழ் காலத்தைப் பற்றியும் சரியாகத் தெரியாதவர்களாகவே நாம் இருந்து வருகிறோம். நமது படிப்புகளும் பட்டங்களும் பதவிகளையும் பணத்தையும் கொடுக்கின்றன. ஆனால் நம்மைத் தாங்கி நிற்கும் அடிப்படைகளைப் பற்றியோ சுற்றியுள்ள  சூழ்நிலைகளைப் பற்றியோ முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவி புரிவதில்லை.  அதனால் நமது சுய தன்மையை இழந்து அந்நிய சிந்தனைகளுக்கு ஆட்பட்டே வாழ்க்கையை நகர்த்தி  வருகிறோம்.

இந்த வேளையில் தான் சுவாமி விவேகானந்தர் நமக்குத் தேவைப் படுகிறார். அவர் ஒரு பெருமை மிக்க துறவி மட்டுமல்ல. ஒரு தீர்க்கதரிசி. எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றை முன்னமே கண்டறியும் வல்லமை பெற்றவர். பன்முகத் திறமைகளைக் கொண்ட  ஆளுமையைப் பெற்றவர்.  ஒரு உயர்ந்த தலைவராகவும் தலை சிறந்த அமைப்பாளாராகவும் விளங்கியவர். அவரால் நிறுவப்பட்ட நிறுவனங்கள் இன்று உலகின் பல பகுதிகளிலும் பரந்து விரிந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதைப்  பார்க்கும் போது அவர் எவ்வளவு பெரிய அமைப்பாளர் ( organizer) என்பது  புரியும்.

கடவுளைக் காண நாட்டம் கொண்டு குருவைத் தேடிச் சென்று, பின்னர் ஆன்மிகத்தில் ஈடுபட்டு துறவறம் பூண்டிருந்தாலும், அவரது  நோக்கம் தனிப்பட்ட முறையில் அவர் முக்தி பெற வேண்டும் என்பதல்ல. மாறாக ஒட்டு  மக்களின் வாழ்வு சிறக்க வேண்டுமென்பதேயாகும். அதனால் தான் அவர் சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். சாதாராண மக்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், வலிமை குறைந்தவர்கள் ஆகியோரின் முன்னேற்றத்தை வலியுறுத்தினார்.  அறிவியல் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பெண் கல்வி, சமூக மேம்பாடு எனப் பல விசயங்கள் குறித்தும் ஆழமான கருத்துகளை எடுத்துரைத்தார்.  

அவரது தேசப்பற்று அபரிமிதமானது. மற்ற எல்லாவற்றையும் விட அவர் தேச நலனையே முக்கியமாகக் கருதினார். தேசத்தைத் தாய்மையின் வடிவமாகவும், பராசக்தியின் வடிவமாகவும் போற்றினார். அவரது வார்த்தைகள்  பல இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் தேச பக்தியை ஊட்டின. திலகர், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், இரவீந்தரநாத் தாகூர் உள்ளிட்ட எண்ணிலடங்காத பேர் அவரால் உத்வேகம் பெற்றனர். நாட்டில் சுதந்தர வேட்கை ஏற்பட அவர் முக்கியமான காரணமாக விளங்கினார்.

தனியொருவராக அமெரிக்காவில் நடைபெற்ற சர்வமத சபையில் பேசி குறிப்பிட்ட சமயம்  மட்டுமே சரியானது என்னும் மேற்கத்திய நாடுகளின் எண்ணம் ஒட்டு மொத்த உலக நலனுக்கு ஏற்புடையதல்ல என்பதை எடுத்துக் காட்டினார். பின்னர் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேலாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரயாணம் செய்து மக்களுடன் உரையாடி இந்திய கலாசாரத்தின் பெருமைகளை அவர்களுக்கு உணர்த்தினார்.

சுவாமி விவேகானந்தர் நமது நாட்டில் உதித்த ஒரு மிகப் பெரிய உந்து சக்தி. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பல இலட்சக்கணக்கான மக்களை ஆட்கொண்டு வருபவர். நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களை சுவாமி விவேகானந்தருடன் மானசீகமாக இணைத்துக் கொள்வது இன்றளவும் நடந்து வருகிறது. அவர்கள் எல்லாம் வெவ்வேறு விதமான பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களின் மாநிலங்கள், மொழிகள், தொழில்கள், படிப்புகள் எனப் பலவும் வேறு. ஆனால் அவர்கள் அனைவருமே சுவாமி விவேகானந்தரின் கருத்துகள், செயல்பாடுகள் அல்லது அவரது ஆளுமை ஆகியவற்றால் கவரப்பட்டவர்கள். எனவே நாடு முழுவதும் அதிகம் பேர்களால் பரவலாக அறியப்பட்ட உதாரண புருஷராக அவர் இன்றளவும் விளங்கி வருகிறார்.

இன்றைய கால கட்டம் உலக வரலாற்றில் ஒரு முக்கியமானது. கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாகக் கோலோச்சி வந்த மேற்கத்திய நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அதே சமயம் எத்தனையோ பிரச்சனைகளை எல்லாம்  மீறி உலக அரங்கில் இந்தியா மீண்டெழுந்து வந்து கொண்டுள்ளது. இந்த சமயத்தில் நமக்கெல்லாம் ஒரு முக்கியமான பணி காத்துக் கிடக்கிறது. அது நமது நாட்டைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டு, நாட்டின் நலனுக்காகச் செயல்படுவதாகும்.

சுதந்திரம் வாங்கி அறுபத்தாறு ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்க்கப்படாத பல முக்கிய பிரச்சனைகள் நம் முன் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைக் கூடக் கொடுக்க இயலாத நிலையில் நாம் உள்ளோம். நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயத் துறை கடும் சிரமங்களில் உள்ளது. வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணமாக அமைவது நமது தவறான கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளே ஆகும். மேலும் நாட்டுப் பற்றுக் குறைந்த சுய நலமிக்கவர்கள் பொது வாழ்க்கையை ஆக்கிரமித்து வருவதும் நமக்குப் பெரிய குறைபாடாக உள்ளது.

எனவே நம்மிடத்தில் தேசப்பற்று உருவாக வேண்டும். நமது நாட்டை எல்லாத் திசைகளிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று அதன் மூலம் அனைவரும் நன்றாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். நமது தேசத்தின் பெருமை உலகெங்கும் பரவுவதற்கு நாம் பங்களிக்க  வேண்டும். அதற்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, இலட்சியங்கள், கருத்துக்கள் ஆகியவை சரியான வழி காட்டும். ஏனெனில் அவரிடம் நம் அனைவரையுமே ஒட்டு மொத்தமாகத் தட்டி எழுப்பும் பேராற்றல் நிறைந்துள்ளது. 

சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வார்த்தைகளும் அமரத்துவம் பொதிந்தவை. எனவே அவர் இன்றைக்கும் நமக்குப் பொருத்தமானவர். முந்தைய காலங்களை விடவும் இன்றைக்கு மிகவும் அவசியமானவர்.    

( விவேகானந்தம்150.காம் இணைய தளம், 18.02.2013)

Not just the economists, the economic theories have also failed



During early November, while addressing a huge rally at the national capital attended by several hundreds of small farmers, labourers and the ordinary sections of the society, the economist- Prime Minister of the country reiterated that the foreign direct investment in retail trade would bring huge benefits to all of them. Believing that the Prime Minister and his elite group of policy makers know much better economics than the roti-kapda issues that confront them every day, the crowd cheered him. Later when some curious reporters asked a few of the participants from the enthusiastic crowd as to what was the meaning of the foreign direct investment, they replied that they had no idea about it. 

They are ordinary people from the lower strata of the economic system. They are honest, as they do not need to pretend. In fact most of the people, including the educated sections, believe the economic theories and the economists who explain them. Hence the economic policy making is left to the economists and the administrators thinking that they would be able to plan for the country better, as they have more knowledge of economics than others.    

In turn, most of our economists believe that the western economic ideas and approaches would help us guide us our nation.  The colonial mindset that dominates the thought process refuses to allow our economists to look at the realities. They do not comprehend the economic history of India, the country that dominated the global economic arena for most of the time during the past two millennia and earlier. They also fail to realize that the contemporary Indian progress has been possible in spite of the unsuitable frame work of the policy makers after independence.  

The noted economic historian Andre Gunder Frank has shown as to how the economic history of the world became ‘Euro-centric’ during the nineteenth century, after Europe promoted its own historians and made use of them for selfish interests. The decline of the Asian economies and the rise of the west during the subsequent periods have helped them to place their ideas and approaches as superior to that of the others in the world. The introduction of the new education system alienated the natives from their roots and made them look at India from the western perspectives.

The end of colonialism signaled the decline of the European domination. Subsequently the US emerged as the dominant power during the twentieth century.  As a result even after sixty five years of independence, the policy making in India continues to be influenced by the west. This is really disturbing as the western ideologies and approaches have been continuously failing one after another during the last four hundred years.

From the feudalism of the seventeenth century to market fundamentalism of the twenty first century, none of their ideologies rest on stronger foundations.  All of them suffer from serious flaws, as their economics look only at the material aspects, failing to visualize life in totality. As a result their economists put forth ideas that are not suitable, knowing well that they are not in the overall interests of the society.

The noted British economist John Manyard Keynes has been recognised as the most influential economist of the twentieth century and one of the founders of modern macro-economics. His ideas command a large influence on policy making even now. Note what Keynes had said during the 1930s: “For at least another hundred years we must pretend to ourselves and to everyone that fair is foul and foul is fair; for foul is useful and fair is not. Avarice and usury and precaution must be our gods for a little longer still.”  The economic theories of the subsequent years primarily rested on self- interest as the major objective.   

After many years of experiments, their own economists have begun to realise that their theories have failed to provide results. As a result they are questioning the very foundations of their models. Harvard economist Stephen Marglin notes: “The assumptions of economics are only half-truths about people, even in the culture that gave birth to economics. …. Modernity- economics- contends with the pre- or non-modern in all of us, which is why the conclusions of economics are contestable even within the modern west.”

The incomplete assumptions of the modern approaches lead even the learned economists to make wrong conclusions.  Alan Greenspan is an economist who led the Federal Reserve Bank of the United States of America as its Chairman for 18 years between 1987 and 2006.   He is a doctorate in economics from the New York University and was regarded as the top economist-administrator in the world. He was given several high awards for his performance. During his stewardship, he advocated that savings were not necessary and reduced the interest rates for bank deposits.  

Later during 2008, he was charged with failing to prevent the financial crises. Time magazine blamed twenty five persons as responsible for the crisis, placing Greenspan third in the list. He was asked to appear before the Senate Committee appointed to enquire into the crisis and present his views. For the first time, he openly admitted that market ideology contains flaws and his understanding of the system has been proved wrong.

The global crisis of the recent years is only the latest symptom of the large scale failure of the western approaches. Besides being a failure at the economic level, the western theories disturb the foundations of the social and community systems necessary for life.  Marglin notes: “But over the past 400 years, the ideology of economics has fostered both the self-interested individual and the market system, and has undermined and continues to undermine the community.” Thus the western theories have alienated the basic relationships necessary for life among human beings. 

The continued crisis in the west has now pushed them into confusion. They are not clear as to what should be the suitable approach, as their economic understanding remains inadequate. In this situation, we have to understand that their ideas and approaches would not help us. It is time that we realised the need for India-centric approaches based on our own strengths and priorities, so that the country could move forward taking all the different sections together.  It is possible for us to make new approaches as we have strong foundations and functioning systems that are unique to the country. 

But the approach of our economists and policy makers continue to remain tuned to the west, in spite of all the evidences against copying them blindly. It is not just the fault of our economists alone, but also the economic theories that they ardently admire. 

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - மதிப்புரை


ஒரு நாட்டின் பொருளாதார வரலாறு என்பது பல்வேறு கூறுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். அதிலும் இந்தியா போன்ற 5000 வருட உயிர்ப்புள்ள வரலாற்றை கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்வது சுலபமான காரியமல்ல. நில உடைமை, உபரி, சுரண்டல், சந்தை போன்ற சொற்களை வைத்து மட்டும் இந்தியாவின் பொருளாதார வரலாற்றை எழுதிவிட முடியாது. தொடர்ச்சியாக பல சித்தாந்த(அ)மத ரீதியான பொருளாதார படையெடுப்புகளை எதிர்கொண்ட-இன்றும் எதிர்கொண்டு வரும்-இந்திய சமூகம் மேற்கத்திய நாடுகளின் எந்தவித சொல்லாடலிலும் அடங்கி விடாது. இந்த கருத்தை மிக வலுவாக முன்வைக்கிறது இந்த நூல். கடந்த பொற்காலத்தை பற்றிய துதியை மட்டும் முன்வைத்தும், தற்கால நிலை குறித்து நிதர்சனத்தையும் அறியாமலும் இந்த நூல் பேசவில்லை. பொது யுகத்திற்கு முந்தைய இந்தியாவின் பொருளாதார நிலையை விரிவாக முன்வைத்து, அதிலிருந்து தொடங்கி 1750-ஆம் ஆண்டு(பொது யுகம்) வரையிலான அதன் உச்சத்தை மிகத் துல்லியமான புள்ளிவிவரங்களுடன் இந்த நூலாசிரியர் முன்வைக்கிறார். அதற்கு பிறகான சரிவையும், அதற்கான காரணங்களையும் அலசுகிறார். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா, அதன் பொருளாதார போக்குகளை விரிவாக அலசுகிறார். இந்தியாவிற்கான வருங்கால திசை குறித்த சித்திரமும் நூலில் உண்டு.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அளவைகள் இந்திய சூழலுக்கு எந்தளவிற்கு அந்நியமானவை என்பது குறித்தும், ஆசிய(குறிப்பாக இந்திய) சமூக சூழலுக்கும் மேற்கத்திய சமூக சூழலுக்கும், அதன் விழுமியங்களுக்கும், அதில் நிலவும் நுண்ணிய வேறுபாடுகளையும் தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர், இந்தியாவிற்கான பொருளாதார அளவைகளை அதன் சூழலிடமிருந்தே பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். இந்தியாவின் பொருளாதார வரலாறு முறையாக எழுதப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் இந்த நூல், அந்த முயற்சியில் நல்ல துவக்கமாகவும் அமைகிறது.
சொல்வனம்:   மாதமிரு முறை வெளிவரும் இணைய இதழ் -  “உங்களுக்காக சில புத்தகங்கள்....”  

வலுவான குடும்பம் வளமான இந்தியா



இந்தியா வலுவடைய என்ன தேவை என்று கேட்டால் பொருளாதார பலம் என்றுதான் நம்மில் அநேகரும் சொல்வார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டுமானத்தைப் பலப்படுத்தாமல் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களுக்கு நகர்ந்து செல்லமுடியாது. இதை ஒருவராலும் மறுக்கமுடியாது. 

ஆனால், பொருளாதாரத்தை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்துபவர்கள் ஓர் அடிப்படையான விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு மக்களின் குடும்ப வளர்ச்சியைப் பொருத்தே அமைகிறது. உயிர்ப்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகங்களையும் வலுவான பொருளாதாரத்தையும் உருவாக்குகின்றன. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சூத்திரம்போல் தோன்றினாலும் இதுவே சமூக வரலாற்று உண்மை. 

இந்தியக் குடும்பச் சூழலையும் அமைப்பையும் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பேராசிரியர் கனகசபாபதி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது குடும்ப சமூக கலாசார அமைப்புகளே என்னும் முடிவுக்கு வந்து சேர்கிறார். நூலாசிரியர் மேற்கொண்ட நேரடிக் கள ஆய்வுகளும் சேகரித்த புள்ளி விவரங்களும் பிற தரவுகளும் அவருடைய இந்த முடிவை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன. 

நம் சமகாலத்திய குறைபாடுகளைப் போக்கி வலுவான குடும்பத்தையும் வளமான தேசத்தையும் கட்டமைக்க விரும்பும் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை, 2012